Nenjukkul Ethanai Kanavugal...
By R. Sumathi
()
About this ebook
'நெஞ்சுக்குள் எத்தனை கனவுகள்' என்ற இந்த நாவல். என் மகளின் நெருங்கிய தோழியின் வாழ்க்கையில் வீசிய புயலைத்தான் கருவாகக் கொண்டு எழுதியிருக்கிறேன். இந்த தலைமுறையில் பெற்றோர்கள் சுயநலமாக இருப்பதில்லை. சமுதாயத்தில் இருக்கும் போட்டிக்கு தன் குழந்தைகளை தயார் செய்வதில் எந்த தியாகத்தையும் செய்ய முன் வருகின்றனர். அப்படி ஒரு தந்தையை எதிர்பார்க்கும் கதாநாயகி இதயம் உடைந்து போகிறாள். தன் சுயநலத்தை உணர்ந்த பின் தந்தையின் நிலை என்ன? எழுதும்போதே சில இடங்களில் என் கண்கள் நிறைந்துவிட்டன. காரணம் - எந்த சூழ்நிலையிலும் நம் வாழ்க்கை என்பது நமது குழந்தைகளுக்காக மட்டுமே என்ற மாற்ற முடியாத எண்ணமே. வாசித்து விட்டு வாசகர்கள் எழுதும் கடிதங்களுக்காக காத்திருக்கும்,
அன்புடன் ஆர். சுமதி
Read more from R. Sumathi
En Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Innum Thudikirathu! Rating: 0 out of 5 stars0 ratingsNiram Maarum Nimidangal Rating: 0 out of 5 stars0 ratingsGandharva Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsNandha En Nila Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 2 Rating: 0 out of 5 stars0 ratingsKai Veesum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsArputha Aani Muthey! Rating: 0 out of 5 stars0 ratingsSirukathai Thoguppu - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKattru Marakkumo Kaadhal? Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Konjum Saaral Rating: 0 out of 5 stars0 ratingsJeeva Jothi Rating: 0 out of 5 stars0 ratingsEn Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Pookkal Uthiruma? Rating: 0 out of 5 stars0 ratingsSillunu Oru Kaadhal Rating: 0 out of 5 stars0 ratingsPonnezhil Poothathu Pudhu Vaanil... Rating: 0 out of 5 stars0 ratingsInaiyana Ilamaaney Rating: 5 out of 5 stars5/5Ondru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsAlli Vacha Malligaiye! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkagave Vazhgirean Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Poothume Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsPoomagal Oorvalam Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Solli Vidai Peruvathu... Rating: 0 out of 5 stars0 ratingsEnna Vilai Azhage! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nenjukkul Ethanai Kanavugal...
Related ebooks
Sahana Oru Sangeetham Rating: 0 out of 5 stars0 ratingsInithu Inithu Kaadhal Inithu! Rating: 0 out of 5 stars0 ratingsKaathal Thamarai Rating: 0 out of 5 stars0 ratingsTheruvil Vizhuntha Maalaigal Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Kalangamillai Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Kaadhaliye! Rating: 0 out of 5 stars0 ratingsNaalai Varuvaan Nayagan! Rating: 0 out of 5 stars0 ratingsAnal Meley Panithuli Rating: 0 out of 5 stars0 ratingsMattrumoru Maalai Neram Rating: 0 out of 5 stars0 ratingsThoduvanai Thottuvidu Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsThendrale Ennai Thodu Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Thevathai Rating: 4 out of 5 stars4/5Odum Megangale Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Kunguma Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsEnakkenave... Nee… Kidaithai! Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire... Nee Enge! Rating: 0 out of 5 stars0 ratingsPaadu Nilaave Rating: 5 out of 5 stars5/5Irai Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5Ange Sendru Anbai Sollu Rating: 0 out of 5 stars0 ratingsVaramai Vantha Sorgam Rating: 0 out of 5 stars0 ratingsInaiyana Ilamaaney Rating: 5 out of 5 stars5/5Thaalam Thappiya Paadal Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiyil Oru Malligai! Rating: 0 out of 5 stars0 ratingsPoovey Malarnthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharumo En Megam? Rating: 0 out of 5 stars0 ratingsEn Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Megam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nenjukkul Ethanai Kanavugal...
0 ratings0 reviews
Book preview
Nenjukkul Ethanai Kanavugal... - R. Sumathi
http://www.pustaka.co.in
நெஞ்சுக்குள் எத்தனை கனவுகள்...
Nenjukkul Ethanai Kanavugal...
Author:
ஆர். சுமதி
R. Sumathi
For more books
http://www.pustaka.co.in/home/author/r-sumathi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
1
கை நிறைய பூங்கொத்துடன் தோட்டத்திலிருந்து ஓடி வந்து கொண்டிருந்தாள் சுனிதா. சுனிதா கொடுத்து விட்டு போன ஆவி பறக்கும் காபியை சுவைத்தவாறே பால்கனியில் நின்றபடி சந்திரகாந்த் பார்த்தார். தோட்டத்தின் அந்த அழகான காலைப் பொழுதின் பின்னணியில் சூரியனின் மஞ்சள் நிற ஒளி பின் தொடர சோம்பலாய் பறக்க விரும்பாத பட்டாம்பூச்சிகளுக்கிடையே ஒரே ஒரு பட்டாம்பூச்சி மட்டும் உற்சாகமாக எழுந்து பறப்பதை போலிருந்தது சுனிதா ஓடி வந்த காட்சி. மகளின் அழகையும் துள்ளலையும் ரசித்தபடி சூடான காபியை பருகுவது மிகவும் இதமாயிருந்தது அந்த அதிகாலைப் பொழுதில்.
பூக்களில் தேனை மட்டுமே எடுக்கும் பட்டாம்பூச்சி இப்போது பூக்களையே பறித்துக் கொண்டு பறப்பதைப் போல் பறந்து வந்த சுனிதா, பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் தந்தையிடம் ஓடி வந்தாள்.
சுனிதா பத்தாம் வகுப்பு படிக்கும் பெண். பருவத்தின் முதல் படியில் இருப்பதை உடல் உறுதி செய்தாலும் முகத்தில் மழலையின் அறியாமை. கண்களில் மின்னலின் ஒளி, கன்னத்தில் மலர்ந்த ரோஜாக்களின் செழிப்பு, உதட்டில் கனிகளின் மினுமினுப்பு.
கான்வென்டில் படிக்கிறாள் என்பதை பறைசாற்றுவதைப் போன்ற ஹேர் ஸ்டைல் தோள் வரை வெட்டப்பட்ட முடியில் தெரிந்தது.
குட்மார்னிங் டாடி
குட்மார்னிங் டியர். என்ன ஸ்பெஷல் இன்னைக்கு? கை நிறைய இத்தனை பூக்கள்? எனக்கு இன்னைக்கு பர்த்டேயா? நான் மறந்துட்டேனா
நோ டாடி உங்க பர்த்டே இல்லை.
பின்னே எதுக்கு இத்தனை பூக்கள்? உன் பிரெண்ட்ஸ் யாருக்காவது பர்த்டேவா?
இல்லை. ஆனா ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி நான் உங்களுக்கு ஒரு விஷயம் சொன்னேன்
என்ன விஷயம் சொல்லேன். அப்பாவுக்கு வயசாயிடுச்சு இல்லையா? நிறைய மறதி இப்பவெல்லாம். நீயே சொல்லேன்
ஐய்யோ... சரியான மறதி மன்னர் டாடி. எங்க கிளாஸ்க்கு புது டீச்சர் வரப்போறதா சொல்லியிருந்தேன்ல?
ஞாபகம் வந்தவராக முகம் பிரகாசமானார்.
அட நான் மறந்தே போயிட்டேன்
இன்னைக்கு எங்களுக்கு புது டீச்சர் வர்றாங்க. அவங்களை வெல்கம் பண்ணத்தான் இந்த பிளவர்ஸ்.
என்றவள் அந்த பூங்கொத்திலிருந்து சிவப்பு ரோஜா இரண்டை உருவினாள்.
அந்த ரோஜாக்களை தந்தையின் எதிரே உயர்த்திக் காட்டினாள்.
இது அம்மாவுக்கும் அக்காவுக்கும்
மகளின் கேசத்தை மென்மையாக வருடினார்.
அப்பாவின் கையைப் பற்றி உள்ளே அழைத்து வந்தாள். பூங்கொத்தை மேஜை மீது வைத்து விட்டு சிவப்பு ரோஜாக்களுடன் தாயின் புகைப்படத்திற்கு அருகில் வந்தாள்.
மேஜை மீது பெரிதாக்கப்பட்ட புகைப்படத்தில் சிரித்தபடி ஜெயந்தி. சந்திரகாந்தின் மனைவி. பக்கத்தில் சுனிதாவின் வயதில் சுனிதா. சந்திரகாந்தின் மகள்.
சிவப்பு ரோஜாக்களை புகைப்படங்களின் மீது வைத்து சுனிதா கை குவித்து வணங்கினாள்.
அவளுக்கு பின்னால் நின்றிருந்த சந்திரகாந்தின் முகம் இறுகிப் போனது. கண்களில் கண்ணீர் சுரந்தது.
தந்தையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்த சுனிதா அவருடைய கையைப் பற்றிக் கொண்டாள்.
அப்பா
மகளுடைய கேசத்தை மெல்ல வருடிய தந்தையை அழைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தாள்.
சந்திரகாந்த் சில நிமிடங்கள் சோபாவில் அமர்ந்தார். கண்களை மூடிக் கொண்டு முகத்தில் சுருக்கத்துடன் காணப்பட்டார். இறுக மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. தந்தையின் அருகில் அமர்ந்த சுனிதா தந்தையின் முகத்தை கைகளில் தாங்கினாள்.
அப்பா பிளீஸ் ரிலாக்ஸ்
மகளின் சமாதானத்தில் சில நிமிடங்கள் கழித்து கண்களை திறந்தவர் தன்னைத்தானே சரி செய்து கொண்டதைப் போல எழுந்தார்.
சுனிதா டிபன் என்ன சாப்பிடறே? இட்லி பண்ணட்டா?
ம்...
என்றாள்.
இட்லிக்கு சாம்பார் பண்ணட்டா? சட்னி பண்ணட்டா?
சட்னி பண்ணிடலாம்பா. அப்பா சட்னி நான் பண்றேன்
வேண்டாம்மா. நீ போய் ஸ்கூல் கிளம்பு. நான் பண்றேன்
சந்திரகாந்த் சமையலறையில் நுழைந்தார்.
சுனிதா தன் அறைக்குள் வந்து புத்தகங்களை அடுக்கி பையில் வைத்தாள்.
மனம் மட்டும் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தது.
அடுத்த அரை மணி நேரத்தில் சமையல் மேஜையில் இருந்து அப்பாவின் குரல் உற்சாகமாக வந்தது.
சுனிதா டிபன் ரெடி... வா
அப்பாவின் குரலில் சற்றுமுன் இருந்த சோகம் தொய்வு எதுவும் இப்போது இல்லை. உற்சாகமாக ஒலித்தது.
நிமிடத்தில் அப்பா தன்னைத்தானே மாற்றிக் கொள்வதை நினைத்தாள்.
சமையல் மேஜைக்கு வந்தாள். மல்லிகைப்பூ போன்ற இட்லியும் தக்காளி சட்னியும் தட்டில் சிரித்தது.
சாப்பிடும்மா
அப்பா நீங்க?
எனக்கு ஆபீஸ் கிளம்ப டயமிருக்கு. நீ சாப்பிட்டுட்டு கிளம்பு. அப்புறம் சாப்பிடுறேன்.
மகளின் அருகில் அமர்ந்து மேஜை மீதிலிருந்த இட்லி பொடி டப்பாவைத் திறந்து பொடியை அவளுடைய தட்டில் வைத்து நல்லெண்ணை ஊற்றினார்.
இட்லியை எடுத்து சட்னியில் தோய்த்து சாப்பிடத் தொடங்கியவாறே அப்பாவை பார்த்தாள் சுனிதா.
கன்னத்தில் கைதாங்கி மகளை உற்றுப் பார்த்த சந்திரகாந்த் தன்னையே ஏதோ பரிதாப உணர்வோடு பார்த்துக் கொண்டிருக்கும் மகளைப் பார்த்துக் கேட்டார்,
என்னடா ஏன் ஒரு மாதிரியா பார்க்கிறே?
அப்பா நான் ஒண்ணு கேட்டா பதில் சொல்லுவீங்களா? தப்பா எடுத்துக்க மாட்டீங்களே
நீ கேட்டு நான் என்னடா தப்பா எடுத்துக்கப் போறேன்? கேளுடா
அப்பா அம்மா இறந்த பிறகு நீங்க வேற கல்யாணம் பண்ணியிருக்கலாமேப்பா
இதைக்கேட்டு சந்திரகாந்த் பெரிதாக சிரித்தார்.
இப்பத்தான் என்ன கெட்டுப் போயிடுச்சு? இப்ப வேணா கல்யாணம் பண்ணிக்கிறேன்
அப்பாவின் கையை ஆதரவுடன் பற்றிய சுனிதா சொன்னாள்.
அப்பா நிஜமாவே வீட்ல நீங்க சமையல் முதல் கொண்டு எல்லாத்தையும் செய்யறது ரொம்ப கஷ்டமாயிருக்கு. உங்களை கவனிச்சுக்க அம்மா வேணும் இல்லையா? எல்லா வீட்லயும் எல்லோருடைய அப்பாவும் ராஜா மாதிரி போய்ட்டு வந்திட்டிருக்காங்க. நீங்க மட்டும் கஷ்டப்படற மாதிரி இருக்கு
என்னடா கஷ்டம்? முடியுது செய்யறேன். முடியலைன்னா ஒரு வேலைக்காரி வச்சுட்டுப் போறேன்