Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manathil Vizhuntha Mazhai Thuliye….!
Manathil Vizhuntha Mazhai Thuliye….!
Manathil Vizhuntha Mazhai Thuliye….!
Ebook197 pages1 hour

Manathil Vizhuntha Mazhai Thuliye….!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mrs. Uma Balakumar started writing in 2005 and she has written around 42 novels so far. Most of her novels are nice romantic novels. She has also written 5 spiritual novels. Her first novel is “Theendi Chendra Thendral” which got published in 2005 in Kanmani Magazine. All her novels are available as printed books in Arun publications. She has also written around 15 short stories. She has got an award from Thanga Mangai and another award from Kumutham Snehithi for her short stories.

She born and brought up in Kumbakonam, Tamilnadu. She loves long drives and to hear melodious music. Her husband has encouraged her throughout her journey as a author. She strongly believes that “God is the ultimate power” and has written 5 spiritual books too including a travelogue on “Sadhuragiri”.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580118504008
Manathil Vizhuntha Mazhai Thuliye….!

Read more from Uma Balakumar

Related to Manathil Vizhuntha Mazhai Thuliye….!

Related ebooks

Reviews for Manathil Vizhuntha Mazhai Thuliye….!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manathil Vizhuntha Mazhai Thuliye….! - Uma Balakumar

    http://www.pustaka.co.in

    மனதில் விழுந்த மழைத் துளியே....!

    Manathil Vizhuntha Mazhai Thuliye….!

    Author:

    உமா பாலகுமார்

    Uma Balakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/uma-balakumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    சமர்ப்பணம்

    என் வாழ்வில்....

    மார்கழிப் பனிமலராய்

    மணம் வீசி....

    தேன் மழைச் சாரலாய்

    திகட்டாத நினைவுகள் தந்து....

    வருடம் ஒரு முறை

    வரும் வசந்தமாய்

    வாஞ்சையைப் பரிசளித்து....

    தன்னம்பிக்கையின்

    தனி வடிவமாய் வாழ்ந்து....

    இன்று....

    தெய்வத்தின் திருவடிகளில்

    தீபச்சுடராய் ஒளிர்கின்ற....

    என் தாய்

    வேதவல்லி அவர்களுக்கு....!

    மனதில் விழுந்த மழைத் துளியே...!

    1

    பூமிக்கும் வானுக்கும் இடையே வெள்ளிச்சரம் தொடுத்திருந்த மழை, வீதியெங்கும் வெண்முத்துச் சிதறலாய் விழுந்து, பச்சை மின்மினிகள் உதிர்வது போல், இலைகளின் சாரலுடன் மண்ணில் பரவியது.

    மழை தேவதையின் நடனத்தில், நீர்த்துளிகள் கொலுசாய் சப்தமிட்டு அழகாய் ஜதி பாடி, மலர்களின் நலம் விசாரித்துக் கொண்டிருந்தன.

    சாலையிலிருந்தும் பயணிக்காத மரங்கள், குடைபிடிக்காமல் குளித்துக் கொண்டிருக்க, பால்கனியில் நின்று இயற்கையை ரசித்துக் கொண்டு இருந்த 'தீக்ஷண்யா', தன் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.

    கடந்து வந்த கல்லூரி நாட்கள், மனதில் கனவாய் விரிந்தன. அவள் இந்த வருடம்தான் 'பி.இ. முடித்திருக்கிறாள்.

    மேலே படிக்க வேண்டும்.... தங்களுடைய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியிலேயே வேலை பார்க்க வேண்டும் என்ற ஆவல், அவளுக்குள் பெரிதாய்....!

    நீண்ட நேரமாய் இரைதேடி அலைப்புற்ற பறவையொன்று இளைப்பாறுவதைப் போல், எண்ணச் சுழல்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டுக் கனவுகள் கலைந்து, நினைவுக்குள் மெல்ல நுழைந்தாள், தீக்ஷண்யா.

    எதிரில், வருணனின் வர்ஷிப்பாய் பொழிந்து கொண்டிருந்த மழையைப் பார்க்கும்போது, வானம் பூமிக்கு அளிக்கும் வரப்பிரசாதமாய்… வருடலாய் மனதை நனைக்கும் வானப்பிரவாகமாய்த் தோன்றியது.

    சுகமான அந்தச் சாரலில் தன்னை மறந்திருந்தாள் அவள்.

    அப்போது "தீக்ஷாம்மா.... உங்களை அப்பா வரச்சொன்னாங்க!'' என்று இடையிட்டது. சமையல்காரம்மாவின் குரல்.

    சிறு முறுவலுடன் திரும்பி, நான் வரேன்னு போய் சொல்லுங்க, தனம்மா என்றாள்.

    தந்தை கேசவனின் அறைக்குள் சென்றபோது, அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தார் அவர்.

    என்னப்பா.... கூப்பிட்டீங்களாமே? என்ன விஷயம்? என்றாள் மென்மையாக.

    இங்கே வந்து என் பக்கத்துல உக்காரும்மா! உன்கிட்டே, முக்கியமா ஒரு விஷயம் பேசறதுக்காகத்தான் வரச்சொன்னேன். ம்.... நம்ம கிரியைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?

    என்னப்பா இது திடீர் கேள்வி? கிரி, சின்ன வயசுல இருந்தே என்னோட பழகின ஒரு நல்ல ஃப்ரெண்ட், அவ்வளவுதான்! அவனைப் பத்தி நினைக்கிறதுக்கு வேற என்ன இருக்கு? என்றாள் ஆச்சர்யத்துடன்.

    தீக்ஷாம்மா! நானும் ஈஸ்வரனும் ஒரு முடிவு எடுத்திருக்கோம், உனக்கும் கிரிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நாளா ஒரு ஆசை! கிரிக்கும் அதுல சம்மதம்தான்.... உன்னோட விருப்பத்தைக் கேட்கலாம்னுதான் கூப்பிட்டேன் என்றார் ஆர்வமாக.

    தீக்ஷண்யாவின் கண்களில் ஆச்சர்ய மின்னல்!

    கிரியைப் பற்றி, அவள் மனதில் வேறு விதமான எண்ணங்கள் என்றுமே இருந்ததில்லை.... பெரிதாக, எந்த ஈடுபாடும் வந்ததுமில்லை!

    அப்பா இன்று பேசிய விஷயம், அவளுக்குள் பெரும் வியப்பைத் தருவதாய்....

    அவரிடம் திரும்பியவள், என்னப்பா! நீங்களே இப்படிக் கேக்கறீங்க? உங்களுக்கு என்னோட ஆம்பிஷன்ஸ் பத்தி நல்லாத் தெரியும்.

    எம்.இ. பண்ணனும், நம்ம கம்பெனியிலேயே வொர்க் பண்ணணும்னு நான் விரும்பறதும் தெரியும்.... அதுக்கு அப்ளை பண்ணலாம்னு இருக்கேன்! எனக்குக் கல்யாணமெல்லாம் இப்ப வேணாம்ப்பா, நான் கொஞ்ச நாள் சுதந்திரமா இருக்கேன். அப்புறமா இதப் பத்திப் பேசலாம் என்றாள் தீர்மானமான குரலில்."

    கல்யாணம் முடிஞ்சி கூட நீ படிக்கலாம்மா.... நம்ப கம்பெனியிலேயே பொறுப்பேத்துக்கலாம்! யார் உன்னைத் தடுக்கப் போறா? நானும் ஈஸ்வரனும் எல்லாமே பேசிட் டோம். எப்படியும் கிரியும் நீயும்தான் நம்ம கம்பெனியோட வாரிசு! நீங்க ரெண்டு பேரும் கம்பெனியப் பாத்துக்கிட்டா அப்புறம் நாங்க நிம்மதியா ரெஸ்ட் எடுப்போம்.... யோசிச்சுச் சொல்லும்மா! என்றார் கேசவன்.

    அரை மனதாக ம்.... சரிப்பா. எனக்கு ஒரு நாள் டைம் கொடுங்க. நான் யோசிக்கணும் என்று கூறிவிட்டுத் தன் அறைக்கு வந்தாள் தீக்ஷண்யா.

    ***

    அவளுடைய அப்பா கேசவனும், ஈஸ்வரனும் நீண்ட காலமாகப் பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தனர்.

    இரு குடும்பங்களுமே, ஆரம்ப காலத்திலிருந்தே, நல்ல நட்புடன் இருந்தனர்.

    தாயை சிறு வயதிலேயே இழந்துவிட்ட தீக்ஷண்யாவுக்கு. ஈஸ்வரின் மனைவி யசோதாவை மிகவும் பிடிக்கும்.... அவரும் அவளுடன் அன்பாய்ப் பழகுவார்!

    அவர்களுடைய ஒரே மகன்தான், கிரிதர்!

    தங்களிருவருக்கும் மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணம், தன் தந்தைக்கு இருப்பதே இதுவரை அவளுக்குத் தெரிந்ததில்லை.

    இன்று பேசியபோதோ, ஆச்சரியமாக இருந்தது, கிரியை தன் இணையாக ஏனோ அவளால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

    எப்போதுமே, அவளுக்குத் திருமணம், குடும்பம் இதிலெல்லாம் அவ்வளவாக ஆர்வம் இருந்ததில்லை.

    அதே யோசனையுடன் சென்று பால்கனியில் நின்றபோது, மழையும் நின்றிருந்தது.

    சாரலில் குளித்த மரங்கள், தென்றலில் தலை துவட்டிக்கொண்டு இருந்தன. காற்றில் குளிரின் சாரல் கலந்து தெரிந்தது.

    அன்று மாலையே, ஐஸ்வர்யாவுடன் தண்டு மாரியம்மன் கோவிலுக்குச் சென்றபோது, அப்பா தன்னிடம் பேசிய விஷயத்தைப் பற்றி அவளிடம் கூறினாள் தீக்ஷண்யா.

    ஐஸ்வர்யா, அவளுடன் ஒன்றாகப் படித்த உயிர்த் தோழி!

    அவளும் இதுல ஒண்ணும் யோசிக்கறதுக்கு இல்லைடி தீக்ஷா! கல்யாணம் செஞ்சிக்கிட்டு, அங்கிள் சொல்றமாதிரி ரெண்டு பேரும், கம்பெனியிலே பொறுப்பேத்துக்க வேண்டியதுதானே? என்றாள் இயல்பாக.

    ப்ச்.... அதுக்கில்லை, ஐஷீ! எனக்கு, கிரியைப் பாத்தா ஒரு ஃப்ரெண்டாத்தான் நினைக்கத் தோணுதே தவிர, வேற மாதிரி எண்ணமே வரலை. அதான் இவ்வளவு யோசிக்கிறேன்.

    ஏய்.... நம்ம அப்பா, அம்மா எல்லாரும் எப்படிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? கல்யாணம் ஆனாக் காதல் தானா வந்திடப் போகுது! நானும் கிரிதரைப் பாத்திருக்கேன். சிவப்பா, நல்லாத் தானே இருப்பார்.... ஓக்கேன்னு சொல்லுடி!

    ஐஸ்வர்யாவின் குரலில் ஆர்வம் இருந்தது.

    பலத்த யோசனையுடன் கோவிலிலிருந்து திரும்பி வந்த தீக்ஷாவிடம், அவர்களின் வீட்டில் காத்திருந்த யசோதாவும் இதையே கூறினார்.

    அவரிடம் மறுத்து ஒன்றும் கூறாமல் இதுபற்றி அப்பாவிடம் தான் பேசுவதாகக் கூறினாள் தீக்ஷா.

    அன்று, இரவின் தனிமையில் அமர்ந்து யோசித்தபோது, கேசவன் மறுமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய நலனுக்காகவே எல்லாம் செய்து, அவருடைய வாழ்க்கையைத் தியாகம் செய்து தனக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது, அவள் பிடிவாதத்தைத் தளரச் செய்வதாய்....

    தன்னால் அவருக்குத் தர முடிந்த சந்தோஷம் இதுதான் என்றால், அதைச் செய்வதில் தவறில்லை என்றும் தோன்றியது.

    மகிழ்ச்சி என்பது அவரவர் மனதைப் பொறுத்த விஷயமாய்! திருப்தியைத் தத்தெடுக்கும் மனதுக்கு, எப்போதுமே மகிழ்ச்சி இனிய வரமாகும் என்பதும் புரிந்தது.

    மறுநாள் மாலையில் கம்பெனியிலிருந்து வீடு திரும்பிய கேசவனிடம், தன் சம்மதத்தைக் கூறி, அவருடைய விருப்பம் போல் செய்யச் சொன்னாள் தீக்ஷண்யா.

    கேசவன், அதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்து போனார்.

    ***

    மறு வாரமே, எளிமையாக நிச்சயதார்த்தம் நடத்த ஏற்பாடு செய்தனர்.

    இரு பக்க உறவினர்களில் முக்கியமானவர்களுடன், ஐஸ்வர்யாவின் குடும்பத்தினரும் அழைக்கப்பட, அவள் வீட்டிலேயே ஃபங்ஷன் நடந்தது.

    கிரிதர் பெரிய மலர்க்கொத்துடன் வந்திருந்தான். யசோதா அவளுக்கு வைர நெக்லஸ் ஒன்றைப் பரிசளித்தார்.

    அன்று கிரியைப் பார்க்கும்போது, அவளுக்குள் புதிதாய் எந்த உணர்வும் எழவில்லை.

    மனதில் தும்பிகள் சிறகடிக்கவில்லை. சிறு வயதிலிருந்தே பழகிய ஒரு தோழனாகவே அவனை நினைக்கத் தோன்றியது.

    மனம், சலனங்களற்ற குளம் போல் எந்தப் பரபரப்புமின்றி அமைதியாய்....

    காதல் எனும் ரசவாதம் ஒருவேளை, கல்யாணம் முடிந்தபின் வருமோ என்ற எண்ணம் மனதில் ஓட, சிரிப்பு வந்தது அவளுக்கு!

    அடுத்த வாரத்தில் ஒரு நாள், தோழிகள் ட்ரீட் வேண்டும் என்று கேட்டதால், அனைவரும் ஐஸ்வர்யாவின் அப்பாவுடைய ஹோட்டலுக்குச் சென்றனர்.

    ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி தீக்ஷாவை கிரியுடன் இணைத்தும் பேசியபடி சாப்பிட்டு முடித்து, ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

    என்னடி தீக்ஷா? மாப்பிள்ளையை எங்க கண்ணுலயே காட்ட மாட்டேங்கிறே? ஏன், நாங்க கொத்திட்டுப் போயிடுவோம்னு பயமா? என்றாள் வள்ளி கிண்டலாக.

    தீக்ஷாவும் புன்னகையுடன், அப்பாடா! அப்படி நீ செஞ்சா எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்பாவோட கம்பல்ஷனுக்காகத்தான், நான் சரின்னே சொல்லி இருக்கேன்.... நீ சொன்ன மாதிரி நடந்தா, நான் தப்பிச்சிடுவேன் என்றாள்.

    அவளுடைய மனநிலை, ஐஸ்வர்யாவுக்கு மட்டும் புரிந்தது.

    அவர்களுடைய செட்டிலேயே தீக்ஷண்யாவிற்குத்தான் ஆம்பிஷன்ஸ் அதிகம்!

    ஆனால், அவள்தான் முதன் முதலாக திருமண பந்தத்தில் சிக்கிக் கொள்ளப் போகிறாள்.

    ஒரு நாள் அந்த கிரிதரைப் பார்த்து, உங்க உட்பிஒய்ஃப் ரொம்பக் கோபக்காரி.... பாத்து நடந்துக்கங்கன்னு நாங்கள்லாம் அட்வைஸ் பண்ணலாம்னு இருக்கோம்.... உனக்கு ஓக்கேயா தீக்ஷா? குறும்புடன் கேட்டாள் நிர்மலா.

    உடனே ஐஸ்வர்யா, ஏய்.... அவளைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? தப்பைத் தப்புன்னு சொன்னா, அவகோபக்காரியா? என்று பரிந்து வந்தாள்.

    விடு ஐஷீ.... எனக்கு ஒண்ணும் பயமில்லை. வேணும்னா போய் சொல்லுங்க! கிரிக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியும். நீங்க போய் சொல்லி அவன் கல்யாணத்தை நிறுத்தினா, அதை விடப் பெரிய நிம்மதி எனக்கு வேற ஒண்ணும் இல்லை என்று கூறியபடி எழுந்தாள் தீக்ஷா.

    தன் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் பலிக்கப் போவதையும், தானே அந்தக் கல்யாணத்தை நிறுத்தப் போவதையும், அந்த நிமிடம் அவள் அறியவில்லை.

    பிறகு, தோழிகளுடன் அவள் வெளியே வந்தபோது, வாசலின் அருகே வந்து கொண்டிருந்த கிரிதரும், அவன் அணைத்தபடி அழைத்து வந்த ஒரு பெண்ணும் தீக்ஷாவின் கண்களில் பட்டனர்.

    மனம் சட்டென்று வறண்டு போய் அவள் விழிகளில் சிறு சிவப்பு படர ஆரம்பித்தது.

    அந்தப் பெண்ணைப் பார்த்தாலே ஏதோ வித்யாசமாகத்

    Enjoying the preview?
    Page 1 of 1