Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sarayu Kaathirukkiraal
Sarayu Kaathirukkiraal
Sarayu Kaathirukkiraal
Ebook120 pages1 hour

Sarayu Kaathirukkiraal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Indhumathi, an exceptional Tamil novelist, written over 1000 novels and 300+ short stories , Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466275
Sarayu Kaathirukkiraal

Read more from Indhumathi

Related to Sarayu Kaathirukkiraal

Related ebooks

Reviews for Sarayu Kaathirukkiraal

Rating: 5 out of 5 stars
5/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sarayu Kaathirukkiraal - Indhumathi

    10

    1

    மூன்று மணிவரை நன்றாக அடித்துப் போட்ட மாதிரித் தூங்கினாள் சரயு. பகலில் அந்த மாதிரி ஒரு தூக்கம் எப்ப வந்ததென்று தெரியவில்லை. பகல் தூக்கம் அவளுக்குப் பிடிக்காத ஒன்று. சோம்பேறிகளின் பழக்கம் என்பதான அபிப்பிராயமும் உண்டு. கல்லூரி விடுமுறை நாட்களில் பகலில் தூங்கினதில்லை. இரவு ஒரு மணி, இரண்டு மணி என்று விழித்திருந்து பரிட்சைக்குப் படித்தபோதும் பகலில் கண்ணயர்ந்து பழக்கப்பட்டதில்லை. படிப்பெல்லாம் முடிந்து வீட்டில் இருக்கிற இந்த ஒரு வருடத்திலும் ஒரு நாள்கூட இப்படிப் படுத்து உறங்கினதில்லை. யு.எஸ்.ஐ.எஸ்., பிரிட்டிஷ் கவுன்ஸில், வீட்டின் அருகில் இருக்கிற லைப்ரரி என்று புத்தகங்களுக்காக அலைவாளே தவிரத் தூங்கமாட்டாள்.

    இன்றுகூடப் பகல் சாப்பாட்டிற்குப் பின்னர் தடிமனான அந்த ஆங்கிலப் புத்தகத்தைப் பிரித்து கட்டிலின் தலைமாட்டில் இன்னொரு தலையணயைப் போட்டு உயரமாக்கிக் கொண்டு வசதியாகச் சரிந்து படுத்துப் படிக்கத் தொடங்கினவள் அப்படியே தூங்கிப் போயிருக்கிறாள். இப்போதும் அறைக்கதவு சன்னமாய் விரல் முட்டியால் தட்டப்பட்டிருக்காவிட்டால் இன்னமும் தூங்கிக் கொண்டுதான் இருந்திருப்பாள்.

    ஆனால் இந்த மென்மையான தட்டலுக்குக் கண் சடாரென்று விழித்துக் கொண்டுவிட்டது. சரேலென்று எழுந்து புடவையைச் சரி பண்ணிக் கொண்டு, மணி மூன்றாகப் போவதைக் கவனித்தாள். ‘இவ்வளவு நேரமா தூங்கி இருக்கிறோம்?’ என்று பிரமிப்புடன் கார்ப்பெட்டில் நழுவி விழுந்திருந்த புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு வந்து கதவைத் திறந்தாள். சமையற்கார அய்யர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து லேசான புன்னகையுடன் கேட்டாள்.

    என்ன அய்யர், என்ன வேணும்?

    ஒண்ணும் வேணாம் குழந்தை. மணி மூணாகியும் நீ கீழே இறங்கி வரலையேன்னுதான் மேல வந்து எழுப்பினேன். டிகாக்ஷன் இறங்கினதும் அந்த வாசனை மாறாமல் காப்பி குடிக்கிற வழக்கமாச்சேம்மா...

    ஆமாம் அய்யர். நீங்க அனுப்புங்க. நான் இதோ முகத்தைக் கழுவிக்கிட்டு வந்துடறேன்.

    அவள் முகம் கழுவி மீண்டும் பழைய சுறுசுறுப்புடன் குளியல் அறையை விட்டு வெளியில் வந்தபோது அய்யரே கோப்பையில் காப்பி கொண்டு வந்து வைத்தார். அதைப் பார்த்ததும் சற்று வருத்தத்துடன் கேட்டாள் அவள்.

    ஏன், நீங்க கொண்டு வந்தீங்க? வேலைக்காரங்க என்ன செய்யறாங்க? முத்துவும், மாணிக்கமும் இல்லையா?

    எங்க போனாங்களோ தெரியலைம்மா. அதான் நானே கொண்டு வந்துட்டேன்.

    அதற்காக நீங்க மாடி ஏறி வரணுமா? இன்டர்காமில் கூப்பிட்டுச் சொல்லியிருந்தால் நானே கீழே வந்திருப்பனே.

    இருக்கட்டும் குழந்தே. ஏர்-கண்டிஷன் குளிர்ச்சியில் காப்பி ஆறிடப் போறது. சீக்கரம் குடிச்சிடு.

    சொல்லிவிட்டு அவர் கீழே இறங்கிப் போனார். உடனே காப்பி கோப்பையை எடுத்து உறிஞ்சின சரயு, ‘பாவம் அய்யர்!’ என்பதைத் தனக்குள் சொல்லிக் கொண்டாள். ‘இந்த வயதில் ஒரு கப் காப்பிக்காகப் படியேறி வந்திருக்கிறார்.’

    கோப்பையை வைத்த பின்னர் குளிர்சாதனத்தை நிறுத்திவிட்டு பால்கனிக்கு வந்தாள். வெய்யில் மிதமாக இருந்தாலும் குளிர்சாதன அறையிலிருந்து வந்ததால் சுளீரென்று உறைந்தது. அதுவும் இதமாகத் தெரிய அங்கேயே நின்றாள். எதிரில் குல்மொஹர் ரத்தச் சிவப்பில் சிரித்தது. பக்கத்திலேயே சரக்கொன்றை தங்கமாய்க் கொட்டி இறைத்திருந்தது. பாக்கும், அசோக மரங்களும் மாலைக் காற்றிற்கு ஏற்பக் கையசைத்து வரவேற்பதாய்த் தோன்ற அந்த வரவேற்பை ஏற்றுக்கொண்ட இளவரசியின் கம்பீரப் புன்னகையோடு கீழே பார்த்தாள்.

    பச்சைப் பசேலென்ற அரைவட்டப் புல்தரையில் மிகச் சுதந்திரமாக இரண்டு சிட்டுக் குருவிகள் துரத்தி விளையாடின. சற்றுத் தள்ளி நீளமான ரப்பர் குழாய் மூலம் தோட்டக்காரன் செடிகளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தான். அந்த மாலை நேரக் குளிப்பில் ஒவ்வொரு செடியும் புதுமணப் பெண்ணாகப் பளபளத்து நிற்க சரயு அங்கிருந்தே, சிங்காரம் என்று குரல் கொடுத்தாள்.

    அந்தக் குரலில் உடம்பில் பாய்ந்த மரியாதையுடன் ரப்பர்க் குழாயைக் கீழே போட்டுவிட்டு ஓடிவந்த சிங்காரம் பால்கனியை அண்ணாந்து பார்த்தான்.

    என்ன சின்னம்மா...?

    நான் ஊட்டியிலிருந்து கொண்டு வந்த ரோஜாச் செடிகளைக் கவனிக்கிறாயா இல்லையா?

    நேற்றுத்தானம்மா எரு வாங்கியாந்து வச்சேன்.

    எரு வச்சிட்டால் மட்டும் போதாது. வேளை தவறாமல் தண்ணி ஊற்றணும்.

    ஊத்தறேம்மா...

    துளிர்விட்டிருக்கா இல்லையான்னு தெரியுமா?

    அதுவா...? என்று தலையைச் சொறிந்த சிங்காரம், இதோ பார்த்திட்டு வந்துடறேம்மா... என்று அவசரமாகத் திரும்ப சரயு தடுத்தாள்.

    பார்த்தியா, இவ்வளவுதான் நீ தோட்டத்தைக் கவனிச்சுக்கற லட்சணம். அம்மாவுக்குத் தன் குழந்தை தவழுகிறதா, நிற்குதான்னு தெரியலை. என்ன அம்மா நீ!

    அதில்லேம்மா. ஒரு குழந்தை ரெண்டு குழந்தைன்னால் கவனிக்கலாம். ஏற்கனவே கணக்கில்லாத குழந்தைங்க இருக்கிறபோது தினமும் புதுசு புதுசா வேற குழந்தைங்க முளைச்சிட்டிருந்தால் எப்படிங்க?

    சரி... அதுக்காக ஃபாமிலி பிளானிங்கா பண்ணச் சொல்றே? என்று சிரித்த சரயு நேற்றைக்கே நான் பார்த்துட்டேன். சிவப்பு ரோஜாவிலும், வெள்ளையிலும் துளிர் விட்டிருக்கு. மற்றதில் காணோம். எதற்கும் நீ கொஞ்சம் செம்மண் போடு. என்ன?

    சரிம்மா.

    டியூபைக் கீழே போட்டுட்டு வந்திட்டே பாரு. தண்ணி வீணாகப் போவுது. போய் மீதிச் செடிக்கும் தண்ணீர் ஊற்று. இதுதான் சாக்குன்னு வந்துவிடாதே.

    அவன் நகர்ந்த பின்னரும் அந்த இடத்தை விட்டு அகல மனம் வராமல் சரயு நின்று கொண்டிருக்க மீண்டும் அய்யரின் குரல் கலைத்தது.

    என்ன அய்யர்?

    அப்பாகிட்டேருந்து போன் வந்திருக்கும்மா.

    அப்பாகிட்டேயிருந்தா? - என்று அய்யரைக் கடந்து அறைக்குள் நுழைந்து தன் தொலைபேசியின் பித்தானை அழுத்த அய்யர் வெளியேறினார்.

    என்னப்பா?

    சாப்பிட்டாயாம்மா?

    அது ஒரு மணிக்கே முடிந்து இப்போ காப்பிகூடக் குடிச்சாச்சுப்பா. நீங்க சாப்பிட்டீங்களாப்பா?

    ஓ. எஸ். எப்பவோ ஆயிடுச்சும்மா. சாயந்தரம் ஏழு மணிக்கு நேரா வந்துடறியான்னு கேட்கத்தான் போன் பண்ணினேன். என்னாலே வீட்டுக்கு வர முடியாது போலிருக்கு. வெளியில் கொஞ்சம் வேலை இருக்கு.

    ஏழு மணிக்கா? எங்கேப்பா...?

    என்னம்மா எங்கேன்னு கேட்கிறே? காலைல சொல்லிட்டுத்தானே வந்தேன். சிவம் வீட்டிலே டின்னர்னு...

    நானும் காலையிலேயே வரலேன்னுதான் சொல்லிட்டேனே... எனக்கு இந்த டின்னர், லஞ்ச் எல்லாம் பிடிக்கறதே இல்லைப்பா...

    பிடிக்காட்டிப் போனாலும் இந்த ஒர தரம் வந்துடும்மா. இல்லைன்னால் சிவம் சும்மா விடமாட்டான்.

    போங்கப்பா. இப்படித்தான் ஒவ்வொரு தரமும் சொல்றீங்க. இந்தத் தரம் கடைசி. இந்தத் தரம் கடைசின்னு எந்தத் தரமும் கடைசியா நின்னதேயில்லை.

    அப்படி எத்தனை டின்னருக்கும்மா உன்னைக் கூட்டிட்டுப் போனேன்...

    ஏம்ப்பா, போன மாசம் புது ஷெரீஃப் பதவி ஏற்றாருன்னு டின்னருக்குக் கூப்பிடலை.

    அது நம்ம வீட்டு டின்னர்.

    சரி. பத்து நாள் பின்னால கபூர் வீட்டு டின்னர் என்னாச்சு?

    "அது... அது வந்தும்மம்... சரு எனக்கு இதுக்குப் பதில் சொல்லத் தெரியலே. உங்கம்மா உயிரோடு இருந்திருந்தால் உன்னை வரச்

    Enjoying the preview?
    Page 1 of 1