Kaadhalenbathu Yaathenil
By Latha Baiju
5/5
()
About this ebook
இப்போதெல்லாம் காதலும், கல்யாணமும், விவாகரத்தும் மிகவும் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. உண்மையான காதல் என்பது நம்பிக்கையே... நம்பிக்கை பொய்த்துப் போகும்போது காதலும் பொய்த்து விடுகிறது... குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்காமல் இருவரும் பிரிய முடிவு செய்து விடுகிறார்கள்... அப்படிப்பட்ட ஒரு காதலையும் பிரிவையும் சொல்லும் கதையே காதலென்பது யாதெனில்...
Read more from Latha Baiju
Mazhaiyodu Uravadi Rating: 4 out of 5 stars4/5Vizhigalukku Vilangidu Rating: 3 out of 5 stars3/5Nizhal Thedum Nijangal Rating: 0 out of 5 stars0 ratingsBrahmanin Panithuli Rating: 5 out of 5 stars5/5Avalum Naanum Rating: 5 out of 5 stars5/5Kannanin Seethai Rating: 3 out of 5 stars3/5Nesa Veli Rating: 4 out of 5 stars4/5Mun Anthi Saral Nee... Rating: 5 out of 5 stars5/5Ithayame Ithayame Rating: 4 out of 5 stars4/5Aaruyire... En Oruyire... Rating: 5 out of 5 stars5/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Manam Kooduthillaiye Rating: 5 out of 5 stars5/5Layam Thedum Thaalangal Rating: 5 out of 5 stars5/5Vanam Vasapadum Thooram Rating: 0 out of 5 stars0 ratingsNeeyenge Ninaivugalange Rating: 2 out of 5 stars2/5Thirukkural Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5Vaasal Vantha Vanaville Rating: 5 out of 5 stars5/5Pazhamozhi Kathaigal Rating: 5 out of 5 stars5/5Nishaptha Mozhigal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Ratchagan Rating: 0 out of 5 stars0 ratingsMaiyal Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Aboorva Raagangal Rating: 4 out of 5 stars4/5Thedamal Ponal Kaanamal Poven Rating: 0 out of 5 stars0 ratingsIru Vennila... Un Vaanila... Rating: 0 out of 5 stars0 ratingsVidiyalil Oru Vennila Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thotta Rating: 0 out of 5 stars0 ratingsImaipeeli Neeyadi Rating: 4 out of 5 stars4/5Appavin Dairy Rating: 5 out of 5 stars5/5
Related to Kaadhalenbathu Yaathenil
Related ebooks
Unathuravil Naan Kalanthean... Rating: 5 out of 5 stars5/5Kaadhale...! Kaadhale...!! Rating: 0 out of 5 stars0 ratingsAzhagai Manathai Parithuvittai... Rating: 4 out of 5 stars4/5Unnai Kandu Uyirthean Rating: 4 out of 5 stars4/5Kaigal Korthu... Rating: 4 out of 5 stars4/5Veesum Thendraley Veesu Rating: 5 out of 5 stars5/5Uyir Kaadhalil Or Kavithai! Rating: 4 out of 5 stars4/5Thiruttu Payale Rating: 0 out of 5 stars0 ratingsMannikka Mattaya? Rating: 4 out of 5 stars4/5Yamunai Aatriley… Era Kaatriley… Rating: 4 out of 5 stars4/5Enna Solla Pogirai...? Rating: 5 out of 5 stars5/5Mun Anthi Saral Nee... Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogiraai? Rating: 5 out of 5 stars5/5Uyir Sumantha Urave Rating: 0 out of 5 stars0 ratingsKannanin Seethai Rating: 3 out of 5 stars3/5Kaadhal Raasi..! Rating: 0 out of 5 stars0 ratingsMarakka Manam Kooduthillaiye Rating: 5 out of 5 stars5/5Aboorva Raagangal Rating: 4 out of 5 stars4/5Hello... Mister Yethirkatchi! Rating: 5 out of 5 stars5/5Ilakkanam Maarumo Rating: 4 out of 5 stars4/5Unakkenave... Ulaginile... Piranthavale... Rating: 3 out of 5 stars3/5Moongil Kaadugale..! Rating: 4 out of 5 stars4/5Pakkam Vara Thudithean... Rating: 4 out of 5 stars4/5Maiyal Thelintha Nilavu Rating: 5 out of 5 stars5/5Unnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Vaasal Vantha Vanaville Rating: 5 out of 5 stars5/5Sonthamadi Nee Enakku! Rating: 4 out of 5 stars4/5Nakshatra Rating: 0 out of 5 stars0 ratingsUrave.. Unai Thedi.. Rating: 5 out of 5 stars5/5Nenjodu Kalanthidu Uravalae..! Rating: 4 out of 5 stars4/5
Reviews for Kaadhalenbathu Yaathenil
2 ratings0 reviews
Book preview
Kaadhalenbathu Yaathenil - Latha Baiju
http://www.pustaka.co.in
காதலென்பது யாதெனில்
Kaadhalenbathu Yaathenil
Author :
லதா பைஜூ
Latha Baiju
For more books
https://www.pustaka.co.in/home/author/latha-baiju
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
1
புரியாத காதல்
பிரிதலில் முடிந்துவிடும்…
புரிந்தாலோ மீண்டும்
அதுவே துளிர்த்துவிடும்…
சென்னை விமான நிலையம் மதிய நேர சூரிய வெளிச்சத்தில் குளித்துக் கிடக்க, ஒலிபெருக்கியில் விமானப் பெண்ணின் அறிவிப்பைத் தொடர்ந்து ரன்வேயில் தகதகத்து இறங்கத் தொடங்கியது அந்த அலுமினியப் பறவை. அதன் வயிற்றிலிருந்து உதயமான வெல்வெட் படிக்கட்டில் வரிசையாய் உதிரத் தொடங்கின மனித முகங்கள். அவசரமும், யோசனையும், கலகலப்பும், குழப்பமும், மலர்ச்சியும் தாங்கிய பல வண்ண முகங்கள்.
விழிகளில் வழிந்த கசப்புடன் இறுக்கமான முகத்துடன் வெளியே வந்தான் பிரதீப். வாட்டசாட்டமாய் அழகாய் இருந்தாலும், கண்ணில் குடிகொண்டிருந்த கோபம் அவனது அழகைக் குறைத்துக் காட்டியது.
அவனைத் தொடர்ந்து கலவையான உணர்ச்சிகளை முகத்தில் தாங்கி சிரிக்க மறந்த பொம்மையாய் பின்னில் வந்தாள் அவன் காதல் மனைவி சுதர்ஷா. காற்றில் அலைபாயும் கூந்தலை ஒதுக்கிக் கொண்டே கணவனைத் தொடர்ந்தவளின் முகத்தில் குழப்பமும், கோபமும் மாறிமாறி வந்து கொண்டிருந்தன.
இயற்கை அழகோடு படிப்பின் கர்வமும், அறிவும் சேர்ந்து தோற்றத்தில் ஒரு கம்பீரத்தைக் கொடுத்திருக்க, கண்ணில் வைத்திருந்த கறுப்புக் கண்ணாடியில் மனதை மறைத்துக் கொண்டு வாட்டமாய் இருந்தாள். இருவருமே ஒரு பிரபலமான ஐடி நிறுவனத்தில் பொறுப்பான பணியில் இருந்தனர்.
ஒரே அலுவலகத்தில் பணி புரிகையில் ஒருவரை ஒருவர் பிடித்துப் போக பல கனவுகளுடன் காதலித்து வீட்டாரின் சம்மதத்துடன் மணம் முடித்தனர். ஆசைக் காதலின் அடையாளமாய் அடுத்த வருடமே பிறந்திட்ட செல்லக் குழந்தைக்கு இருவரின் பெயரை சேர்த்து சுதீபா என்று பெயர் சூட்டி அழகு பார்த்தனர்.
காண்பவர் மனதில் பொறாமை தோன்றுமளவு இணை பிரியா காதல் பறவையாய், அன்னியோன்யமாய் வலம் வந்து கொண்டிருந்தவர்கள் வாழ்வில் சில மாதமாய் புயலடித்துக் கொண்டிருந்தது.
பிரதீப்பின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் மனதில் அறைய அவள் மனது அனலில் இட்ட புழுவாய் துடித்தது. இத்தனை நாள் ஏதோ கோபத்தில் இப்படிப் பேசுகிறான் என்று நினைத்து பொறுமையாகப் போனால் எப்படி இப்படிப் பேசலாம்… என் சுயமரியாதையை இழிவாகப் பேசுவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்… அதுவும் விமான நிலையத்தில் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று கூட யோசிக்காமல் எப்படிக் கத்தினான்… கேட்பவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்…
யோசிக்கும்போதே அவளுக்கு உடம்பெல்லாம் கூசியது.
ஆண் என்ற திமிரில் இப்படிப் பேசுகிறானா… எதற்கு இப்படி தேளாய் வார்த்தையில் கொட்டுகிறான்… நான் என்ன தவறு செய்தேன்…? தவறே தெரியாமல் தண்டனையும் கொடுக்கத் துணிந்துவிட்டானே…! இதற்குதான் இவனை ஆசையாய் காதலித்து குழந்தையும் பெற்றுக் கொண்டேனா…? என் இஷ்டத்துக்கு ஊர் சுற்ற வேண்டிதான் வேலைக்குப் போகிறேனா…? அவனை விட அதிகம் சம்பாதிக்கிற திமிரால் தான் அவன் சொல்வதைக் கேட்க மறுக்கிறேன் என்கிறானே…!
இந்த உலகத்திலேயே என்னை முழுமையாகப் புரிந்து கொண்டது என் கணவன் மட்டும் தான் என்று இறுமாந்திருந்த என் காதலை குறைச்சலாகப் பேச இவனால் எப்படி முடிந்தது… இரண்டு வருட தாம்பத்யத்தில் காதல் கசந்து விட்டதா…? நான் நினைத்து கூட பார்க்காத விஷயத்தை சொல்லி என்னைக் குற்றப்படுத்தினால் எப்படி ஒத்துக்கொள்ள முடியும்… ஏன்? இவன் இப்படி மாறிப் போனான்…!
நினைக்கும்போதே ஆற்றாமையும் கோபமும் கலந்து அவள் முகத்தை செம்மையாக்க மனதைக் குடையும் யோசனைகளை வெளியே காட்டாமல் பார்மாலிட்டீஸ் முடித்து அவர்களின் பொருட்களைப் பெற்றுக்கொண்டு மௌனமாய் வெளியே வந்தனர்.
சுதர்ஷாவின் பார்வை பிரதீப்பைத் தொடர அவனோ அருகில் அவள் இருப்பதையே உணராதவன் போல இறுக்கமாய் வெளியே நடந்தான். வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாக்ஸியை நெருங்கியவன், நின்று அவளது பதிலுக்காய் திரும்பினான்.
தீப்… ப்ளீஸ்… எதுவா இருந்தாலும் நாம வீட்டுக்குப் போயி தெளிவாப் பேசிக்கலாமே…
உள்ளத்தில் எஞ்சி இருந்த காதல், கோபத்தை அடக்கி வைக்க கெஞ்சலாய் ஒலித்த அவளது குரலின் வேண்டுதல் அவனது கடுமையான குரலில் காணாமல் போனது.
எனக்கு இனி எதுவும் பேசறதுக்கு இல்லை… நீ உன் வீட்டுக்குப் போ… நான் என் வீட்டுக்குப் போறேன்…
காட்டமாய் ஒலித்தது அவனது குரல். அந்த வார்த்தைகள் மனதைப் பொசுக்கினாலும் அப்ப நம்ம வீடு…
கண்ணாடிக்குள் துளிர்த்த கண்ணீரை அவனிடம் வெளிக்காட்ட விரும்பாமல் உள்ளே இழுத்துக் கொண்டே கேட்டாள் சுதர்ஷா.
ஹூம்… நம்ம வீடு… இனி அதுல அர்த்தமே இல்லை… அலட்சியமாய் சொல்லிவிட்டு அவளது பொருட்களை டாக்ஸியில் வைத்தவன், அவள் வீட்டின் முகவரியையும் சொல்ல சட்டென்று கண்ணுக்குள் மின்னிய குழந்தையின் நினைவில்
நம்ம சுதி…க்குட்டி…" தயக்கத்துடன் கேட்டாள்.
ஹோ… அப்ப நீயும் எல்லாத்துக்கும் தயாராகிட்டே தானே… இப்ப கிளம்பு… அவளை அழைச்சிட்டு வரேன்…
என்றவன் மற்றொரு டாக்ஸியை அழைத்து அவனது பொருட்களை வைக்க அந்த ஒரு கூட்டுப் பறவைகள் இரண்டும் இரு கூடுகள் தேடிப் பயணமாகின.
பிரதீப்பின் மனதில் அவள் மீதிருந்த காதலை கோபமும் ஆணவமும் மேகமாய் மறைத்திருக்க, அவளோ அவனது வார்த்தைகள் தந்த வலியில் காதலையே வெறுத்துக் கொண்டிருந்தாள். தன் சுயத்தை சீண்டிய வார்த்தைகளை அசைபோட்டுக் கொண்டு வெந்த மனதுமாய் கண்மூடி அமர்ந்திருந்தாள்.
சில மாதங்களாகவே இந்த வேதனை அவளை அலட்டிக் கொண்டிருந்தது. எதற்கு எடுத்தாலும் குத்தல் பேச்சும், கேலியுமுமாய் அவளது செயல்பாடுகள் எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்து அலட்சியப்படுத்திக் கொண்டிருந்தான் பிரதீப்.
புரியாமல் அதற்கான காரணத்தைக் கேட்டாலும் ஒரு கேலிப் பார்வையோடு கடந்துவிடுவான். இன்று சரியாகும்… நாளை சரியாகுமென்று காத்திருந்த அவளது பொறுமைக்கும் அர்த்தமற்றுப் போய்விட்டது.
இப்போதும் விமானத்தில் ஏறும்போது முகத்தை தூக்கி வைத்திருந்தவனை சரியாக்க நினைத்து எதார்த்தமாய் அவள் சீண்ட, மெதுவாய் எடக்குமடக்காய் அவன் பேசத் தொடங்கிய வாக்குவாதத்தில் அவளது பொறுமையும் விடை பெற்றுப் போக, வார்த்தைகள் தடித்து விழத் தொடங்கியதில் பிரச்சனை முற்றிப் போயிற்று. என்ன பேச்சு வந்தாலும் உடனே, நீ இனி வேலைக்குப் போக வேண்டாம்… உன் சம்பாத்தியத்தில் வாழ வேண்டிய அவசியம் எனக்கில்லை… குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இரு…
என்பதில் வந்து நிற்பான் அவன்.
அதற்கு அவள் எப்படி சம்மதிப்பாள்… சின்ன வயது முதலே அவளது ஆசையும் கனவும் இதுபோல ஒரு நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பதல்லவா… எத்தனை போட்டிக்கு நடுவில் அவளுக்கு இந்த உயர்ந்த பொறுப்பு கிடைத்திருக்கிறது… கணவனைவிட அதிக சம்பளம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவள் மீது எத்தனை நம்பிக்கை இருந்தால் அவளைவிட சீனியர் பலர் இருந்தும் இவளைத் தேர்வு செய்திருக்க வேண்டும்… கம்பெனி சார்பில் வெளிநாட்டுப் பயணமும்…
குழந்தை பிறந்த சமயத்தில் வேலைக்கு செல்ல சற்று சிரமப்பட்டாலும் பெற்றவர்களின் உதவியுடன் கடந்து வந்தாயிற்று. சொந்தமாய் ஒரு பெரிய பிளாட், நல்ல கார், சொகுசான வாழ்க்கை எல்லாம் இந்த வருமானத்தில் வந்தது தானே… ஒரு மெச்சப்பட்ட வாழ்க்கையைத் தந்த வேலையை, அவளுக்குப் பிடித்த வேலையை விடுமாறு பிரதீப் சொன்னால் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் சொன்னதைக் கேட்கவில்லை என்று சொல்லியே எப்போதும் சிடுசிடுத்துக் கொண்டிருந்தான் அவன். ஏதாவது முக்கியமான வேலையை முடிக்க வேண்டும் என்றால் மட்டும் இரவுநேர ஷிப்ட்க்கு அவள் செல்லவேண்டி வரும்… மற்றபடி அவளுக்கு எல்லா விதத்திலும் சௌகர்யமாகவே இருந்தது இந்த நிறுவனம்.
"காதலிக்கும்போது அவளிடம் அவனுக்குப் பிடித்த