Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithayam Nanaikkum Mazhai
Ithayam Nanaikkum Mazhai
Ithayam Nanaikkum Mazhai
Ebook115 pages1 hour

Ithayam Nanaikkum Mazhai

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465889
Ithayam Nanaikkum Mazhai

Read more from Parimala Rajendran

Related to Ithayam Nanaikkum Mazhai

Related ebooks

Reviews for Ithayam Nanaikkum Mazhai

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithayam Nanaikkum Mazhai - Parimala Rajendran

    16

    1

    தஞ்சாவூர் உங்களை இனிதே வரவேற்கிறது.

    காரில் முன் சீட்டில் உட்கார்ந்திருந்த ரேவதி, மஞ்சள் நிற பலகையை பார்த்தாள். தூரத்தில் பெரிய கோவிலின் கோபுரம் தெரிந்தது.

    ஊர் வந்தாச்சு...

    அருகில் இருந்த முரளி காரை ஓட்டியபடி மனைவியை பார்த்தான்...

    நமக்கு கல்யாணமான நாலு வருஷத்தில் இது மூன்றாவது ஊர்... சிதம்பரம், சேலம்... இப்ப தஞ்சாவூர்...

    இதை நீ சாதாரணமா சொல்றியா... கிண்டலா சொல்றியா...

    சாதாரணமாக தான் சொல்றேன்... நீங்க இதோடு மூன்றாவதாக இங்கே வேலை தேடிட்டு வந்திட்டிங்க...

    உன் வருத்தம் புரியுது... சேலத்தில் உனக்கு ப்ரண்ட்ஸ் அதிகம்... அதுவும் ஆண் நண்பர்கள் நிறைய பேர்... எல்லாரையும் பிரிஞ்சு வந்துட்டோம்ங்கிற வருத்தம் உன் பேச்சில் தெரியுது...

    கண்களை இடுக்கி, உதட்டை சுழித்து கேவலமாக சிரிக்கும் முரளியை ஏறெடுத்தும் பார்க்காமல் தலைகுனிந்தாள்.

    அந்த பாங்க் மேனேஜர் அவர் பேர் என்ன... ம்... நந்தா... அவன் என்னமா வழிந்தான்.

    மேடம்... நீங்க இருக்கிற இடம் எப்பவும் கலகலப்பாக இருக்கும். இப்ப நீங்க ஊரை விட்டே போறீங்கன்னு கேள்விபடும் போது உண்மையில் வருத்தமா இருக்கு... என் ஒய்ஃப் சுகாந்தினி... தனிமையை உணர்வா... அவளுக்கு நீங்க ஒரு நல்ல தோழியாக இருந்தீங்க...

    அடடா... அவன் மனைவியா, இல்ல அவனா தனிமையை உணர போறது... என்னமா நடிக்கிறான்...

    அமிலமாய் வார்த்தைகள்... மனம் தீயாக எரிகிறது.

    வந்த முதல் நாளே சண்டையில் ஆரம்பமாக வேண்டாம், அவன் குணம். தெரிந்தது தான். கல்யாணமான இந்த நான்கு வருடத்தில் இவளால் பட்ட காயங்கள் எவ்வளவோ... அதில் இதுவும் ஒன்றாக இருக்கட்டும்.

    என்ன பதிலை காணோம்...

    நான் என்ன சொன்னாலும்... அதை நீங்க ஏற்க போறதில்லை, அப்புறம் வீண் விவாதம் எதுக்கு?

    ஆமாம், நான் பதிவிரதைங்க... உங்களை தவிர யாரையும் மனசால கூட நினைச்சதில்லை. என்னை ஏன் தப்பா பேசறீங்க... என் சிநேகிதியின் புருஷன்ங்கிற நட்போடு தான் அவர்கிட்டே பேசியிருக்கேன்... அதானே சொல்வே...

    மெளனமாக இருந்தாள்.

    உனக்கு திமிர் அதிகம். அழகிங்கிற அகந்தை... உன்னுடைய இந்த கோதுமை நிறமும், நீண்ட கண்களும், அளவெடுத்தது போல அமைந்த உடல்வாகும், யாரையும் அடிமைபடுத்திடலாம்ங்கிற திமிரை தானே உனக்கு கொடுத்திருக்கு... கல்யாணத்துக்கு முன்னாலேயே என் மாமாகிட்டே சொன்னேன்... பேரழகியாகவே அவ இருக்கட்டும்... எனக்கு வேண்டாம் மாமா... என்னுடைய இந்த கருமை நிறத்துக்கு பொருத்தமான பெண்ணாக பாருங்கன்னு... அவர் கேட்கலையே... இப்படியொரு அழகி உனக்கு மனைவியாக வர, நீ கொடுத்து வச்சுருக்கணும்னு... உன்னை என் தலையில் கட்டிட்டு ஒதுங்கிட்டாரு. இப்ப நான் தானே கஷ்டப்படறேன்.

    ரேவதியின் மனதில் அவள் அப்பா வந்தார்...

    அம்மா ரேவதி, பெத்தவங்க இல்லாம அன்புக்கு ஏங்குகிற பையன். சொத்துக்கள் அதிகம். உன் மகளை கட்டிக் கொடுத்தால், சீரும் சிறப்புமாக வாழலாம்னு, மத்தவங்க சொன்னதை கேட்டு... உன்னை இந்த மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்தேன். ஆனால், குணம் இல்லாதவராக இருக்காரேம்மா... இப்படி தேளாக வார்த்தைகளை கொட்டற இவரோடு நீ எப்படிம்மா காலமெல்லாம் வாழ போற...

    நீங்க வருத்தப்பட இதில் எதுவும் இல்லைப்பா. அஞ்சு விரலும் ஒண்ணாக இல்லையே. அதுபோல தான் மனிதர்களின் குணமும், அவர் குணம் அப்படி... எதையும் கொஞ்சம் கடுமையாகவே பேசி பழக்கம். நாளாக சரியாயிடும்பா... அப்படியே இல்லைன்னாலும் அவர் குணத்துக்கு நான் அனுசரிச்சு போயிடுவேன். நீங்க கவலைப்படாதீங்கப்பா...

    கல்யாணமான நான்கு மாதத்திலேயே எதற்கெடுத்தாலும் சிடுசிடுக்கும் மாப்பிள்ளையை பார்த்து, அப்பா கேட்டபோது தைரியம் சொன்னாள் ரேவதி. ஆனால் சிடுசிடுப்பான குணம் மட்டுமில்லை, சந்தேகப்புத்தியும் அதிகம் என்பதை போக போக புரிந்துக் கொண்டாள்.

    மனைவி அழகாக இருக்கிறாள் என்று பெருமிதபடுவதை தவிர்த்து...

    மற்றவர்கள் அவன் முன்னால், லட்சமிகரமாக, லட்சணமாக உனக்கு மனைவி அமைஞ்சிருக்கான்று சொல்லும் போது எரிச்சல்பட்டான். அவள் அழகாக டிரஸ் பண்ணினால் தேவையில்லாமல் கோபப்படுவான். அதுவும் தெரிந்தவர்களுடன் சிரித்து பேசிவிட்டால் அவ்வளவு தான், வார்த்தைகளில் அனல் வீசும்.

    பொறுத்துக் கொண்டால் எல்லாவற்றையும்... இது தான் கடவுள் அவளுக்கு கொடுத்த வாழ்க்கை... இவனுடன் வாழ வேண்டும்... இவன் குணங்களை மாற்றி... இவனை நல்லவனாக்க, நாலு வருட போராட்டம், எந்த பயனையும் அளிக்கவில்லை.

    புதுவீடு ஓரளவு சாமான்களை எடுத்து ஒழுங்கு படுத்திவிட்டாள். வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கியாகிவிட்டது.

    நாளையிலிருந்து வழக்கமான வேலைகள் ஆரம்பம். மனதில் சலிப்பு தோன்றியது... வேண்டாம், இந்த சலிப்பு வாழ்க்கையின் சந்தோஷங்களை மொத்தமாக இழக்க செய்து விடும். பெருமாள் படத்தை சுவாமி ரூமில் மாட்டினாள்.

    பெருமாளே..., எனக்கு விபரம் தெரிஞ்ச நாளிலிருந்து, எல்லாமே நீ தான்னு நினைச்சு தான் வாழ்ந்துட்டு வரேன். வீடு நிறைஞ்சு செல்வம், எந்த குறையுமில்லை. ஆனால் கட்டிய கணவனிடமிருந்து எனக்கு கிடைக்க வேண்டிய உண்மையான அன்பும், பாசமும் எனக்கு கிடைக்கவில்லை. என் வாழ்க்கையில் நிறைவை நீதான் தரணும்.

    ரேவதி... ரேவதி... உள்ளே என்ன பண்றே?

    இதோ வந்துட்டேன்...

    காலையில் நான் ஒன்பது மணிக்கெல்லாம் கிளம்பணும். அதற்குள் டிபன், சாப்பாடு இரண்டுமே ரெடி பண்ணிடு. வெளியில் சாப்பிட்டால் எனக்கு ஒத்துக்காதுன்னு தெரியும் தானே.

    அதுசரிங்க... உங்க கம்பெனி பக்கத்தில் தானே இருக்கு வந்து சூடாக சாப்பிட்டு போகலாம் இல்லையா...

    ஏன் நான் வரலைன்னா உனக்கு நல்லது தானே... அலங்காரம் பண்ணிட்டு கதவை பூட்டிட்டு கிளம்பிடலாம். புது இடம்... புது நண்பர்கள் தேடணும். அதுக்கு வசதியாக இருக்கும் சரிதானே...

    பதில் சொல்லாமல் உள்ள போக,

    இங்கே பாரு... காலையில் போனா... சாயந்திரம் தான் வருவேன்னு நினைக்காதே. எனக்கு எப்ப தோணுதோ, அப்ப வீட்டுக்கு வருவேன். நான் வேலை பார்த்து தான் சாப்பிடணும்னு அவசியமில்லை. என்னை பெத்தவங்க என்னை அனாதையாக விட்டுட்டு போனாலும், எக்கசக்க சொத்தை விட்டுட்டு தான் போயிருக்காங்க... நான் உட்கார்ந்து சாப்பிட்டாலே... அடுத்த தலைமுறை வரைக்கும் இருக்கும் புரியுதா...

    இவனிடம் என்ன பதில் சொல்வது...

    என் பேர் ஜோதி. பக்கத்து வீட்டில் இருக்கேன். என் ஹஸ்பெண்ட் காலேஜில் லெக்சராக இருக்காரு. இரண்டு நாளாக பார்க்கிறேன் உங்களை பார்த்து பேசணும்னு முடியலை...

    "அதிகமாக வெளியே

    Enjoying the preview?
    Page 1 of 1