Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Layam Thedum Thaalangal
Layam Thedum Thaalangal
Layam Thedum Thaalangal
Ebook499 pages4 hours

Layam Thedum Thaalangal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

இரட்டையர்களை நாயகர்களாகக் கொண்ட கதை. வெற்றிவேல், சக்திவேல் வாழ்க்கையில் நடக்கும் அனுபவங்களை சொல்லும் கதை. இந்துஜா, நாயகியாய் நாயகனின் துயர் துடைத்தது எப்படி... குழந்தை பவிக்குட்டியின் ஏக்கம் நிறைவேறியதா..? என்பதை கதையில் வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580134407195
Layam Thedum Thaalangal

Read more from Latha Baiju

Related to Layam Thedum Thaalangal

Related ebooks

Reviews for Layam Thedum Thaalangal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Layam Thedum Thaalangal - Latha Baiju

    https://www.pustaka.co.in

    லயம் தேடும் தாளங்கள்

    Layam Thedum Thaalangal

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    https://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் – 2

    அத்தியாயம் – 3

    அத்தியாயம் – 4

    அத்தியாயம் – 5

    அத்தியாயம் – 6

    அத்தியாயம் – 7

    அத்தியாயம் – 8

    அத்தியாயம் – 9

    அத்தியாயம் – 10

    அத்தியாயம் – 11

    அத்தியாயம் – 12

    அத்தியாயம் – 13

    அத்தியாயம் – 14

    அத்தியாயம் – 15

    அத்தியாயம் – 16

    அத்தியாயம் – 17

    அத்தியாயம் – 18

    அத்தியாயம் – 19

    அத்தியாயம் – 20

    அத்தியாயம் – 21

    அத்தியாயம் – 22

    அத்தியாயம் – 23

    அத்தியாயம் – 24

    அத்தியாயம் – 25

    அத்தியாயம் – 26

    அத்தியாயம் – 27

    அத்தியாயம் – 28

    அத்தியாயம் – 29

    அத்தியாயம் – 30

    அத்தியாயம் – 31

    அத்தியாயம் – 32

    அத்தியாயம் – 33

    அத்தியாயம் – 34

    அத்தியாயம் – 35

    அத்தியாயம் – 36

    அத்தியாயம் – 1

    மத்திய சிறை, கோவை.

    சக்தி...

    உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்த சூரியனின் வெயில் நெற்றியில் வேர்வைத் துளிகளைப் பளபளக்க செய்ய வட்டமாய் தோண்டிய குழியில் கத்தரிச் செடியை வைத்து மண்ணிட்டு மூடிக் கொண்டிருந்த சக்திவேல் காவலரின் அழைப்பில் நிமிர்ந்தான்.

    உன்னைப் பார்க்க யாரோ வந்திருக்காங்களாம்... வார்டன் வர சொன்னார்...அவர் சொல்லவும் முகம் மலர்ந்தவன், இதோ போறேன் சார்... என்றுவிட்டு கை காலில் அப்பியிருந்த செம்மண்ணைக் கழுவுவதற்காய் தண்ணித் தொட்டியை நோக்கி நகர, ம்ம்... நல்ல பிள்ளை... விதியால இங்க கிடக்குது... யோசித்துக் கொண்டே நகர்ந்தார் அவர்.

    நல்ல உயரத்தில் திடகாத்திரமான உடம்போடு இருந்த சக்திவேலின் முகத்தில் நிரந்தரமாய் ஒரு புன்னகை நிலை கொண்டிருந்தாலும் அதன் பின்னில் ஏதோ சோகம் அப்பிக் கிடந்தது. சிரிக்கும்போது அழகாய் தெரிந்தான்.

    என்ன சக்தி, செடியெல்லாம் நட்டாச்சா... அருகில் கேட்ட முதிர்ந்த குரலில் திரும்பியவன், இன்னும் இல்லிங்க ஐயா, விசிட்டர் இருக்காங்கன்னு சொன்னாங்க அதான்... சொல்லிக் கொண்டே முகத்தை கழுவ, ஓ... வீட்ல இருந்தா... சரி, சரி சீக்கிரம் போ... என்ற பெரியசாமி சொல்லிக் கொண்டே மண்வெட்டியுடன் நகர்ந்தார்.

    கோவை மத்திய சிறை வளாகத்தில் சிறியளவிலான திறந்தவெளிச் சிறைச்சாலை அமைக்கப்படும் பணி நடந்து கொண்டிருந்தது. விவசாயத்திற்கு ஏற்ற நிலம் என்பதால் காய்கறிகளை சாகுபடி செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். சிறை விதிகளுக்கு கட்டுப்பட்டு நன்னடத்தையுடன் நடந்து கொள்ளும் தண்டனைக் கைதிகள் சிலரை அங்கு பணிபுரிய அதிகாரிகள் தேர்வு செய்திருந்தனர். இந்த திறந்தவெளிச் சிறைச்சாலையில் பணியில் ஈடுபடுத்தப்படும் கைதிகளின் தண்டனைக்காலம் சரிபாதியாகக் குறையுமென்பது கூடுதல் சிறப்பு. சக்திவேலும் அதில் தேர்வு செய்யப்பட்டிருந்தான்.

    வேகமாய் பார்வையாளர்கள் காத்திருக்கும் இடத்திற்கு வந்தவனின் பார்வை ஆவலுடன் நோக்க அங்கே அவனது நகலாய் நின்றவனைக் கண்டதும் புன்னகைத்து பின்னில் பார்வையால் துளாவியவன் கண்கள் ஏமாற்றமடைந்தது.

    வெற்றி, பவியை அழைச்சிட்டு வரலியா...

    ப்ச்... இல்ல, அடிக்கடி இங்கே அழைச்சிட்டு வர்றது நல்லதில்லன்னு தோணுச்சு... அவன் சொல்லவும் சக்தியின் முகம் வாடியது.

    ம்ம்... அவ முகம் கண்ணுக்குள்ளேயே நிக்குது... பார்க்கணும் போல இருக்கு... கூட்டிட்டு வருவேன்னு நினைச்சேன்... என்றவனின் குரல் தழுதழுக்க வெற்றி என்னும் வெற்றிவேலின் முகம் இறுக்கத்தைக் காட்டியது.

    எவ்ளோ பட்டாலும் உனக்கு புத்தியே வராது... இந்த சென்டிமென்ட்ஸ் எல்லாம் எப்பதான் விடப் போறியோ...

    விடுடா, இது என் சுபாவம்... பழக்கத்தை மாத்தலாம், சுபாவத்தை மாத்த முடியாது... சோகமாய் சொன்னவனின் மீது அழுத்தமாய் ஒரு பார்வையைப் பதித்தான் வெற்றி.

    நம்ம வீட்டை வாடகைக்கு கொடுத்துட்டு வேற ஏரியால வீடு வாடகைக்கு எடுத்துட்டுப் போயிடலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்...

    ம்ம்... வீடு பார்த்தாச்சா... என்றவன் காரணத்தைப் புரிந்து கொள்ள முடிந்ததால் ஏனென்று கேட்கவில்லை.

    ம்ம்... அம்மாவும் போன பிறகு அந்த வீட்டுல இருக்கவே பிடிக்கலை...

    ம்ம்... என்றவனின் குரலில் வருத்தம் தெரிந்தது.

    பவி...

    அவளைப் பார்த்துக்க ஒரு ஆளை ஏற்பாடு பண்ணணும்...

    சரி... வெற்றி, அவளை பத்திரமா... சக்தி முடிப்பதற்குள், அவ என் பொண்ணு, பார்த்துக்குவேன்... என்றான் வெற்றி.

    ம்ம்... உனக்கு ரொம்ப சிரமத்தைக் கொடுத்துட்டேன்...

    போதும்... நடந்த எதையும் பேசி பிரயோசனமில்லை... நான் வீடு மாறினபிறகு வந்து பார்க்கறேன்... வர்றேன்... சொன்னவன் முகத்தில் கடுகளவும் சிரிப்பில்லை. செல்பவனின் முதுகையே ஒரு நிமிடம் வெறித்தவன் தனது செல்லுக்குத் திரும்பினான்.

    வெற்றிவேலும், சக்திவேலும் ஒன்றாய் பிறந்த இரட்டையர்கள். உருவத்தில் ஒரே போல இருந்தாலும் இருவரின் குணமும் வேறு. சக்தி மிகவும் மென்மையானவன் என்றால் வெற்றி சற்று அழுத்தமானவன்.

    சக்தி சாப்ட்வேர் என்றால் வெற்றி ஹார்ட்வேர்... சக்திவேல் எப்போதும் புன்னகைக்கும் வள்ளல் என்றால் வெற்றிவேல் சிரிக்கவே கணக்கு பார்க்கும் கஞ்சன். ஒன்றாய் பிறந்து, உடன்பிறப்பாய் மட்டுமின்றி புரிதலான நட்போடு வளர்ந்த இருவரின் வாழ்விலும் விதி சதிராடியதில் இரு துருவங்களாகிப் போயினர்.

    இந்து...

    சூரியன் மேற்கில் தஞ்சம் புகுந்து கொண்டிருக்க அழகழகான பூச்செடிகளின் நடுவே பெரிய பூச்செண்டாய் கையில் கட்டருடன் நின்று கொண்டிருந்தாள் இந்துஜா. செடிகளில் பழுத்த இலைகளை வெட்டிக் கொண்டிருந்தவள் அன்னையின் குரலில் நிமிர்ந்தாள்.

    வர்றேன் மா...

    சொல்லிக் கொண்டே கையில் இருந்த கட்டரை வைத்துவிட்டு கி(ப)ட்ஸ் கார்டன் என்ற பலகையைத் தாங்கி இருந்த சின்ன கட்டிடத்துக்குள் நுழைந்தாள். அங்கே கண்ணில் கண்ணாடியுடன் மேசை மீது ஒரு லெட்ஜரை விரித்து வைத்துக் கொண்டிருந்தார் அவளது அன்னை அகிலாண்டேஸ்வரி. அவருக்கு முன்னில் இந்துவின் தங்கை சிந்துஜா கால்குலேட்டரில் எதையோ தட்டிக் கொண்டிருந்தாள்.

    என்னமா, எதுக்கு கூப்பிட்டிங்க...

    நியூ அட்மிஷன் பேமென்ட் ரெசிப்ட் எல்லாம் செக் பண்ணிட்டு இருந்தோம்... ஒரு பேமென்ட் இடிக்குது... நீ கொஞ்சம் பார்த்துடறியா...

    என்ன அமவுண்ட் இடிக்குது...

    அக்கா, ஒரு பத்தாயிரம் ரூபா ஷார்ட்டேஜ் வருது...

    பத்தாயிரம்... என்று யோசித்தவள், ம்மா, ஏதோ செக் கிளியரிங்க்கு வருது, பாலன்ஸ் பத்தாதுன்னு அப்பாகிட்ட பாங்குல போட சொல்லி கொடுத்திங்களே... அதுவோ...

    அது இதுல இருந்தா எடுத்தேன்... சொல்லிக் கொண்டே யோசித்த அன்னை சட்டென்று தலையில் தட்டிக் கொண்டு, அட ஆமா, அப்பா ஆபீஸ் கிளம்புற நேரத்துல நிக்க வைக்க வேண்டாம்னு இதுல இருந்து தான் கொடுத்தேன்... என்றார்.

    ம்ம்... அப்புறம் எப்படி ஷார்ட்டேஜ் வராம இருக்கும்... என்ற இந்துவிடம், அக்கா, உண்மைலயே நீ நியாபகம் வச்சுக்கிறதுல ஒரு இரண்டாம் புலிகேசி தான்... பாராட்டிய தங்கையை நோக்கி புன்னகைத்தவள், ஓ இரண்டாம் புலிகேசி ஞாபகம் வைக்கிறதுலயும் புலியோ... என்று கேட்க,

    யாருக்குத் தெரியும்... சும்மா அடிச்சு விட்டேன்... என்று சொல்லிக் கொண்டே எழுந்து ஓடி விட, சிரிப்புடன் மீண்டும் தனது செடிகளிடம் செல்லும் மகளையே வேதனையுடன் நோக்கிக் கொண்டிருந்தார் அகிலாண்டேஸ்வரி.

    ம்ம்... பட்டாம்பூச்சி போல சந்தோஷமா இருந்த பொண்ணு... இப்ப பூ, செடி மட்டுமே சந்தோஷம்னு அங்கயே கிடக்குதே... கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார். 

    நினைவோ ஒரு பறவை

    விரிக்கும் அதன் சிறகை...

    பறக்கும் அது கலக்கும்

    தன் உறவை...

    இயர் போன் வழியே ஜானகியின் குரல் காதில் வழிந்து கொண்டிருக்க உடன் பாடிக்கொண்டே செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் இந்துஜா.

    சாலையை ஒட்டியபடி இருந்த கேட்டுக்குள் அளவான வீடு, அதை ஒட்டியது போல ஒரு சின்ன கட்டிடத்தில் மழலையர் பள்ளி, அதோடு சேர்ந்தபடியே செடிகளின் நர்சரி. விதவிதமான வண்ணங்களில் பலவிதமாய் பூத்திருந்த பூக்களும் அவளோடு சேர்ந்து தலையாட்டிக் கொண்டிருந்தன.

    நாளை முதல் குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பும் சேர்ந்து கொள்ளும் என்பதால் செடிகளை அதிகமாய் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

    ரோஜாக்களில் பன்னீர் துளி...

    வழிகின்றதேன்... அது

    என்ன தேன்...

    ரோஜாவின் மீது அமர்ந்திருந்த தண்ணீர் துளிகள் சூரிய ஒளியில் பளபளக்க அதனிடம் கேட்டுக் கொண்டே பாடிக் கொண்டிருந்தவள் எதிர்புறம் இருந்த வீட்டின் முன்னே பெரிய லாரி வந்து நிற்கவும் நிமிர்ந்து கவனித்தாள்.

    அதில் முழுதும் வீட்டு சாதனங்கள் தெரிய, ஓ... வாடகைக்கு ஆள் வந்துட்டாங்க போலருக்கு... என நினைத்துக் கொண்டு மீண்டும் தனது பணியில் ஆழ்ந்தாள்.

    வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்த சிந்துஜா, என்னக்கா, முன்னாடி வீட்டுக்கு ஆளுங்க வந்துட்டாங்க போலருக்கு... கேட்டுக் கொண்டே தலை முடியை சீவிக் கொண்டிருக்க, ம்ம்... என்றதோடு முடித்துக் கொண்டு மீண்டும் செடியில் கவனமான அக்காவை முறைத்துக் கொண்டாள் தங்கை.

    ஹூக்கும்... இந்த செடி, பூவோட பேசற அளவுக்கு கூட நீ என்னோட பேசறதில்லை... ஏதாச்சும் கேட்டா பதில் சொல்லறியா... என்று சிலிர்த்துக் கொள்ள அமைதியாய், சிந்து, உனக்கு இப்ப என்ன தெரியணும்... என்றாள்.

    ஹூம்... கொரோனா குட்டி போடுமா... இல்ல அதைப் பிடிச்சு சட்டியில் போடுவாங்களான்னு தெரியணும்... கோபமாய் சொல்லியவள் கேட்டின் அருகே சென்று வேடிக்கை பார்க்கத் தொடங்க அவள் சொன்ன விதத்தைக் கண்டு புன்னகைத்த இந்துவும் அருகில் சென்றாள்.

    சிந்துமா, வா... நான் தலை பின்னி விடறேன்...

    ஒண்ணும் வேண்டாம்... நீ வளர்க்குற உன் புள்ள குட்டிகளையே கொஞ்சிட்டு இரு... நானே பின்னிக்கிறேன்...

    ரொம்பதான் சிலிர்த்துக்காத... வாடி... என்றவள் சீப்பை வாங்கிக் கொண்டு அழகாய் பின்னலிடத் தொடங்க சிந்து வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றாள்.

    வண்டி நிறைய சாமான் இருக்கு... ஆளுங்க யாரையும் காணோமே... அவள் கேட்கும்போதே ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவனைக் கண்டதும் அவள் முகம் மாறியது.

    அய்யே, இந்த முசுடனா...

    அவள் சொன்னதும் ஏறிட்டுப் பார்த்த இந்து, அவரை உனக்குத் தெரியுமா... என்றாள்.

    ஹூம், பழக்கம் இல்லை... ஆனா சரியான கஞ்சப் பிசுனாரி... ரொம்பத் திமிர் பிடிச்சவன்... ஒருமுறை வெள்ள நிவாரணத்துக்கு வேண்டி எங்களை டொனேஷன் கலக்ட் பண்ண சொன்னாங்கல்ல... நாங்க ஒருநாள் சிக்னல்ல வசூல் பண்ணிட்டு இருக்கும்போது இந்தாளு கார்ல இருந்தான்... இவன்கிட்ட டொனேஷன் கேட்டா ஒண்ணா கொடுக்கணும், இல்லேன்னா அமைதியாப் போயிருக்கணும்... இந்தாள் என்ன சொன்னான் தெரியுமா... நிறுத்தியவள்,

    ஸ்கூல்க்கு உங்களை படிக்க அனுப்பினாங்களா, இல்ல பிச்சை எடுக்க அனுப்பினாங்களா... போயி படிக்கற வேலையைப் பாருங்கன்னு... சொல்லிட்டுப் போயிட்டான்...

    தங்கை கடுப்புடன் சொல்ல அதைக் கேட்ட இந்துவின் மனமும், ச்சே... இதென்ன, முன்னப் பின்னத் தெரியாத பொண்ணுகிட்டே இப்படி சொல்லிருக்கார்... என மனதுக்குள் நினைத்தாலும், சரி விடு சிந்து... அவருக்கு அன்னைக்கு என்ன பிரச்சனையோ... என்று சமாதானம் சொன்னாள்.

    என்ன பெரிய பிரச்சனை... இவர் என்ன, பிரசவ வலில துடிச்சிட்டு இருக்கும் போதா பணம் கேட்டேன்... எதுவா இருந்தாலும் சொல்லற விதம்னு ஒண்ணு இருக்குல்ல... ஹூக்கும், உன்கிட்ட போயி சொல்லறேன் பாரு... நீ எல்லாத்தையும் பாசிடிவா தான் எடுத்துப்ப... என்னால முடியாது... என்று பின்னலை முன்னில் போட்டுக்கொண்டு வீட்டுக்கு நடந்தவள், எல்லாத்துலயும் பாசிடிவா யோசிக்கிற என் அக்கா வாழ்க்கையை ஏன் இப்படி நெகடிவா மாத்திட்ட கடவுளே... என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

    லாரியில் இருந்து கூலி ஆட்கள் பொருட்களை இறக்கத் தொடங்கி இருக்க, அந்த நெடியவன் முன்னில் நின்று அவர்களுக்கு உத்தரவிட்டு ஏவிக் கொண்டிருந்தான். அதற்கு மேலும் அங்கே நிற்காமல் தோட்டத்துக்கு தன் செல்லப் பிள்ளைகளை தேடி நடந்தாள் இந்து.

    இந்துஜா அளவான உயரத்தில் மிதமான அழகில் இயல்பாய் இருந்தாள். எப்போதும் சிரிக்காமலே இதழில் ஒட்டிக் கொண்டிருந்த புன்னகை முகத்தின் அழகைக் கூட்டியது. அழகான சின்ன நெற்றியில் ஒரு ஸ்டிக்கர் பொட்டு மட்டுமே அவளது அலங்காரம். காட்டன் சுரிதாரில் உயர்த்திக் கட்டிய கூந்தலுடன் இருந்தவள் அவளுக்குப் பிடித்தமான பவளமல்லி மரத்தடியில் வந்து சிறிதுநேரம் அமர்ந்தாள்.

    இடுப்பளவு வளர்ந்த பூச்செடிகள் அவளை நோக்கி தலையாட்டி வாவென்று ஆவலுடன் அழைப்பது போலத் தோன்ற எழுந்தவள் அதன் அருகில் சென்றாள். குட்டிக் குட்டியாய் பதியனிடப்பட்டிருந்த சில பூச்செடிகளில் இலைகள் தளிர் விட்டிருக்க அதை மென்மையாய் வருடிக் கொடுத்தவள் கேட் திறக்கப்படும் ஓசை கேட்டு, அப்பா வந்துட்டார் போலருக்கே... என வாசலுக்கு வந்தாள்.

    என்னடா இந்து, உன் பூச்செடிகளுக்கு கதை சொல்லி முடிச்சுட்டியா... கேட்டுக் கொண்டே பைக்கை நிறுத்தி இறங்கினார் பரமசிவம்.

    அவர் கையில் இருந்த காய்கறிப்பையை வாங்கிக் கொண்டவள், இன்னைக்கு நேரமா வந்துட்டிங்கப்பா... எனக் கேட்க, ஆமாடா, வேலை முடிஞ்சது... கிளம்பிட்டேன்... அம்மா இன்னும் வரலியா... என்றார்.

    இல்லப்பா, அத்தை வீட்டுல இருந்து கிளம்பிட்டேன்னு சொன்னாங்க... நான் காபி எடுத்திட்டு வறேன்... என்றவள் வீட்டுக்குள் நுழைய, ம்ம் மெதுவா போதும் மா... குளிச்சிட்டு வந்திடறேன்... என்றார் பரமசிவம்.

    அப்பா, நான் சொன்னதை வாங்கிட்டு வந்திங்களா... கேட்ட இளைய மகளிடம், வாங்கிருக்கேன் டா... பைல இருக்கு... எடுத்துக்க... என்று கூற, ம்ம்... நீங்க வெறும் அப்பா இல்ல... என் செல்லப்பா... என்று அவர் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி கொஞ்சிவிட்டு அடுக்களைக்கு ஓடினாள் சிந்து.

    பரமசிவம் அரசுப் பணியில் இருந்தார். அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி மழலையர் பள்ளியைப் பார்த்துக் கொள்ள மூத்த மகள் இந்துஜா உதவியாக இருந்தாள். செடிகளும் பூக்களும் அவளுக்கு மிகவும் விருப்பம் என்பதால் நர்சரியையும் பார்த்துக் கொண்டாள். வித்தியாசமான பலதரப்பட்ட பூச்செடிகள் அவளது நர்சரியில் இருந்ததால் அந்த வியாபாரமும் குழப்பமில்லாமல் சென்றது. இளையவள் சிந்துஜா இப்போதுதான் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

    அழகான அந்தக் குடும்பத்தில் அசந்தர்ப்பமாய் விதி சில விளையாட்டுகளை நடத்திச் செல்ல குடும்பத்தின் குதூகலமும், உற்சாகமும் சற்றுக் குறைந்திருந்தாலும் நேசம் மட்டும் சற்றும் குறையவில்லை.

    அடுக்களையில் தந்தை கொண்டு வந்த பையை உருட்டிக் கொண்டிருந்தாள் சிந்துஜா.

    என்ன சிந்து தேடறே...

    அதுவா, அது வந்து... என்று இழுத்தவள், பால்கோவா பாக்கெட்டை கையிலெடுத்து இதோ இதைத்தான்... என்று காட்ட, ஓ, அப்பாக்கு காபி வைக்கறேன்... உனக்கும் வேணுமா... என்றாள்.

    ம்ஹூம், எனக்கு வேண்டாம்... என்றவள் பாக்கெட்டைப் பிரித்து ஒரு துண்டை அக்காவின் வாயருகே கொண்டு செல்ல, எனக்கு வேண்டாம்... என்றாள் அவள்.

    ஓகே, எங்கே வேணும்னு சொல்லிருவியோன்னு நினைச்சேன்... ஈஈ... என்று பல்லைக்காட்டிவிட்டு செல்ல, சரியான வாலு... என்று சிரித்துக் கொண்டாள் இந்து. காபியை தந்தைக்கு கொண்டு கொடுத்துவிட்டு இரவு சமையலுக்கு வேண்டிய வேலைகளை கவனித்தாள். சிறிது நேரத்தில் கேட் திறக்கும் சத்தம் கேட்க வண்டியின் சத்தத்தைத் தொடர்ந்து அன்னை அகிலாண்டேஸ்வரியின் குரல் கேட்டது.

    எதுக்கு சிந்து இப்ப வண்டியை எடுக்கற...

    அம்மா, ஒரு ரவுண்டு போயிட்டு வந்திடறேன், ப்ளீஸ்... என்றவள் அன்னையின் ஆக்டிவாவை எடுத்துக் கொண்டு செல்ல, இந்நேரத்துல ரவுண்டு போகலேன்னா என்ன, சொன்னா கேக்கறதே இல்ல... புலம்பிக் கொண்டே வந்த மனைவியை எதிர்கொண்டார் பரமசிவம்.

    என்ன அகிலா, போன காரியம் என்னாச்சு...

    ம்ம், எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதுங்க... அண்ணன் வரலியான்னு கீதா ரொம்ப வருத்தப்பட்டா...

    இது சும்மா ஜாதகப் பொருத்தம் பார்க்கறது தானே... மத்த விஷேஷதுக்கெல்லாம் போகத்தானே போறோம்...

    ம்ம்... நல்ல சம்மந்தம், பெரிய இடம்... ஜாதகமும் அருமையாப் பொருந்தி இருக்கு... கூடிப் பேசிட்டு சீக்கிரமே நிச்சயத்துக்கு நாள் குறிச்சிடுவாங்க போலருக்கு...

    ம்ம்... என் தங்கை மக வாழ்க்கையாச்சும் நல்லபடியா அமையட்டும்... பெருமூச்சுடன் கணவன் கூற மௌனமாய் இருந்தார் அகிலாண்டேஸ்வரி.

    அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே வந்த இந்து எதையும் கண்டு கொள்ளாமல், அம்மா, தோசைக்கு ரெண்டு சட்னி அரைச்சு வச்சுட்டேன்... ஒவ்வொருத்தரா சாப்பிட வந்தா சூடா தோசை வார்த்துக் கொடுத்துடறேன்... என்றாள்.

    ம்ம்... எங்க வயித்துக்கு சூடா கொடுக்கறேன்னு சொல்லற... உன் வாழ்க்கை இப்படி ஆறிப் போயிடுச்சே... இந்துமா... பரமசிவம் மனதுக்குள் உருகினாலும் வெளியே எதுவும் சொல்லாமல் தலையாட்டிவிட்டு, இதோ நான் வந்துட்டேன் இந்துமா... செம பசி... உன் தோசைனா ரெண்டு கூட சாப்பிடலாம்... சொல்லிக் கொண்டே மேசைக்கு சென்றார்.

    தந்தை, தங்கை, அன்னை மூவருக்கும் சூடாய் தோசை வார்த்துக் கொடுத்தாள்.

    உனக்கு வேணும்னா நான் சூடா வார்த்துத் தரவா இந்து... கேட்ட அன்னையிடம், இல்லம்மா நானே ஊத்திக்கிறேன்... என்றுவிட்டு தனக்காய் மூன்று தோசைகளை தட்டில் சுட்டுப் போட்டுக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.

    ஏனோ தொண்டையில் அடைப்பது போலத் தோன்றியது. பிடிக்காவிட்டாலும் தந்தை தனை கவனிப்பதை உணர்ந்தவள் வலுக்கட்டாயமாய் வாய்க்குள் போட்டு மென்று இறக்கினாள்.

    ஏய் சிந்து.. இந்த பாத்திரமெல்லாம் கழுவி வைக்கலாம்ல... ஒரு வேலை செய்யறதில்லை... அன்னை குரல் கொடுக்க, போம்மா, எனக்குத் தூக்க தூக்கமா வருது... சொன்ன மகளிடம், ஹூம் உன்னை நினைச்சா எனக்கும்தான் துக்க துக்கமா வருது... இப்படி எந்த வேலையும் பழகாம இருந்தா நாளைக்கு போற வீட்டுல புள்ளைய வளர்த்து வச்சிருக்கா பாருன்னு என்னை தான் சொல்லுவாங்க...

    அதெல்லாம் யூ டோன்ட் வொர்ரி மம்மி... சமையலை யூ டியூப் பார்த்து மேனேஜ் பண்ணிப்பேன்... மத்த வேலை எல்லாம் என் மாமியாரை செய்ய சொல்லிடுவேன்... என்று பதில் சொன்னவளின் தலையில் கொட்டியவர்,

    இந்த எகத்தாளத்துக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல... என்று சொல்ல, விடுங்கம்மா, நான் பார்த்துக்கறேன்... என்று இந்து அடுக்களையில் இருந்து குரல் கொடுத்தாள்.

    ம்ம்... நீ இப்படி எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யறதால தான் அவளுக்கு ரொம்ப குளிர் விட்டுப் போயிருச்சு... என்றபடி வாசலில் இருந்த கணவரிடம் வந்தார்.

    என்னங்க, முன்னாடி வீட்டுக்கு வாடகைக்கு வந்துட்டாங்க போலருக்கு...

    ம்ம்... நல்ல ஆளுங்களா இருந்தாப் பரவாயில்ல... என்றபடி அவரும் எதிர்வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

    பொருட்களை இறக்கி முடித்ததும் பணம் கொடுப்பதற்காய் வெளியே வந்த வெற்றிவேல் இவர்களைக் கண்டதும் சிரிப்பதா வேண்டாமா என்று நோக்க, ஹலோ சார்... நீங்கதான் இங்கே குடி வந்திருக்கிங்களா... என்றார் பரமசிவம்.

    ம்ம்... ஆமாம்... என்றவன், அப்புறம் மீட் பண்ணுவோம் சார்... என்றபடி உள்ளே சென்றுவிட்டான்.

    என்னங்க, ஒரு மரியாதைக்கு நின்னு ரெண்டு வார்த்தை பேசாம அந்தப் புள்ள பொசுக்குனு இப்படி சொல்லிட்டுப் போகுது... என்றார் அகிலா அங்கலாப்புடன்.

    இப்ப நிறைய வேலை இருக்கும்ல... அதான் அப்புறம் பேசலாம்னு போயிருப்பார்... என்றார் பரமசிவம்.

    ஹூம்... என்னமோ, சிரிக்கவே கணக்கு பார்க்குற போல... இந்தக் காலத்துப் பசங்களுக்கு மரியாதை தெரிய மாட்டேங்குது... என்றபடி அவர் உள்ளே சென்றுவிட்டார்.

    உள்ளே ஒரு சோபாவில் உறங்கிக் கொண்டிருந்த பவிக்குட்டியின் சிணுங்கலைக் கேட்டுதான் வெற்றிவேல் பேசாமல் உள்ளே சென்று விட்டிருந்தான்.

    அவன் செல்லும்போது எழுந்து அமர்ந்து கண்ணைத் தேய்த்துக் கொண்டு புதிய இடத்தை மிரட்சியாய் பார்த்தபடி அழத் தயாராகிக் கொண்டிருந்தாள் குழந்தை.

    பவிக்குட்டி எழுந்திருச்சுட்டியா... பசிக்குதா, சாப்பிடலாமா... கேட்டுக் கொண்டே அவளைத் தூக்கிக் கொண்டவன் வாங்கி வைத்திருந்த பார்சலை எடுத்துக் கொண்டு உணவு மேசைக்கு வந்து அமர்ந்தான்.

    அவளுக்கு இட்லியை ஊட்டிவிட்டு அவனும் பேருக்கு சாப்பிட்டுவிட்டு, உனக்கு இந்த புதுவீடு பிடிச்சிருக்கா... என்று கேட்க, ம்ஹூம்... பிதிக்கல... மூன்று வயதுப் பவித்ரா பிடிக்கவில்லை என்று இடவலமாய் தலையாட்டினாள்.

    ம்ம், இந்த சாமான் எல்லாம் ஒதுக்கி வச்சிட்டா அழகா இருக்கும்... நீ சாப்பிட்டு சமத்தா சோபால படுத்துப்பியாம்... நான் கட்டில் மேல பெட் எல்லாம் போட்டு ரெடி பண்ணுவேனாம்... என்றபடி அவளை சோபாவில் அமர்த்த அவளது கண்கள் எதையோ துளாவின.

    உன்னோட ஜோக்குட்டியைத் தேடறியா... இதோ இங்கிருக்கு... என்றபடி பெரிய கரடி பொம்மையை எடுத்துக் கொடுக்க அதை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள் குழந்தை.

    ஐந்தே நிமிடத்தில் தனித்தனியே இருந்த கட்டிலையும் படுக்கையையும் ஒன்றாக்கி பெட்ஷீட்டை விரித்து தயார் ஆக்கிய வெற்றி பவியைத் தூக்கி கட்டிலில் அமர்த்தினான்.

    பவிக்குட்டி கட்டில்ல உக்கார்ந்து விளையாடிட்டு இரு... அப்பா சீக்கிரம் குளிச்சிட்டு வந்திடறேன்... என்றவன் டவலை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

    சுற்றுமுற்றும் பார்த்த பவித்ரா கட்டிலில் இருந்து மெல்ல இறங்கி அந்தப் பெரிய சைஸ் கண்ணாடி ஜன்னலின் முன் வந்து நின்றாள். கீழே ஒரு பெட்ரூம் ஹால், கிச்சனும் மேலே ஒரு பெட்ரூமும் ஹாலுமாய் இருந்தது அந்த வீடு. கர்ட்டன் இனியும் மாட்டாததால் தெரு விளக்கின் வெளிச்சத்தில் முன்னிலிருந்த வீடும் தோட்டமும் நன்றாகத் தெரிந்தது. அங்கே தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த இந்துஜாவைக் கண்டதும் உன்னிப்புடன் கண்கள் விரிய ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

    தொலைதூர வானை

    வெறித்தபடி எதற்கிந்த

    வாழ்க்கை என்று

    விடை காணத் துடிக்கும்

    மனதின் வெறுமை

    ஏனோ ஆழ்த்தி விடுகிறது

    எனை இந்தத் தனிமையில்...

    அத்தியாயம் – 2

    சுள்ளென்று முகத்தில் விழுந்த சூரியக் கதிரில் கண்ணைச் சுருக்கியபடி திறந்தான் வெற்றி. சுவரில் இருந்த டிக்டாக் மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருப்பதை சொல்ல அவசரமாய் எழுந்தவன் பவித்ராவைத் தேட அவள் ஜன்னலருகே நின்று வெளியே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் ஆசுவாசமானான்.

    பவிக்குட்டி எழுந்திருச்சுட்டியா...

    ம்ம்... என்று பதில் கொடுத்தவள் பார்வையை மட்டும் அங்கிருந்து விலக்கவில்லை.

    வா, பிரஷ் பண்ணிட்டு பால் குடிக்கலாம்... என்றவன் அவளைத் தூக்கிக் கொண்டு குளியலறைக்குள் செல்ல சமத்தாய் பல்லைக் காட்டினாள் குழந்தை. அவளது காலைத் தேவைகளை முடித்து அவனும் குளித்து டீஷர்ட் ஷார்ட்ஸ் அணிந்து வந்தான்.

    பவிக்குட்டி அப்போதும் ஜன்னல் அருகிலேயே கையில் ஜோக்குட்டியுடன் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டவன் பால் எடுத்து வருவதற்காய் கீழே சென்றான்.

    முன்தினம் வாங்கி பிரிட்ஜில் வைத்திருந்த பாக்கெட்டை எடுத்து பாலைக் காய்ச்சி சிறிது சர்க்கரை போட்டு கலக்கிக் கொண்டு கொண்டு மாடிக்கு வர அப்போதும் அவள் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருக்க யோசனையுடன் அருகில் சென்றான்.

    பவி, என்ன ரொம்ப நேரமா பார்த்திட்டு இருக்க...

    அவன் கேட்கவும் திரும்பிய குழந்தை, ப்பா... என்று ஜன்னலைக் கை காட்ட அவனும் சென்று நோக்கினான்.

    அங்கே குட்டிச்சுட்டீஸ் ஷூட்டிங் நடத்த வந்தது போல் இரண்டு மூன்று வயதிலான குழந்தைகள் பட்டாம்பூச்சி போல அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க அவர்களை அடக்கி நிறுத்த படாதபாடு பட்டுக் கொண்டிருந்தனர் அவர்களின் அம்மாக்கள்.

    அவர்களுக்கு நடுவே மத்திம வயதில் ஒரு பெண்மணி நிற்க அருகே இளம்பெண் ஒருத்தி புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள். சில குழந்தைகள் அழுது கொண்டிருக்க அவர்களுக்கு மிட்டாய் கொடுத்தும் விளையாட்டு சாமான்களைக் காட்டியும் வசப்படுத்திக் கொண்டிருந்தாள் சுரிதார் அணிந்த பெண்ணொருத்தி. அது ஒரு டேகேர் சென்டர் என்பதை முன்னில் இருந்த பெயர்ப்பலகையும் உறுதி செய்ய திரும்பினான்.

    குழந்தைகளைக் கண்டு தான் பவி அங்கேயே நிற்கிறாள் என நினைத்துக் கொண்ட வெற்றி, என்ன பவி, உனக்கும் அங்கே போகணுமா... என்றான்.

    ம்ம்... வேகமாய் தலையாட்டியவளின் கண்ணில் மிகுந்த ஆவல் தெரிய, சரி, அப்புறம் போகலாம்... என்றவன் அழைப்பு மணி ஓசை கேட்டதும் கீழே சென்றான்.

    கதவைத் திறக்க அவனது ஆபீஸ் ஸ்டாப் வேணு கோபால் நின்று கொண்டிருந்தான்.

    சாரி, சார்... கொஞ்சம் லேட்டாகிடுச்சு... சொல்லிக் கொண்டே கையிலிருந்த டிபன் பார்சலையும், பைலையும் அங்கிருந்த மேசை மீது வைத்தான்.

    ம்ம்... இந்த திங்க்ஸ் எல்லாம் செட் பண்ண ஆளைக் கேட்டிருந்தேனே...

    கொஞ்ச நேரத்துல வந்திருவாங்க சார்...

    ஓகே... சமையல் செய்ய, வீட்டைப் பார்த்துக்க ஆள் கிடைச்சாங்களா...

    வீட்டு வேலைக்கு நம்ம வாட்ச்மேன் சம்சாரம் வரேன்னு சொல்லுச்சு... சமையலுக்கு தான் ஆளே கிடைக்கலை... ரெண்டு நாள்ல சரி பண்ணிடலாம் சார்... என்ற கோபால் வேலைக்கு சேர்ந்து இரண்டு மாதமே ஆகியிருந்தது.

    பாப்பா எங்க சார்... பசியோட இருக்கப் போகுது... சொல்லிக் கொண்டே அடுக்களைக்கு சென்று வேண்டிய பாத்திரங்களை எடுத்து வந்து மேசை மீது வைத்தான்.

    வெற்றி பவியை அழைத்து வர இருவரும் சாப்பிட்டனர்.

    இங்கே கொஞ்சம் செட் ஆகற வரைக்கும் ஆபீஸ் வொர்க் எல்லாம் மானேஜரைப் பார்த்துக்க சொல்லிருக்கேன்... ஏதாவது முக்கியமான பைல்ஸ், செக் சைன் வாங்க வேண்டி இருந்துச்சுன்னா வீட்டுக்கு கொண்டு வந்திடு...

    ஓகே சார்... என்றவன், வீட்டுக்கு முன்னாடியே டேகேர் ஸ்கூல் இருக்கும் போலருக்கே சார்... என்றான்.

    ஆமாம், அதுக்கென்ன...

    பாப்பாவைப் பார்த்துக்க ஆள் வேணுமே... அதான் அங்கே விடலாமேன்னு... என்றவனை அழுத்தமாய் ஒரு பார்வை பார்த்தவன், ம்ம்... நான் பார்த்துக்குவேன்... என்றான்.

    தான் சொன்னது அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதை வெற்றியின் முகத்திலிருந்து புரிந்து கொண்ட கோபால்,  அப்ப நான் கிளம்பட்டுமா சார்... லஞ்ச் வாங்கிட்டு வரணுமா... என்று கேட்க, வேண்டாம் நான் ஆர்டர் பண்ணிக்கறேன்... நீ ஆபீஸ்ல இரு... என்றான் வெற்றி.

    சரி சார்... என்ற கோபால் கிளம்பிச் செல்ல பவியைத் தேடினான் வெற்றி. அவள் மீண்டும் மாடியில் ஜன்னல் அருகே நிற்பதைக் கண்டவன், கோபால் சொன்ன போல அந்த கிட்ஸ் ஸ்கூல்ல பவியை சேர்த்துடலாமா... அங்கே நின்னு குழந்தைகளைப் பார்த்துட்டே இருக்காளே... என யோசித்தான்.

    வெற்றிவேல் ஒரு யார்ன் கமிஷன் ஏஜன்சி நடத்திக் கொண்டிருந்தான். கமிஷனில் கறாராய் இருந்தாலும் அவன் ஆர்டர் கொடுக்கும் மில்லின் நூல் தரமாக இருந்ததால் அவனுக்கென்று நிரந்தர வாடிக்கையாளர்கள் இருந்தனர். மார்க்கெட்டிங், பேமன்ட் பாலோ செய்வது மட்டும் அவன் பார்த்துக் கொள்ள மற்ற அலுவல்களை கவனித்துக் கொள்ள ஒரு மனேஜரும் நான்கு பணியாளர்களும் இருந்தனர். வெற்றியின் வேலை அதிகமும் அலைபேசியிலேயே முடிந்துவிடும் என்பதால் அலுவலகத்தில் தினமும் சிறிதுநேரம் இருந்துவிட்டு கிளம்பிவிடுவான்.

    வெற்றிவேல் மேசை மீதிருந்த பைலைப் பார்த்துக் கொண்டிருக்க கோபால் ஏற்பாடு பண்ணியிருந்த ஆட்கள் பொருட்களை ஒழுங்குபடுத்த வந்து விட்டனர்.

    அவர்களோடு நின்று எதை எங்கு வைக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருக்க வாசலில் ஒரு முதிர்ந்த பெண்மணியின் குரல் கேட்டு எட்டிப் பார்த்தான்.

    என்ன வேணும்...

    தம்பி, இங்க புதுசா வந்திருக்கிங்கன்னு கேள்விப்பட்டேன்... சமையல் வேலை, வீட்டு வேலைக்கு ஆள் வேணுமான்னு கேக்கலாம்னு வந்தேன்... சொன்ன பெண்மணிக்கு வயது அறுபது இருக்கலாம்.

    யோசித்தவன், நல்லா சமைப்பீங்களா... முன்னாடி எங்க வேலை செய்துட்டு இருந்திங்க... விசாரித்தான்.

    இங்க பக்கத்துல தான் என் வீடு... வீட்டுல மெஸ் நடத்திட்டு இருந்தேன்... வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லாம நடத்த முடியாமப் போயிருச்சு... ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சு... இப்ப அவரும் போயி சேர்ந்துட்டார்... அதான் எங்காச்சும் வேலை பார்த்து பொழைச்சுக்கலாம்னு இருந்தேன்... சொன்னவர் கண்களில் சோகம் தெரிந்தது.

    சரி, ரெண்டு நாள் கழிச்சு வாங்க... சொல்லறேன்... வெற்றி சொல்லவும், நன்றி தம்பி... என்று வணங்கிவிட்டு சென்றார்.

    அவனது பார்வை எதிர்வீட்டுக்கு செல்ல குழந்தைகளின் சத்தம் பல விதமாய் கேட்டது. சில குழந்தைகள் முன்னில் விளையாடிக் கொண்டிருக்க சில உள்ளே அழும் சத்தமும் கேட்டது. ஒரு பெண்மணி அதட்டிக் கொண்டிருந்தார்.

    பூட்டி இருந்த கேட்டை ஒரு பையன் உலுக்கிக் கொண்டு, கேத்த தித... அம்மாத்த போணும்... என்று அழுது கொண்டிருக்க அவனிடம் புன்னகை முகமாய் ஒரு பெண் மண்டியிட்டு அமர்ந்து சமரசம் பேசிக் கொண்டிருந்தாள்.

    வருண் சமத்துப் பையன் தான... நல்ல பிள்ளையா விளையாடிட்டு இருந்தா அம்மா சீக்கிரம் வந்து வீட்டுக்கு கூட்டிட்டுப் போவாங்க... அம்மா வரும்போது வருணுக்கு என்ன வாங்கிட்டு வருவாங்க தெரியுமா...

    எனக்கு ஒண்ணும் வேணாம் போ... அவன் சிலிர்த்துக் கொள்ள, அச்சோ உனக்கு கிண்டர்ஜாய் பிடிக்காதா... அம்மாக்கு போன் பண்ணி வாங்க வேண்டாம்னு சொல்லிடட்டுமா... அவள் கேட்கவும் யோசித்தான் வருண்.

    நிஜம்மா அம்மா கிந்தர்ஜாய் வாங்கி வதுவாளா...

    ஆமாடா கண்ணா... அதும் ஒண்ணுல்ல, ரெண்டு... சிரித்த முகமாய் சொன்னவள் அவன் தலையை செல்லமாய் கலைக்க, அவன் அழுகையை கிண்டர்ஜாய் லஞ்சத்துக்கு தொலைத்துவிட்டு விளையாடச்சென்றான்.

    அவர்கள் பேசியதும் அப்பெண்ணின் முகமும் சரியாகத் தெரியாவிட்டாலும் அவள் எதோ சமரசம் பேசுகிறாள் என்பது மட்டும் பக்கவாட்டு தோற்றத்தில் புரிந்தது. வேலைகளின் அணிவகுப்பு நினைவில் வர உள்ளே சென்றான்.

    வருணிடம் சமாதானம் பேசி நிமிர்ந்த இந்து எதேச்சையாய் எதிர்வீட்டைப் பார்க்க அங்கே தட்டலும் முட்டலுமாய் ஒரே சத்தமாய் இருந்தது.

    அக்கா, எனக்கு பாத்தூம் போணும்... ஒரு குட்டிப் பெண் அவளிடம் சொல்ல, செல்விக்கா, சங்கவியை பாத்ரூம் கூட்டிப் போங்க... என்று குரல் கொடுத்தாள்.

    அந்த செல்வி, ஐயய்ய, ஒரு நிமிஷம் நிக்க விடறாங்களா, ஒருத்தர் மாத்தி ஒருத்தர் பாத்ரூம் போயிட்டே இருக்க வேண்டியது... புலம்பிக் கொண்டே செல்வி வரவும்,

    அப்படி சொல்லாதிங்க செல்விக்கா, அவங்க அப்பா, அம்மா நாம நல்லாப் பார்த்துக்குவோம்னு நம்பிதானே விட்டுட்டுப் போறாங்க... குழந்தைங்கன்னா இப்படிதானே இருப்பாங்க... அவள் சொல்லவும்,

    ஹூக்கும், இந்தப் புள்ளைக்கு என்னவோ பெரிய அன்னை தெரசான்னு மனசுக்குள்ள நினைப்பு... யாரையும் ஏதும் சொல்ல விடாது... மனதுக்குள் நினைத்தாலும் வெளியே சொல்லாமல் சங்கவியை அழைத்துச் சென்றார்.

    குழந்தைகளை சமாதானப்படுத்தியும், சாப்பிட வைத்தும், கதை, ரைம்ஸ் சொல்லியும்

    Enjoying the preview?
    Page 1 of 1