Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marakka Manam Kooduthillaiye
Marakka Manam Kooduthillaiye
Marakka Manam Kooduthillaiye
Ebook386 pages3 hours

Marakka Manam Kooduthillaiye

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

மனதால் இணைந்தவர்கள் விதியால் பிரிவை சந்திக்க வேண்டி வருகிறது. இந்த சமூகத்தில் பெண்கள் நேரிடும் பாலியல் பிரச்சனைகளை மையக் கருவாகக் கொண்டு அழகான ஒரு காதல் இந்தப் பிரச்சனையால் எப்படி சின்னாபின்னமாகிப் போகிறது என்பதை சொல்லி இருக்கிறேன்... காதல் கொண்ட உள்ளங்கள் களங்கம் நீங்கி இணைந்திடுமா... மறக்க முடியாத காதல் நினைவுகளை மீட்டுத் தந்திடுமா என்பதே கதை.

Languageதமிழ்
Release dateJun 30, 2020
ISBN6580134405618
Marakka Manam Kooduthillaiye

Read more from Latha Baiju

Related authors

Related to Marakka Manam Kooduthillaiye

Related ebooks

Reviews for Marakka Manam Kooduthillaiye

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marakka Manam Kooduthillaiye - Latha Baiju

    http://www.pustaka.co.in

    மறக்க மனம் கூடுதில்லையே

    Marakka Manam Kooduthillaiye

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    1

    சுக்லாம் பரதரம் விஷ்ணும்

    சசிவர்ணம் சதுர்ப்புஜம்

    ப்ரசன்ன வதனம் த்யாயேத்

    சர்வ விக்நோப சாந்தயே

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்

    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்

    உமாஸூதம் சோக வினாச காரணம்

    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்...

    மங்களகரமாய் கை கூப்பி நின்று இனிய குரலில் கணபதி மந்திரத்தைத் தெளிவாய் உச்சரித்துக் கொண்டிருந்த மகளைப் பெருமையும் புன்னகையுமாய் நோக்கிக் கொண்டே காலை உணவை மேசையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார் மீனாட்சி. மகள் நித்யபிரபாவுக்கு கணபதி என்றால் கொள்ளைப் பிரியம். அவளது ஒரு அணுவும் அவனின்றி அசையாது என்பது போல் எல்லாவற்றிற்கும் கணபதியே சரணம் என்று கிடப்பாள். இன்று வீட்டில் முக்கியமான விசேஷம் என்பதால் கணபதியை விசேஷமாய் கவனித்துக் கொண்டிருந்தாள். பூஜை முடிந்து தீபாராதனை காட்டிவிட்டு அன்னையிடம் வந்தவளை இன்முகத்துடன் நோக்கினார் அன்னை.

    என்னம்மா, என்னமோ புதுசாப் பாக்கற போல பாக்கறிங்க...

    ம்ம், உன்னை நினைச்சா பெருமையா இருக்குடி கண்ணு...

    சாமி கும்பிடறதுல என்னம்மா பெருமை...

    என் பொண்ணை நான் அருமையா வளர்த்திருக்கேன்னு தானே உன் அத்தை என் அண்ணன் மகனுக்கு உன்னைக் கட்டி வைக்க சம்மதிச்சிருக்காங்க... இல்லேன்னா அவங்க பணத்துக்கும் பவுசுக்கும் நம்ம குடும்பத்துல பொண்ணு கேப்பாங்களா... இத்தனை நாள் நம்மோட அவ்வளவா ஒட்டாம இருந்த சொந்தம் இப்போ நெருங்கி வருதுன்னா உன்னைப் பிடிச்சுப் போயி தானே... என்றவர் மகளின் தலையில் நெகிழ்ச்சியுடன் கோதி விட அன்னையின் பேச்சு மாமன் மகனை நினைவூட்டியதால் சட்டென்று முகம் சிவக்க நாணத்துடன் தலை குனிந்து கொண்டாள்.

    அண்ணன் எங்கே மா... இன்னும் எழுந்துக்கலையா...

    சலிப்பாய் முகத்தை வைத்துக் கொண்ட மீனாட்சி, வீட்டுல ஒரு விசேஷம் நடக்கப் போகுது... கலகலன்னு முன்னாடி நிக்க வேண்டியவன ஆளைக் காணோம்... நான் பார்த்திட்டு வரேன்... அடுப்புல டிகாஷன் இருக்கு, காபி கலந்து வச்சிருமா... சொன்னவர் மாடியிலிருந்த மகனின் அறைக்கு செல்ல அவன் அறையை ஒட்டியிருந்த பால்கனியில் நின்று எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்தான்.

    நிதின்... எழுந்திரிச்சுட்டியாப்பா... அன்னையின் குரலில் திரும்பியவனின் இறுக்கமான முகத்தில் என்னவென்பது போல் ஒரு பாவம் மட்டுமே.

    மாமா வீட்டுல இருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திருவாங்கப்பா... இப்பதான் அண்ணன் போன் பண்ணார்... நீ சீக்கிரம் குளிச்சிட்டு கீழ வா... எனவும், ம்ம்... என்று ஆமோதிப்பாய் தலையாட்ட, இவன் ஏன்தான் எப்பவும் இப்படி உர்ருன்னு இருக்கானோ... எல்லாத்துக்கும் ஒரே ரியாக்சன்... அவர் முணுமுணுப்புடன் செல்ல டவலை எடுத்தவன் உடலில் துளிர்த்திருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே கடிகாரத்தைப் பார்க்க அது எட்டைத் தாண்டியிருந்தது. குளியலறைக்குள் நுழைந்த நிதின் ரூபன் சிறிது நேரத்திலேயே குளித்து தயாராகி கீழே வந்தான்.

    எப்போதையும் விட வீடு பளிச்சென்று இருந்தது. புதிய கர்ட்டன் காற்றில் படபடக்க அவனைக் கண்டதும் மலர்ந்த பூவாய் முன்னில் வந்து நின்றாள் தங்கை நித்ய பிரபா.

    அண்ணா, இந்த ரெண்டு சேலைல ஒண்ணை ச்சூஸ் பண்ணிக் கொடேன்... தன் கைபிடித்து நடந்தவள் இன்று கல்யாணத்திற்கு தயாராய் நிற்பது கண்டு நெகிழ்ந்தான்.

    குழந்தையாய் தலை சரித்து அண்ணனின் பதிலுக்காய் காத்திருந்தவளின் தங்க நிறத்துக்குப் பொருத்தமாய் மெஜந்தா வண்ண சேலையைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தவன், உனக்கு இது அழகா இருக்கும்டா... என்று கூற, நானும் இதான் நினைச்சேன் அண்ணா... இருந்தாலும் நீ சொன்னா எனக்கு திருப்தியாருக்கும்... என்று கண்ணைச் சிமிட்டியவளின் குழந்தைத் தனம் மட்டும் மாறவே இல்லை.

    அவள் உடை மாற்ற செல்ல டிபனுக்காய் மேசையில் அமர்ந்தவன் முன்னில் தட்டை வைத்துப் பரிமாறினார் மீனாட்சி. இட்லியைச் சட்னியில் தோய்த்து வாய்க்கு கொண்டு செல்கையில் அன்னையின் புலம்பல் தொடர்ந்தது.

    நம்ம பிரபாவை என்னதான் என் அண்ணன் மகனுக்கு கல்யாணம் பண்ணறதா இருந்தாலும் அவங்க மனசுக்கு நிறைவா எல்லா சீரும் பண்ணினா தான் நாளைக்கு நமக்கும் மதிப்பா இருக்கும்... அண்ணி மனசும் நிறையும்... உன் அத்தையைப் பத்தி தெரியும்ல... அவ்ளோ சீக்கிரம் எதுலயும் இறங்கி வர மாட்டாங்க... பையன் ஜாதகத்துக்கு வெளியே பொண்ணு ஒத்து வராததால நம்ம பிரபா ஜாதகத்தைக் கேட்டாங்க... அது எல்லாப் பொருத்தமும் ஒத்துப்போனதால இந்த சம்மந்தம் பேச ஒத்துகிட்டிருக்காங்க... மாப்பிள்ளையும் பாங்குல நல்ல வேலை... வெளிய பொண்ணெடுத்தா பெரிய இடத்துல வரன் கிடைக்கும்... நாம குறைச்சலா பண்ணிடக் கூடாது... பணத்துக்கு ஏதாச்சும் யோசிச்சிருக்கியா... அவர் கேட்கவும் சட்டென்று நிதினுக்கு புரையேறியது.

    பார்த்துக்கலாம்மா... பல்லடம் இடத்தை விக்கறதுக்கு புரோக்கர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்...

    அதை வித்து தானே பிரிண்டிங் கம்பெனில வந்த நஷ்டத்தை சரி பண்ணனும்னு சொன்ன...

    ம்ம்... அதுக்கு ஒரு பிசினஸ் லோன் எடுக்கலாம்னு இருக்கேன் மா... இது தங்கச்சி கல்யாணத்துக்கு இருக்கட்டும்... நிதின் சொல்லவும் அந்த பாசமலர்களைப் பெற்றெடுத்த பூரிப்புடன் நோக்கினார் மீனாட்சி. நித்தியானந்தம், மீனாட்சி தம்பதியருக்கு நிதின் ரூபன், நித்ய பிரபா என கண்ணான இரு பிள்ளைகள். திருப்பூரில் சிறிய அளவில் பனியன் துணிகளில் பிரிண்டிங் செய்து கொடுக்கும் கம்பெனியை நடத்தி வந்தவர் மூன்று வருடங்களுக்கு முன்பு வந்த மாரடைப்பில் புகைப்படத்தில் அடங்கிவிட குடும்பப் பொறுப்பு மகன் நிதின் மீது விழுந்தது.

    கோவையில் MBA முடித்து தனியார் துறை ஒன்றில் அப்போதுதான் வேலைக்கு சேர்ந்திருந்த நிதின் தந்தை ஆசையோடு செய்து கொண்டிருந்த பிரிண்டிங் தொழில் நஷ்டத்தில் இருந்தாலும் அதை விட விரும்பாமல் கம்பெனிப் பொறுப்பை ஏற்று நடத்தத் தொடங்கி இருந்தான். தன்னுடைய முழு ஈடுபாட்டையும் கொடுத்து மெல்ல முன்னேற்றத்தைக் கொண்டு வந்திருந்தான்.

    தங்கை நித்யபிரபா இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்க மீனாட்சியின் அண்ணன் மகனுக்கு அவளைக் கல்யாணம் பேசி முடிவாகும் நிலையிலிருந்தது. சாப்பிட்டு ஹாலுக்கு வந்தவன் கார் ஹாரன் சத்தம் கேட்க அன்னையுடன் வாசலுக்கு விரைந்தான். மாப்பிள்ளை சரவணன் குடும்பத்துடன் காரிலிருந்து இறங்கி வர பரபரப்புடன் நின்றிருந்த மீனாட்சி முகமெல்லாம் புன்னகையாய் கை கூப்பி வரவேற்றார்.

    வாங்கண்ணா... அண்ணி, வாங்க... வாங்க மாப்பிள்ளை... வாம்மா ஆனந்தி... ஒவ்வொருவராய் அவர் வரவேற்க நிதின் பொதுவான ஒரு வணக்கமும், தலையசைப்புமாய் நிறுத்திக் கொண்டான்.

    நல்லார்க்கியா மீனாட்சி, என்ன மருமகனே... எப்படி இருக்கே... என்ற அண்ணன் சங்கரனிடம், நல்லார்க்கோம் அண்ணா, வாங்க உக்காருங்க... என்று அழைத்துச் சென்று அமர வைத்தார்.

    வெகு நாட்களுக்குப் பிறகு அங்கு வருவதால் அண்ணி உமா வீட்டைச் சுற்றிலும் கண்ணை ஓட்ட, ஆனந்தி ஆர்வத்துடன் அத்தை மகன் நிதினைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளும் நித்தியானந்தம் மறைவுக்கு வரும்போது தான் இறுதியாய் அவர்கள் எல்லாரையும் கண்டிருந்தாள்.

    நல்ல உயரத்தில் அளவான உடற்கட்டில் லேசான தாடியுடன் கம்பீரமாய் இருந்தவனின் உதட்டில் சின்னதாய் ஒரு புன்னகை ஒட்டியிருக்க வெள்ளை சட்டை வெளிர்நீல நிற ஜீன்சில் பளிச்சென்று இருந்தான்.

    என்னப்பா நிதின், கம்பெனி வேலை எல்லாம் எப்படிப் போகுது...

    GST வந்தபிறகு பொதுவாவே பிசினஸ் கொஞ்சம் டல் தான் மாமா... அதான் ஒரு லோன் எடுத்து நிட்டிங் யூனிட் ஒண்ணும் தொடங்கலாமானு யோசிச்சிட்டு இருக்கேன்...

    ஓ நல்ல விஷயம்பா... நல்லபடியா சீக்கிரம் தொடங்கு...

    ஏன் மீனாட்சி, இந்த வீடு லோன்ல தானே இருந்துச்சு... இப்பவும் லோன் இருக்கா... என்றார் உமா.

    போன வருஷம் தான் லோன் முடிஞ்சு பத்திரம் எல்லாம் பாங்குல இருந்து வாங்கினோம் அண்ணி...

    ம்ம்... என்ற உமாவை எரிச்சலுடன் பார்த்தார் சங்கரன். உமாவுக்கு எதிலும் எப்போதும் கால்குலேஷன் தான். மீனாட்சி தயாராய் வைத்திருந்த குளிர்பானத்தைக் கொண்டு வந்து கொடுக்க அனைவரும் எடுத்துக் கொண்டனர்.

    பிரபா ரெடியாகிட்டா வர சொல்லலாமே... சங்கரன் கூறவும், அவராவது தன் மனதைப் புரிந்து கொண்டாரே என்ற ஆசுவாசப் பார்வை பார்த்த சரவணன் மாப்பிள்ளைக் களையோடு அழகாய் இருந்தான்.

    ஆனந்தி, பிரபா ரூம்ல இருக்கா... ரெடியாகிட்டாளான்னு பார்த்து நீயே அழைச்சிட்டு வாம்மா... என்று பொறுப்பை அவளிடம் கொடுக்க, சரி அத்தை... என்ற ஆனந்தி பிரபாவின் அறைக்குள் நுழைந்தாள்.

    எளிமையான அலங்காரத்திலும் அளவான உயரத்தில் கோதுமை நிறத்தில் அழகாய் இருந்த பிரபாவைக் கண்டு கண் சிமிட்டியவள், அண்ணி, இந்த சேலைல சூப்பரா இருக்கே... எனவும் நாணத்துடன் சிரித்த பிரபா, என்ன ஆனந்தி, புதுசா அண்ணின்னு எல்லாம் கூப்பிடறே... என்றாள் வெட்கத்துடன்.

    இத்தனை நாள் எனக்கு வயசுல சின்னவங்கிற உரிமைல வாடி போடின்னு பேர் சொல்லி அழைச்சிட்டு இருந்தேன்... இனி அப்படிக் கூப்பிட்டா என் அண்ணன் முறைப்பானே... அதான் உனக்கு பிரமோஷன் கொடுத்து இப்பவே அண்ணின்னு அழைக்க ஆரம்பிச்சுட்டேன்... கூறிக் கொண்டே அவள் தலையிலிருந்த மல்லிகைப் பூவை சரி செய்தவள், இன்னைக்கு உன்னைப் பார்த்து என் அண்ணன் பிளாட் ஆகப் போறான்... சரி... போகலாமா... என்று அவள் கை பிடிக்க எழுந்து உடன் நடந்தாள் பிரபா.

    அன்னை கொடுத்த காபி டிரேயை வாங்கி அனைவருக்கும் கொடுத்து நமஸ்கரித்தவள் ஆவலுடன் கடைக் கண்ணில் சரவணனைப் பார்க்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் புன்னகைத்து லேசாய் கண்ணைச் சிமிட்ட ஒரு நிமிடம் உடலெங்கும் ரத்தம் தாறுமாறாய் ஓட கன்னம் சிவக்க தலை குனிந்து கொண்டாள்.

    அந்த நொடிநேரப் பார்வைப் பரிமாற்றத்தைக் கண்டுவிட்ட நிதின் மனதில் மறக்க நினைத்த முகமொன்று அலையடிக்க சட்டென்று முகத்தைத் திருப்பிக் கொண்டான். அதே நேரத்தில் அதைக் கண்டு புன்னகையுடன் நிதினை நோக்கிய ஆனந்தி அவனது முகத்தைக் கண்டு வியந்தாள். அதில் அடக்கி வைக்கப்பட்ட வலி தெரிய முகம் இறுகிக் கிடந்தது.

    மறக்க நினைத்தே

    நிதமும் நினைத்துக்

    தொலைகிறது மனது...

    மறக்க மனம் கூடுதில்லையே...

    2

    சஹா... இந்த மிக்ஸி ஓகே வான்னு பாரு... அன்னையின் குரலில் திரும்பிய சஹானா கண்டதுமே மனதில் சாரல் வீசும் அழகோடு இருந்தாள். பளிச்சென்ற வெள்ளை சல்வாரில் நெற்றியில் ஒரே ஒரு கறுப்புப் பொட்டு தவிர எந்த அலங்காரமும் இல்லை. காது, கழுத்து எல்லாமே காலியாய் கிடக்க ஒளி வீசும் கண்களில் மட்டும் ஒருவித வெறுப்பு நிறைந்திருந்தது.

    உனக்குப் பிடிச்சதை வாங்கிக்கம்மா... சொல்லி முடித்துக் கொண்டவள் கையில் வைத்திருந்த லிஸ்டில் வேறு பொருட்களைத் தேடிக் கொண்டிருந்தாள்.

    ஊரிலிருந்து எல்லா பொருளையும் கொண்டு வந்திடலாம்னு சொன்னா கேட்டாத் தானே... இங்கயே வாங்கிக்கலாம்னு சொல்லறே... எவ்ளோ தான் வாங்க முடியும்... அலுத்துக் கொண்டே சசிகலா கேஸ் அடுப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    அவர்களின் சொந்த வீடு பாலக்காட்டில் இருக்க வங்கியில் அசிஸ்டன்ட் மானேஜராய் பணிபுரியும் மகளின் உத்தியோக மாற்றல் காரணமாய் திருப்பூருக்கு வந்திருந்தனர். சசிகலாவும் கணவர் சாமுவேலும் காதலித்து மணம் புரிந்தவர்கள். மதங்கள் காதலுக்கு குறுக்கே வர அதை உடைத்து இரு குடும்பங்களையும் எதிர்த்து காதலில் வென்று கல்யாண வாழ்வைத் தொடங்கியவர்கள்.

    திருச்சி ரயில்வேயில் பணிபுரிந்த சாமுவேலுக்கு பாலக்காடுக்கு மாற்றல் வர அங்கே வந்தவர்களுக்கு ஒரே பிரசவத்தில் முத்தாய் இரு பெண் பிள்ளைகள் பிறக்க அங்கேயே செட்டில் ஆயிருந்தனர். சாதனாவுக்கு ஐந்து நிமிடம் முன்பு பிறந்ததால் சஹானா அக்காவாகப் பதவி உயர்வு பெற்றிருந்தாள். அசப்பில் ஒரே போல இருந்தாலும் இருவரின் குணமும் சற்று வித்தியாசமானது.

    சஹானா அமைதியானவள்... எந்த ஒரு பிரச்சனையையும் அமைதியாய் யோசித்து தீர்வு காண்பாள். படிக்கும்போதே நிறைய பாங்க் எக்ஸாம் எழுதிக் கொண்டிருப்பாள். காலையில் பத்து மணிக்கு தொடங்கி ஐந்து மணிக்கு வீடு திரும்பும் உத்தியோகம் என்பதோடு எல்லா அரசு விடுமுறைகளும் கிடைக்கும்... சம்பளமும் அதிகம் என்பதால் அவளுக்கு பாங்கில் வேலைக்குப் போக வேண்டுமென்பது மிகவும் விருப்பமாய் இருந்தது. அதற்காகவே பாங்கு வேலைக்கான எந்த பொதுத் தேர்வையும் விடாமல் எழுதி வந்தவளுக்கு வங்கியிலேயே வேலையும் கிடைத்து இப்போது பதவி உயர்வில் இட மாற்றலும் கிடைத்துவிட்டது.

    சாதனா நேர்மாறானவள். கண்ணெதிரே எந்த குற்றத்தைக் கண்டாலும் தைரியமாய் தட்டிக் கேட்கும் சூட்டிப்பானவள்... அவளுக்கு மக்களுக்கு சேவை செய்யும் நேர்மையான போலீஸ் அதிகாரியாய் வரவேண்டும் என்பது விருப்பம். ஆனால் தந்தை சாமுவேல் ஒரு ரயில் விபத்தில் இறந்து போக வாரிசு முறையில் அவளை ரயில்வே வேலைக்கு தேர்வாக்க பணி நியமனத்திற்காய் காத்திருந்தனர். இரு பெண் பிள்ளைகளையும் அவர்கள் விருப்பப்படியே படிக்க வைத்திருந்தனர் அவர்களின் அன்புப் பெற்றோர்.

    அந்த குக்கர் எடுங்க... சஹானா எடுத்த குக்கரைப் பார்த்த சசிகலா, பாரேன்... முக்கியமா வாங்க வேண்டியதை மறந்துட்டேன்... என்று அவரும் சேர்ந்து கொள்ள மற்ற பொருட்களையும் வாங்கிக் கொண்டிருந்தனர்.

    என்னம்மா, இன்னும் வாங்கி முடியலையா... ஸ்ரீ குட்டியை தூங்க வைக்குற டைம் ஆச்சு... சீக்கிரம் முடிங்க... கூறிய சாதனாவை ஏறிட்ட சசிகலா அவள் இடுப்பில் பொம்மை போல் அமர்ந்திருந்த அழகான குழந்தையை நோக்கிக் கை நீட்ட ஆவலுடன் பாய்ந்து வந்து அவர் கழுத்தை சிநேகத்துடன் கட்டிக் கொண்டது ஸ்ரீகுட்டி என்னும் ஸ்ரீ லயா... இரண்டு வயதில் பொம்மைக்கு கை கால் வைத்தது போல் அழகாய் அவரை நோக்கி சிரித்தது. குண்டுக் கன்னத்தைக் செல்லமாய் கடித்து கொஞ்சினார் சசிகலா.

    என்னடா செல்லம், ஸ்ரீ குட்டிக்கு தூக்கம் வருதா... அவர் கேட்கவும், ம்ம்... என்றுவிட்டு உறக்கம் தேங்கி நின்ற கண்களுடன் தலையாட்டி தோளில் சாய்ந்து கொண்டது.

    அவை எதையும் கண்டு கொள்ளாமல் வாங்கிய பொருட்களை பில்லுக்கு கொண்டு சென்ற சஹானா பணத்தைக் கொடுத்து வாங்கிக் கொண்டு வாசலுக்கு நகர,

    குடு சஹா... நானும் பிடிச்சுக்கறேன்... என்று அவளிடம் இருந்ததில் பாதியை வாங்கிக் கொண்டாள் சாதனா.

    பார்க்கிங்கில் இருந்த காரை நோக்கி நகர்ந்தவர்கள் பின்னில் பொருட்களை வைத்துவிட்டு இருக்கையில் அமர்ந்தனர். சசிகலாவின் மடியில் குழந்தை உறங்கத் தொடங்கியிருந்தது.

    சஹானா காரைக் கிளப்ப சாலையில் கலந்தனர்.

    நம்ம ஊருக்கு திருப்பூர் ரொம்பவே டிராபிக் தான்... எல்லாரும் ரூல்ஸ் பார்க்காம இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுறாங்க... நாம சரியா போனாலும் எதிர்ல வர்றவங்களைப் பார்த்து பயமா இருக்கு இல்ல சஹா... வெளியே பார்த்துக் கொண்டிருந்த சாதனா கூறவும்,

    ம்ம்... கொஞ்ச நாள்ல நாமும் பழகிடுவோம்... எப்படி தப்பா வண்டி ஓட்டலாம்னு... என்றாள் சஹானா.

    நாளைக்கு தான நீ டியூட்டில ஜாயின் பண்ணனும்... பாங்கு எங்கிருக்குன்னு விசாரிச்சுட்டியா...

    நம்ம வீட்டுல இருந்து கொஞ்சம் தூரம் தான்... ஆனாலும் வண்டி இருக்கே... சமாளிச்சுக்கலாம்... சொல்லிக் கொண்டே மங்கலம் ரோடில் காரைத் திருப்பியவள் அபார்ட்மென்ட்க்கு வண்டியை விரட்டினாள்.

    சரியாய் பத்தாவது நிமிடத்தில் கோகுலம் அபார்ட்மென்ட்ஸ் போர்டைத் தாங்கியிருந்த கேட்டுக்குள் காரை நுழைத்து பார்க்கிங்கில் விட்டு இறங்கினர். சசிகலா உறங்கும் குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு முன்னில் நடக்க சஹானாவும், சாதனாவும் கையில் பெரிய பார்சல் கவருடன் இறங்கினர். அவர்களைக் கண்டு அருகில் ஓடிவந்த செக்யூரிட்டியின் உதவியுடன் லிப்ட்டுக்கு நடந்தனர்.

    உள்ளே நுழைந்து நான்காம் எண்ணைத் தட்டவும் விர்ரென்று மேலே உயரத் தொடங்கியது அந்தத் தானியங்கி. லிப்ட் நின்று வெளியே வந்தவர்கள் அவர்களின் பிளாட்டை நோக்கி நடக்க முன்னில் நின்று பேசிக்கொண்டிருந்த இரு பெண்மணிகள் இவர்களை சிநேகமாய் பார்த்து சிரித்தனர்.

    நீங்க தான் இங்கே புதுசா வந்திருக்கிங்களா... நான் சரளா, பக்கத்துக்கு பிளாட்... இவ பிரவீணா, எதிர் பிளாட்... இவங்க ரெண்டு பேரும் ஒரே போல இருக்காங்களே... தங்களைப் பரிச்சயப்படுத்திக் கொண்டே மூவரையும் ஆராய்ச்சிக் கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் வெறுமனே புன்னகைத்த சஹானா கதவைத் திறக்க செல்ல, ஆமா ரெண்டு பேரும் இரட்டைப் பிள்ளைங்க... அவ மூத்தவ சஹானா, ஸ்டேட் பாங்குல அசிஸ்டன்ட் மானேஜரா வொர்க் பண்ணுறா... நாளைக்கு இங்கே ஜாயின் பண்ணப் போறா... என்றவரிடம் குழந்தையைக் குடுங்கம்மா... என்ற சாதனா வாங்கிக் கொண்டு உள்ளே செல்ல, இவ இளையவ சாதனா... ரயில்வே வேலை நியமனத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருக்கா..." என்றார் புன்னகையுடன்.

    ஓ... அப்படியா... என்ற பிரவீனா குழந்தையை ஆர்வத்துடன் பார்க்கவும், சரி, நீங்க பேசிட்டு இருங்க... இதெல்லாம் உள்ள கொண்டு போயி வைக்கணும்... நாளைக்குப் பேசறேன்... என்று சசிகலா இருவரிடமும் சொல்லி விட்டு கவருடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

    என்ன சரளா, இவங்க பொம்பளைங்க மட்டும் தான் இருக்காங்களோ... அப்ப, அந்தக் குழந்தை யாரோடது... அதைப் பத்தி ஏதும் சொல்லலையே... பொண்ணுங்க கழுத்துல தாலியும் காணோம்... ஆனா அந்தப் பொண்ணுங்க ஜாடைல மூக்கும், முழியுமா இருக்கு... என்னவாருக்கும்... பிரவீணா யோசனையாய் கேட்க, யாருக்குத் தெரியும்... ஆளைப் பார்த்தா எல்லாம் நல்லவங்க போல தான் இருக்காங்க... எந்தப் புத்துல எந்தப் பாம்புன்னு பழகினா தான தெரியும்... பார்த்துக்கலாம் விடு... என்றாள் சரளா.

    ம்ம்... அதானே, இந்தக் காலத்துல யாரையும் நம்பவே முடியறதில்லை... எனக்கென்னவோ அந்தக் குழந்தையைப் பத்தி அவங்க எதும் சொல்லாதாதால ஒரு டவுட்டாவே இருக்கு... சரி நான் கிளம்பறேன்... என் வீட்டுகாரர் லஞ்சுக்கு வந்திருவார்... சொல்லிக் கொண்டே அவள் வீட்டுக்கு நடக்க சரளாவும் இவர்களைப் பற்றிய யோசனையுடன் வீட்டுக்குள் நுழைந்து கொண்டாள்.

    என்னம்மா, அவங்களை வீட்டுக்குள்ள கூப்பிடாம அப்படியே பேசி அனுப்பிட்டிங்க... கேட்ட சாதனாவிடம், அவங்க ரெண்டு பேர் பார்வையுமே சரியில்லடி... வாய் என்கிட்டே பேசிட்டு இருந்தாலும் பார்வை நம்ம எல்லாரையும் ஆராய்ச்சி பண்ணிட்டே இருந்துச்சு... குறிப்பா நம்ம ஸ்ரீக்குட்டி மேல... விட்டா phd பண்ணி பட்டமே வாங்குவாங்க போல... சரியான வம்பு பிடிச்சவங்களா தோணுச்சு... அதான் பேச்சைக் கட் பண்ணிட்டு உள்ளே வந்துட்டேன்... சரி நான் சீக்கிரம் சமையலை முடிக்கறேன்... நீ இதெல்லாம் எடுத்து வை... சொல்லிவிட்டு அடுக்களைக்கு நடந்தார்.

    சிறிது நேரத்திலேயே சமையல் தயாராகிவிட வாங்கிய பொருட்களை ஒதுக்கி வைத்து உணவை முடித்துக் கொண்டனர். அந்த பிளாட் வங்கியில் பணிபுரியும் ஒருவரின் நண்பருக்கு சொந்தமானது. அவரது குடும்பம் இப்போது வெளிநாட்டில் இருந்ததால் சிலதைத் தவிர கட்டில், பீரோ, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மின்விசிறி, சோபா, டீவி என்று வீட்டு உபகரணங்கள் அனைத்தும் இருந்தது. வீட்டிலிருந்து வங்கிக்கான தூரமும் வாடகையும் சற்று அதிகம் என்றாலும் எல்லா வசதிகளுடனும் சௌகர்யமாய் இருந்ததால் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அபார்ட்மென்ட் உள்ளேயே ஒரு குழந்தைகளுக்கான பார்க், அருகிலேயே கோவில் என்று அழகான சூழ்நிலையோடு ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக அமைதியாகவும் இருந்தது. உணவு முடிந்து சஹானா கையில் ஒரு புத்தகத்துடன் அறைக்குள் ஒதுங்கிக் கொள்ள, சாதனாவும் சசிகலாவும் டீவியில் ஏதோ சினிமாவைப் பார்த்து சென்டிமெண்ட் சீனில் மனமுருகி உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தார்கள்.

    அறையில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீகுட்டி கண்ணைத் திறந்து மலங்க மலங்கப் பார்க்க சஹானா மட்டுமே பார்வைக்குக் கிடைக்க சிணுங்கலாய் அழத் தொடங்கினாள். குழந்தையின் அழுகையைக் கண்டதும் முகத்தை சுளித்தவள் கத்தினாள்.

    சாதனா, உன் குழந்தை அழுகற சத்தம் கேட்குதா இல்லையா... வந்து எடுத்திட்டுப் போ... சனியன்... என்னைப் பார்த்ததுமே கத்தத் தொடங்கிருச்சு... என்றாள் கோபத்துடன்.

    அவள் குரலில் டீவியின் கவனம் கலைந்து அவசரமாய் அறைக்குள் நுழைந்த சாதனா, ஸ்ரீக்குட்டி... சரிடா செல்லம்... அழக்கூடாது... அம்மா வந்துட்டேன்ல... சொல்லிக் கொண்டே அவளை தட்டிக் கொடுத்து வெளியே எடுத்துச் சென்றாள்.

    பாவம், பிள்ளைக்குப் பசிக்குமாருக்கும்... நீ போயி சாதம் எடுத்திட்டு வா... அவளை என்கிட்டே கொடு... என்று வாங்கிக் கொண்டார் சசிகலா. மசிய வேக வைத்த பருப்பும் நெய்யும் கலந்து குழைத்த சாதத்தை குழந்தைக்கு ஊட்ட அது பசியில் வேகமாய் வாங்கிக் கொண்டு மெல்ல அவளை நோக்கி சிரித்தது.

    என் செல்லத்தை சனியன்னு சொல்ல இந்த சஹாவுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ... ச்சே... சரியான ராட்சசி... நீ சாப்பிடுடா செல்லம்... என் ஸ்ரீக்குட்டி யாரு செல்லம் சொல்லுங்க... கேட்டுக் கொண்டே ஊட்டினாள்.

    நானு பாத்தி செல்லம்... தலையை ஆட்டிக் கொண்டே குழந்தை சொல்ல சோகமாய் முகத்தை வைத்துக் கொண்ட சாதனா, பார்த்தியா... அம்மா உனக்குப் பிடிக்காதா... நீ அம்மா செல்லம் இல்லியா... என்றாள் உதட்டைப் பிதுக்கி.

    இல்ல... நானு அம்மா, பாத்தி செல்லம்... மம்மி நானா... டூ... குழந்தை கண்ணை உருட்டி தலையாட்டியபடி சொன்னது.

    ம்ம்... அப்படி சொல்லுடி... என் செல்லக் குட்டி... அவள் குழந்தையைக் கொஞ்சுவதையே பார்த்துக் கொண்டிருந்த சசிகலா ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்ற அவர் மனதில் கசப்பாய் சில நிகழ்வுகள் வந்து போக முகம் வாடி யோசனையுடன் அமர்ந்திருந்தார்.

    அறைக்குள்ளிருந்து அவர்கள் பேசுவது அனைத்தையும் காதில் வாங்கிக் கொண்டிருந்த சஹானாவின் முகம் கோபத்திலும் வெறுப்பிலும் சிவந்திருக்க கையிலிருந்த புத்தகத்தைத் தூக்கி எறிந்தவள் சோர்வுடன் கண்ணை மூடி படுத்துக் கொண்டாள்.

    கண்ணிலிருந்து சூடாய் இரு கண்ணீர்த் துளிகள் காதை நனைக்க காதுக்குள் அந்தக் குரல் கரகரப்பாய் ஒலித்தது.

    சீக்கிரம் வந்திடுவ தான சஹிம்மா...

    நீ சென்றபின்னும்

    மறையவில்லை...

    என்னுள்ளத்தில்

    நீ வந்த சுவடுகள்...

    3

    புது ஆர்டர் விஷயமாய் கம்பெனி மானேஜர் ஒருவரைக் காண வந்திருந்தான் நிதின்.

    சார்... இந்த ஆர்டர் தீபாவளிக்குள்ள முடிச்சு மும்பை அனுப்பனும்... அப்புறம் ஒரு மாசத்துக்கு போனஸ் வாங்கிட்டு ஊருக்குப் போற லேபர்ஸ் யாரும் ஒழுங்கா வேலைக்குத் திரும்ப மாட்டாங்க... அதுக்குள்ளே உங்களால முடிக்க முடியுமா... நிதினுடன் பேசும்போதே அலைபேசி சிணுங்க எடுத்து யாரிடமோ எரிந்து விழத் தொடங்கினார்.

    அது ஒரு பெரிய எக்ஸ்போர்ட் கம்பெனி. நிட்டிங், கட்டிங், காம்பாக்டிங், டையிங், பிளீச்சிங், ஸ்டிச்சிங் என நூல் துணியாகி கலராகி முழுமையாய் வெளியே வரும் வரை உள்ள அனைத்து பெரிய வேலைகளும் அவர்களே செய்து கொண்டு பனியனில் படங்களை அச்சிடும் சிறிய பிரிண்டிங்

    Enjoying the preview?
    Page 1 of 1