Enakkendru Nee
By Indhumathi
5/5
()
About this ebook
Read more from Indhumathi
Maalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Sarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Maaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratingsKoondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Tholaithoorath Thandavalangal Rating: 3 out of 5 stars3/5Kalveri Kolluthadi Rating: 5 out of 5 stars5/5Kaagitha Kappal Rating: 5 out of 5 stars5/5Oru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Geethamadi Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Odum Megangale Rating: 5 out of 5 stars5/5Irandu Per Rating: 5 out of 5 stars5/5Nenjin Neruppu Rating: 5 out of 5 stars5/5Yaar Rating: 5 out of 5 stars5/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Kadalorak Karaigal Rating: 4 out of 5 stars4/5Thotti Meengalum Koondu Kiligalum Rating: 5 out of 5 stars5/5Enge Antha Sorkkam Rating: 5 out of 5 stars5/5Manithan - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsPani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Avalukku Amuthendru Per Rating: 4 out of 5 stars4/5Antha Sila Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Neeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Vasanthakaala Nathigal Rating: 0 out of 5 stars0 ratingsYen Eppadi Rating: 5 out of 5 stars5/5Mayamaan Rating: 5 out of 5 stars5/5
Related to Enakkendru Nee
Related ebooks
Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Kaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal – Sila Kaatchigal Rating: 0 out of 5 stars0 ratingsUn Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsPon Malar Rating: 0 out of 5 stars0 ratingsPirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Kaadhaliye Rating: 0 out of 5 stars0 ratingsEnge Antha Sorkkam Rating: 5 out of 5 stars5/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Yen Eppadi Rating: 5 out of 5 stars5/5Kalveri Kolluthadi Rating: 5 out of 5 stars5/5Thoondirp Puzhukkal Rating: 5 out of 5 stars5/5Marupadi Yen Vanthaai Rating: 0 out of 5 stars0 ratingsMana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPuthai Manal Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Malaril Oru Malar Neeye Rating: 0 out of 5 stars0 ratingsUravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Uravillai Pirivillai Rating: 0 out of 5 stars0 ratingsKathavugal Marupadiyum Thirakkalam Rating: 0 out of 5 stars0 ratingsPala Naal Kanave! Rating: 0 out of 5 stars0 ratingsOru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Malarum Kaaththiru Rating: 0 out of 5 stars0 ratingsKannukkoru Vannakkili Rating: 5 out of 5 stars5/5Kanavu Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5Engiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Uravugal Thodarkathai Rating: 5 out of 5 stars5/5
Related categories
Reviews for Enakkendru Nee
1 rating0 reviews
Book preview
Enakkendru Nee - Indhumathi
6
1
எப்போதோ விழிப்பு வந்துவிட்டது. அனந்தசாமிக்கு. விழித்துக் கொண்டபோது நேரம் என்ன இருக்கும் என்று கணிக்க முடியவில்லை அவரால். அந்த இடத்தில் ஜன்னல் ஏதாவது இருந்தால் வானத்தின் நிறத்தையும், நட்சத்திரங்களின் கோணங்களையும் வைத்து இந்த நேரம் இருக்கலாம் என்று கண்டுபிடித்து விடுவார்.
அதற்கும் வழி இல்லாமல் ஜன்னலோ, வேறு திறப்புகளோ அற்ற மாடிப் படி அடியின் சின்ன இடம் அது. முக்கியமாக மெயின் ஸ்விட்ச் போர்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம். படிக்கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டுவிட்டால் காற்றோ வெளிச்சமோ புக முடியாத இடம்.
அந்தப் படியின் அடியில்தான் கயிற்றுக் கட்டில் போடப்பட்டு, அனந்தசாமிக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. வீட்டில் அவர் படுத்துக்கொள்கிற மாதிரி வேறு இடம் இல்லை. இரண்டு படுக்கையறைகளும் ஒரு வரவேற்பு அறையும், சாப்பாட்டு, சமையல் அறைகளும், சின்னதாகச் சாமான்களும் உள்ளும் கொண்ட முக்கால் கிரவுண்டில் கட்டப்பட்ட வீடு.
அதைக் கட்டி முடிப்பதற்குள்ளாகவே சந்திரசேகர் திணறிப் போய்விட்டான். ஆபீஸிலிருந்து வாங்கின கடன் போதாதென்று அனந்தசாமி ரிடையர் ஆனவுடன் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட பிராவிடண்ட் ஃபண்ட், கிராச்சுவிடி பணத்திற்கு வந்து நின்றான். அனந்தசாமி அதை பாங்க்கில் போட்டிருந்தார். இந்த வயதான காலத்தில் தனக்கும், மனைவி ஜானகிக்கும் அந்தப் பணம்தான் பெரிய ஊன்றுகோல் என்று நினைத்தார். அதிலிருந்து கிடைக்கிற வட்டிப் பணத்தில் சந்திரசேகரனின் மூன்று குழந்தைகள் ஏதாவது கேட்டால் வாங்கித் தருவார். அவ்வப்போது பணம் போதவில்லை என்று முணுமுணுக்கிற நாட்டுப் பெண் சுதாவின் வாயை அடைப்பார். தனக்கும் ஜானகிக்கும் இரவு சாப்பிடுவதற்கென்று அரை லிட்டர் பசும்பால் தனியாக வாங்கிக் கொள்வார். அது தவிர டாக்டர், மருந்துகள், வேஷ்டி, மேல் துண்டு, ஜானகிக்கு வருடத்திற்கு, தினசரி உபயோகத்திற்காக மூன்று நூல் புடவைகள்.
பாங்க்கில் போட்டிருக்கிற அந்த நாற்பதாயிரம் ரூபாய்க்குக் கிடைக்கிற வட்டிப் பணத்தில்தான் இத்தனை செலவுகளும். பிராவிடண்ட் ஃபண்டிலிருந்து ஒரே பெண் காயத்திரியின் கல்யாணத்திற்கும், பெரிய பையன் சிவங்கரனை டாக்டருக்கும், சின்னவன் சந்திரசேகரனை இன்ஜினியரிங்குக்கும் படிக்க வைக்க கடன் வாங்காமல் இருந்திருந்தால் தற்போது கூடுதல் பணம் கிடைத்திருக்கும். வட்டியும் அதிகம் வந்திருக்கும். இன்னமும் தாராளமாகச் செலவு பண்ணுகிற வசதி இருந்திருக்கும். மூத்த பேரன் அரவிந்த் ஒரு சைக்கிள் கேட்டுக்கொண்டிருக்கிறான்.
தாத்தா, எதிர் வீட்டு ஷேக் ஓட்டற மாதிரி எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கித் தா தாத்தா...
அனந்தசாமி சிறுவனின் மனதைக் கஷ்டப்படுத்தக்கூடாது என்பதற்காக, அவனின் அந்த நேரத் திருப்திக்காகத் தலையசைத்தார். ஆனால், அவன் அவரை அவ்வளவு சுலபமாக விடுவதாக இல்லை.
எப்போ வாங்கித் தரே...?
சீக்கிரமே வாங்கித்தரேன்டா கண்ணா...
சீக்கிரமென்றால் எப்போ...?
பணம் வரட்டும். வாங்கித் தரேன்...
பணம் எப்போ வரும்...?
சீக்கிரமே வரும்...
அவ்வளவுதான். சிறுவன் அந்தச் ‘சீக்கிரத்’தில் நம்பிக்கையிழந்து கண்ணில் நீர் துருத்திக் கொண்டு நிற்க -
போ! தாத்தா! நீ பொய் சொல்றே... முன்னே கூட அப்படித்தான். பணம் வரட்டும், மூணு சக்கர சைக்கிள் வாங்கித் தரேன்னு ஏமாத்திட்டே... கடைசில அந்தத் தாத்தாதானே திருநெல்வேலியிலிருந்து வந்து வாங்கித் தந்தார். (அவன் சொன்னது அவரின் சம்பந்தி வெங்கட்ராமனை. அதாவது சந்திரசேகரனின் மாமனாரை) இப்போ நீதான் எனக்கு இந்த சைக்கிளை வாங்கித் தரணும்... மூணு சக்கர சைக்கிளை என்னால் விட முடியலை. அதை ராஜீவும், அனுவும் விடறா... எனக்கு இப்போ இரண்டு சக்கர சைக்கிள் வேணும்...
அவன் தன் அழுகையை மெலிதாய் ஆரம்பித்து, பின்னர் பலப்படுத்தினபோது, உள்ளேயிருந்து வந்த சுதா அவன் முதுகில் ஒன்று வைத்தாள்.
ஏன்டா, இப்போ சைக்கிள் இல்லேன்னால் உயிரா போயிடும். நான்தான் அந்தத் தாத்தா வரட்டும், வாங்கித் தரச் சொல்றேன்னு சொன்னேன் இல்லை... அதுக்குள்ள கண்டவாளையும் போய்க் கேட்டுண்டு...
அனந்தசாமிக்குச் சுருக்கென்றது. தன்னைக் ‘கண்டவன்’ என்றது மனதில் தைத்து உறுத்தத் தொடங்கிற்று. அவர் பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு எதற்கும் மறுப்புச் சொல்வதாக சுதாவிற்கு ஒரு நினைப்பு. அதை அடிக்கடி ஜானகியிடம் சொல்லிக் காட்டுவாள்.
ஏம்மா... கூலி தள்ளி பழைய சங்கிலி ஒன்று மூன்று பவுனில் விலைக்கு வர்றது. அப்பாகிட்டே சொல்லி எனக்கு வாங்கித் தாங்களேன். கல்யாணமாகிப் பன்னிரண்டு வருஷமாகப் போறது. இதுவரை உங்காத்துக்கு வந்து நான் ஒரு நகை காணலியே-
அவள் பேச்சிலிருந்த நிஜம் ஜானகியை யாருமற்ற சமயமாகப் பார்த்து அவரிடம் மெதுவாகக் கேட்க வைக்கும்.
ஏன்னா, கூலி தள்ளி பழைய சங்கிலி ஒண்ணு விலைக்கு வர்றதாம். உங்க ரெண்டாவது நாட்டுப் பெண் ரொம்ப ஆசைப்படறா...
ஏன்டி, ரெண்டாவது நாட்டுப் பெண் என்கிற அடைமொழி எதற்கு...? வெறும் நாட்டுப் பெண் என்று சொன்னாலே போறாதா...? என்னைப் பொறுத்தவரை இவன் ஒருவன்தான் எனக்குப் பிள்ளை, இவள் ஒருத்திதான் நாட்டுப் பெண். இந்த மூன்றும்தான் பேரக் குழந்தைகள்...
சில விநாடிகள் மௌனமாய்ச் சுவரில் சரிந்து நிற்பாள் ஜானகி. இத்தனை வருடங்களுக்குப் பின்பும்