Manam Virumbuthe Unnai
By Manimala
4.5/5
()
About this ebook
Read more from Manimala
Kaathal Thendral Veesumaa Rating: 0 out of 5 stars0 ratingsManjam Vantha Thendral Rating: 5 out of 5 stars5/5Poove Unnai Nesippen Rating: 4 out of 5 stars4/5Manase Manase Rating: 5 out of 5 stars5/5Soorya Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsPonmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsIduppu Siruthavale Rating: 5 out of 5 stars5/5Pani Vadiyum Pookkal Rating: 5 out of 5 stars5/5Irai Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5Nenjathil Nee Rating: 5 out of 5 stars5/5Poo Magal Rating: 5 out of 5 stars5/5Azhage Unnai Aaraathikkiren Rating: 4 out of 5 stars4/5Megamaai Vanthu Pogiren Rating: 5 out of 5 stars5/5Unnai Ondru Ketppen Rating: 5 out of 5 stars5/5Idhayam Thedum Ennuyire Rating: 5 out of 5 stars5/5Oru Malarin Payanam Rating: 5 out of 5 stars5/5
Related to Manam Virumbuthe Unnai
Related ebooks
Poo Malarntha Pothu...! Rating: 0 out of 5 stars0 ratingsUnnnai Thedum Nenjam Rating: 3 out of 5 stars3/5Ennai Mayakkiya Mellisaiye Rating: 0 out of 5 stars0 ratingsManoratham Rating: 4 out of 5 stars4/5Un Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsInba Kaatru Veesattum... Rating: 5 out of 5 stars5/5Kaathalaal Thavikkiren Rating: 5 out of 5 stars5/5Sooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Andha Yetho Ondru…! Rating: 4 out of 5 stars4/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Irai Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5Kadhal Vedham Rating: 5 out of 5 stars5/5Nilavu Thoongum Neram! Rating: 0 out of 5 stars0 ratingsMandiyitten Madhana! Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Thedum Ennuyire Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Siragai Thedum Sittu Kuruvi Rating: 5 out of 5 stars5/5Maanbumigu Maapillai Rating: 0 out of 5 stars0 ratingsTholaintha Devathai Rating: 0 out of 5 stars0 ratingsEppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Un Perai Sollum Pothae Rating: 2 out of 5 stars2/5Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsPuthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Pon Nilaavey! Rating: 5 out of 5 stars5/5Unnai Ondru Ketppen Rating: 5 out of 5 stars5/5Vanavil Oviyame! Rating: 0 out of 5 stars0 ratingsOru Vaanam Iru Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsVelicha Poove Vaa Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Manam Virumbuthe Unnai
2 ratings0 reviews
Book preview
Manam Virumbuthe Unnai - Manimala
10
1
சூரியன் மேற்கு பள்ளத்தில் அமிழ... ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த அந்தி நேரம்.
மணி ஐந்தை கடந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டது. பூரணி ஃபைல்களை சரிபார்த்து மேஜை டிராயரில் வைத்துப் பூட்டி சாவியை தன் ஹேண்ட் பேகில் பத்திரப்படுத்திக் கொண்டாள்.
நேரமாச்சு கிளம்பலாமா பூரணி?
சுதா புடவையை சரி பண்ணியபடி அருகில் வந்தாள்.
கிளம்பியாச்சு. தலைய வலிக்கிறாப்போல இருக்கு. கேன்டீன் போய் காபி சாப்பிடலாமா?
ம்... வா
கேன்டீனில் நுழைந்தார்கள்.
பஜ்ஜி சாப்பிடலாமா பூரணி? சூடா போட்டிருக்கான்!
நீ சாப்பிடு... எனக்கு வேண்டாம். காபி மட்டும் போதும்!
நான் மட்டும் தனியே எப்படி சாப்பிடறது? எனக்கும் காபியே போதும்... இரு வாங்கிட்டு வந்திடுறேன்
என்ற சுதா நிமிடத்தில் காபியோடு வந்தாள்.
காபியை பருகியபடி பூரணியை கண்களால் அளந்தாள் சுதா!
பளீரென்ற மஞ்சள் கலந்த வெண்மை நிறம்! அழகான வட்டமுகம். சுருட்டை முடியை இறுக்கி பின்னலிட்டிருந்தாலும் முகத்திற்கு தனி அழகைத் தந்தது. ஒன்றை செயின். சின்னதாய் முத்து பதித்த கம்மல். நெற்றியில் மிளகு சைஸில் சின்னதாய் ஸ்டிக்கர் பொட்டு. வெள்ளை நிறத்தில் மஞ்சள் பூக்கள் சிதறிய சேலை! பூரணி பெரும்பாலும் வெள்ளையில் கண்ணை உறுத்தாத வண்ணப் பூக்கள் கலந்த புடவையை தான் உடுத்துவாள்.
பணிபுரிவது தனியார் நிறுவனமென்றாலும் புகழ் பெற்ற நிறுவனம். அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிகிறாள். கை நிறைய சம்பளம். ஆண்டவன் எதிலும் குறைவைக்கவில்லை... ஒரே ஒரு விஷயத்தைத் தவிர!
மூன்று வருடங்களுக்கு முன் மகேஷை காதலித்து மணந்தாள் பூரணி. வேறுவேறு ஜாதி எனினும் அவர்கள் காதலுக்கு தடை எழவில்லை. எழக்கூடிய அளவில் இருபக்கமும் குறை ஏதுமில்லை என்பது தான் சரி! மகேஷ் நல்ல குடும்பத்தை சேர்ந்தவன்.
பூரணியிடமும் குறையேதும் சொல்ல முடியாது என்பதால் பெரியோர்களின் சம்மதத்தோடு, விமரிசையாய் திருமணம் நடைபெற்றது. இது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கவில்லையோ என்னவோ, சரியாய் ஆறே மாதத்தில்... பூரணியின் கழுத்திலிருந்த தாலி இறங்கிவிட்டது. அலுவலக விஷயமாய் கல்கத்தா சென்ற மகேஷ் விமான விபத்தில் மரணமடைந்து விட்டான்.
இடிந்துப்போய் விட்டாள் பூரணி! காதல் கணவனை இழந்த துக்கம் அவளை தற்கொலைக்கும் தூண்டியது. மகேஷின் அம்மாதான் பார்த்து பதறி உத்திரத்தில் தொங்கவிருந்தவளைக் காப்பாற்றினாள்.
மகேஷின் அம்மா மற்ற மாமியாரைப் போலில்லை. அன்னம்மாள் நல்லவள். தன் மகனைப் போலவே மருமகள் மீது மட்டற்ற பாசத்தை வைத்திருந்தாள். மகேஷ் நேசித்த ஒவ்வொரு பொருளையும் அவன் நினைவாக போற்றி பாதுகாத்தாள். தன் உயிரினும் மேலாக நேசித்த பூரணியை மட்டும் கட்டாயத்துக்கு விட்டுவிடுவாளா என்ன?
மருமகளைக் கட்டிக் கொண்டு அழுதாள்.
"பாவி... என்ன காரியம் பண்ண இருந்தே? மகேஷ் நம்மை விட்டுப் போய்ட்டான்தான். அதுக்காக... நீயும் போய்டணும்னு முடிவுக்கு வந்திட்டியே பூரணி உன் மூலமா நான் என் பிள்ளையை பார்க்கறேன்டி! உன் மேல எவ்வளவு ஆசை வைச்சிருந்தான்? இப்ப மட்டும் உன்னை விட்டு எங்கேயோ போய்ட்டான்னா நினைக்கிறே? இல்லேம்மா... அவன் உன் கூடவே... உன்னையே சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருக்கான் இந்த வீட்லே காத்தோட காத்தா கலந்திருக்கான். நீ இருக்கிற இடத்திலே எல்லாம் மகேஷ் இருப்பான். என் பிள்ளைய பார்க்கத்தான் முடியாது. நான் சுவாசிக்கிற காத்துலேயாவது இருக்கிறான்ங்கற ஆறுதலாவது உன் மூலமா எனக்கு கிடைக்கணும் பூரணி... இங்கே பார்! என் ராஜாத்தி... இனி, இந்த மாதிரி முடிவுக்கு வரமாட்டேன்னு மகேஷ் போட்டோ முன்னாடி எனக்கு சத்தியம் பண்ணிக்குடு. அதுமட்டுமில்லே... அவனுக்கு நீ... துடைச்சு வைச்ச குத்து விளக்கா இருக்கறதை பார்க்க பிடிக்குமா? தினமும் உனக்கு பூ வாங்கி வருவானே... எதுக்காக? இந்த கோலத்தில் பார்க்கவா?
பாருடி... நான் உன் மாமியார் இல்லே. அம்மா நான் சொல்றதைக் கேள் எங்க வீட்டுக்கு வந்த மகாலட்சுமி எப்பவும் மகாலட்சுமி மாதிரியேதான் இருக்கணும். பொட்டு வச்சுக்க... பூ வச்சுக்க... ஊர் உலகம் என்ன சொல்லுமோன்னு பயப்படாதே! பயந்துக்கிட்டு ஓடறவங்களைதான் நாய் கூட துரத்தும். திரும்பி நின்னு முறைச்சுப்பார். ஒரு கல்லை எறிஞ்சுப்பார்! உனக்கு பயந்துக்கிட்டு ஓடும். அதுதான் கண்ணு உலகம்! இது உன்வீடு! அட்சயா மகேஷோட தங்கச்சி இல்லே! இனி உன்னோட தங்கச்சி! கடைசிவரைக்கும்... உன்னை தூசி தும்பு படாம நாங்க பார்த்துக்கறோம் பூரணி மனசை மட்டும் தளர விடாதேம்மா! அப்புறம்... எங்களையும் நீ உயிரோட பார்க்க மாட்டே..." என்று கதறினாள் அன்னம்மாள்.
மாமியார் மடியில் முகம் புதைத்து தன் வேதனையை எல்லாம் கண்ணீராய் கொட்டினாள் பூரணி
மனதை கொஞ்சம் கொஞ்சமாய் தேற்றி அலுவலகம் சென்றாள். மூன்று மாதம் போயிருக்கும்.
விசாலாட்சி என்ன நினைத்தாளோ, ஏது நினைத்தாளோ, மகளை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல வந்தாள்.
அன்னம்மாவினால் தடுக்க முடியவில்லை, ஆனால் பூரணி எங்கே தன் தாயோடு போய்