Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kangalin Jalangal
Kangalin Jalangal
Kangalin Jalangal
Ebook91 pages46 minutes

Kangalin Jalangal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465988
Kangalin Jalangal

Read more from Parimala Rajendran

Related to Kangalin Jalangal

Related ebooks

Reviews for Kangalin Jalangal

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kangalin Jalangal - Parimala Rajendran

    19

    1

    பிரபல மருத்துவ நிபுணர்கள் சேர்ந்து நடத்தும் ‘மல்டி - கேர்’ மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    அவசர சிகிச்சை அறை முன் இருந்த மற்றொரு அறையில், கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தான் குணசேகரன். அருகில் மனைவி ஆர்த்தியும், அப்பாவின் நண்பர் பரசுராமனும் இருந்தார்கள்.

    கவலைப்படாத குணா. அம்மாவக்கு ஒண்ணும் ஆகாது.

    இல்லை மாமா. டாக்டர் சரியான பதில் சொல்லலை. ‘மூளைக்கு போற நரம்பு பாதிக்கபட்டிருக்கு இருபத்திநாலு மணி நேரம் போனாதான் எதுவும் சொல்ல முடியும்’ன்னு சொல்றாரு. என்னக்கென்னவோ பயமா இருக்கு.

    "ராஜலட்சுமியின் நல்ல மனசுக்கு தப்பா எதுவும் ஆகாது. என் நண்பன்தான் அவளோடு வாழ முடியாம போய்ச் சேர்ந்தான். உங்க அம்மா இந்த குடும்பத்துக்கு ஆலமரமா இருந்தாங்க. உன்னையும், உன் தம்பி சூர்யகுமாரையும் நாலு பேர் பாராட்டுற அளவுக்கு வளர்த்து ஆளாக்கினாங்க. நீ இன்னைக்கு ‘சாப்ட்வேர்’ கம்பெனியில நல்ல வேலையில் இருக்கே. உன்னோட தம்பி அமெரிக்காவில் ‘டாலரி’ல் சம்பாதிக்கிறான். உங்களுக்கான குடும்பத்தையும் ஏற்படுத்திக் கொடுத்திட்டாங்க.

    இனி உங்களோடு இருந்து பேரன் - பேத்தின்னு அவங்க நிம்மதியா வாழணும். நிச்சயம் அம்மாவுக்கு ஒண்ணும் ஆகாது. கவலைப்படாதே" என்றார் பரசுராமன்.

    உங்க வார்த்தைகள் மனசுக்கு ஆறுதலை கொடுத்தாலும், அம்மா நல்லபடியா பிழைக்கணும்னு மனசு தவிக்குது மாமா.

    சரி, சூர்யாவுக்கு தகவல் கொடுத்தாச்சா?

    இல்ல மாமா. அம்மா மேல உயிரா இருக்கிறவன். இதைக் கேட்டா துடிச்சு போயிடுவான்.

    அதுவும் சரிதான்! அம்மாவுக்கு ஒண்ணும் இல்லைன்னு டாக்டர் சொல்லட்டும். பிறகு பேசலாம். கடல் கடந்து இருக்கிறவனை கஷ்டப்படுத்தக்கூடாது.

    ஆர்த்தி எழுகிறாள்.

    எங்கேம்மா போறே?

    அப்பா- அம்மாவுக்கு தகவல் சொல்லத்தான் மாமா. அப்படி போய் நின்னு செல்போனில் பேசிட்டு வரேன்.

    சம்பந்திக்கு ஒண்ணும் ஆகாது. பதற்றப்படாம மெதுவா கிளம்பி வரச் சொல்லு.

    செல் போனில் தன் அம்மாவை தொடர்புகொண்டு சொன்னாள்.

    என்னடி சொல்றே?

    ஆமாம்மா. நல்லாதான் இருந்தாங்க. சாயந்திரம் சாமி கும்பிட்டு, பூஜை அறையில் இருந்து வெளியே வந்தவங்க... அப்படியே மயங்கி தரையில் விழுந்துட்டாங்க. ஏக களேபரம் ஆகிப் போச்சு.

    டாக்டர் என்னதான் சொல்றாரு?

    உயிருக்கு எதுவும் ஆபத்து இருக்கிற மாதிரி தெரியல. என்ன நிலைமைன்னும் புரியலை. மூளைக்கு போற நரம்பு பாதிக்கப்பட்டிருக்குன்னு சொல்றாங்க.

    அடக் கடவுளே! நேத்து வரைக்கும் மகாராணி மாதிரி வளைய வந்தாங்க. இன்னைக்கு பாரு நிலைமையை. சரி சரி... அப்பா ‘பிஸினஸ்’ விஷயமா கோயமுத்தூர் வரைக்கும் போயிருக்காரு. மிருதுளா, காலேஜில் இருந்து வந்ததும் புறப்பட்டு அங்க வரேன்.

    ஆமாம், உன் கொழுந்தன்... அதான் அமெரிக்காவில் இருக்கிறவனுக்கு சொல்லியாச்சா?

    இன்னும் இல்லம்மா.

    உலகத்தில் எல்லாமே அம்மாதான்னு உருகுவானே! கல்யாணம் முடிச்சும்கூட அம்மாவைப் பிரிய மனமில்லாமல்தானே பொண்டாட்டியோடு அமெரிக்கா கிளம்பினான். இப்ப போற உசுரை யாரால் தடுக்க முடியும்... இனி என்ன செய்யப் போறான்?

    ஏன்ம்மா இப்படிப் பேசற! மிருதுவை அவருக்கு கட்டி வைக்கணும்னு உனக்கு ஆசை. ஆனா, அவர் தன் அம்மா பேச்சை தட்டாமல், அவங்க பார்த்த பெண் சிந்துவை கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அந்த வயிற்றெரிச்சலில்தானே இப்படிப் பேசற?

    "அப்படியே இருந்துட்டு போகட்டும். நம்ப மிருதுளாவுக்கு என்ன குறைச்சல்? தங்கச் சிலையாட்டம் இருக்கா.

    உன் மாமியார்கிட்ட நான் வெட்கத்தைவிட்டு கேட்டேன்..."

    "உங்க மகன் சூர்யாவுக்கு, என் மக மிருதுளாவை கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்படுறேன்’னு. அவ பெரிய இவ மாதிரி... ஒரே வீட்டில் ரெண்டு பெண் எடுத்தா சரி வராதுன்னு மூஞ்சியில அடிச்ச மாதிரிதானே பதில் சொன்னா? காசு, பணம் இருக்கு...

    பையன் அமெரிக்காவில் சம்பாதிக்கிறான்னு ஆடினாளே... இப்ப ஆட்டம் அடங்கிப் போச்சுதானே?"

    ஐயோ அம்மா... ஆஸ்பத்திரியில ஆபத்தான நிலைமையில் இருக்காங்கன்னு போன் பண்ணி சொன்னா... இப்படியா பேசுவே! நீ முதலில் போனை வை.

    சோகமே வடிவாக நின்றிருந்தவனிடம் டாக்டர் வந்தார்.

    எனக்கும் வருத்தமாத்தான் இருக்கு. உங்க அம்மா, எனக்கு நல்லா பழக்கம். ரொம்ப நல்லவங்க. ஆனா நோய்க்கு நல்லவங்க - கெட்டவங்க, ஏழை - பணக்காரன்னு பாகுபாடு தெரியறதில்லையே?

    டாக்டர்... அப்படின்னா அம்மாவாலே இனி எழுந்து நடமாட முடியாதா?.

    "அடுத்தவங்க தயவில்லாம கை - கால்களை அசைக்கக்கூட முடியாது. இனி அவங்க நாட்கள்... படுக்கையில் தான். ‘பிஸியோதெரபி’ கொடுத்தும் எந்தப் பலனும் இருக்காது. நேரத்துக்கு மருந்து - மாத்திரை

    Enjoying the preview?
    Page 1 of 1