Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paadu Nilaave
Paadu Nilaave
Paadu Nilaave
Ebook129 pages1 hour

Paadu Nilaave

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateJan 2, 2018
ISBN9781043466336
Paadu Nilaave

Read more from Parimala Rajendran

Related to Paadu Nilaave

Related ebooks

Related categories

Reviews for Paadu Nilaave

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paadu Nilaave - Parimala Rajendran

    20

    1

    கண்ணாடியின் முன் உட்கார்ந்திருந்தாள் நிலா. வானவில்லாய் வளைந்த புருவங்கள். அதன் இடைவெளியில் சிறிய ஸ்டிக்கர் பொட்டு, கூந்தலை லூசாக விட்டு ‘கிளிப்’ செய்திருந்தாள்.

    எளிமையான அலங்காரத்திலும் அழகாய் தெரிந்தாள்.

    பிரம்மன் அவளை மிக நேர்த்தியாக படைத்திருந்தான். சிகப்பு வண்ண சுடிதார் அவள் அழகை மிகைப்படுத்தி காட்டியது.

    செல்போன் மெல்லிய இசையில், அவள் கவனத்தை திசைதிருப்ப, அம்மாவின் நம்பர் திரையில் ஒளிர்ந்தது.

    மாடி ஏறி வர யோசித்து, போனில் கீழிருந்து கூப்பிடுகிறாள் புன்னகை முகத்தில் படர,

    என்னம்மா

    கீழே வாம்மா - டிபன் ரெடியா இருக்கு. உன் செகரட்டரி குணா ரெடியா நிக்கறாரு. அப்படியே காரில் ஏறி போயிடாதே. ஒரு வாய் - சாப்பிட்டு போ.

    வரேன்மா

    ரூம் கதவை திறந்து வெளியே வர, கையில் இருந்த செல்போன் மீண்டும் சங்கீதம் பாடியது.

    நிலாவின் முகம் மலர்ந்தது.

    அவளுடைய நெருங்கிய தோழி, உயிர் சினேகிதி, சுஜியின் அழைப்பு

    ஹாய் சுஜி எப்படியிருக்கே

    வணக்கம் வந்தனம். பிரபல பின்னணி பாடகி வெண்ணிலா அவர்களே தாங்கள் இப்போது. எங்கு கிளம்பி கொண்டிருக்கிறீர்கள் என்று அடியேன் தெரிந்து கொள்ளலாமா?

    ஓய்... உதைபடறே. என்ன கிண்டலா.

    "பின்னே.... என்னப்பா... இரண்டு நாளா போனில் கூட அகப்படமாடேங்கிறே. ரொம்பதான் பிஸியாகிட்டே... கொஞ்ச நாளில் என்னையெல்லாம் மறந்துட போறே.’’

    சுஜிதா

    நிலாவின் குரலில் வருத்தம் தெரிய,

    சும்மா விளையாட்டுக்கு சென்னேன் நிலா. அதற்குள் குரல் உள்ளே போயிடுச்சி. உன்னை நினைச்சு எனக்கு எவ்வளவு பெருமையாக இருக்கு தெரியுமா?

    இந்த ஆறு மாதத்தில் எப்பேர்பட்ட வளர்ச்சி. இதோடு நூறு பாடல்களுக்கு மேல் பாடிட்டே. எங்கே போனாலும், டி.வி.யில் எல்லா சேனலிலும் உன் பாட்டுதான் கேட்குது.

    உன் குரலின் இனிமையில் எல்லாரும் மயங்கிட்டாங்க நிலா"

    "போதும் புகழ்ந்தது. இப்போ ரிகார்டிங்கிற்காக ஜி.எம். ஸ்டூடியோ போயிட்டிருக்கேன். ஈவினிங் ஆறு மணிக்கு வந்துடுவேன் நீ எந்த எக்ஸ்யூக்ஸும் சொல்லாம வீட்டுக்கு வர்றே.

    உன்கிட்டே நிறைய பேசணும் ஓ.கே.வா."

    "டபுள் ஓ.கே. நீ புறப்படு... பை...’’

    கீழே வருகிறாள்.

    கையில் டிபன் ப்ளேட்டுடன் லட்சுமி நிற்க,

    என்னம்மா... ரெடியா இருக்கே போலிருக்கே.

    மணியாச்சுன்னு சாப்பிடாம போயிடுவே... அதான் இட்லியை வச்சு சாம்பார் ஊற்றி ரெடியா நிக்கிறேன்.

    சரி... நீயே ஊட்டி விடு...

    ஆவென்று வாய் திறந்து காட்ட,

    மகளுக்கு ஊட்டி விடுகிறாள்.

    வாயில் இட்லியை மென்ற படி,

    சாயிந்திரம் சுஜிதா வீட்டுக்கு வர்றா. அவளுக்கு பிடிச்ச அடை, அவியல் செய்ய சொல்லிடு. நான் ஆறு மணிக்குள் வந்துடுவேன்.

    வாயை டவலால் துடைத்தவள்,

    கிளம்பறேன்மா.

    அம்மாவிடம் விடைபெற்று வெளியே வந்தவள், அவளுக்காக காத்திருக்கும் குணாவுடன், தயாராகயிருக்கும் காரில் ஏறுகிறாள்.

    ஹாலுக்கு வந்த லட்சுமி, அங்கிருந்த ஆளுயற சோபாவில் உட்கார்ந்தவளாய் வீட்டை நோட்டமிடுகிறாள்.

    எவ்வளவு பெரிய வீடு. எத்தனை பிரம்மாண்டம். இப்படிப்பட்ட வீட்டில் வாழ்வோம் என்று கனவிலும் நினைக்கவில்லை.

    நாலு வீட்டில் சமையல் வேலை பார்த்தவள், இப்போது நாலு வேலைக்காரர்களை வேலை வாங்கி கொண்டு, பங்களா போன்ற வீட்டில் இருக்கிறாள்.

    அதிர்ஷ்டம் என்பது இதுதானா...

    மகளை எப்படி கரையேத்த போகிறோம் என்று கவலைப்பட்டவள், இப்போது நாலுபேர் பார்வையிலிருந்து மகளை காப்பாற்ற வேண்டுமே என்று கவலைப்படுகிறாள்.

    அம்மா... இந்தாங்க காபி கேட்டிங்களே.

    செண்பகம், காபி டம்ளரை தர,

    வாங்கியவள்,

    "இன்னைக்கு நிலா வீட்டுக்கு வந்ததும், திருஷ்டி சுத்தி போடணும் செண்பகம். ஞாபகமாக சொல்லு.’’

    ஆமாம்மா. தங்கச்சிக்கு நிறைய கண்னு. குரலும் தேனாக இனிக்குதுன்னா... அந்த பொண்ணும் பார்க்க தேவதை மாதிரி இருக்கு. எந்த மகாராசனுக்கு கொடுத்து வச்சுருக்கோன்னு என் காதுபடவே நிறைய பேர் பேசறாங்க.

    "அப்புறம் சாயிந்திரம் அடை செய்யணும், அரிசி, பருப்பு, ஊற வச்சுடு. நிலாவோட ப்ரெண்ட் சுஜிதா வர்றாளாம்.’’

    ஆகட்டும்மா.

    கார் வேகம் எடுத்து செல்ல,

    டிரைவரின் அருகில் இருந்த குணா,

    மேடம், நாளைக்கும் ரிகார்டிங் இருக்கு. மியூசிக் டைரக்டர் சகாதேவன் மியூசிக்கில் பாடறீங்க...

    ஆமாம். ஞாபகம் இருக்கு. டூயட் சாங்க் தானே.

    "நீங்களும், நந்தா சாரும் பாட போறீங்க. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து பாடின பாட்டெல்லாம் செம ஹிட் மேடம்.

    அதுவும் பார்க்க, பார்க்க காதல் வரும்,

    பழக, பழக ஆசை வரும்னு... ஹம்மிங்வோடு பாடுவீங்களே அது இன்னும் எம்.டி.வியில் டாப் ஒன் ரேங்கில் இருக்கு."

    குணா சொல்ல,

    நந்தகுமாரின் ஆண்மை ததும்பிய கம்பீரமான குரல், அவள் காதில் ஒலிக்கிறது.

    இனிய நண்பர். ஒரு நாள் அவரை அவர் ஒய்ப்போடு வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கணும்.

    மனதில் நினைத்தவளாய்,

    குணா அந்த பாட்டை போடுங்க கேட்போம்.

    பாடல் ஒலிக்க, மெல்ல கண் மூடுகிறாள்.

    "இன்னைக்கு நம்ப காலேஜ் மியூசிக் காம்படிசனில் கெஸ்ட் யாரு தெரியுமா?"

    யாரு

    நிஜமா தெரியாதா, பிரபல டைரக்டர் ரகுவரன்தான் வர்றாரு

    அப்படியா... இண்ட்ரஸ்டிங்... செமையா இருக்க போகுது.

    நம்ப வைஜெயந்திக்கும், வெண்ணிலாவுக்கும் சரியான போட்டி.

    தோழிகள் சிரிப்பும், கலகலப்புமாக அரட்டை அடிக்கிறார்கள்.

    நீங்காத நினைவுகள் நெஞ்சை தாலாட்டும்.

    ரகுவரன் படத்தில் இடம் பெற்ற பாடலை ஸ்ருதி குறையாமல் லயித்து பாடுகிறாள் நிலா.

    ஏறக்குறைய பத்து பேருக்கு மேல் இடம் பெற்ற போட்டியில், முதல் பரிசுக்கு உரியவளாக நிலாவின் பெயர் சொல்லப்பட்தும், அரங்கமே கைதட்டி ஆரவாரம் செய்கிறது.

    அருகில் அழைத்து பரிசை நிலாவின் கையில் கொடுத்த ரகுவரன், "உன் குரலில் ஒரு ஈர்ப்பு இருக்கும்மா... அதுமட்டுமில்லை பாடலை பாடும்போது, ஒவ்வொரு வரிகளும் உள் மனசிலிருந்து வரணும். அப்பதான் அந்த பாடலில் ஜீவன் இருக்கும்.

    இந்த இனிமையான குரலை, நிச்சயம் நான் பயன்படுத்திக்குவேன். வாழ்த்துக்கள் வெண்ணிலா."

    சொன்னது போல இரண்டு மாதம் கழித்து டைரக்டர் ஒருவரிடமிருந்து அழைப்பு வர,

    "என்னால் நம்ப முடியலை சுஜி. ஏதோ மேடை பேச்சுக்கு சொன்னார்ன்னு நினைச்சேன். இப்ப உண்மையிலேயே சண்-டே நந்தினி ஸ்டூடியோவுக்கு வரச் சொல்லியிருக்காரு. எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை.’’

    "ஏய்... பைத்தியம். அதிர்ஷ்டம் உன்னை தேடி வந்திருக்கு. சினிமாவில் பாட சான்ஸ் தரப் போறாரு. எக்ஸாம் நாளையோடு முடியுது. தாராளமாக போ. துணைக்கு நானும் வரேன்.

    அவர் படத்தில் மட்டும் பாட உனக்கு வாய்ப்பு கிடைச்சா... நீ எட்ட முடியாத உயரத்துக்கு போயிடுவே..."

    சுஜி சொன்னது போல, முதல் பாடல் பட்டி தொட்டியெல்லாம் ஒலிக்க, அவளை பற்றிய பேச்சு பரவலாக தொடர, இதோ இப்போது பிரபல பின்னணி பாடகியாக வலம் வருகிறாள்.

    2

    "அப்பா வீட்டில்தான் இருக்கீங்களா

    Enjoying the preview?
    Page 1 of 1