Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mathalangal
Mathalangal
Mathalangal
Ebook185 pages1 hour

Mathalangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தன் மகன் தனக்கு மட்டுமே உரிமை உரியவன் என எண்ணும் தாய். தன்மானத்தை விட மறுக்கும் மனைவி. திருமணத்திற்கு முன்பு தன் தாயிடம் மட்டும் உரலாக இடிபட்டு வாழ்ந்தவன் திருமணத்திற்கு பின்பு மனைவியிடமும் சேர்த்து மத்தளங்களாக இடிபடும் நம் கதாநாயகனின் கதையே இது.

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580101507484
Mathalangal

Read more from Jyothirllata Girija

Related to Mathalangal

Related ebooks

Related categories

Reviews for Mathalangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mathalangal - Jyothirllata Girija

    https://www.pustaka.co.in

    மத்தளங்கள்

    (ஒரு நவ யுக சமூக நாவல்)

    Mathalangal

    (Oru Nava Yuga Samuga Novel)

    Author:

    ஜோதிர்லதா கிரிஜா

    Jyothirllata Girija

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jyothirllata-girija-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    முன்னுரை

    இந்த நாவல் என் பிற நாவல்களிலிருந்து அறவே வித்தியாசமானது. பெண்களின் பிரச்சினைகள் பற்றியே அடிக்கடி எழுதும் நான், உரிமை கொண்டாடும் தாய்க்கும் சொந்தங் கொண்டாடும் மனைவிக்குமிடையே சிக்கித் தவிக்கும் ஒரு நல்ல இளைஞனின் பிரச்சினைகளைப் பற்றி இதில் எழுதியுள்ளேன். இடையிடையே நகைச்சுவையுடன் எழுதியிருப்பதாக நினைக்கிறேன். இருபுறமும் இடிபடும் மத்தளங்கள் போன்று அவதியுறும் ஆண்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்கிற நம்பிக்கையுண்டு.

    830, சிண்டிகேட் வங்கி ஊழியர் குடியிருப்பு

    9-ஆம் தெரு, அண்ணாநகர் மேற்கு விரிவு

    சென்னை -600 101

    தொலைபேசி: 6265969

    ஜோதிர்லதா கிரிஜா

    1

    அது ஒரு மைய அரசு அலுவலகம். அதன் கணக்குப் பிரிவில் சங்கீதா அன்றுதான் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருக்கிறாள். தலைமை எழுத்தர் பின்னால் நுழையும் அவளை எல்லாரும் முறைத்துப் பார்க்கிறார்கள். மதனும் கண்ணிமைக்காமல் அவளைப் பார்க்கிறான்.

    தலைமை எழுத்தர், நாற்காலியில் உட்கார்ந்த படியே, வாங்கம்மா, உக்காருங்க. அட்டென்டன்ஸ் ரிஜிஸ்டர்ல முதல்ல கையெழுத்துப் போடுங்க... சபேசன், இங்க கொஞ்சம் வாங்க. மிஸ் சங்கீதாவை உங்களுக்கு அசிஸ்டன்ட்டாப் போட்டிருக்கேன்... என்கிறார்.

    சபேசன், புன்னகையுடன் வந்து நின்று, சரி, சார். வாங்க, மிஸ் சங்கீதா என்கிறான்.

    சபேசன் அவளைத் தனக்கு அடுத்தாற்போல் அமரச் செய்கிறான். முதலில் சில கூட்டல் கழித்தல்களைப் போடச் சொல்லி, அவளிடம் ஒரு பேரேட்டைத் தருகிறான்.

    இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கும் மைதிலி, மெதுவாக, என்ன மிஸ்டர் மதன்? அந்தப் புதுப்பெண்ணை நம்ம அசட்டு ஹெட் கிளார்க் போயும் போயும் அந்த சபேசன்கிட்ட வேலை கத்துக்கச் சொல்லிடுத்தே? அவன் ஒரு போக்கிரின்னா? என்கிறாள், தன் பக்கத்து இருக்கை மதனிடம்.

    மதன், அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? எதுக்கும் அந்தப் பொண்ணை எச்சரிச்சு வைங்க... என்கிறான்.

    அதுக்கு அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன். பார்த்தாலே புத்திசாலிப் பொண்ணாட்டம் தெரியறா.

    அதெப்படிப் பார்த்தாலே தெரியும்? எனக்குத் தெரியலியே?

    சிரிக்காமல், ஒரு புத்திசாலியை இன்னொரு புத்திசாலியால இனம் கண்டுக்க முடியும், என்கிறாள் மைதிலி.

    அப்ப? என்னை முட்டாள்ங்கறேள்.

    சேச்சே. கோவிச்சுக்காதீங்க, மதன். சும்மா தமாஷ்.

    "நான் வேலையில சேர்ந்தப்ப நீங்கதான் எனக்கு வேலை கத்துக்குடுத்தீங்க. உங்களை நான் குரு ஸ்தானத்துல வெச்சிருக்கேன்.

    அதுலேர்ந்து இனிமே உங்களைக் கீழே இறக்கிட வேண்டியதுதான்."

    அதுக்கு ரெண்டு பேர் வேணும் மதன். ஒருத்தரால முடியாது.

    நீங்க எப்படி இப்படி தன்னைத்தானே கேலி பண்ணிக்கிறேள்? நீங்க உண்மையில ‘ப்ராட்’ broad தான்!

    அதையேதான் நானும் இப்ப சொன்னேன்!... பை தவே, மதன், நம்ம ஆபீஸ்ல நிறைய லவ் மேரேஜ் நடந்திருக்கு. தெரியுமா?

    அதான் சொல்லியிருக்கேளே, ஏற்கெனவே!

    இப்ப சத்தியா எலிஜிபிள் பேச்சிலர் உங்களைத் தவிர வேற யாருமில்லே. இன்னும் ரெண்டு மூணு பேர் இருந்தாலும், உங்க எலிஜிபிலிட்டிதான் ஜாஸ்தி!

    சும்மாருங்க, மேடம். அந்தப் பொண்ணு கவனிக்கிறா. அவங்களைப் பத்தித்தான் பேசறோம்கிறதைப் புரிஞ்சுண்டுட்டாங்க போல இருக்கு!

    அதுதான் பார்த்த உடனேயே சொன்னேனே, புத்திசாலிப் பொண்ணுன்னு.

    அப்ப நானும் புத்திசாலிதானே மேடம்? என்ற படி மதன் தன் சட்டைக் கழுத்துப்பட்டியைத் தூக்கி விட்டுக் கொள்கிறான் பெருமையாக.

    பதினொரு மணிக்கு மைதிலி எழுந்து போய்ச் சங்கீதாவைக் கூட்டிக் கொண்டு அலுவலகக் கான்டீனுக்குப் போகிறாள். இருவரும் பார்வையிலிருந்து மறைந்த பிறகு, எதிர் இருக்கையில் இருக்கும் மகாதேவன், பாவம் இந்த மைதிலி! குழந்தை இல்லைன்னு ரொம்ப ஏங்கறாங்க. ஏனோ பிறக்க மாட்டேங்குது! என்று கூறிப் பெருமூச்சு விடுகிறான், மதனைப் பார்த்து.

    ஆமா, சார்! எங்கிட்டகூட வருத்தப்பட்டிருக்காங்க. என்னை ஒரு தம்பி மாதிரி நடத்தறாங்க. எ வெரி நைஸ் லேடி...

    இதுக்கு முந்தி நீ ஒரு பிரைவேட் கம்பெனியில இருந்தியில்ல?

    ஆமா, ஜனதா ஃபுட்வேர்ஸ்ல. அங்க மூணு வருஷம் குப்பை கொட்டிட்டுத்தான் இங்க வந்தேன்.

    இப்ப இங்க குப்பை கொட்றியாக்கும்?

    அதான் இல்லே, எல்லாரும் கணக்குங்கிற பேரால கொட்ற குப்பையையெல்லாம் கன்சாலிடேட் பண்ணி மேலதிகாரிகளுக்கு சப்மிட் பண்ணிண்டிருக்கேன்.

    அது சரி, நீ ஏம்ப்பா எல்லாரையும் போல பதினொரு மணிக்குக் காப்பி குடிக்கப் போறதில்லே?

    அதெல்லாம் எனக்குக் கட்டுப்படியாகாது, மகாதேவன் சார். எங்கம்மா ரொம்பக் கஷ்டப்பட்டு என்னை முன்னுக்குக் கொண்டு வந்தாங்க. ஒரு வீடு கட்டணும்கிற ஆசை அம்மாவுக்கு வந்திருக்கு. அதனால அநாவசியமா எந்தச் செலவும் செய்ய முடியறதில்லே. வீட்டுல பொய் சொல்ற வழக்கமும் எங்கிட்ட கிடையாது. என்னோட ஆன்யுவல் இன்க்ரிமென்ட் முதற்கொண்டு பைசாக் கணக்குக்கூட விடாம சொல்லி எங்கம்மா கையில குடுத்துடுவேன். அப்படியே பழகிட்டேன்.

    நல்ல ஆளுப்பா நீ. என் விஷயம் கம்ப்ளீட்டா தலைகீழே. பாதிச் சம்பளத்தைத்தான் அம்மாகிட்ட குடுப்பேன், கத்துவாங்க. திட்டுவாங்க. எதுக்கும் அசைய மாட்டேன். அம்மாகிட்ட ஏமாத்தினாத்தான் உண்டு. பொண்டாட்டி வரதுக்குள்ள ஜாலியான பிரம்மசாரியா வாழ்ந்துடணும் மதன்!

    அப்பவும் அம்மாகிட்டதான் கொடுப்பீங்களா?

    அது நடக்குமா? பொண்டாட்டியாத்தா பெரியாத்தாதான்.

    என்னால அதுமாதிரி நெனச்சுக்கூடப் பார்க்க முடியாது சார்.

    சற்றுப் பொறுத்து மைதிலியும், சங்கீதாவும் பிரிவுக்குத் திரும்புகிறார்கள். அப்போது சங்கீதாவுக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. அவள் போய்ப் பேசுகிறாள்.

    சங்கீதா, ஹலோ!... என்னப்பா இது? நான் இன்னிக்குத்தானே வேலையில சேர்ந்திருக்கேன். அதுக்குள்ள ஃபோன் பண்ணணுமா?... அதெல்லாம் கேக்க முடியாதுப்பா. திடீர்னு சொன்னா எப்படிப்பா வர முடியும்? நோ, நோ; சாரிப்பா. கேக்கமாட்டேன், என்கிறாள்.

    ஒலிவாங்கியை வைத்துவிட்டு உட்காருகிறாள். மறுபடியும் தொலைபேசி மணி ஒலிக்கிறது. தலைமை எழுத்தர் எடுத்துப் பேசுகிறார்.

    தலைமை எழுத்தர், ஆமா, ஹெட் க்ளார்க்தான்; ஓகே அப்படியா? நான் கண்டிப்பா அனுப்பிவைக்கிறேன். கவலைப்படாதீங்க, சார் என்றவர், ஒலி வாங்கியை வைத்துவிட்டு, மிஸ் சங்கீதா; மத்தியானம் மூணு மணிக்குக் கெளம்பும்மா நீ. ஆல் த பெஸ்ட். என்று சிரிக்கிறார்.

    மைதிலியும், மதனும் புரிந்துகொண்ட பாவனையில் அவளைப் பார்க்கிறார்கள்.

    2

    மறுநாள் காலை, பத்து அடிக்கப் பத்து நிமிடங்கள் இருக்கின்றன. மைதிலியும்,மதனும் மட்டும் வந்துள்ளனர். ஐந்து நிமிடங்கள் கழித்துச் சங்கீதா வருகிறாள்.

    சங்கீதா, குட் மார்னிங் மேடம் என்கிறாள்.

    மைதிலி, எழுந்து போய் அவள் எதிரே நின்று, என்ன ஆச்சு? என்று மெல்லிய குரலில் விசாரிக்கிறாள்.

    எங்கப்பா மேலே எனக்கு ஒரே கோபம். இப்படியா தத்துப்பித்துனு ஹெட் க்ளார்க் கிட்ட உளர்றது? நல்ல வேளை, அந்த மனுஷன் இங்கிதமா நடந்துண்டார். எல்லார் எதிர்லயும் போட்டு உடைக்கலை.

    அவரு உடைக்கலைன்னா யாருக்கும் புரியாதுன்னா நெனச்சுண்டிருக்கே? அதோ எம் பக்கத்து சீட்டு மதன் இருக்கானே அவனேகூட கெஸ் பண்ணிட்டான் கரெக்டா.

    சங்கீதா முகம் சிவந்து, ஏதானும் சொன்னாரா? என்கிறாள்.

    அவன் ரொம்ப நைஸ் சேப். தப்பா எடுத்துக்காதே. அவங்களப் பொண்ணு பார்க்க வராங்க போல் இருக்குன்னான். சரி, ரிசல்ட் என்ன? அதைச் சொல்லு முதல்ல!

    வழக்கமான ரிசல்ட்தான். இவனோட எட்டுப்பேர் வந்து பார்த்தாச்சு. சுமாராத்தான் இருக்கான். போஸ்ட் ஆபீஸ்ல க்ளார்க். இருபதாயிரம் வேணுமாம். நகை பதினஞ்சு பவுனாம், ஸ்கூட்டராம். கடன் வாங்கி எப்படியாவது ஒப்பேத்திடறேங்கறார் அப்பா. நான் கூடவே கூடாதுன்னுட்டேன்.

    நல்ல காரியம் பண்ணினே. அப்பாவைக் கடன்ல மூழ்கடிக்கிற மாதிரியான கல்யாணத்துக்குப் பொண்ணுகள் ஒத்துக்கவே கூடாது. கொள்ளைன்னா அடிக்கிறா பிள்ளையைப் பெத்தவா!... எம் பக்கத்து சீட் மதன் இருக்கானே, அவனை உனக்குப் பிடிச்சிருக்கா சொல்லு.

    சீசீசீ. என்ன மேடம் இது? இதுக்கு நான் என்னத்தைச் சொல்றது? அவர் காதுல விழுந்து வைக்கப் போறது. முன்னை பின்ன தெரியாதவரைப் பத்தி நான் என்ன அபிப்பிராயம் சொல்றது?

    நேத்து உன்னைப் பாக்க வந்தவனும் முன்ன பின்ன தெரியாதவன் தானே?

    அதென்னமோ உண்மை தான்.

    அப்ப யோசிச்சு எனக்குப் பதில் சொல்லு.

    "நீங்க ஒண்ணும் அவரை

    Enjoying the preview?
    Page 1 of 1