Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaathal Thendral Veesumaa
Kaathal Thendral Veesumaa
Kaathal Thendral Veesumaa
Ebook110 pages1 hour

Kaathal Thendral Veesumaa

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

R.Manimala, an exceptional Tamil novelist, written over 200 novels, 150 short stories, Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author…
Languageதமிழ்
Release dateMar 6, 2018
ISBN9781043466138
Kaathal Thendral Veesumaa

Read more from Manimala

Related to Kaathal Thendral Veesumaa

Related ebooks

Reviews for Kaathal Thendral Veesumaa

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaathal Thendral Veesumaa - Manimala

    14

    1

    "அம்மா..." சிலிர்த்தாள் சித்ரா!

    அந்த அதிகாலையில் குளிர்ந்த நீர் அவளின் தளிர் உடம்பில் பட்டதும்... குளிரில் மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன. என்றாலும் அது ஒரு சுகமான அவஸ்தையாக இருந்தது.

    பாத்ரூமின் வென்டிலேட்டர் வழியாக மார்கழி மாதத்துக்கே உரிய பனிப்புகை மாசுப்படாமல் உள்ளேப் புகுந்து கொண்டிருந்தது.

    கஸ்தூரி மஞ்சளும், பயத்தம் பருப்பு மாவும் கலந்த கலவையை உடல் முழுக்க தேய்த்து. ஐந்து நிமிடம் வரை ஊற வைத்தாள். சித்ராவிற்கு சோப்பு போட்டு குளித்துப் பழக்கமில்லை. அதனால்தானோ என்னவோ... வெயிலுக்குப் போட்டியாக... அவள் தங்கநிற மேனி மினுமினுவென்று ஜொலிக்கும் எப்போதுமே!

    ஒரு வழியாய் குளித்து முடித்து... வெட வெடவென்று உடல் நடுங்கியபடி வெளியே வந்தாள்.

    ஹாலின் கடிகாரம் இன்னும் ஐந்தைத் தொடவில்லை. ஜன்னல்... வெளிச்சத்திற்காக காத்திருந்தது.

    வீட்டின் அமைதி, இன்னும் அம்மாவும், அப்பாவும் எழவில்லை என்றது.

    சிவப்பு நிற பாவாடை ஜாக்கெட் அணிந்து, சந்தன நிற தாவணியை உடுத்திக் கொண்டாள். சாண்டல் பவுடரை கொஞ்சமாய் உள்ளங்கையில் கொட்டி... இரு கைகளில் பரபரவென தேய்த்து, முகம், கழுத்துப்பகுதியில் பூசிக்கொண்டாள். செந்நிற சாந்துப்பொட்டை புருவத்தின் மத்தியில் வைத்துக்கொண்டாள்.

    தன்னை நிலைக்கண்ணாடியில் முழுவதுமாய் ஆராய்ந்தாள்.

    திறமையான ஓவியனால் வரையப்பட்ட அழகிய ஓவியம் போல், அற்புதமான சிற்பியால் செதுக்கப்பட்ட சிலை போல்... அவளே வியப்பில் மூச்சடைப்பது போல் உணர்ந்தாள்.

    நான் இவ்வளவு அழகானப் பெண்ணா? தெருவில் நடந்தால் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் திரும்பி திரும்பி பார்ப்பதற்கு காரணம் இல்லாமலில்லை.

    நிறமா, கண்களா, உதடா, மூக்கா, கன்னமா, சிரிப்பா, எதை எதனோடு ஒப்பிடுவது? மற்றதை ஒப்பிட சித்ராவை ஒரு உதாரணமாய் சொல்லலாம்! அவள் ஒரு நந்தவனம். எல்லாப் பூக்களையும் ஒரு சேர ஒரேப் பெண்ணிடம் பார்க்க முடியுமென்றால் அது சித்ராவிடம் மட்டுமேதான் இருக்கமுடியும். அதனால்தான் பிரம்மனே பிரம்மித்துப்போய் அவளின் வலதுபுற செவ்விதழின் கீழ் திருஷ்டிப் பொட்டாய் மிளகு சைஸில் மச்சம் வைத்திருந்தான்.

    ஹால் கடிகாரம் ஐந்து முறை ஒலித்தது.

    ‘அட... எவ்வளவு வேலையிருக்கு? கோலம் போட வேண்டும், கோவிலுக்குப் போகவேண்டும்... நான் பாட்டிற்கு மசமசவென்று நின்றிருக்கிறேனே...’ சுறுசுறுப்பு உடம்பில் வந்து அணைத்துக்கொள்ள… தலையில் சுற்றியிருந்த ஈர டவலை உருவி, நீண்ட தலைமுடியின் நுனியில் முடிச்சிட்டுக்கொண்ட சித்ராவிற்கு அழகான பதினெட்டு வயது.

    கோல மாவு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தாள். முன்பே பெருக்கி தண்ணீர் தெளித்திருந்த வாசலில் புள்ளி வைத்து அழகான கோலம் வரைய ஆரம்பித்தாள். தாமரைப் பூக்கோலம். நிமிடத்தில் வரைந்துவிட்டு... அதற்கேற்ற வண்ணப்பொடிகளை இட்டு மேலும் அழகுப்படுத்தினாள்.

    மூன்று வீடு தள்ளி... திண்ணையில் அமர்ந்திருந்த கதிரேசன் இவளையே பார்த்துக்கொண்டிருந்தான். இது இன்று நேற்றல்ல... பல வருட பழக்கம். உலகிற்கு விடிகிறதோ, இல்லையோ... அதற்கு முன்பே கதிரேசன் விழித்து விடுவான். காரணம்... சித்ரா... விடியற்காலையில் கோலம் போட வருவாள்.

    சன்னமான இருட்டிலும்... இடைப்பிரதேசம் பளிச்சென அழகு காட்டுவதை பார்ப்பதற்காக மட்டுமல்ல... தினமும் அவள் முகத்தில் விழித்தாக வேண்டும் அவனுக்கு! அந்தளவிற்கு அவள் மேல் காதல்,

    இப்படி அப்படி என்று பார்த்தால்... சித்ராவிற்கு கதிரேசன் தூரத்து சொந்தம்தான். முறைமாப்பிள்ளைதான், ஆனால் பெற்றோர் இல்லாத, வேலை வெட்டியில்லாத, முக்கியமாய் அவளுக்கு ஈடான அந்தஸ்தில்லாத தனக்கு... ‘அவளை காதலிக்க என்ன தகுதியிருக்கு?’ இந்த கேள்வி அவனுள் எழாமலில்லை. என்றாலும், இதெல்லாம் ஒரு காரணமா? அப்பா, அம்மா செத்துப்போனது அவர்கள் தலையெழுத்து, இன்றோ, நாளையோ கவர்ன்மெண்ட் வேலை கிடைத்துவிடத்தான் போகிறது. என்ன பெரிய அந்தஸ்து? நினைத்தால் சம்பாதித்து விடப்போகிறோம். அட... சித்ரா என் மனைவியானால் அத்தனை சொத்தும் எனக்குத்தானே? நான் சித்ராவை காதலிக்கிறேன். அவள் மேல் உயிரையே வைத்திருக்கிறேன். அவளை என் உயிரில் வைத்துத் தாங்குவேன். அவளுக்கு கணவனாக இதைவிட என்ன தகுதி வேண்டும்? ஒரு பெண்ணிற்கு அன்பான கணவன்தானே மிகப்பெரிய சொத்து? இப்படித்தான் தனக்குத்தானே சமாதானப்படுத்திக்கொள்வான்... கதிரேசன்.

    கதிரேசன் திண்ணையை விட்டிறங்கினான். தெருவில் வேறு யாரும் இன்னும் விழிக்கவில்லை.

    கொல்லைப்புறம் சென்றான். மலர்ந்து சிரித்துக் கொண்டிருந்த பூசணிப்பூக்களில் மூன்றை பறித்துக்கொண்டான்.

    அவளை நோக்கி நடந்தான்.

    சித்ரா... அழைத்தான்.

    குரல் கேட்டு நிமிர்ந்தவள், இருட்டில் மசமசப்பாய் நின்றிருந்த அவனை அலட்சியமாய் பார்த்துவிட்டு கோலத்தைப் போட்டு முடித்துவிட்டு கிண்ணத்தோடு எழுந்து நின்றாள்.

    என்னன்னு கூட கேட்கமாட்டியா?

    என்ன? என்றாள் வெறுப்பாய்.

    இந்தா...!

    என்னது?

    பூசணிப்பூ... கோலத்துக்கு நடுவே... வைச்சா... ரொம்ப அழகாயிருக்கும்... உன்னைப்போல...

    என்னமோ... தேவலோகத்திலேர்ந்து பாரிஜாதப்பூவை கொண்டு வந்துட்ட மாதிரி நினைப்பு... சொல்லியபடியே வீட்டினுள் செல்ல, திரும்பினாள்.

    ப்ளீஸ் சித்ரா... இந்தப்பூவை வாங்கிக்கிட்டா நான் சந்தோஷப்படுவேன்.

    இதை உன் காதுல சொருகிக்கிட்டா அதைவிட அதிகமா நான் சந்தோஷப்படுவேன்! கிண்டலாய் சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் சித்ரா.

    அவமானத்தில் உடல் சிறுத்துப்போக அப்படியே நின்றிருந்தான் கதிரேசன்.

    "நேத்தெல்லாம் சளி பிடிச்சிட்டு, தும்மிக்கிட்டு அவஸ்தைப்பட்டுக்கிட்டிருந்தே! இன்னைக்கு ஒரு நாளாவது லேட்டா எந்திரிக்கக் கூடாதா? விடியம்பற எந்திரிச்சி, வாசல் பெருக்கி, தண்ணி தெளிச்சி, கோலம் போடலேன்னு யார் அழுதா?" செண்பகம் மகளின் மேல் ஒரு கண்ணும், பொங்கி வரும் பாலின் மேல் ஒரு கண்ணுமாக செல்லமாய் கோபப்பட்டாள்.

    சித்ரா அம்மாவின் தோளில். இரு கைகளையும் கோர்த்து, தொற்றிக்கொண்டாள்.

    "ஒவ்வோர் வீட்லே... வயசுப் பொண்ணுங்க காலையிலே எந்திரிச்சி வேலைப் பார்க்கறதில்லேன்னு அம்மாங்க... திட்டித் தீர்க்கறாங்க! நீயும் என்னை திட்டி எனர்ஜியை வேஸ்ட் பண்ணக்கூடாதேன்னு நான் காலையிலே எந்திரிச்சு வாசல்

    Enjoying the preview?
    Page 1 of 1