Unakkum Vazhvu Varum
By Devibala
()
About this ebook
பெற்று அம்மா, அப்பாவுக்கே பிள்ளையை கண்டால் பயம். உடன்பிறந்த தம்பிகள், தங்கைக்கு அண்ணனைக் கண்டால் பயம். மனைவிக்கு கணவன் மேல் பயம். அவளது அம்மாவுக்கு மாப்பிள்ளையை கண்டால் நடுக்கம். சக ஊழியர்களுக்கு இவர் வந்தாலே டெரர். யார் இவர்? அத்தனை பேரையும் நடுங்க வைக்கும் அளவுக்கு இவர் பெரிய தாதாவா? இவருக்கும் பொண்ணு கிடைக்குமா? வாருங்கள் வாசிப்போம் உனக்கும் வாழ்வு வரும் கதையை...
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Vizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Athuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5
Related to Unakkum Vazhvu Varum
Related ebooks
Vidiyum Neram Rating: 0 out of 5 stars0 ratingsIdhayam Pohuthe! Rating: 0 out of 5 stars0 ratingsVaigarai Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsRudhra Thaandavam Rating: 0 out of 5 stars0 ratingsKetta, Enna Thappu? Rating: 0 out of 5 stars0 ratingsJuly Malargale! Rating: 0 out of 5 stars0 ratingsIrul Vaakku! Rating: 0 out of 5 stars0 ratingsKalyanam! Kacheri! Rating: 0 out of 5 stars0 ratingsKabaddi... Kabaddi! Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNee Sirithal Naan Siripean Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Paar Rating: 0 out of 5 stars0 ratingsKaathalikka Theriyavillai Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthirukku! Rating: 0 out of 5 stars0 ratingsAvasara Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsIru Dhuruvam Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsVetri... 2023 Rating: 0 out of 5 stars0 ratingsLinga Bairavi Rating: 0 out of 5 stars0 ratingsThappikka Mudiyumaa Rating: 0 out of 5 stars0 ratingsஅதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsJeevanaadi Rating: 0 out of 5 stars0 ratingsVaarisu Rating: 0 out of 5 stars0 ratingsPoonthenraley! Rating: 0 out of 5 stars0 ratingsPaniththirai Rating: 0 out of 5 stars0 ratingsChinnanchiru Kiliye! Rating: 0 out of 5 stars0 ratingsAaravaaram Rating: 0 out of 5 stars0 ratingsNeeradum Kangal Rating: 0 out of 5 stars0 ratingsNavarasa Nayagi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Unakkum Vazhvu Varum
0 ratings0 reviews
Book preview
Unakkum Vazhvu Varum - Devibala
https://www.pustaka.co.in
உனக்கும் வாழ்வு வரும்
Unakkum Vazhvu Varum
Author:
தேவிபாலா
Devibala
For more books
https://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 01
அத்தியாயம் 02
அத்தியாயம் 03
அத்தியாயம் 04
அத்தியாயம் 05
அத்தியாயம் 06
அத்தியாயம் 07
அத்தியாயம் 08
அத்தியாயம் 09
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
அத்தியாயம் 24
அத்தியாயம் 25
அத்தியாயம் 01
பயம்... பயம்... பயம்!
பெற்ற அம்மா, அப்பாவுக்கே பிள்ளையை கண்டால் பயம். உடன் பிறந்த தம்பிகள், தங்கைக்கு அண்ணனை கண்டால் பயம். மனைவிக்கு கணவன் மேல் பயம், அவளது அம்மாவுக்கு மாப்பிள்ளையை கண்டால் நடுக்கம். சக ஊழியர்களுக்கு இவர் வந்தாலே டெரர். யார் இவர்? அத்தனை பேரையும் நடுங்க வைக்கும் அளவுக்கு இவர் பெரிய தாதாவா?
இல்லை, இந்த கதையின் நாயகன் விநாயகம். முன் கோபத்தை ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர். அந்த உச்சந்தலையில் நிற்கும் கோபம் ஏன்? எப்போது யாரால் வந்தது. கொஞ்சம் முன் கதைக்கு போனால் தெரியும். நம் சமூகத்தில் நாலு வீட்டுக்கு ஒரு வீடு இந்த மாதிரி விநாயகம் உண்டு.
பிறக்கும் போதே இந்த மாதிரி விநாயகம்கள் பிறப்பதில்லை. குடும்பமும், சுற்று சூழலும் இந்த நிலைக்கு கொண்டு வருகிறது.
"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான், மண்ணில் பிறக்கையிலே.
அது நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் பெற்றோர் வளர்க்கையிலே!"
இதுதான் இந்தக்கதை.
பத்து வருஷங்கள் குழந்தை பிறக்காமல், பார்க்காத டாக்டர் இல்லை, போகாத கோயில் இல்லை, வேண்டாத தெய்வங்கள் இல்லை. குடும்பமும், ஊரும், உறவும் இவர்களை கடுமையாக விமர்சித்து, நோகடித்து, மலட்டுப்பட்டம் கட்டி, இவர்களை ஏறத்தாழ ஒதுக்கி வைத்து, மனசு உடைந்து வாழ்க்கையே வெறுத்த நேரம், அவள் கர்ப்பமானாள். ஆனந்த கண்ணீர் வடித்து, பார்த்து பார்த்து பத்து மாதங்கள் உறக்கம் துறந்து, பெற்ற பிள்ளைதான், விநாயகம். அதனால் விநாயகம் ஒரு தும்மல் போட்டால் கூட துடித்து போகும் பெற்றவர்கள், அவனை உச்சந்தலையில் வைத்து சீராட்ட, விநாயகம் கேட்டதையெல்லாம் தந்து, நினைத்ததையெல்லாம் நடத்த, விநாயகத்தோடு முன் கோபம், பிடிவாதம், வீம்பு, தொட்டதற்கெல்லாம் ஆவேசம் என சகல கெட்ட குணங்களும் வளர்ந்தது. வன்முறைக்கு பஞ்சமில்லை. பெற்றவர்களையே துன்புறுத்தி காரியம் சாதிக்கும் வெறி என உடம்போடு ஒட்டி வளர்ந்தது. முதல் மூன்று வருஷங்களுக்கு பெற்றவர்களுக்கு இது பெரிதாக படவில்லை. ஆனால் வீட்டுக்கு வரும் உறவுக்காரர்களை தாக்குவது போன்ற சம்பவங்களால் பிரச்னை ஆரம்பமானது.
நீங்க ரெண்டு பேரும் குழந்தையை கண்டிச்சு வளர்க்கணும். அறியாத பருவத்துல பெத்தவங்க தான் சரியான பாதைல பிள்ளைகளை கொண்டு போகணும்.
அதற்கு இருவரும் உறவுகளை பகைத்து கொண்டார்கள். அதனால் கடுமையான வசவுகளை வாங்கி கட்டிக்கொண்டார்கள். எங்களுக்கு என்ன என ஒதுங்கினார்கள்.
இவர்கள் விநாயகத்தை மூன்று வயதில் பள்ளியில் விட்டார்கள். மகா புத்திசாலி விநாயகம். ஒருமுறை சொன்னால் போதும். படக்கென பிடித்துக்கொள்ளும் கற்பூர புத்தி. பத்து வயது சிறுவனுக்குள்ள மூளை மூன்று வயதில் இருந்தது. பள்ளியில் வியந்தார்கள். ஆனால் அந்தக்கோபம், பிடிவாதம் அங்கும் நீடிக்க, ஒரு டீச்சர் கண்டிக்க, அவர் மேல் புத்தகத்தை விநாயகம் வீச, அந்த டீச்சர் அடித்து விட்டார். இது பெரிய பிரச்னையாகி, பள்ளி முதல்வர் வரை செல்ல,
பையனுக்கு இத்தனை கோபம், இந்த வயசுல கூடாது. நீங்க கண்டிச்சு வளர்க்கணும். ஆனா டீச்சருக்கு அடிக்கற உரிமை இல்லை.
என தீர்ப்பு வந்தது. இதே கோபம் நீடித்தால் பள்ளியை விட்டு பையனை நீக்க வேண்டி வரும் என்ற எச்சரிக்கையும் கூடவே வர, வீட்டுக்கு வந்த அப்பா, பதட்டமாக இருந்தார்.
இவனை யாராவது சொன்னா வலிக்குது. ஆனா இதே நிலை நீடிச்சா, இவனோட எதிர்காலம் பாதிக்கும். நாமதான் கண்டிச்சு வளர்க்கணும்.
அம்மா விநாயகத்தை தனியாக அழைத்து வந்து மடியில் இருத்தி, அன்பான உபதேசங்களை தந்து,
கண்ணா! உன் புத்தியை பார்த்து எல்லாரும் பிரமிக்கறாங்க. ஆனா கோபம் பார்த்து எதிர்க்கறாங்க. எப்பவும் நீ முதல் இடத்துல நிக்கணும்னா, இந்த கோபம் கூடாது. வெளில உள்ளவங்க கிட்ட கோவப்பட நமக்கு உரிமை இல்லை. அதுக்கு நியாயமான காரணங்கள் வேணும். வீட்லதான் எங்களுக்கு நீ உசத்தி. வெளிலயும் நீ உசத்தியா இருக்கணும்னா, உன்னை நீ மாற்றிக்கணும்.
எந்த நேரத்தில் அம்மா சொன்னாளோ, அது மூளையில் நன்றாக பதிந்திருக்க வேண்டும். பாராட்டில் விநாயகத்துக்கு எப்போதுமே ஒரு மயக்கம் உண்டு. அதுதான், விநாயகத்தை உயரத்துக்கு கொண்டு வந்தது. விநாயகம் பிறந்து ஐந்து வருஷங்களுக்கு பிறகு அடுத்தடுத்து மூன்று வருஷ இடைவெளியில் இரண்டு பிள்ளைகளும், கடைசியாக நாலு வருஷங்கள் கழித்து ஒரு மகளும் பிறந்தார்கள். தங்கை பிறக்கும் போது விநாயகத்துக்கு பன்னிரெண்டு வயது. ஏழாம் வகுப்பு. படிப்பில் புலி. முதல் வகுப்பிலிருந்து இன்று வரை யாரையும் தன்னை முந்த விடவில்லை. ஸ்கூல் ஃபர்ஸ்ட். பாட்டு, நடனம், நீச்சல், விளையாட்டு என எதையும் விட்டு வைக்கவில்லை. கணிப்பொறி உருவாகி, விஞ்ஞான வளர்ச்சி வேகமாக ஆரம்பித்த நேரம், அதையும் விநாயகம் விடவில்லை. பள்ளிக்கூடம் தலையில் வைத்து கொண்டாடியது. பல பரிசுகள். படிப்பு, ஸ்காலர்ஷிப்பில். பத்திரிகைகளில் புகைப்படத்துடன் அடுத்தடுத்த வெற்றி செய்திகள். இதனால் கர்வமும், ஆணவமும், திமிரும் கூடவே வளர்ந்தது. தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற அகங்காரம் தலை விரித்தாடியது. பெற்றோரை முதலில் பதம் பார்த்தது. அப்பாவை எதிர்த்து பேச,
இதப்பாரு! நீ நடக்கறது சரியில்லை. உன்னை இந்த உயரத்துக்கு கொண்டு வர்ற அப்பாவையே எதிர்க்கறியா?
அம்மா கேட்க,
நிறுத்தும்மா. அப்பா முதல் வருஷம் பணம் கட்டினார். ரெண்டாம் வகுப்பிலேருந்து நான் ஸ்காலர்ஷிப்ல படிக்கறேன். காரணம் என் மூளை. நீங்க சொல்ற எல்லாத்தையும் நான் கேக்கணும்னு அவசியமில்லை.
அம்மா அடிக்க கை ஓங்க, அப்பா தடுத்து விட்டார்.
வேண்டாம், அவனை நீ அடிச்சா, எனக்கு வலிக்கும்.
இல்லீங்க... இவனை இப்படியே விடறதுல எனக்கு உடன்பாடு இல்லை. படிக்கத்தான் உபகார சம்பளம். சோறு போடறது நாம. பள்ளிக்கூடத்துல ராத்திரி படுத்து தூங்க முடியாது. உயர உயர பறந்தாலும் தரை இறங்கித்தான் ஆகணும். இதை அவனுக்கு புரிய வைக்கணும்.
மறுநாள் காலை பள்ளிக்கு போன விநாயகம், மாலை வீடு திரும்பவில்லை. இரவாகி விட, பெற்றோரும் குடும்பமும் பதறி, தேடி அலைந்து, தெரிந்தவர்களுக்கெல்லாம் ஃபோன் போட்டு எந்த பலனும் இல்லை. இரவு பத்து மணிக்கு வீட்டில் அனல் வீசியது.
"நான் தடுத்தும் நீ கேக்கலை. அவசரப்பட்டு வார்த்தைகளை