Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pazhamozhi Kathaigal
Pazhamozhi Kathaigal
Pazhamozhi Kathaigal
Ebook135 pages51 minutes

Pazhamozhi Kathaigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

சின்னச் சின்ன கதைகள் மூலம் நம் பேச்சு வழக்கில் உள்ள பழமொழிகளைக் குழந்தைகளிடம் சேர்ப்பதற்காய் அதற்கான விளக்கத்துடன் எழுதப்பட்ட குட்டிக் கதைகள் இது... இப்போதெல்லாம் குழந்தைகள் வாசித்துத் தெரிந்து கொள்வதை விட கண்டு தெரிந்து கொள்ளவே விரும்புகிறார்கள்... அவர்களின் வாசிப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் எனது சிறு முயற்சி.

Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580134405760
Pazhamozhi Kathaigal

Related to Pazhamozhi Kathaigal

Related ebooks

Reviews for Pazhamozhi Kathaigal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pazhamozhi Kathaigal - Latha Baiju

    http://www.pustaka.co.in

    பழமொழிக் கதைகள்

    Pazhamozhi Kathaigal

    Author:

    லதா பைஜூ

    Latha Baiju

    For more books

    http://www.pustaka.co.in/home/author/latha-baiju

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. நண்டுகளின் தீர்மானம்

    2. நரியும் காக்கையும்

    3. முயலின் ஆசை

    4. பாம்பின் கர்வம்

    5. புலியின் பேராசை

    6. ஓநாயின் தந்திரம்

    7. காளைகளின் குணம்

    8. நரியின் தீர்ப்பு

    9. மானின் புத்திசாலித்தனம்

    10. உண்மையான நட்பு

    11. கிளியின் காத்திருப்பு

    12. காகத்தின் அறிவீனம்

    13. நாய்க்குட்டியின் அன்பு

    14. சோம்பேறியின் வேலை

    15. மன்னரின் நீதி

    16. நீரின் அருமை

    17. மாதவனின் பொறாமை

    18. மாட்டின் ஆசை

    19. உண்மையான உதவி

    20. முத்துவின் முயற்சி

    21. பூக்களின் கர்வம்

    22. இளமையில் கல்வி

    23. விறகு வெட்டியின் பேராசை

    24. பிங்குவும் டிங்குவும்

    25. அறிவுநம்பியின் அறிவு

    26. அமைச்சரின் ஆலோசனை

    27. அண்ணன் தம்பி

    28. கூடா நட்பு

    29. உழவின் சிறப்பு

    30. அறிவை மறைத்த ஆத்திரம்

    31. கழுதையின் தந்திரம்

    32. பூனையின் சந்தேகம்

    33. கிருஷின் துணிச்சல்

    34. நம்பிக்கையே நமது கை

    35. கல்வியின் அவசியம்

    36. குறும்புக்கு கிடைத்த பரிசு

    37. எலும்பனின் தெளிவு

    38. வியாபாரியின் கவன சிதறல்

    39. பரமார்த்த குருவும் சீடர்களும்

    40. எலியின் யோசனை

    41. காக்கையின் ஆதங்கம்

    42. காசியின் தைரியம்

    43. யானையின் அறிவு

    44. ஆளை பார்த்து எடை போடாதே

    45. ஏமாந்த பாம்பு

    46. பூனையின் ஆசை.

    47. தவளையும் எலியும்

    48. குருவியின் பேராசை

    49. ஒற்றுமையே பலம்

    50. தந்தையின் வாக்கு

    51. பில்லு, முல்லாவின் ஆசை

    52. கழுதையின் கர்ஜனை

    53. புலியின் தந்திரம்

    54. அன்னையின் அன்பு.

    55. அனுபவமே சிறந்த பாடம்

    56. செல்வந்தரின் திருட்டு குணம்.

    57. ஒற்றுமையின் கூலி

    முன்னுரை

    சின்னச் சின்ன கதைகள் மூலம் நம் பேச்சு வழக்கில் உள்ள பழமொழிகளைக் குழந்தைகளிடம் சேர்ப்பதற்காய் அதற்கான விளக்கத்துடன் எழுதப்பட்ட குட்டிக் கதைகள் இது... இப்போதெல்லாம் குழந்தைகள் வாசித்துத் தெரிந்து கொள்வதை விட கண்டு தெரிந்து கொள்ளவே விரும்புகிறார்கள்... அவர்களின் வாசிப்பின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் எனது சிறு முயற்சி.

    குழந்தைகளுக்கு புத்தக வாசிப்பின் அருமையை உணர்த்துவோம்...

    அன்புடன்

    லதா பைஜூ

    *****

    1. நண்டுகளின் தீர்மானம்

    ஒரு குளத்தின் கரையில் சில நண்டுகள் வளை அமைத்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தன. கோடை காலம் ஆரம்பிக்கவே குளத்தில் நீர் வற்றத் தொடங்கியது. எனவே நண்டுகள் அடுத்த ஊரில் இருக்கும் குளத்திற்கு செல்வோம் என முடிவெடுத்தன. அக்கூட்டத்தில் உள்ள வயதான ஒரு நண்டு மட்டும் இதை ஆட்சேபித்தது.

    அடுத்த ஊரில் உள்ள குளத்தின் நீரும் கோடையில் வற்றத் தொடங்கியிருக்கும்... அங்கு போய் பார்த்தால் தான் உண்மை புரியும்... இன்னும் சிறிது நாளில் கோடை மழை பெய்தால் இந்தக் குளத்திலேயே நீர் ஊறத் தொடங்கிவிடும்... ஆகையால் நாம் நம் குளத்தை விட்டுப் போக வேண்டாம்... என்றது.

    அதைக் கேட்டு சில நண்டுகள் அங்கேயே இருக்க சில நண்டுகள். குளத்தில் உள்ள நீர் தங்களுக்குப் போதாது... என்று கூறி அடுத்த ஊரில் உள்ள குளத்தை நோக்கிச் சென்றன. வழியெங்கும் வெயிலில் வாடி நெடுநாள் பயணத்துக்குப் பின் அக்குளத்தை அடைந்தன. ஆனால் அக்குளத்தில் வாழ்ந்த நண்டுகள் இந்த நண்டுகளை அங்கே அனுமதிக்கவில்லை.

    எங்கள் குளத்தில் சிறிதளவு தண்ணீர் தான் உள்ளது... அது சிறிது நாளில் எங்களுக்கே போதாமல் போய் விடும்... ஆகையால் புதியதாக வந்த உங்களை இங்கு அனுமதிக்க மாட்டோம்... என்று கூறி திருப்பி அனுப்பியது.

    அதைக் கேட்ட நண்டுகள், நமது குளத்தை விட்டுவிட்டு இங்கு வந்தது தவறாகப் போய் விட்டதே... என்று வருத்ததுடன் மீண்டும் தங்கள் குளத்திற்கே போவதென முடிவு செய்து பயணத்தை தொடங்கின.

    அதற்குள் கோடை மழையும் பெய்யத் தொடங்கி நண்டுகள் தங்களது குளத்தை அடையும் போது அங்கும் நீர் ஊறத் தொடங்கியிருந்தது. அப்போது அங்கு வந்த வயதில் மூத்த நண்டு, எங்கேயோ இருக்கும் பலாக்காய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதை விட நமது கையில் இருக்கும் கிலாக்காயே மேல்... என்ற அர்த்தத்தை இப்போதாவது புரிந்து கொண்டீர்களே... அதுவே பெரிய சந்தோசம் தான்... என்று அவர்களை அங்கு சேர்த்துக் கொண்டது.

    மீண்டும் அந்தக் குளத்திலேயே அனைத்து நண்டுகளும் மகிழ்ச்சியோடு வாழத் தொடங்கின.

    பழமொழி; கிடைக்கப் போகும் பலாக்காயை விட கையில் இருக்கும் கலாக்காய் மேல்.

    விளக்கம்; பேராசைப் படாமல் நம்மிடம் இருப்பதை வைத்து வாழ வேண்டும். ஒரு பொருள் கிடைக்கப் போவது உறுதியாகாமல் அதை நினைத்து கையில் இருப்பதை விட்டுவிடக் கூடாது. நம்மிடம் இருக்கும் பொருளே சிறந்ததாய் எண்ணி வாழ வேண்டும்.

    *****

    2. நரியும் காக்கையும்

    ஒரு ஊரில் வயதான பாட்டி ஒருவர் வடை சுட்டு, அதை விற்று வரும் வருமானத்தில் பிழைத்து வந்தார். அன்றும் எப்போதும் போல வீட்டுக் கொல்லைப்புரத்தில் அமர்ந்து வடை சுற்றுக் கொண்டிருந்தவர், வாணலியில் எண்ணெய் குறையவே எண்ணையை எடுத்து வருவதற்காக அடுப்பை சற்றுத் தணித்துவிட்டு உள்ளே சென்றார்.

    இவற்றை எல்லாம் அங்கிருந்த மரத்தில் அமர்ந்திருந்த காக்கை ஒன்று கவனித்து வந்தது. பாட்டி வடை சுட்டு பாத்திரத்தில் அடுக்குவதைக் கண்டு அதன் நாவில் எச்சில் சுரந்தது. தக்க சமயத்துக்காகக் காத்திருந்த காக்கை, பாட்டி உள்ளே சென்றதும் பறந்து வந்து வடையைக் கொத்திக் கொண்டு சென்றது.

    சூடான வடை அதன் வாயை சுடவே, ஒரு மரக்கிளையில் அமர்ந்து வடையை அங்கு வைத்துவிட்டு, அது சற்று ஆறுவதற்காகக் காத்திருந்தது. அப்போது அந்தப் பக்கமாக ஒரு நரி வந்து கொண்டிருந்தது. வடையின் மணம் அதன் மூக்கை அடையவே சுற்றிலும் தேடித் பார்த்தது.

    மேலே மரத்தில் ஒரு காக்கை வடையை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்ட நரி, அதை எப்படியாவது அடையத் திட்டம் போட்டது. காக்கையாரே, சிங்க ராஜாவின் குகைக்கு எப்படி செல்ல வேண்டும்... நான் பக்கத்துக் காட்டில் இருந்து அவருக்கு ஒரு செய்தியுடன் வந்திருக்கிறேன்... என்றது.

    அதைக் கேட்ட காக்கை, நரி தன்னிடம் வழி கேட்ட சந்தோஷத்தில், இப்படியே நேராகப் போய் வலது பக்கத்தில் திரும்பினால் ராஜாவின் குகை வந்துவிடும்... என்று வடையைப் பிடித்திருந்த காலை நீட்டி வழி சொன்னது. அப்போது அதன் பிடியில் இருந்த வடை கீழே விழுந்து விட, நரி பாய்ந்து சென்று அந்த வடையை எடுத்துக் கொண்டு ஓடி விட்டது. அதைக் கண்டு திகைத்த காக்கை, "அடடா வடை போச்சே... கைக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1