Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kathavu Thiranthirukku!
Kathavu Thiranthirukku!
Kathavu Thiranthirukku!
Ebook142 pages1 hour

Kathavu Thiranthirukku!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603654
Kathavu Thiranthirukku!

Read more from Devibala

Related to Kathavu Thiranthirukku!

Related ebooks

Reviews for Kathavu Thiranthirukku!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kathavu Thiranthirukku! - Devibala

    http://www.pustaka.co.in

    கதவு திறந்திருக்கு!

    Kathavu thiranthirukku!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    வசுமதி தனியார் வங்கி ஒன்றில் உயர் அதிகாரி! வயது 41. வசீகரமான பெண்மணி! தலையில் ஒரு நரை கூட இல்லை! நல்ல நிறம். தளதளப்பான உடம்பு! அதற்கு தக்க அளவான, அழகான ஒப்பனை! உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதில் கவனம்! லாவகமாக கார் ஓட்டும் நளினம்! பிரமாதமான ஆங்கிலம், தைரியசாலி! கறார், கண்டிப்பு எல்லாம் நிறைந்தவள்!

    தெரியாத சங்கதி இல்லை! அஷ்டாவதானி!

    எல்லாம் நிறைந்த ஒரு முழுமையான பெண்! இந்தக் கதையின் நாயகி!

    கடமை தவறாத பெண்! ஒருநாள்கூட விடுப்பு எடுக்கமாட்டாள்! வங்கியில் சக ஊழியர்களுக்கு வசுமதி என்றால் சிம்ம சொப்பனம். வேலையில் அத்தனை கண்டிப்பு! அதே நேரம் சிரித்த முகத்துடன் நட்பாக பழகும் குணம் - பிறருக்கு, கஷ்டப்படும் மனிதர்களுக்கு தாராளமாக உதவி செய்யும் குணம்!

    மேடம் என்றால் பாசமும் உண்டு - கண்டிப்பும் உண்டு.

    தேவைப்பட்டால் ஞாயிறுகூட வேலைக்கு வந்து விடுவாள்.

    எம்.காம், எம்.பி.ஏ. முடிச்சு இன்னும் பல டிபார்ட்மெண்ட் தொடர்பான தேர்வுகள்.

    சின்ன வயதில் பெரிய பதவி. ஏறத்தாழ 2 லட்ச ரூபாய் சம்பளம்!

    சகல வசதிகளுடன் நகரின் மையத்தில் 2000 சதுர அடிக்கு ஃப்ளாட்! எல்லா வசதிகளும் உண்டு.

    கணவர் உயிருடன் இல்லை.

    பத்து வருடங்களுக்கு முன்னால ஒரு சாலை விபத்தில் உயிரை விட்டார்.

    வேகமாக, இரவு நேரத்தில் யாரோ காரை ஓட்ட, அன்றைக்கு பைக் எடுத்துப் போன ரங்கன் மேல ராட்சஸ வேக கார் மோதி ரங்கனின் தலை மோதி மூளை வரை படுகாயமடைந்து மூன்று நாட்கள் போராடி மருத்துவமனையில் ரங்கன் உயிரிழந்தார்.

    மோதிய கார் யாரது என்பது தெரியவில்லை.

    எந்த ஒரு அடையாளமும் இல்லை.

    போலீசுக்கு புகார் போனது. சாலையில் அந்த பகுதிகளில் அந்த நாட்களில் காமிரா வசதிகள் கிடையாது.

    எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.

    கொலைக்காரப் பாவி யாரென கண்டுபிடிக்கவே முடியவில்லை.

    ரங்கன் உடல் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் முடிந்து ரங்கன் படமானார்.

    அந்த நேரம் வசுமதிக்கு 31 வயசு! வாழ வேண்டிய இளம் வயசு! கணவனை இழந்து விட்டார்.

    வசுமதி அப்போது வங்கியில் ஒரு சாதாரண கிளர்க். ரங்கன் தனியாரில் அதிகாரி, ஓரளவுக்கு நல்ல பதவி.

    இதமான கணவர். வசுமதியை தாங்கினார்.

    அவரது சேமிப்பு, இன்சூரன்ஸ் எல்லாம் சேர்ந்து அப்போதே சில லட்சங்கள் கைக்கு வர, சேமிப்பில் போட்டாள் வசுமதி.

    காதல் கல்யாணமல்ல, பெரியவர்கள் பார்த்து செய்தது.

    இரு பக்கத்து உறவுகளும் இருந்தாலும், அருகில் யாருமில்லை. இருந்தாலும் ஒட்டவில்லை.

    அதனால் தொடக்கம் முதலே தனிக்குடித்தனம்தான்.

    முதலில் பிறந்தது பெண். கல்யாணம் 24 வயதில். ரங்கனுக்கு 28. முதல் குழந்தை பெண் குழந்தை! அட்சயா! பிரசவ நேரத்தில் பிறந்த வீட்டார்கூட இல்லை! ரங்கனே லீவு போட்டு அருகில் இருந்து பிரசவம் நடந்தது. சுகபிரசவம். 4 ஆம் நாள் வீட்டுக்கு அழைத்து வந்து பத்திய சமையல் சமைத்து, குழந்தையை குளிப்பாட்டி, மனைவிக்கு ஒரு தாயாக இருந்தார் ரங்கன்.

    எங்க அம்மா இல்லை! உங்கம்மாவை கூப்பிடக் கூடாதா?

    வருவாங்க! வயசாச்சு! நாளைக்கு படுத்துட்டா, உன் மேல பழி வரும். எதுக்கு நம்ம வாழ்க்கை, நம்ம குழந்தை! நாம தான் பார்த்துக்கனும், செஞ்சுக்கலாம்!

    நெகிழ்ந்து போனாள் வசுமதி.

    அட்சயா பிறந்த ஐந்தாம் மாதமே வேலைக்குச் சேர்ந்து விட்டாள். வீட்டு வேலைகளுக்கு ஒரு பெண்! குழந்தை பராமரிப்புக்கு ஒருத்தி என வேலைக்கு அமர்த்தி விட்டார்கள்.

    அவர்களுக்கு எல்லாம் கற்றுக் கொடுத்து, நல்ல சம்பளமும், சாப்பாடும்! ஜாம் ஜாம் என நடந்தது.

    அக்கம் பக்கம் நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

    வசுமதி-ரங்கன் யாரையும் சார்ந்து வாழறதில்லை, தன்னம்பிக்கை, தைரியம் அதிகம்.

    இருந்தா இப்படி இருக்கனும். சில பேர் புகுந்த வீட்டையும் ஒட்ட விடாம, பிறந்த வீட்டார் கழுத்தை அறுத்துட்டு வாழற ரகம்!

    வசுமதி தங்கம்!

    இருக்கும் வேலை, குடும்பம் எதையும் விட்டு வைப்பதில்லை. அட்சயா பிறந்த மூன்று வருடங்களில் அஸ்வின் பிறந்தான். இப்போதும் இருவரும் சளைக்கவில்லை.

    எல்லாமே சீராக நடந்தது.

    இருவருக்குமே பதவி உயர்வு, கணிசமான சம்பள உயர்வு வர, கையில சேமிப்பும் இருக்க, கடனை வாங்கி, பிரம்மாண்ட வீட்டை வாங்கிவிட்டார்கள்.

    அட்டகாச கிரஹப்பிரவேசம்!

    மற்றவர்கள் திருஷ்டிப்படும் வாழ்க்கை!

    பட்டே விட்டது.

    அட்சயாவுக்கு ஏழு வயது, அஸ்வினுக்கு நாலு வயசு, அந்த விபத்து ரங்கனை வாரிச் சுருட்டிக்கொண்டு போய்விட்டது.

    இப்படி ஒரு புயல் தன் வாழ்க்கையில் வீசும் என்று வசுமதி சற்றும் எதிர்பார்க்கவில்லை.

    அது அவளை புரட்டிப்போட்டு விட்டது.

    இளம் குழந்தைகள் இரண்டு, வீட்டுக்கடன், கார்க்கடன், குடும்பம் நடந்தாக வேண்டும்.

    முதல் 16 நாட்கள் ரங்கனின் காரியம் நடக்கும் வரை வசுமதி துவண்டு கிடந்தாள்.

    உறவும் நட்பும் விவரம் கேட்டு கூடி விட்டது. கொள்ளி போட்டு ரங்கன் சாம்பலானதும் மெதுவாக கழண்டு கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

    வேண்டாம். நாளைக்கு நம்ம தலைல பாரம் இறங்கக்கூடாது.

    அது கஷ்டம்.

    சரி! சமாளிக்கட்டும்! இத்தனை நாள் தனியாத்தானே வாழ்ந்தா! யாரையாவது நெருங்க விட்டாளா! படட்டும்!

    இதுக்குத்தான் மனுஷங்க வேணும்னு சொல்றது. எல்லார் கூடவும் ஒட்டுறவா இருந்தா, இப்பத் தாங்கிப் புடிப்பாங்க இல்லை! கழட்டி விட்டா, விலகித்தான் போவாங்க!

    சகல விமர்சனங்களும் வசுமதி காதில் விழுந்தது.

    அவள் பொருட்படுத்தவில்லை.

    நன்றாக வாழ்ந்த போது இவர்களைப் பார்த்து வயிறு எரிந்தவர்கள், இப்போது சந்தோஷப்பட்டார்கள்.

    இது உலக இயல்பு!

    ஆஸ்பத்திரியில் இருந்தாலும் சுவாசம் பிரிந்தாலும் பார்க்க வந்து அனுதாபம் கொட்டுவது பெரும்பாலும் நடிப்புதான்.

    நூற்றுக்கு நாலுதான் நிஜம்!

    வேதனையும், கண்ணீரும் ரெண்டு தேறினால் அதிகம்.

    மற்ற எல்லாமே நடிப்பு! நிஜமான வருத்தமுள்ளவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். முகத்தில் சோகம் மட்டும் கப்பிக் கிடக்கும்.

    அதிகம் பேசினால் கண்டிப்பாக அது நடிப்பு.

    வேஷத்தை மறைக்க விவரமான வசனங்கள் வரும்!

    சாவு வீட்டிலேயே நேர்முக வர்ணனையாளர் பதவியை யாராவது எடுத்துக் கொள்வார்கள்!

    கடைசியா நான்தானே கூட இருந்தேன்! ஒரே ஒரு இட்லி! அதைக்கூட நான்தான் ஊட்டி விட்டேன்! என் மேல அப்படி ஒரு பாசம்!

    என்கூட போன தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சு, பலகாரம் சாப்பிட்டு... நான் பண்ற ரசம்னா உயிரு!

    இது மாதிரி டயலாக்குகள் நிறைய வரும்!

    உள்ளே வேறு மாதிரி ஓடும்!

    ரெண்டு சம்பளமா! ரெண்டாயிரம் சதுர அடிக்கு வீடா? கட்டினீயே அதுதான் உச்சந்தலைல ஓங்கி அடிச்சிட்டான் கடவுள்!

    வசுமதி சகலமும் கவனிப்பாள்.

    பெரும்பாலும் நடப்புகளை ஒரு பார்வையாளராக இருந்து கவனிக்கும் பக்குவம் அதிகம்!

    காரியம் முடிந்த கையோடு தெளிந்து விட்டாள்.

    இனி பட்ஜெட்டில் வாழவேண்டும்!

    குழந்தைகளை கரை சேர்ப்பது முக்கியம். வேலையாட்களை நிறுத்திவிட்டாள்!

    நாலு மணிக்கு எழுந்து குளித்து 2 வேளைக்கும் சமைத்து, பிள்ளைகளுக்கு டப்பா கட்டி, போகும்போது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் இறக்கிவிடுவாள்.

    பள்ளிக்கூட வாகனம் வீட்டு வாசலில் இறக்கிவிடும்!

    பிரச்சனையில்லை!

    ஏழு வயசு அட்சயாவுக்கு அப்போது முதலே எல்லாம் கற்பிக்கத் தொடங்கினாள்.

    "பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1