Kaadhal Vendam Kanmani
()
About this ebook
1956 ஆம் ஆண்டு விழுப்புரம் அருகில் கப்பியாம்புலியூர் என்ற கையலக கிராமத்தில் பிறந்தவர்.
கல்லூரி நாட்களிலேயே வாசகர் கடிதம் மற்றும் துணுக்கு எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. 1980 ல் முதல் சிறுகதை குமுதத்தில் பிரசுரமானது. இது வரை சுமார் 850 சிறுகதைகள் வந்துள்ளன.
சிறுகதை வெளிவந்த அதே ஆண்டு முதல் நாவல் மாலைமதி நாவலாக பிரசுரமானது. அதன் பிறகு ஐம்பது நாவல்கள் மற்றும் அதில் பாதி குறுநாவல்கள் வந்துள்ளன.
குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம், சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், அமுதசுரபி, மங்கையர் மலர், குமுதம் சிநேகிதி உள்ளிட்ட ஏராளமான பத்திரிகைகளிலும் மின்னம்பலம் போன்ற இன்டர்நெட் பத்திரிகைகளிலும் கதைகளும், கட்டுரைகளும், பேட்டிகளும் பிரசுரமாகிக்கொண்டிருக்கின்றன. ஏராளமான சிறுகதை மற்றும் குறு நாவல் போட்டிகளில் பரிசுகள் பெற்ற பெருமிதமும் உள்ளது.
அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு வென்றார். அது ‘கோலத்தில் சிக்கிய புள்ளிகள்’ என்ற தலைப்பில் அதில் தொடர்கதையாக வெளிவந்தது.
தொண்றூறுகளில் வந்த சீரியல்களில் கதை டிஸ்கஷனில் கலந்து கொண்ட அனுபவம் உண்டு. சினிமா டிஸ்கஷன்களிலும் பங்கேற்றிருக்கிறார்.
இவரின் நாடகம் ஒன்று விவேக் நடித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பாயிற்று. பிரபல நாளிதழில் ஆன்மிகத் தொடர்கட்டுரைகள் எழுதிய அனுபவமும் உண்டு. தொலைக்காட்சிகளில் ஆன்மிகத் தொடர்பான சொற்பொழிவுகள் நிகழ்த்துகிறார்.
கடந்த நாற்பது வருடங்களாக முழு நேர ஜோதிடராகவும் உள்ளார். மாலைமதி, கல்கி, மங்கையர் மலர், தினகரன், பத்திரிகை டாட் காம் ஆகிய பத்திரிகைகளுக்குப் பல ஆண்டுகளாக வாரபலன்கள் எழுதி வருகிறார்.
சிஃபி டாட்காமில் ஜோதிடக் கட்டுரைகள் எழுதியதுடன் அவர்களின் ஜோதிடக்குழுவில் (panel) பங்கேற்றிருக்கிறார்.
Read more from Vedha Gopalan
Uyirvarai Inithaval Rating: 0 out of 5 stars0 ratingsIthu Mounamana Neram Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Puyal Rating: 5 out of 5 stars5/5Kaadhalin Pon Sangili Rating: 5 out of 5 stars5/5Siruvan Pragalathanum, Narasimharum Rating: 0 out of 5 stars0 ratingsAanmeega Siruthuligal Rating: 0 out of 5 stars0 ratingsKaanai Kaattu Pothum Rating: 3 out of 5 stars3/5Kannamoochi Yenadi! Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyire… Rating: 0 out of 5 stars0 ratingsManathil Amarntha Mayile... Rating: 0 out of 5 stars0 ratingsWhatsapp Ennum Vallal Rating: 0 out of 5 stars0 ratingsVizhi Pesum Mozhi Puthithu Rating: 0 out of 5 stars0 ratingsEppadi Kolvenadi Rating: 0 out of 5 stars0 ratingsEn Kaadhal Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsVarugirean Veena! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Thana? Ivan Thana? Rating: 0 out of 5 stars0 ratingsEnakkagava Babu? Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsWhatsappil Vanthavai Rating: 0 out of 5 stars0 ratingsJodi Sera Aasai Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean - part 2 Rating: 0 out of 5 stars0 ratingsVidiyal Vegu Thooramillai Rating: 0 out of 5 stars0 ratingsMuganoolil Mugam Paarkirean Rating: 0 out of 5 stars0 ratingsNaan Sanditha Prabalangal Rating: 0 out of 5 stars0 ratingsEngey Antha Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsOru Kaadhali Kaadhalikavillai Rating: 0 out of 5 stars0 ratingsIni Ithu Vasanthakaalam Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Siragugal Rating: 0 out of 5 stars0 ratingsNee Verum Pennthan! Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Kaadhali Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kaadhal Vendam Kanmani
Related ebooks
Kaadhal Mel Aanai Rating: 3 out of 5 stars3/5Kadhal Kalam Idhu Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaakavaa Naan Rating: 5 out of 5 stars5/5Ithu Sathiyam Rating: 5 out of 5 stars5/5Devathai Vandhal Rating: 2 out of 5 stars2/5Rojaavai Thaalaattum Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEngey Enathu Kavithai? Rating: 0 out of 5 stars0 ratingsUn Perai Sollum Pothae Rating: 2 out of 5 stars2/5Manasai Thaadi Mani Kuiyile...! Rating: 3 out of 5 stars3/5Unnai Karam Pidithean Rating: 0 out of 5 stars0 ratingsManathai Thiranthathu Poovasam...! Rating: 4 out of 5 stars4/5Ennil Neeyadi!... Unnil Naanadi! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Paattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Abiyum Azhaganum Rating: 2 out of 5 stars2/5Ennul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5En Nandhavanathu Poo Rating: 0 out of 5 stars0 ratingsNee En Sanrothayam Rating: 0 out of 5 stars0 ratingsManamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 3 Rating: 5 out of 5 stars5/5Kaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Unnodu Oru Nimidam Rating: 0 out of 5 stars0 ratingsPazhamozhi Kathaigal Rating: 5 out of 5 stars5/5Azhagey Vaa! Arugil Vaa!! Rating: 0 out of 5 stars0 ratingsOru Malarin Payanam Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Vasantha Kaala Paravaigal Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kaadhal Vendam Kanmani
0 ratings0 reviews
Book preview
Kaadhal Vendam Kanmani - Vedha Gopalan
http://www.pustaka.co.in
காதல் வேண்டாம் கண்மணி
Kaadhal Vendam Kanmani
Author:
வேதா கோபாலன்
Vedha Gopalan
For more books
http://www.pustaka.co.in/home/author/vedha-gopalan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
முன்னுரை
கல்லூரிக் காலத்தில் 'ஆசிரியர் கடிதம்... அரசு பதில்களுக்கு என விளையாட்டாய் ஆரம்பித்தது. கல்லூரி லைப்ரெரியில் அமர்ந்து எழுதிய நாட்கள் பொன்னாட்கள்.
முதல் கடிதம், கேள்வி பதில் பகுதியில் முதல் கேள்வி, முதல் சிறுகதை முதல் நாவல் எல்லாமே எனக்கு எஸ்.ஏ.பி. சார் காலத்துக் குமுதம் அலுவலகத்திலிருந்து வந்தவை.
எழுதிய முதல் சிறுகதையையே அச்சில் பார்ப்பது பெரிய சந்தோஷம். இப்படி நேர்வதால் அதன் அருமை தெரியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். என்னைச் சுற்றி எல்லோரும் கதைகள் திரும்பி வருவது பற்றி வருந்துவதைப் பார்த்திருக்கிறேன். நான் எழுதியவற்றிலும் பல திரும்பியதுண்டு.
நண்பராயிருந்த திரு. கோபாலன் கணவரானார். எழுத்தாளர்கள்... பத்திரிகை... கதைகள்... இலக்கியக் கூட்டங்கள்... இவையே எங்கள் உலகம்!
திருமணமானவுடன் விகடன் பொன்விழா வந்ததனால் தேன்நிலவை ஒத்திப்போட்ட தம்பதி உலகிலேயே நாங்கதான்!! திரு. கோபாலன் குமுதத்தில் சேர்ந்த பிறகு எல்லோரும் என் கதைகள் வாரா வாரம் வரும் என்றெல்லாம் தப்புக் கணக்குப் போட்டார்கள். அதெல்லாம் இல்லை. பத்திரிகை நடத்துபவர்களுக்கு அதன் விற்பனை முக்கியம்! மற்றவர்களைப் போலவே நானும் நடத்தப்பட்டேன்.
மற்றவர்களுக்குத் தபாலில் கதை திரும்பி வரும். எனக்கு இவரின் கையிலேயே கொடுத்து விடுவார்கள்! அதுதான் அதிகப்படி சலுகை.
இன்னும் கேட்டால் அப்போது குமுதம் போட்டியில் நான் கலந்து கொண்டு பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைக்குப் பரிசு தரக்கூடாது என்று திரு எஸ்.ஏ.பி. அவர்கள் சொல்லிவிட்டாராம்! அதற்கு அவர் சொன்ன காரணம் எனக்கு ஆயிரம் பரிசுகளுக்கு சமம்! அலுவலகத்திற்கு வரலையே தவிர அவங்களும் குமுதத்திற்காக வேலை பார்க்கறவங்கதானே! நம் ஸ்டாஃப் கலந்துக்கக் கூடாதுன்னு விதிமுறை இருக்கே.
என்றாராம்!
என் முதல் நாவல் 1980ல் வெளியானது! ஒரு சமயம் ஒரு திருமணத்தில் திரு ரா.கி. ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தப்போது அவர் சொன்னது, நாங்க ரொம்ப ஆச்சர்யப்பட்டோம். கிரைம் கதைகள், நகைச்சுவைக் கதைகள், த்ரில்லர், டிராமா, கடிதக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், குறிப்பாகக் கல்லூரிக் கதைகள் எல்லாமே நீங்க எழுதறதை கவனிச்சோம். பல ரகங்கள் எழுத முடிவதால் வயது இவ்ளோ குறைவா இருக்கும்னு நினைக்கலை. எழுத்தில் அனுபவ முதிர்ச்சி இருக்கு
என்றார். ஆம்! நான் எழுத ஆரம்பித்தபோது வயது 23 தான்! பிறகு விரிவாக்கிக் கொள்ள வைத்தான் இறைவன்.
குமுதத்தில் 'எப்படிக் கதை எழுதுவது' என்று ரா.கி.ர. வாரா வாரம் அட்டகாசமான தொடர் எழுதினார். எடிட்டர் திரு. எஸ்.ஏ.பி யின் ஆணைப்படி அதைப் படித்த பலரும் கதை எழுதுவது எப்படி என்று அவர் ஏன் ஒரு இன்ஸ்டிட்யூட் ஆரம்பிக்கக் கூடாது
என்று கேட்டார்கள்! ஆரம்பித்தார். (எ.க.எ.) அதில் முதல் மாணவியாகச் சேர இருந்த என்னை நிராகரித்து விட்டார்! நீங்கதான் மேடம் என் அசிஸ்டென்ட்டா இருக்கப் போறீங்க
என்றார்!
பயிற்சிகளுக்காக மாணவர்கள் பல கதைகள் அனுப்புவார்கள்.
பயிற்சிக் கதைகளை என் கணவரிடம் கொடுத்தனுப்பி விடுவார்! ஒவ்வொரு கதைக்கும் ஒரு பக்கத்துக்கு நான் மாணவருக்கு விளக்கம் டைப் செய்து தர வேண்டும்! அந்தக் கதையின் குறை நிறைகளையும் அதை எப்படி மேம்படுத்தலாம் என்பதையும் சொல்ல வேண்டும்! அது மட்டுமல்ல! அந்தக் கதையின் சுருக்கத்தை 3... 4... வரிகளில் எழுதி ஆர்.கே.ஆர் சாருக்கு அனுப்ப வேண்டும். (கிட்டத்தட்ட கதையே புதிதாகிவிடும்!) இதில் பெரிய அதிர்ச்சி என்னவென்றால்... அந்த மாணவர்களில் பலர் நல்ல எழுத்தாளர்கள்! ஏற்கெனவே பிரபலங்கள்! இந்தப் பயிற்சி எனக்குத்தான் மிக உதவியது!
திரு. எஸ்.ஏ.பி. திரு. ரா.கி. ரங்கராஜன், திரு, ஜ.ரா. கந்தரேசன், திரு. புனிதன் ஆகியோரின் பாசறையில் பயின்றதாலோ என்னவோ அடுத்து சாவி பத்திரிகையின் அன்புக்குப் பாத்திரமானேன்.
என்னுடைய 'தண்டனை' என்ற குறுநாவலைப் படித்துவிட்டு என்னை நேரில் அழைத்து சாவி சார் அரை மணி நேரத்துக்குப் புகழ்ந்தார்!
ஐந்து தனித் தனி ஒரு பக்கக் கதைகள் எழுத வேண்டும். சேர்த்துப் படித்தால் 5 பக்கத்துக்கு ஒரு பெரிய கதையாக இருக்க வேண்டும் என்பார். அப்படி எழுதிய கதையும் என் ஒரு பக்கக் கதைத் தொகுப்பில் உள்ளது.
வேதா கோபாலன்
கோபாலனும் கோபாலியும்!
நெய்ப் பொங்கல் என்றால் வடையும், மலபார் அடை என்றால் அவியலும், தயிர் சாதம் என்றால் ஊறுகாயும் பிணைந்து ஆஜராவது போல கோபாலன் என்றால் டிரெய்லர் பஸ்ஸாக வேதாவும் இணைந்து வந்துவிடுவார் என்பதை கை ரேகை, சோழி, நாடி, கிளி ஜோஸ்யங்கள் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளலாம்.
பல வருடங்களாக எழுத்துலகில் வலம் வரும் இவர்களை செட் தோசை என்றும் சொல்லலாம். அந்தக் காலது. ராமமூர்த்தி, சரோஜா ராமமூர்த்தியாக இவர்களை மிக்ஸ்ட்ட பிள்ஸ் என்று டென்னிஸ் பரிபாஷையில் சொல்லி, இரட்டை ஜெமினியாக சக்கை போடு போடும் சுபாவையும் குறிப்பிட்டு விட்டால் வேறு எந்த காம்போவையும் விட்டுவிடவில்லை என்று தோன்றுகிறது. விடுபட்ட எழுத்தாள தம்பதிகள் மன்னிக்கவும்.
ஒரே கல்லூரியில் படித்து, ஒரே அலுவலகத்திலும் வேலை செய்து வந்த எங்களின் பொழுதுபோக்கு வாகீச கலாநிதி கி.வா.ஜ.வின் சிலேடைகளை ரசிப்பதும், அவரைப் போல முயன்று பார்ப்பதும் ஒருபொழுதுபோக்கு. உதாரணம்: எழும்பூர் ரயில் நிலையம் அருகே அற்பசங்கைக்காக திறக்கப்பட்ட புதிய கட்டணக் கழிப்பிடத்தை தாண்டிச் செல்லும்போது உதிர்த்த சிலேடை, 'ரயில்வே ஊழியர்களுக்கு கட்டணத்தில் கழிவு உண்டா?'
கோபாலனுக்கு முருக பக்தி அதிகம். கதைகளில் காமகோடி, ஸ்ரீராமகிருஷ்ண விஜய பத்திரிகைகளின் தார்மீகம் புதைந்து இருக்கும். கௌரவமான பெண்கள்