Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maanbumigu Maapillai
Maanbumigu Maapillai
Maanbumigu Maapillai
Ebook93 pages35 minutes

Maanbumigu Maapillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580100604432
Maanbumigu Maapillai

Read more from Devibala

Related to Maanbumigu Maapillai

Related ebooks

Reviews for Maanbumigu Maapillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maanbumigu Maapillai - Devibala

    http://www.pustaka.co.in

    மான்புமிகு மாப்பிள்ளை

    Maanbumigu Maapillai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    நாளைக்கு ஆபீசுக்கு லீவு போட்டுடங்க!

    பேன்டை அவிழ்த்து வேட்டிக்கு மாறிக் கொண்டிருந்த கஜபதி நிமிர்ந்தான்.

    எதுக்கு?

    நம்ம கங்காவைப் பெண் பார்க்க வர்றாங்களாம்! அப்பா போன் பண்ணிச் சொன்னார்!

    அப்படியா? நல்லது! அதுக்கு நான் ஏன் லீவு போடணும்?

    உங்களைத் திருத்தவே முடியாது!

    என்ன சொல்ற நீ?

    நீங்க யாரு?

    கஜபதி! தனியார் கம்பெனியில் சாதாரண குமாஸ்தா! தெரிந்துதானே கல்யாணம் செஞ்சுகிட்ட?

    அய்யோ... அது தெரியாதா எனக்கு? இதுவரைக்கும் எங்கப்பாவுக்கு ஒரே மாப்ளை நீங்க!

    அதனால?

    எங்க வீட்ல ஒரு நல்லது, கெட்டதுன்னா நீங்க இல்லாம அதை நடத்துவாங்களா? சொல்லுங்க!

    கஜபதி சிரித்தான்.

    பொண்ணு பாக்கற சமாசாரங்களுக்கெல்லாம் நான் எதுக்கு இந்திரா? நிச்சயமாகி, நிச்சயதார்த்தம் நடக்குதுன்னா, கண்டிப்பா இருக்கணும்! நீ மட்டும் போயிட்டு வா! ஒரு நாள் லீவை வீண் பண்ண வேண்டாம்!

    இல்லீங்க! நீங்க வரலைனா அப்பா வருத்தப்படுவார். அவருக்குப் பிள்ளைகளே இல்லை. நாங்க ரெண்டு பெண்கள்தான். மூத்த மாப்ளை நீங்கதானே பிள்ளை மாதிரி!

    கஜபதி மெளனமாக இருந்தார்.

    நீங்க பக்கத்துல இருந்தா, அப்பாவுக்குத் தெம்பு!

    சரி! எப்ப கங்காவைப் பெண் பார்க்க வர்றாங்களாம்?

    மத்யானம் மூணு மணிக்கு!

    நீயும், நானும் எப்ப உங்க வீட்டுக்குப் போகணும்?

    காலைல சாப்பிட வரச் சொல்லிட்டார் அப்பா. விவரங்களை நீங்க தெரிஞ்சுக வேண்டாமா?

    சரி போகலாம்!

    முகம் கழுவ உள்ளே போய் விட்டான்.

    விளையாடப்போன அவர்களது மகன் உள்ளே ஓடி வந்தான்.

    கஜபதி - இந்திராவுக்குக் கல்யாணமாகி ஏழு வருடங்கள் முடிந்திருந்தன. ஐந்து வயதில் ஒரு மகன்.

    கஜபதிக்கு ஒரு தங்கையும் ஒரு தம்பியும் உண்டு. உள்ளூரில் இல்லை. அம்மா தம்பியிடம்தான் இருக்கிறாள்.

    நடுத்தர வர்க்கம்...

    மாதக் கடைசியில் பற்றாக்குறை.

    இந்திரா எஸ்எஸ்எல்சி பெயிலானவள். அதனால் வேலைக்கு அனுப்ப முடியவில்லை.

    கல்யாண சமயத்தில், எங்க வீட்ல பொம்பிளைகளை வேலைக்கு அனுப்பமாட்டோம் என்று கஜபதி ஜம்பமாகச் சொல்லியாகிவிட்டது.

    இப்போது பட்ஜெட்டில் நாயடி பேயடி பட்டு, மாதக் கடைசியில் கடன் வாங்கும்போது மூச்சு முட்டுகிறது.

    இந்திராவும் படித்தவளாக இருந்து, சம்பாதித்தால் நன்றாக இருக்குமே என்ற ஆதங்கம்.

    தனியார் நிறுவனம் ஒன்றில் நாலாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் பதவி.

    இந்திராவுக்கே தங்கை மேல சன்னமான பொறாமை உண்டு. வெளியே காட்டிக் கொண்டதில்லை.

    அப்பா ரிடையராக இன்னும் ஒரு வருஷம். அதற்குள் கங்காவைக் கட்டிக் கொடுக்க அவசரம்...

    காலை எழுந்து சீக்கிரமே குளித்து விட்டு, ஒன்பது மணிக்கெல்லாம் இருவரும் புறப்பட்டார்கள்.

    பையனை ரிக்ஷாவில் ஏற்றி பள்ளிக்கடத்துக்கு அனுப்பி விட்டார்கள்.

    என்னங்க!

    சொல்லு!

    நம்ம பையனைக் கூட வேற ஸ்கூலுக்கு மாத்தணும்.

    ஏன் இந்த ஸ்கூலுக்கு என்னா?

    ரொம்ப சுமாரா இருக்கு. சரியான படிப்பு இல்லீங்க! கான்வெண்ட்ல சேர்த்துப் படிக்க வச்சா, எவ்ளோ நல்லாருக்கும். பக்கத்து வீட்ல மகேஷ் பையன் கான்வெண்ட்ல படிக்கறான். இப்பவே தாட்பூட்னு இங்கிலீஷ்ல பொளக்கறான்!

    சரி! அவனோட அப்பா பேங்க்ல ஆபீசர். அம்மா டெலிபோன் ஆபரேட்டர். பணத்துக்குப் பஞ்சமில்லை! இங்கே... இருபதாம் தேதியானா, இழுக்குதே!

    சரிங்க! கஷ்டம்தான் குடும்பனாலே! அதுக்காக?

    என் மூட் அவுட் ஆகப்போகுது. பேசாம வா! படிக்கற பசங்க எந்த ஸ்கூல்ல படிச்சாலும், மேதையா வரத்தான் போறாங்க. தெரியுதா?

    இந்திரா பேசவில்லை.

    இருவரும் அப்பா வீட்டை அடைய,

    வாங்க மாப்ளை! வாம்மா இந்திரா! அப்பா வாசலுக்கே வந்து வரவேற்றார்.

    அம்மாவும் ஓடி வந்தாள்.

    கங்கா குடிக்கத் தண்ணீர் எடுத்து வந்தாள்.

    அம்மா நாலைந்து நிமிடங்களில் காபி

    Enjoying the preview?
    Page 1 of 1