Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Puthai Manal
Puthai Manal
Puthai Manal
Ebook37 pages34 minutes

Puthai Manal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By Indhumathi
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466763
Puthai Manal

Read more from Indhumathi

Related authors

Related to Puthai Manal

Related ebooks

Related categories

Reviews for Puthai Manal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Puthai Manal - Indhumathi

    1

    அதிர்ந்துதான் போனார் வேலுச்சாமி!

    மருமகள் சொன்ன சொல் அப்படிப்பட்ட சொல். வாழ்நாளில் கேட்டறியாத சொல். யாரும் அவரைச் சொல்லாத சொல். இதுவரை அவர்முன் யாரும் கை நீட்டிக் கூடப் பேசியதில்லை.

    குரல் உயர்த்தியதில்லை. அவரும் தன் குரலை உயரவிட்டதில்லை. அத்தனை மென்மையானவர். பழுத்த பழம்.

    இந்த எழுபத்தெட்டு வயதிலும் வயல்வெளிக்குப் போகிறார். இருக்கின்ற நன்செய் நிலத்தில் கரும்பும், நெல்லும் போடுகிறார். பத்து ஏக்கர் புன்செய் நிலத்தில் வேர்க்கடலையும், உளுந்தும் எள்ளும் பயிரிடுகிறார்.

    நாற்று நடவோ, களை எடுக்கவோ, கட்டு தூக்கவோ ஒரு கை குறைவதாக நினைத்தால், மேல் துண்டை இழுத்து முண்டாசு கட்டிக்கொண்டு அவரே நிலத்தில் இறங்கி விடுவார். ஊர் பெரிய மனிதர் என்றெல்லாம் பார்க்கமாட்டார்.

    காசு பணம் இருக்கின்ற கர்வமெல்லாம் கிடையாது. மிகவும் வெள்ளத்தியான மனிதர். எதையும் நம்பி விடுகிற சுபாவம்.

    ‘தன்னைப் போல் பிறர்’ என்கிற நினைப்பு அவருக்கு உண்டு. அவர் மனைவி ராசம்மா அவருக்கும் மேலானவள். குழந்தை மனசுக்காரி. அப்பாவி. உலகத்தின் கசடுகளோ, நீக்கு போக்குகளோ தெரியாதவள்.

    ஒரே மகன். ஆசைக்கு ஒரு பெண் வேண்டுமென்ற எண்ணம் கூட வேலுச்சாமிக்கு இல்லை. ஆனால், ராசம்மாவுக்கு இருந்தது.

    நமக்கு ஒரு பொண்ணு இருந்தா நல்ல இருக்குங்க... நம்மமேல பாசமா இருக்கும்...

    ஏன், மவன் சிங்காரம் பாசம் வைக்கலியா...? அம்மா, அப்பான்னு உசுர உடலியா...?

    உட்றாங்க... இருந்தாலும் பொண்ணுங்க பாசம் ஆம்பளைப் புள்ளைங்களுக்கு இருக்காது இல்லியா...?

    "அது ஏன் அப்படிச் சொல்ற...? மருமவ வந்தா பொண்ணா நினைச்சுக்கிடலாம்.

    ஜோதிப் பொண்ணு நாள் தவறாம ஓடி வருது... உன்ன அத்தைன்னும், என்ன மாமான்னும் எத்தினிப் பிரியமாக்

    Enjoying the preview?
    Page 1 of 1