Oru Malarin Payanam
By Manimala
5/5
()
About this ebook
Read more from Manimala
Manam Virumbuthe Unnai Rating: 5 out of 5 stars5/5Manjam Vantha Thendral Rating: 5 out of 5 stars5/5Soorya Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsManase Manase Rating: 5 out of 5 stars5/5Poove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5Pani Vadiyum Pookkal Rating: 5 out of 5 stars5/5Iduppu Siruthavale Rating: 5 out of 5 stars5/5Kaathal Thendral Veesumaa Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuyire Rating: 5 out of 5 stars5/5Ponmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Ondru Ketppen Rating: 5 out of 5 stars5/5Irai Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5Megamaai Vanthu Pogiren Rating: 5 out of 5 stars5/5Azhage Unnai Aaraathikkiren Rating: 4 out of 5 stars4/5Nenjathil Nee Rating: 5 out of 5 stars5/5Poo Magal Rating: 5 out of 5 stars5/5
Related to Oru Malarin Payanam
Related ebooks
Megamaai Vanthu Pogiren Rating: 5 out of 5 stars5/5Kaathal Thendral Veesumaa Rating: 0 out of 5 stars0 ratingsNenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Vilagatha Sirakugal Rating: 5 out of 5 stars5/5Inaiyaana Ilamaane Rating: 4 out of 5 stars4/5Povomaa Ponnulagam Rating: 5 out of 5 stars5/5Neengatha Nila Rating: 0 out of 5 stars0 ratingsVanaththil Oru Thevathai Rating: 5 out of 5 stars5/5Iththanai Naalai Engirunthaai Rating: 4 out of 5 stars4/5Inimai Ninaiuvgal Thodarattume Rating: 4 out of 5 stars4/5Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Idhayam Thedum Ennuyire Rating: 5 out of 5 stars5/5Maravaathe Maname Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalaagi Kasindhurugi Rating: 0 out of 5 stars0 ratingsUllangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Poochikal Rating: 0 out of 5 stars0 ratingsNeeyum Naanum Veralla Rating: 5 out of 5 stars5/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Irubathu Kodi Nilavukal Rating: 0 out of 5 stars0 ratingsMannithuvidu Maayaa Rating: 5 out of 5 stars5/5Kankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Nilave Mugamkaattu Rating: 5 out of 5 stars5/5Aagaya gangai Rating: 5 out of 5 stars5/5Neruppu Malar Rating: 5 out of 5 stars5/5Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsPaarvai Ondre Poothumey Rating: 0 out of 5 stars0 ratingsUnnudane Naan Rating: 4 out of 5 stars4/5Oru Gulmohar Marathin Keezhaey Rating: 0 out of 5 stars0 ratingsUyire Urugaathey Rating: 0 out of 5 stars0 ratingsNenjodu Than Poo Poothathu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oru Malarin Payanam
1 rating0 reviews
Book preview
Oru Malarin Payanam - Manimala
14
1
மழை சீறலாய் பூமியை குதறிக் கொண்டிருந்தது. கார் வைப்பர் தண்ணீரை இப்படியும் அப்படியும் தள்ளி விட்டும் விடாப்பிடியாய் மறுபடி நனைத்துக் கொண்டிருந்ததை குதூகலம் கொப்பளிக்க பார்த்துக் கொண்டிருந்தாள் சௌம்யா! ஆவலில் கண்கள் விரிய, பூஞ்சிரிப்பில் உதடு பிளந்து பற்கள் மின்ன... வெளியே கையை நீட்டினாள். மழை முத்துக்கள் ஒரு கையளவு சேர்ந்ததும் அதை அப்படியே பக்கத்திலிருந்த மிருதுளா மீது விசிறி அடித்தாள்.
ஏய்...
என்ற செல்லக் கோபத்தோடு செளமியின் தொடையில் தட்டினாள்.
என்ன செளமி விளையாட்டு இது? போதும் வண்டிய எடு! டைமாகுது. டிக்கெட் கிடைக்காமப் போயிடும். அப்புறம் கிளாசை கட் அடிச்சதுக்கு எந்த பலனும் இல்லாமப் போயிடும்
பின் சீட்டிலிருந்த செலின் கெஞ்சலாய் கேட்க...
பிக்சர் போயே ஆகணுமா? அதோ பார்! மழை எவ்ளோ அழகா பெய்யுது! இந்த நேரத்துல பீச்சுக்குப் போனா எப்படியிருக்கும்?
பார்க்கறவங்க இதுங்க மெண்டல் ஆஸ்பிடல்லேர்ந்து தப்பிச்சு வந்ததுங்கன்னு நினைச்சுக்கப் போறாங்க... அய்யோ, டைமாறதும்மா... ப்ளீஸ்... சீக்கிரம் போயேன்
மிருதுளா கெஞ்சவும்... மனசேயின்றி ஸ்டீரியங்கைப் பற்றினாள்.
பொதுவாகவே இதுபோன்று தோழிகளோடு சினிமாவிற்கு வரும் ரகமில்லை செளம்யா. பீச், ஓட்டல் என்று மட்டும் சுற்றுவாள். தியேட்டருக்கு வந்து படம் பார்க்கவெல்லாம் பிடிக்காது. நிறைய கூட்டத்தைப் பார்த்தாலே அவளுள் ஒரு சலிப்பு ஏற்படுவது உண்டு. எந்த சந்தோஷமான விஷயம் அவளை பாதித்தாலும் கைதட்டி. பலமாய் சிரிப்பாள். ஆனால் வெளியில் இப்படி சிரித்தால் பலரின் கேலி பார்வைக்கும் ஆளாவதால்... அந்த வெளிப்படையான சந்தோஷமெல்லாம் தன் வீட்டோடு வைத்துக் கொள்வாள்.
பெற்றவர்களுக்கு பிள்ளைகளால், முக்கியமாய் பெண்ணை பெற்றவர்களுக்கு ஏற்படும் பெரிய நிம்மதி கன்னி மனது கல்லடிப்படாது இருப்பதில்தான்.
பனிரெண்டு வயதிலேயே பாய் பிரண்ட் இடுப்பில் கைபோட்டு செல்லும் மாடர்ன் யுகத்தில் தன் மகள் கிளீன் சிலேட்டாய் இருப்பதில் புவனேஸ்வரிக்கு மகா பெருமை!
மத்த பெண்களைப் போல் ஒரு ஆபாச பேச்சு இல்லை. டி.வி.யில் ஆணும் பெண்ணும் கட்டிப் பிடித்து பாட்டுப் பாடினால் கூட முகம் சுளிக்கும் பால் மனம். ஒருநாள் கவனக்குறைவால் இவள் கார் சக்கரத்தில் அரைபட்டு இறந்த வெள்ளாட்டுக் குட்டிக்காக ஒருநாள் முழுக்க சாப்பி டாமல் கண்ணீர் வடித்த இரக்க சுபாவம். அதனாலேயே... தன் மகளைப் பற்றி அதிகமாய் பயமின்றி இருந்தாள்.
செளம்யா... நல்ல அழகு! சிவப்பும் வெளுப்பும் கலந்த நிறம். பெண்களுக்கு உடல் மறைக்க நகை போடுவதில் உள்ள ஆபத்தை விட, பளீரென அடிக்கும் அழகில்தானே விபரீதமே வருகிறது. செளம்யாவின் மனதை அவள் வயதுக்கேற்றபடி பக்குவப்படுத்த அவள் விரும்பியதே இல்லை. அந்தக் குழந்தைத்தனம்தான் செளம்யாவிற்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்!
கல்லூரி விட்டு வீட்டிற்கு வந்தால் தன் செல்ல நாய்க்குட்டி பப்பியோடு பொழுதை போக்குவாள். அம்மாவோடு கேரம் விளையாடுவாள். படிப்பாள், சாப்பிடுவாள். சாப்பிட்டதும் தூங்கி விடுவாள். பணக்கார பெண்களுக்கே உரிய ஆணவமோ, அடாவடியோ... எதுவுமே அவளை தொட்டதில்லை.
அப்படிப்பட்டவளை தியேட்டரில் போய் உட்கார வைத்தால்? அதுவும் காதல் படம்!
படம் முடிந்ததும் தலை பாரமாய் வலித்தது. மௌனமாய் நடந்து வந்து காரில் அமர்ந்தாள்.
சூப்பர் படம்ப்பா
நம்பறதுக்கு கஷ்டமா இருந்தாலும்... அதை முரண்பாடே இல்லாம ஏத்துக்க வச்சுட்ட சாமர்த்தியம் கதையில இருக்கு. ஆனா இப்போ உள்ள காதலெல்லாம் கண்கள்ல ஆரம்பிச்சி உதட்டுலதான் முடியுது. இல்லையா செலின்?
மிருதுளா உதடு மடித்து குறும்பாய் கேட்கவும் செலின் முகம் இருண்டது.
அதை ஏன் என்கிட்ட கேக்கறே?
ஓரளவு நம்ம குரூப்ல லவ் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவ நீதானே! ஏதோ அறியா பசங்க நாங்க. சொன்னா எங்களுக்கும் ஹெல்பா இருக்குமில்லையா?
ச்சை! இந்த உலகத்துல சந்து பொந்துல உக்காந்து லவ் பண்ணாலும் கண்டுபிடிச்சிடறாளுங்கப்பா
நொந்துக்காதே! நீ பிரேமை கிஸ் அடிச்சப்ப. சத்தியமா நான் பார்க்கலப்பா! ச்சீ... ரொம்ப மோசம். இப்படியா கடிக்கறதுன்னு நீ சொன்னதுக் கூட எங்காதுல விழவேயில்லை
ஏய்...
என்றாள் பயமாய். எப்ப... எப்ப பார்த்தே இதெல்லாம்?
போன வாரம் ஈவினிங் ஷோ ஆனந்த்ல படம் பார்க்க மம்மி டாடி யோட வந்தப்ப எங்க சீட்டுக்கு முன்னாடி சீட்ல உக்காந்திட்டிருந்தியா இல்லையா? ஹும்... படமெங்கேப் பார்த்தேன்? அங்கே இங்கே அசையாம இண்டர்வெல்லுக்கு கூட எழுந்து போகாம இருந்த உன்னை நான் டிஸ்டர்ப் பண்ணலை. தவிர என் பாரென்ட்ஸ் முன்னால ஒரு டிவைன் லவ்வர்ஸ டிஸ்டர்ப் பண்ண மனசே கேக்கலை. ஆனாலும் ரொம்ப கடியோ?
ஓ ஜீஸஸ்
என்றபடி வெட்கமும் அவமானமுமாய் சீட்டில் தலையை கவிழ்த்துக் கொண்டாள்.
ஏய் என்ன ஆச்சு?
மிருதுளா பதறினாள்.
.....
"எனக்கு தெரிஞ்சு போச்சுன்னு பீல் பண்றியா? இங்கே பார் செலீன்! நான் உன்னை கிண்டல் பண்ணேனேயொழிய அதை தப்புன்னு சொல்லலை. நிறைய பேர் காதல், செக்ஸ்னாலே அலர்றாங்கப்பா! திஸ் இஸ் பேட்... கல்யாணத்துக்கு முன்னால நம்மோட லைப் பார்ட்னரோட குணம் நம்ம டேஸ்டுக்கு ஒத்து வருதான்னு பார்க்கறதோட கழுத்தை நீட்டி திருமதியாயிடறது சரியில்லை. எத்தனை திருமணங்கள் பொருத்தமில்லாத, திருப்தியில்லாத செக்ஸால கோர்ட்ல டிவோர்ஸ் வரைக்கும் போறாங்க தெரியுமா? இது ரொம்ப முக்கியம் செலின். ரெண்டாம் பட்சம்னு ஒதுக்கற இதுதான் தாம்பத்யத்தோட தலைவிதியையே மாத்துது. ஐ பிராமிஸ்... நிச்சயமா நானும் லவ் பண்ணுவேன். உறவும் வச்சுப்பேன். அதுல திருப்தி ஏற்பட்டா மட்டுமே...’’
ஸ்டாப்... ஸ்டாப்... நீ நிஜமாவே இண்டியன் லேடிதானா? இது மோசமான டாபிக் மிருதுளா! எல்லாத்துக்கும் மனசுதான் காரணம். பிடிச்ச எந்த பொருளையும் சின்ன குறையிருந்தாலும் ஏத்துக்கறதுக்கு மனசு பக்குவப் படணும். சப்போஸ், உனக்கு அந்த பிரண்டோட அப்ரோச் பிடிக்கலேன்னா வேற ஒருத்தர்கிட்டேயும் டெஸ்ட் பண்ணுவியா?
செலின் கோபமாய் கேட்டாள்.
வொய் நாட்? அதிலென்ன தப்பு?
தப்புதான். எல்லாமே தப்புதான். நான் லவ் பண்றவதான். பார்க், தியேட்டர்னு சந்தர்ப்பம் அமையற இடங்கள்ல சின்ன சின்ன உரசல்களோட சந்தோஷப்பட்டுக்கறோம். தட்ஸ் ஆல்! ஆனா எந்த சந்தர்ப்பத்திலேயும் லிமிட் மீற மாட்டோம். அந்த விஷப்பரீட்சையில இறங்கவும் மாட்டோம்
என்று ஆணித்தரமாய் கூறிவிட்டு அப்போதுதான் செளம்யாவைப் பார்த்தாள்.
திடுக்கிட்டாள்.
முகமெல்லாம் சிவந்து, கண்கள் பளபளத்துக் கொண்டிருந்தது.
செளமி... அழுதியா என்ன?
ம்ஹூம்...
பார்த்தா அழுத மாதிரிதான் இருக்கு. என்னாச்சு உனக்கு?
பச்... விடு
சொல்லாம விடப் போறதில்லை
மிருதுளா அவள் தோளைப் பிடித்து அழுத்தினாள்.
பாவமில்லே அவ.
யாரு?
படத்திலே அவனை உயிருக்குயிரா காதலிச்சா. ஆனா அவன் அவளைக் கட்டிக்காம வேற ஒருத்திய கட்டிக்கிட்டானே... அவ மனசு என்ன பாடுபடும்? வேதனைப்படும்?
அட ராமா!
தலையில் கை வைத்துக் கொண்டாள் மிருதுளா.
அதுக்கா அழுதே? நீயென்ன சின்னக் குழந்தையா? நிஜத்துக்கும் சினிமாவுக்கும் வித்தியாசமில்லையா? பதினெட்டு வயசுப் பொண்ணு! பணக்காரி... அழகான காலேஜ் ஸ்டூடன்ட்! சினிமாவில வர்ற டிராஜடி சீனைப் பார்த்து அழுதான்னு சொன்னா... அவமானம் தாங்காம எல்லா காலேஜ் ஸ்டூடன்சும் ஸ்டிரைக் பண்ணி உனக்கு டிஸ்மிஸ் ஆர்டர் தர்ற வரை ஓய மாட்டாங்க. வயசுக்கேத்த மனப்பக்குவமே உனக்கில்லே... பயமா இருக்குடி உன்னைப் பார்த்தா. நீ நிறைய தெரிஞ்சிக்கணும் சௌமி! அதுக்கு முதல் காரியமா... நீ யாரையாவது லவ் பண்ணு
கவலையும் கிண்டலுமாய் குரல் ஒலிக்க...
வேணாம்ப்பா! அவ இப்படியே இருக்கட்டும். உன் பாரீன் கல்ச்சரெல்லாம் அவளுக்கு சொல்லித் தந்துடப் போறே? அவ மனசுல நஞ்சை கலக்காதே
செலின் தடுத்தாள்.
சௌம்யா சில கணங்கள் கண் மூடினாள்.
இதயத்தில் புதைந்திருந்த அந்த உருவம் மிக மங்கலாய்... எழுந்து கண்களில் வந்து நின்றது.
செளமி... சௌக்கியமா?
என்றான் கரகரப்பாய்!
2
குடித்து முடித்து காலி கோப்பையை டீப்பாய் மீது