Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

En Sorgam Nee Penne
En Sorgam Nee Penne
En Sorgam Nee Penne
Ebook141 pages1 hour

En Sorgam Nee Penne

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.

She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118503900
En Sorgam Nee Penne

Read more from Uma Balakumar

Related to En Sorgam Nee Penne

Related ebooks

Reviews for En Sorgam Nee Penne

Rating: 5 out of 5 stars
5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    En Sorgam Nee Penne - Uma Balakumar

    http://www.pustaka.co.in

    என் சொர்க்கம் நீ பெண்ணே

    En Sorgam Nee Penne

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    விடியலின் கரங்கள் பூமியைக் காதலுடன் தழுவியிருக்க, மென்மையான இருட்டுடன், மேக மூட்டத்துடனிருந்தாள் அந்த மலையரசி!

    திடீரென்று வானம் வேத முழக்கமிட, மின்னல் தோரணங்களுடன் பூமியைச் சாரல் பூக்களால் ஆசீர்வதிக்க ஆரம்பித்தது மழை!

    கோத்தகிரியிலிருந்து பிரிந்து உள்ளே செல்கின்ற அந்தப் பாதையில், தேயிலைத் தோட்டத்தின் நடுவே போய்க் கொண்டிருந்தது... அந்த வேன்.

    அதில் அமர்ந்திருந்த அகிலாவும், சஞ்சனாவும் கவலை சுமந்த முகத்துடன் இருந்தனர்.

    சஞ்சு! அண்ணனுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைன்னு டிரைவர் சொல்றாரே! நம்ம ரெண்டு பேரையும் எதுக்கு உடனே கிளம்பி வரச் சொன்னாருன்னு தெரியலையே? யோசனையுடன் தன் மகளிடம் கேட்டார் அகிலா.

    எனக்கும் அதான் புரியலைம்மா! பாவம் மாமா... எல்லாரும் இருந்தும் இப்படி தனியா அநாதை மாதிரி... அவள் குரல் கம்மியது.

    அப்படி இல்லை... இதுதான் அண்ணனுக்கு சொந்த ஊர். அவரோட பூர்வீக வீட்டில் தானே இருக்குறாரு! அதனாலே இங்கே அவருக்கு உறவுகளும் இருக்கலாம்!

    அவர் முடிப்பதற்குள் டிரைவர் குறுக்கிட்டார்... இல்லைம்மா... உறவுகளுக்கும் மேல் நிறைய பேர் அவரை சுத்தி இருக்காங்க!

    இங்கே, ஐயா ஒரு முதியோர் இல்லத்தை நடத்திட்டிருக்காங்க... இருபது பேருக்கும் மேல் வயசானவங்க, அஞ்சாறு வொர்க்கர்ஸ் எல்லாருமே அவருக்காகவே இருக்கோம்! பெருமையுடன் கூறினார்.

    அவருடைய புதிய வாழ்வின் பரிணாமம், அவளுக்குள் பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்துவதாய்!

    மாமாவுக்கு இப்ப எப்படி இருக்கு? கவலையுடன் விசாரித்தாள் சஞ்சனா.

    ரொம்ப முடியலைம்மா! ஹாஸ்பிடல்லே தான் இருக்காங்க... டாக்டர் சரத் ஐயா தான் பாத்துக்கறாங்க... உங்களை உடனே பாக்கணும்னு சொன்னதாலேதான் போன் செஞ்சாங்க! ஒரு பெருமூச்சுடன் முடித்தார்.

    தேயிலைத் தோட்டங்கள் முடிந்து ஒரு குடியிருப்புப் பகுதியைக் கடந்து, சிறிய மலையில் ஏறியது வேன்.

    அங்கு, பரந்து விரிந்த தோட்டத்தின் நடுவே கம்பீரமாய் நின்றிருந்தது, அந்த பிரிட்டிஷ் பாணி பங்களா!

    சுற்றிலும் வெண்ணிறத் தூண்களும், உயர்ந்த வாசல்களுமாய் பழமையையும், பிரிட்டிஷ் பாரம்பரியத்தையும் பறை சாற்றிக் கொண்டிருந்தது!

    முன்புறம் பெரிய பூந்தோட்டமும், இரு பக்கமும் புல் வெளிகளும் சூழ்ந்திருந்த அந்த எஸ்டேட் பங்களாவின் முகப்பில் அன்பாலயம் என்ற பெயர்ப் பலகை பெரிதாய்!

    வியப்புடன் அதைப் பார்வையிட்டபடி வேனிலிருந்து இறங்கி, இருவரும் உள்ளே சென்றனர்.

    ***

    அவர்களை ஆவலுடன் வரவேற்று மாடியிலிருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றவர், தன்னை கேர் டேக்கர் மணி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

    நீங்க ரெண்டு பேரும் குளிச்சித் தயாராகிக் கீழே வந்துட்டீங்கன்னா டிபன் சாப்பிட்டுட்டு ஹாஸ்பிடலுக்குப் போகலாம்மா...! பவ்யத்துடன் கூறினார் அவர்.

    'சரிங்க! இப்ப வேதலிங்கம் அண்ணன் எப்படி இருக்காங்க? பரவாயில்லையா?"

    அகிலா கேட்டவுடன், தெரியலைம்மா... நாலு வருஷமா எங்களுக்கெல்லாம் ஐயா தான் ஒரு தெய்வம் மாதிரி இருந்தாங்க... அவங்களுக்கு இப்படி...? குரல் கம்ம வேதனையுடன் நிறுத்தினார் அவர்.

    சரிங்க... நாங்க ரெடியாகி கீழே வரோம்... அவருடைய வேதனை, இப்போது இருவரிடமும் தொற்றியிருந்தது.

    அவரை அனுப்பி விட்டு, முதலில் குளிக்கச் சென்றார் அகிலா.

    அந்த அறையைச் சுற்றிப் பார்த்த சஞ்சுவிற்கு, அதன் விஸ்தீரணமும் அமைப்பும் பிரமிப்பாய்!

    மேலே மர கர்டர்களிட்டு ஓடுகள் வேய்ந்திருந்த கூரையும், ரெட் ஆக்சைடில் பளபளத்த தரையும், பெரும் தூண்களும், வெண்மையில் பளபளத்த பங்களாவும், ஒரு புது உலகிற்கு வந்த அனுபவத்தை ஜனிக்கச் செய்தன. பிறகு, இருவரும் தயாராகிக் கீழே வந்தபோது, அங்கு நிறைய வயதானவர்கள் இருந்தனர்.

    முகங்கள் கவலையைச் சுமந்திருந்தாலும், அவளைக் கண்டதும், சூரியனைக் கண்ட தாமரையாய் மலர்ந்தன.

    அவர்களனைவரும் பிரியத்துடன் இருவரையும் வரவேற்க, மேனேஜர் கதிரவன் ஒவ்வொருவராக அறிமுகம் செய்தார்.

    அது அழகிய பாசக் கூடென்பது, அவர்களின் அன்யோன்யத்தில் தெரிந்தது.

    எல்லோருக்கும் வணக்கம் கூறிப் புன்னகைத்தவளை, சாப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்றார் அவர்.

    முதலில் அனைவரும் கடவுளுக்கு நன்றி கூறும் விதமாகப் ப்ரேயர் செய்து விட்டு, பிறகு சாப்பிடத் துவங்கினர்.

    சூடான இட்லியும் சாம்பாரும் பசித்த வயிறுக்குள் சுகமாய்ப் பயணிக்க, சாப்பிட்டு முடிந்ததும் அனைவரிடமும் விடைபெற்று இருவரும் கிளம்பி விட்டனர்.

    ***

    மருத்துவமனைக்குச் சென்றபோது, "ஐ.சி.யூ.'வில் பல மருத்துவக் கருவிகள் புடைசூழப் படுத்திருந்தார் வேதலிங்கம். அங்கிருந்த ட்யூட்டி டாக்டரிடம் அனுமதி பெற்று உள்ளே சென்றபோது, அவளைக் கண்டதும், அவருடைய விழிகள் மகிழ்ச்சியுடன் விரிந்தன.

    ஆக்சிஜன் மாஸ்க்கை எடுக்கும்படி அவர் சைகை செய்ய, அதை நர்ஸே எடுத்துவிட்டார்.

    வாம்மா சஞ்சு! எங்கே உன்னைப் பாக்காம, உன்கிட்ட எல்லாத்தையும் ஒப்படைக்காமப் போயிடுவோமோன்னு பயந்திட்டிருந்தேன்... நீ வந்திட்டே! மெலிதாய் மூச்சு வாங்க நிறுத்தினார். உடனே அவரருகில் குனிந்தவள், மாமா! ஸ்ட்ரெயின் பண்ணிக்காதீங்க... ரெஸ்ட் எடுங்க... அப்புறம் பேசலாம் பரிவுடன் கூறினாள்.

    இல்லை... அப்புறம் பேச முடியாமப் போயிட்டா...? அவர் முடிப்பதற்குள், ஒரு கம்பீரக் குரல் குறுக்கிட்டுத் தடுத்தது.

    "அங்கிள்! உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நீங்க ரெஸ்ட் எடுங்க... அதான் உங்க ரிலேடிவ்ஸ் வந்திட்டாங்களே... இனிமே எல்லாத்தையும் அவங்க பாத்துப்பாங்க! நமக்கு சரியாயிடும்னு முதல்லே நம்பிக்கை வைங்க... அதான் உங்களை பலமாக்கும்!'

    சரத்! சஞ்சுகிட்டே எல்லாப் பொறுப்பையும் நான் ஒப்படைக்கணும்ப்பா! ஓய்ந்த குரலில் கெஞ்சினார் வேதலிங்கம்!

    அங்கிள்! அதை வக்கீல் பாத்துப்பாரு... நானும் இதுபத்தி அவங்க கிட்டே பேசறேன்... நர்ஸ்... பாத்துக்கங்க என்றவன், அவளிடம் திரும்பினான்.

    வாங்க... என் ரூமுக்குப் போகலாம்... அங்கே போய்ப் பேசலாம்... கம்பீரமாக முன்னே நடந்தான்.

    வேதலிங்கத்தின் கையைப் பற்றி ஆதரவுடன் அழுத்தி விட்டு, அந்த டாக்டரைப் பின் தொடர்ந்தாள் சஞ்சனா.

    அறைக்குள் சென்றதும் இருவரையும் அமர வைத்தவன், "சாரி! அங்கிளுக்கு மைல்ட் ப்ரெயின் ஹெமரேஜ்... அதான் ஸ்ட்ரோக்! ஆனா உடனே ட்ரீட்மெண்ட் பண்ணிக் காப்பாத்தியாச்சு... இப்ப எதுவும் சொல்ல முடியாத நிலை!

    ஆனா, பிழைச்சாலும் படுக்கையிலயேதான் இருக்கற மாதிரி இருக்கும்! உங்க கிட்டதான் இல்லத்துப் பொறுப்பை எல்லாம் ஒப்படைக்கணும்னு அங்கிள் கேட்டுக்கிட்டதாலதான், போன் செஞ்சேன்... நீங்க.... அவருக்கு? கேள்வியாக நிறுத்தினான்.

    உடனே, அவர் எனக்கு அண்ணன் முறை ஆகணுங்க... சஞ்சுவுக்கு மாமா என்றார் அகிலா.

    "இப்ப அவர் கவலையே, அன்பாலயத்தை யார் பராமரிக்கறதுங்கறதுதான்! அவரை நம்பிப் பலர் இருக்காங்க...

    "ஆனா அங்கிள்... உங்களைத்தான் ரொம்ப நம்பியிருக்காரு! அவருக்கு அதிர்ச்சி தர்ற விதமா எதையும் சொல்லிட வேண்டாம்!

    "எதுவா இருந்தாலும் நல்லா யோசிச்சே முடிவெடுங்க... இப்ப நீங்க

    Enjoying the preview?
    Page 1 of 1