Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Swasamai Kalandhavale!
Swasamai Kalandhavale!
Swasamai Kalandhavale!
Ebook145 pages1 hour

Swasamai Kalandhavale!

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.

She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118504330
Swasamai Kalandhavale!

Read more from Uma Balakumar

Related to Swasamai Kalandhavale!

Related ebooks

Reviews for Swasamai Kalandhavale!

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Swasamai Kalandhavale! - Uma Balakumar

    http://www.pustaka.co.in

    சுவாசமாய்க் கலந்தவளே!

    Swasamai Kalandhavale!

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    சமர்ப்பணம்

    எனது

    மடியினில்

    மழலையாய் வர மறுத்து...

    கனவுகளில் மட்டுமே

    கைகளில் தவழ்ந்த...

    என்

    நிழல் தேவதை...

    நிஜ மதுமிதாவிற்கு...!

    *****

    1

    நீ

    என்

    இதயப் பாரிஜாதமலர்!

    என்

    தோட்டத்திற்கு...

    நீ

    வரவேண்டும்

    ஒரு முறை...!

    வருவாயா கண்மணி...?

    என்

    தோட்டத்து ரோஜாக்கள்

    உன்னைப் பார்க்க வேண்டுமென்று

    பிரியப்படுகின்றன!

    வானில் நட்சத்திரங்கள், இரவுக்குக் கட்டியம் கூறிக் கொண்டிருந்தன.

    தோட்டத்தில் உதிர்ந்து கிடந்த பவள மல்லி மலர்களின்மேல், நிலா வெளிச்சம் தங்க நிறச் சாயம் பூசி இருந்தது.

    அது, பூமியில் பவளமும், முத்துகளும், சிதறிக் கிடப்பது போன்ற ஒருவித மாயையைத் தோற்றுவித்தது.

    ஆகாயத் தடாகத்தில் பூத்த மஞ்சள் மலராய் நிலவு! காற்றுக்கு யாரோ சாணை பிடித்தது போல், மின்மினிகள்!

    ஜன்னலின் வழியே, வருடலாய் உள்ளே நுழைந்த சில்லென்ற பனிக்காற்று, மதுமிதாவின் கூந்தலை வருடியது.

    ஏனோ, மதுமிதாவுக்கு, இன்று இயற்கையின் இனிமை இதம் தர மறுத்தது.

    அவள் மனம் மலரும் நினைவுகளுடன் பின்னோக்கிச் சென்றது. துணையாய், தூரத்து ஞாபகங்கள்!

    அவளுடைய பாட்டி இருந்தவரை, மதுவுக்கு எந்தவிதக் கவலையும் இருந்ததில்லை.

    சிறு வயதிலே பெற்றோரை இழந்த மதுவுக்கு, பாட்டிதான் எல்லாமுமாக இருந்தார்.

    அவளை வளர்த்து, படிக்க வைத்ததெல்லாம், மதுவின் தாய்வழிப் பாட்டி மரகதம்தான்!

    மதுமிதா கல்லூரிப் படிப்பையும், துணைப் படிப்பையும் முடித்துவிட்டு, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாள்.

    மது, அவளுடைய அம்மா மாதிரியே அழகு!

    ஐந்தரை அடி உயரத்தில், ரோஜா நிறத்தில், பேசும் விழிகளுடன், இடைவரை அலைபாயும் கூந்தலுடன், பிரமிக்க வைக்கும் அழகுடன் ஒரு ஓவியப்பாவையாய், அவள்!

    அவளுடைய தாய் இறந்தவுடன், தந்தையும் இறந்து விடவே, பாட்டியால் வளர்க்கப்பட்டவள்!

    அவளது தாயின் புகைப்படம் மட்டுமே, உறவுக்கு சாட்சியாகப் பாட்டியிடம் இருந்தது. தந்தையின் புகைப் படத்தைக்கூட அவள் பார்த்ததில்லை.

    பாட்டி இறப்பதற்கு முன்புதான், அந்த அதிர்ச்சியூட்டும் செய்தியே அவளுக்குத் தெரியவந்தது.

    அதுவும், தன் தந்தை உயிரோடுதான் இருக்கிறார் என்று அறிந்தபோது, மனம் ரணப்பட்டுப் போனது.

    அன்று, பாட்டிக்கு உதவி செய்ய அமர்த்தப்பட்டு இருந்த கலாதான் அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைத்தாள்.

    மதுவிடம், பாட்டிக்கு ரொம்ப முடியலை மதும்மா! நீங்க உடனே கிளம்பி வர்றீங்களா? என்றாள், பதற்றத்துடன்.

    நான் உடனே வர்றேன் என்று கூறிவிட்டு, மருத்துவருக்குத் தொலைபேசியில் விபரம் தெரிவித்தாள், மது.

    அலுவலகத்திற்கு, அவசரமாக விடுப்பு சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றாள்.

    வழிநெடுக 'எனக்கு இருக்கும் ஒரே துணையையும் பறித்து விடாதே இறைவா' என்று மனம் கெஞ்சியது.

    வீட்டுக்குச் சென்றபோது, பாட்டி படுக்கையில் அமர்ந்து கஞ்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

    மருத்துவர் வந்து பரிசோதித்துவிட்டுச் சென்றிருந்தார்.

    பாட்டி சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதியாக இருந்த மது, ஏன் பாட்டி? பொய் சொல்லி என்னை வரச் சொல்கிற அளவுக்கு இப்ப என்ன அவசரம்? என்று கேட்டாள்.

    வேலையைப் பாதியில் விட்டுவிட்டு வந்த எரிச்சல் தெரிந்தது. அவள் கேள்வியில்!

    பொய் சொல்லலைடா மது! படபடன்னு, ஒரு மாதிரி மயக்கம் வர்ற மாதிரி தெரிந்தது. லேசா நெஞ்சு வலிக்கிற மாதிரி வேறு இருந்தது. அதான்! இப்ப உன்கிட்ட நான் ஒரு முக்கியமான விசயம் பேசணும் என்றார், பாட்டி சோர்வுடன்.

    என்ன பாட்டி... அப்படிப்பட்ட முக்கியமான விசயம்? இப்பவே உடனே சொல்ற அளவுக்கு?

    கேட்டுக் கொண்டே, பாட்டியின் அருகில் சென்று வாஞ்சையுடன் அமர்ந்தாள், மது.

    சிறிது நேரம் அமைதியாக இருந்த பாட்டியம்மா நிமிர்ந்து, மது! நான் சொல்லப்போகிற விசயத்தைக் கேட்டுட்டு, நீ என்னைத் தப்பா நினைக்கக் கூடாது. வெறுத்துடவும் கூடாது. சரியாடா? என்று பலத்த பீடிகையுடன் ஆரம்பித்தார்.

    இவள் தலையாட்டினாள்.

    மதுக்குட்டி! உன் அம்மா, உங்க அப்பாவைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனாள்ன்னு சொல்லி இருக்கேன், இல்லையா? அதுக்கப்புறம் நான், அவளை என் வீட்டுக்குள் வரவே விடலை. அப்பப் போனவளை, உன்னை உண்டாகி இருக்காள்ன்னு தெரிஞ்சதுக்கப்புறம்தான், வீட்டுக்கு அழைச்சுட்டு வந்தேன். எனக்கு உன் அப்பாவைக் கண்டா சுத்தமா பிடிக்கலை.

    என் பொண்ணை என்கிட்டே இருந்து பிரிச்ச ஒரு வில்லனாத்தான் அவரை நான் பார்த்தேன். வீட்டோட மாப்பிள்ளையாகப் பார்த்து, உன் அம்மாவை என் கூடவே வச்சிக்கணும்னு நான் நினைச்சிட்டு இருந்ததெல்லாம் கனவாகிப்போச்சு. எனக்கிருந்த ஒரே துணையையும் பிரிச்சிட்டுப் போன உங்க அப்பா மேலே, எனக்கு அப்போ தாங்க முடியாத வெறுப்பு! என்று கூறியவர், மூச்சு வாங்கவும் நிறுத்தினார்.

    பாட்டி! பேசாம ஓய்வெடுத்துக்கங்க... அப்புறமா எல்லாம் பேசலாம் என்றாள், மது... கவலையாக.

    பாட்டி குறுக்கிட்டார்!

    இல்லடா... இன்னிக்கு நான் பேசியாகணும். இல்லைன்னா, அப்புறம் எப்பவுமே பேச முடியாமப் போயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு. தலைப் பிரசவத்துக்காக இங்கே வந்த உன் அம்மா, நீ பிறந்த உடனே இறந்துட்டா! அந்தச் செய்தி கேட்டு உன் அப்பா பெங்களூரில் இருந்து வர்றதுக்குள் இங்கே நான் என் பொண்ணோட ஈமச் சடங்குகளை முடிச்சிட்டேன். அவர் வந்து அழுதப்பகூட, என் பொண்ணை அநியாயமா என்கிட்டே இருந்து பிரிச்சிட்டதா சத்தம் போட்டேன்.

    பழைய நினைவுகளில் அவர் கண்கள் கலங்கின.

    தன்னை சமாதானப்படுத்திக் கொண்டு நிமிர்ந்தவர், உன்னைப் பத்தி உங்கப்பா கேட்டப்போ, நீயும் பிரசவத்துல இறந்துட்டதா நான் பொய் சொன்னேன். உன் அப்பா, அப்படியே ஆடிப் போயிட்டார். அன்னிக்குப் போன மனுசன்தான்! அதுக்கப்புறம், அவரைப்பத்தி எனக்கு ஒண்ணுமே தெரியாது. அன்னிக்கு உங்கப்பா போனதும், என் தம்பி வீட்டில் இருந்த உன்னை அழைச்சிட்டு, எங்க சொந்த வீட்டையும் வித்துட்டு நான் இங்கே வந்துட்டேன். அவங்க ரெண்டு பேரும் வாழ்ந்ததே, ஒரு ஆறேழு மாசம்தான் இருக்கும். உங்கம்மா விரும்பின மாதிரி, உனக்கு மதுமிதான்னு பேர் வச்சேன் என்று நிறுத்தினார்.

    மூதாட்டியின் கண்கள், இளையவளையே கலக்கத்துடன் நோக்கின.

    மதுவின் மனம், இனம் புரியாத வேதனையில் படபடத்தது.

    ஒரு பெருமூச்சுடன் பாட்டியம்மா தொடர்ந்தார். உங்க அப்பா உயிரோடுதான் இருக்கார், மது! ‘ராஜ்' ஓட்டல்கள் பத்தி நீ கேள்விப்பட்டிருப்பியே? பெரிய நட்சத்திர ஓட்டல் ஒண்ணு, இங்கே சென்னையில் இருக்கு. அந்தக் குடும்பத்து வாரிசுதான் உன் அப்பா! என்று நிறுத்திவிட்டு தண்ணீரை எடுத்துப் பருகிவிட்டு, தொடர்ந்தார்.

    "உன் அப்பா, வீட்டில் ஒரே பையன்னு உங்க அம்மா சொல்லிக் கேட்டிருக்கேன். பெங்களூரிலே பெரிய பணக்காரக் குடும்பம் அவங்களோடது. இங்கே அவரோட தொழில் நிறுவனம் கூட ஒண்ணு இருக்குன்னு நான் கேள்விப்பட்டிருக்கேன். அதனால்தான், நான் செங்கல் பட்டுல இருந்து சென்னைக்கு வந்தேன். இத்தனை நாள்,

    Enjoying the preview?
    Page 1 of 1