Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mandram Vantha Thendral
Mandram Vantha Thendral
Mandram Vantha Thendral
Ebook105 pages59 minutes

Mandram Vantha Thendral

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 17, 2019
ISBN9781043466435
Mandram Vantha Thendral

Read more from Parimala Rajendran

Related to Mandram Vantha Thendral

Related ebooks

Reviews for Mandram Vantha Thendral

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mandram Vantha Thendral - Parimala Rajendran

    17

    1

    மகாலிங்கம் சுவாமி அறைக்குள் நுழைந்தார். சுவாமி படங்களுக்கு மலர்கள் சாத்தப்பட்டு, விளக்கேற்றுவதற்கு தயாராக எண்ணெய், திரி போடப்பட்டு அந்த இடமே படு சுத்தமாக காட்சியளித்தது. எல்லாம் பாரதியின் கைவண்ணம். எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி தெரியும். பிள்ளையார் முன்னிருந்த லட்சுமி விளக்கை ஏற்றியவர் இருகரம் கூப்பி விநாயகரை கும்பிட்டார்.

    அப்பனே விநாயகா... என் பாரதியை நல்லபடியாக வாழ வை. தாயில்லாத என் மகள், எனக்கு தாயாக இருந்து என்னை பாதுகாக்கிறாள். அவள் நல்ல மனதுக்கு ஏற்றவளாக காலமெல்லாம் அவளை கண்கலங்காமல் காப்பாற்றுபவனாக ஒரு நல்லவனை அவளுக்கு கணவனாக தாப்பா... மனமுருகி வேண்டுகிறார்.

    அப்பா சாமி கும்பிட்டாச்சா...

    புதிதாக பறித்த ரோஜாவை போல, முகம் பிரகாசிக்க நிற்கும் பாரதியை பாசம் மேலிட பார்க்கிறார் மகாலிங்கம்.

    என் செல்ல மகளுக்காகத்தான் எந்நேரமும் அந்த கடவுளை தொந்தரவு பண்ணிட்டு இருக்கேன்.

    ஏன்ப்பா, உங்க மகளுக்கு என்ன குறை, அம்மாவை உரிச்சு வச்சது போல, அதே அழகோடு மகாலட்சுமி மாதிரி இருக்கேன்னு நீங்க சொல்வீங்க... அதனால பார்க்க ஓரளவு அழகாக இருக்கேன்னு தெரியுது, அப்புறம் அப்பாவோட உழைப்பிலும், அக்கறையிலும் படிச்சு பி.இ. டிகிரி வாங்கியிருக்கேன். ஒரு நல்ல நிறுவனத்தில் டீம் லீடராக இருக்கேன். இதுக்கு அப்புறமும் சாமிக்கிட்டே எனக்காக என்னப்பா வேண்டிக்கப் போறீங்க...

    சிரித்தபடி மகளின் கைப்பிடித்து அழைத்து வந்து சோபாவில் தன்னருகில் உட்கார வைக்கிறார் மகாலிங்கம்.

    ஒரு தகப்பனுக்கான கடமை இதோடு முடியலைமா. உனக்கு நல்ல வரன் பார்க்கணும். அவன் கையில் உன்னை ஒப்படைக்கணும். அப்புறம் பேரனோ, பேத்தியோ பார்த்துட்டு ஆசைத் தீர கொஞ்சிட்டு, அந்த ஆண்டவன் கூப்பிடும்போது திருப்தியாக கிளம்பணும்.

    பாரதியின் முகம் வெட்கத்தில் சிவக்கிறது.

    ஏன்ப்பா அவசரப்படறீங்க... இன்னும் கொஞ்சநாள் போகட்டும்பா. அதுவுமில்லாமல் என்னை கட்டிக்கிறவர், என்னோடு என் அப்பாவையும் பாதுகாப்பவராக இருக்கணும். இதுக்கு சம்மதிக்கிறவர்தான் என் கழுத்தில் தாலி கட்ட முடியும்.

    உனக்கு அப்பா மேலே பாசமிருக்கலாம். ஆனால் இந்த காலத்தில் இப்படியெல்லாம் நிபந்தனை கூடாதும்மா... என் மகள் நல்லாயிருந்தா எனக்கு போதும்.

    அப்படியெல்லாம் விட முடியாதுப்பா. அப்படின்னா நான் கல்யாணமே வேண்டாம்னு இருந்துடுவேன்.

    தயவுசெய்து அப்படி சொல்லாதே பாரதி. இந்த அப்பாவோட ஆசை என்ன தெரியுமா, சொல்லட்டுமா...

    எதுவாக இருந்தாலும் சொல்லுங்கப்பா... இந்த பாரதி கட்டாயம் நிறைவேற்றி வைப்பா...

    பெரிசா எதுவும் இல்லைம்மா. எல்லாம் உன்னால் நிறைவேற்ற கூடியதுதான்.

    நீ பிறந்து மூணு மாசத்தில் எனக்கு வேலை போயிடுச்சி. நான் வேலை பார்த்த பாக்டரியை இழுத்து மூடிட்டாங்க. கைக்குழந்தையை வச்சுட்டு நாட்களை எப்படி ஓட்டப் போறோம்னு தவிச்சு போனோம். வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்டு மூலம் ஒரு லேபராக துபாய்க்கு போகும் வாய்ப்பு கிடைச்சுது. எப்படியோ கஷ்டப்பட்டு பணத்தை ஏற்பாடு பண்ணி கிளம்பினேன்.

    உன் பிஞ்சு பாதத்தையும், பிஞ்சு கால்களையும், பஞ்சு போன்ற உன் உடலையும் தொட்டு, தூக்கி நெஞ்சோடு அணைத்து கலங்கினேன். அந்த ஸ்பரிசம் இன்றும் என் மனதில் பசுமை மாறாமல் இருக்கு பாரதி.

    குழந்தையில் உன் வளர்ச்சி எதையுமே பார்க்க கொடுத்து வைக்காத பாவியாகிப் போனேன். இந்த காலம் மாதிரி வாட்ஸ்-அப், ஸ்கைப்னு விஞ்ஞானம் வளரலை. மாசம் ஒரு முறை போனில் பேசுவோம்.

    நீ குப்புற விழுகிறதாக சொல்வா... அப்புறம் தளிர்நடை போடறதாக... அம்மா... அப்பான்னு மழலையில் பேசுறதாக... இப்படி ஒவ்வொன்றையும் காதால் கேட்டு சந்தோஷப்படுவேன்.

    எத்தனையோ கஷ்டமான வேலைகள், பணத்தை சேர்த்துக்கிட்டு உன்கிட்டேயும், அம்மாகிட்டேயும் ஓடி வரணுங்கிற வெறி உழைச்சேன். காலங்கள் அதுக்கு மேல் ஓடியது.

    உனக்கு பத்து வயது ஆவதற்குள் இரண்டு முறை மட்டுமே பத்து நாள் லீவில் வந்து உன்னை ஆசைத்தீர கொஞ்சிட்டு போனேன்.

    உனக்கு பத்து வயது, இடியாக செய்தி வந்தது. உன் அம்மா இந்த உலகத்தை விட்டுப் போன செய்தி... பத்து வயதுவரை அவள் கைப்பிடித்து நடந்த உன்னை, நான் என் இரு கைகளாலும் தாங்கிக்கிட்டேன். சகலமும் நீதான்னு வாழ்ந்தேன்.

    அப்பா பழைய நினைவுகளை சொல்ல பாரதியின் கண்கள் கலங்குகிறது.

    சரிப்பா... இப்ப உங்க ஆசை என்னன்னு சொல்லுங்கப்பா...

    நான் தவறவிட்ட தருணங்களை உன் மூலமாக பார்க்கணும் பாரதி. ஆமாம் பாரதி உன் குழந்தையை நான் மடியில் வச்சு கொஞ்சணும், அது தவழ்றதை, நடைப் பழகறதை மழலையில் பேசறதையெல்லாம் பக்கத்தில் இருந்து ரசிக்கணும். இளம்பஞ்சு போன்ற அந்த மேனியை மார்போடு சேர்த்து மனசார தழுவணும். அதுக்காகவாவது நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும். இந்த அப்பாவின் ஆசையை நிறைவேத்துவியா பாரதி.

    மனதில் சொல்லமுடியாத துயரம் அடைக்க, பாவம் அப்பா, எந்த சந்தோஷத்தையும் அனுபவிக்காதவர். எனக்காகவே வாழ்கிறவர். இவருடைய இந்த ஆசை நியாயமானது... ஒரு மகளாக நான் இந்த சந்தோஷத்தை அவருக்கு தரவேண்டும்.

    சரிப்பா... உங்களுக்காகவே நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு, உங்க பேரனை உங்க கையில் தரேன் போதுமா...

    முதுமையை தாண்டி, மனதில் உற்சாகம் திரும்ப, ஒரு இளைஞனாக எழுந்து நின்று கைதட்டி சிரிக்கிறார் மகாலிங்கம்.

    வசதியானவர்கள் வசிக்கும் அந்த வி.ஐ.பி. தெருவில் பங்களா போன்ற தோற்றத்துடன் பெரிய பெரி வீடுகள் வரிசையாக இருக்க...

    டாக்டர் நிரஞ்சன்,

    Enjoying the preview?
    Page 1 of 1