Vasanthakaala Nathigal
By Indhumathi
()
About this ebook
Read more from Indhumathi
Oru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Maalaiyaagatha Pookkal Rating: 4 out of 5 stars4/5Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Enakkendru Nee Rating: 5 out of 5 stars5/5Sarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Tholaithoorath Thandavalangal Rating: 3 out of 5 stars3/5Koondu Kuyil Rating: 4 out of 5 stars4/5Ivale En Manaivi Rating: 5 out of 5 stars5/5Irandu Per Rating: 5 out of 5 stars5/5Neeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Nenjin Neruppu Rating: 5 out of 5 stars5/5Kaagitha Kappal Rating: 5 out of 5 stars5/5Maaratha Raagangal And Poongaattru Thirumbumaa Rating: 0 out of 5 stars0 ratingsPenmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Kalveri Kolluthadi Rating: 5 out of 5 stars5/5Kadalorak Karaigal Rating: 4 out of 5 stars4/5Geethamadi Nee Enakku Rating: 5 out of 5 stars5/5Antha Sila Vinaadigal Rating: 5 out of 5 stars5/5Yaar Rating: 5 out of 5 stars5/5Manithan - Sirukathai Thoguppu Rating: 0 out of 5 stars0 ratingsEnge Antha Sorkkam Rating: 5 out of 5 stars5/5Pani Padarntha Paathaigal Rating: 5 out of 5 stars5/5Mayamaan Rating: 5 out of 5 stars5/5Odum Megangale Rating: 5 out of 5 stars5/5Thotti Meengalum Koondu Kiligalum Rating: 5 out of 5 stars5/5Avalukku Amuthendru Per Rating: 4 out of 5 stars4/5Yen Eppadi Rating: 5 out of 5 stars5/5Aaranya Vaasam Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vasanthakaala Nathigal
Related ebooks
Odum Mehangal Rating: 0 out of 5 stars0 ratingsPongi Varum Peru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsThavarugal Kutrangalalla...! Rating: 0 out of 5 stars0 ratingsமனோரதம் Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Kangal Enge Nenjamum Enge Rating: 0 out of 5 stars0 ratingsAnbukku Panjamillai Rating: 5 out of 5 stars5/5Kannukutty Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsEndrum Pen... Rating: 0 out of 5 stars0 ratingsPenkalin Sinthanaikku Rating: 0 out of 5 stars0 ratingsKaathaladi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsகாதலடி நீ எனக்கு..! Rating: 0 out of 5 stars0 ratingsTheeratha Vilayattu Pillai Rating: 0 out of 5 stars0 ratingsPenmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Mathamennum Vaanaththil Manamennum Pura Rating: 5 out of 5 stars5/5Thavariya Tharunangal… Rating: 4 out of 5 stars4/5Vaanamadi Nee Enakku Rating: 0 out of 5 stars0 ratingsவானமடி நீ எனக்கு... Rating: 0 out of 5 stars0 ratingsPoo Mattum Puyalodu... Rating: 5 out of 5 stars5/5Enthiran Manthiran Thanthiran Rating: 5 out of 5 stars5/5Pennendru Bhoomithanil... Rating: 0 out of 5 stars0 ratingsIndha Pookkal Unakkaga Rating: 4 out of 5 stars4/5Tharaiyil Vizhundha Meengal Rating: 0 out of 5 stars0 ratingsMuthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Mathalangal Rating: 0 out of 5 stars0 ratingsThisai Maariya Thendral... Rating: 0 out of 5 stars0 ratingsஇனியெல்லாம் சுகமே..! Rating: 0 out of 5 stars0 ratingsIlaiuthir Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsAnbin Alaivarisai Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Nenjoduthaan... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vasanthakaala Nathigal
0 ratings0 reviews
Book preview
Vasanthakaala Nathigal - Indhumathi
1
அந்த ஒரு நாளில் அவள் எல்லாவற்றையும் மறந்து விடுகிறாள். தன்னை மறக்கிறாள். கடல் கடந்து சம்பாதிக்கச் சென்ற கணவனை மறக்கிறாள். அவளுக்கு அந்தக் காதலனும், அந்த நேரத்து வாழ்க்கையுமே நிஜமாகப்படுகிறது. அந்த ஒரு நாள் தான் வாழ்கையாகப்படுகிறது.
அந்த ஒரு நாளில் வாழ்ந்து விட்டது போலவும் படுகிறது. இனிமேல் தான் வாழ்க்கையே ஆரம்பிக்கப் போவதையும் தோன்றுகிறது. தனக்குத் தோன்றின எண்ணங்களை அவள் சொன்னதும் அவன் கோபப்படுகிறான். நிஜமான கோபத்துடன், தான் வெளியிடத்தில் இருக்கிறோம் என்பதையும் மறந்து விட்டு கத்துகிறான்.
அவளில்லாமல் அவனால் இனிமேல் இருக்கவே முடியாது என்கிறான். அவளில்லாத ஒரு சூழ்நிலையை நினைத்துப் பார்க்கக்கூட முடியாதாம். அவள் எல்லாவற்றையும் புறக்கணிக்க வேண்டுமாம்- எல்லோரையும் விட்டுவிட்டு அவளும் அவளின் குழந்தையும் மட்டும் வந்துவிட வேண்டுமாம்.
அவளுக்காக எப்போதும் அவன் வீட்டு வாசற் கதவு திறந்திருக்குமாம். அவள் யாரைப்பற்றியும் கவலைப்பட வேண்டாமாம். உலகத்திற்கும் பயப்பட வேண்டாமாம். பாதை வகுத்த பின்பு அதில் நடக்கத்தான் வேண்டுமாம்.
வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தானாம்.
அவனின் கத்தலில் அவளுக்கு அன்பின் அர்த்தம் புரிகிறது. அவளின் மீது அவனுக்கு இருக்கும் ஈடுபாடு புரிகிறது.
வாழ்க்கை வாழ்வதற்குத்தான் என்பது தெரிகிறது. அவள் ஆயத்தமாகிவிடுகிறாள்.
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் மட்டுமே என்கிற எண்ணங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிடுகிறாள். தன் நினைப்பை அவனுக்குச் சொல்கிறாள்.
அடுத்த நாளே அவன் ஒரு லாரியுடன் வந்து விடுகிறான்.
வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் அவன் அந்த லாரியில் அடுக்கும் போதுதான் அந்த தந்தி அவளுக்கு கிடைக்கிறது.
தந்தி வந்தது தெரியாமல் அவன் லாரியில் பொருள்களையெல்லாம் தன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவளைத் தேடிக்கொண்டு வருகிறான்.
அவள் அழுது கொண்டே அந்த தந்தியைப் படிக்கிறாள். இரண்டு நாட்களில் அவளின் கணவன் வரப்போகும் செய்தியைப் படித்ததுமே அவன் அதிர்ச்சியடைந்து அவனைப் பார்க்றான்
அவன் முகம் வெறிச்சோடி கேமரா மெல்ல நகர்ந்து அருகே, மிக அருகே சென்று அவனின் முகபாவத்தைக் காட்டுகிறது.
படம் முடிந்துவிட்டது.
விளக்குகள் பளிச்சென்று எரிந்து கதவுகள் திறக்கப்பட்டன.
சாயா அசையாமல் உட்கார்ந்திருந்தாள். காயத்ரி அவளைத் தட்டி எழுப்ப வேண்டியதாயிற்று.
என்ன அற்புதமான படம் காயத்ரி. நீ மட்டும் வற்புறுத்தி என்னை அழைத்திருக்காவிட்டால் நான் பார்த்திருந்திருக்க மாட்டேன். தாங்க்ஸ்
என்றாள் சாயா.
உனக்குப் படம் பிடித்ததா...?
"படமா இது! அப்படியே நிஜத்தைப் பார்க்கிறாற் போலத்தானே இருந்தது. ஏன் உனக்குப் பிடிக்க வில்லையா...?’’
ம். பிடித்தது. நேற்று என் கல்லூரியில் தோழிகள் வர்ணித்ததைப் பார்த்தால் ரொம்ப நன்றாக இருக்கும் என்று நினைத்து ஏமாந்ததுதான் மிச்சம். எனக்கு முடிவு கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை, அபத்தமான முடிவு.
அந்த முடிவுதான் சரியான முடிவு காயத்ரி
"எது...? அப்படி அழுது கொண்டு மூலையில் உட்கார்ந்து இரண்டு நாட்களுக்குப் பின்பு வரப்போகிற கணவனுக்காக காத்திருப்பதா...? சுத்தப்பேத்தல். அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து வைத்தால் படம் ஓடாது என்று எண்ணி விட்டார் போலிருக்குது அந்த டைரக்ட்ர் ‘சரியான இந்திய சினிமாவைப் பார்த்தது போல இருக்கிறது. ‘
உலகம் முழுவதும் மனிதர்கள் ஒரே மாதிரிதானே இருக்கிறார்கள் காயத்ரி.
அது சரி. நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளுகிற வார்த்தைகள் அவை. நான்கு திருமணங்களுக்கு மேல் செய்து கொண்ட பெண்களை காட்டட்டுமா உனக்கு.
‘‘உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் இருக்கலாம். ஆனால் நான் பொதுவாகப் பேசுகிறேன்.’’
மூலைகளில் இருப்பதையெல்லாம் நடுவில் கொண்டு வந்து காட்ட வேண்டும்
"அந்த டைரக்டருக்கு வேறு வேலைகள் இருக்கிறது காயத்ரி. எந்த மூலையில் என்ன இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கவா முடியும்?’’
அதைத் தேடுவதைவிட வேறு என்ன வேலை? இந்தப் படத்தில் அந்த ஹீரோயினின் மனசின் மூலையில் தானே அவன் இருந்தான். அந்த எண்ணத்தை ஏன் மனசு முழுவதும் நிறைத்துக்கொள்ளவேண்டும் அவள்.
தட் ஈஸ் கால்ட் லவ் மை டியர் காயத்ரி
அந்த லவ் தான் அவனிடம் அந்தத் தந்தியைக் காண்பிக்கச் சொன்னதா? உண்மையான அன்பு இருந்திருந்தால் அவள் அந்த தந்தியைக் கிழித்து போட்டிருக்க வேண்டும்
பேசுவதற்கு வேண்டுமானால் அப்படியெல்லாம் முடிவு எடுக்கலாம். கதைகளில் படிக்கலாம். ஆனால் உண்மையா வாழ்க்கையில் அதெல்லாம் சாத்தியம் இல்லை காயத்ரி.
கொஞ்ச நேரத்திற்கு முன்பு நீதான் இந்த சினிமாவை நிஜத்தைப் பார்க்கிறாற்போல் இருக்கிறது என்று வர்ணித்ததாக ஞாபகம்."
ஆமாம். நிஜத்தைப் பார்க்கிறாற் போலத்தான் இருந்தது. நிஜ வாழ்க்கையில் அதுதான் சாத்தியம்.
ஓஹோ... மனசு என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம். திருமணமான பின்பு, ஒரு குழந்தை பிறந்துவிட்ட பின்பு இன்னொருவனைக் காதலிக்கலாம், ஆனால் ஒன்றாக வாழ்ந்து விடுவதில் தவறா?
சரி என்பதும் தவறு என்பதும் மனசின் தைரியத்தைப் பொறுத்த விஷயம்.
"அந்த தைரியம் காதலிக்கும்போது வந்துவிடுகிறது. ஒன்றாக வாழலாம் என்று முடிவெடுக்கும் போது ஓடிவிடுகிறதா... அந்தப் படத்தின் டைரக்டரைப் பார்த்து சூடாக நான்கு கேள்விகள் கேட்க வேண்டும் போல இருக்கிறது எனக்கு’’
அதற்காக ரஷ்யாவிற்கு வேண்டுமானால் போய்விட்டு வாயேன்.
ம். போனால் போயிற்று. ஏர் இண்டியாவில் எனச்கு ப்ரீ டிக்கெட் தருகிறனா என்று கேள்
"மனசில் தெரஸா என்கிற நினைப்பா? ப்ரீ’ டிக்கெட் கொண்டு தருவதற்கு.’’
எனக்கு காயத்ரி என்கிற நினைப்புதான்.
உன்னுடன் பேசி மீளமுடியாது. சீக்கிரமாக நட பஸ் வந்து விடும்.
இப்போது அவசர அவசாமாகப் போய் என்ன செய்யப் போகிறோம்?
"சியாம் ஸ்கூலிலிருந்து வந்திருப்பான்.’’
"அவன் வந்தால் என்ன. அம்மாவைக் கேட்டு டிபன் வாங்கிச் சாப்பிட்டுக் கொள்வான்.’’
அதற்காக நான் சொல்லவில்லை. அவனுக்கு ஸ்கூலிலிருந்து வந்ததும் என்னைப் பார்த்துவிட வேண்டும். எங்கேயாவது போய் விட்டு நேரம் கழித்து வந்தால் எங்கேம்மா போனாய்? ஏன் லேட்டாக வருகிறாய் என்று என்னைத் துளைத்தெடுத்து விடுவான்.
நீ அவனுக்கு அதிகமாகச் செல்லம் தருகிறாய் சாயா. உன்னிடம் இருக்கும் குணங்களில் எனக்குப் பிடிக்காதது அதுதான்.
குழந்தைக்குச் செல்லம் கொடுக்காமல் உனக்கா தருவார்கள்.
உன்னைச் செல்லம் தரவேண்டாம் என்று சொல்லவில்லை. அதே சமயம் குழந்தையை கண்டித்து வளர்க்க வேண்டும் என்று தான் சொல்கிறேன். அவனுக்கு இப்போது ஐந்து வயது தானே ஆகிறது. இதற்குள் உன்னைக் கேள்விகள் கேட்க ஆரம்பித்து விட்டான் பார்.
எங்கே போனாய், ஏன் லேட்டாக வருகிறாய் என்று கேட்பதெல்லாம் கேள்விகள் இல்லாமல் வேறு என்ன சாயா?
"என் மீதுள்ள அன்பின் காரணமாக வருகிறவைதான். இதெல்லாம் உனக்கு இப்போது எங்கே புரியப் போகிறது. உனக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தால் எனக்கு மேலே இருப்பாய்.’’
ஆரம்பித்து விட்டாயா நீ...வர வர கிழவி மாதிரி பேச ஆரம்பித்து விட்டாய்.
"அதிகாரத் தோரணையில் இருந்தால் இளம் வயதில் இருப்பதாக அர்த்தமோ.’’
"உனக்கு கண்டிப்பதற்கும் அதிகாரத்திற்கும் உள்ள வித்தியாசம் தெரியவில்லை போலிருக்கிறது. இன்றைக்கு நீ கண்டித்து வளர்க்கா விட்டால் நாளை அவனே உன்னை அதிகாரம் பண்ண ஆரம்பித்து விடுவான். என் அண்ணாவையே நீ கேட்கவில்லையே. பையனை ஏன் கேட்கப்போகிறாய்.’’
"குருவை எனக்கு ஞாபகப்படுத்தாதே என்று உன்னிடம் எத்தனை தரம் சொல்வது.’’
சாயாவின் கண்களில் மனசின் கோபம் தெரிய அவள் ‘ஸாரி’ என்றாள்.
2
அண்ணனைப் பற்றி பேசப்பட்ட வாக்கியம் அத்தனை நேர சந்தோஷத்தையே கெடுத்துவிட்டது. காயத்ரியும் குருவைப் பற்றி பேசக்கூடாது என்று தான் நினைத்துக்கொள்கிறாள்.
ஆனால் தன்னையும் மீறி கோபத்தில், அண்ணனின் மீதிருக்கும் வெறுப்பில் சாயாவிடம் அப்படி பேச நேர்ந்து விட்டது. ‘ச்சே’ என்று தன்னையே நொந்து கொண்டு சாயாவைத் திரும்பிப் பார்த்தாள்.
அவள் இன்னமும் கோபத்தில் இருப்பதாகபட்டது. காலையிலிருந்தே