Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naan Uppa? Sarkkaraiya?
Naan Uppa? Sarkkaraiya?
Naan Uppa? Sarkkaraiya?
Ebook80 pages44 minutes

Naan Uppa? Sarkkaraiya?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உப்பு அதிகமானால் கரிக்கும். தவிர,.ரத்த அழுத்தம் கூடி, உடலில் பல பிரச்னைகளை உருவாக்கி, நோயாளியாக்கி விடும்.

சர்க்கரை, அதிகமானால் திகட்டும். அதேசமயம், சர்க்கரை நோய் வந்து சமயத்தில் கால்களையே இழக்கும் நிலை கூட வரலாம். ஆனால் இவையிரண்டும் இல்லாவிட்டால் உணவில் சுவையில்லை.

வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு தாயும், மனைவியும் இதைப்போலதான். அவர்கள் ருசியை கூட்டப்போகிறார்களா? அல்லது அவனை நோயாளி ஆக்கப்போகிறார்களா? இதுதான் இந்த நாவல்.

Languageதமிழ்
Release dateMay 28, 2022
ISBN6580100608509
Naan Uppa? Sarkkaraiya?

Read more from Devibala

Related to Naan Uppa? Sarkkaraiya?

Related ebooks

Reviews for Naan Uppa? Sarkkaraiya?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naan Uppa? Sarkkaraiya? - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நான் உப்பா? சர்க்கரையா?

    Naan Uppa? Sarkkaraiya?

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம்.01.

    அத்தியாயம்..02.

    அத்தியாயம்..03.

    அத்தியாயம்..04

    அத்தியாயம்…05.

    அத்தியாயம்….06.

    அத்தியாயம்...07

    அத்தியாயம்..08!

    அத்தியாயம்..10!

    அத்தியாயம்..11!

    அத்தியாயம்..12!

    அத்தியாயம்.01.

    இந்தக்கதைக்கு இரண்டு கதாநாயகிகள். முதல் நாயகி, செண்பகம். அம்மா. வெற்றிக்கு அம்மா. வெற்றிதான் கதையின் நாயகன். முதலில் அம்மா செண்பகத்தை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்து கொண்டால்தான் இந்த கதை ருசிக்கும். செண்பகத்துக்கு இப்போது வயது ஐம்பத்தி இரண்டு. ஆனால் பார்வைக்கு நாற்பது கூட சொல்ல முடியாது. அப்படி ஒரு இளமை தோற்றம். நல்ல நிறம்! பெரிய கண்கள். அளவான உடம்பு. அழகான முகம், நியாயமான உயரம். ஒரு ஐம்பத்தி ரெண்டு வயது பெண்மணிக்கு எதற்கு இத்தனை வர்ணனை என நீங்கள் கேட்கலாம். அது இந்த கதைக்கு தேவை என்பது முதல் காரணம். இரண்டாவது காரணம், அழகை எந்த வயதிலும் எந்த வயதுக்காரர்களும் ரசிக்கலாம். ஒரு பெண்ணை ரசிப்பது காமம் என்றால் அது முட்டாள்தனம். ரசனைக்கும், காமத்துக்கும் வேறுபாடு தெரியாவிட்டால், மனிதன் பக்குவப்படவில்லை என்று அர்த்தம். போகட்டும்! நாம் கதைக்கு வருவோம்.

    செண்பகத்துக்கு அப்பா இல்லை. சிறு வயதில் இழந்து விட்டாள். விதவை தாயார், பல விதங்களிலும் பட்ட வேதனைகளை அவமானங்களை அருகில் இருந்து பார்த்தவள் செண்பகம். அண்ணன், அவனுக்கு மனைவி வரும் வரை சரியாக இருந்தான். அதன் பிறகு அவன் மாறிப்போக, குடும்பம் கொஞ்சம் தள்ளாடியது. ஆனால் அந்த நேரம் செண்பகம் தன் பட்டப்படிப்பில் இருந்ததால்,.பல்லை கடித்துக்கொண்டு ஒரு வருஷத்தை ஓட்டி விட்டார்கள். செண்பகத்துக்கு பி.காம் முடித்ததும், ஒரு வங்கியில் வேலை கிடைத்து விட்டது. உடனே முதல் சம்பளம் வந்ததுமே தனி வீடு பார்த்து விட்டாள். அண்ணன் கடுப்பாகி விட்டான்.

    அப்படி என்ன அவசியம்? நீ சின்னப்பொண்ணு! அம்மாவுக்கு விவரம் போதாது. தனியா ரெண்டு பேரும் இருக்க வேண்டிய அவசியம் என்ன? ஊர் என்னை என்ன பேசும்?

    முதல்ல நீ சொன்னதெல்லாம் நியாயம் அண்ணே! ஆனா ஊர் என்னை என்ன பேசும்னு இப்ப கேட்டியே! அங்கே உன் தோல் உரிஞ்சு போச்சு.! நாங்க, அம்மாவும் தங்கச்சியும் தனியா போறதைப்பற்றி நீ கவலைப்படலை! ஊர் உன்னை பேசுமேனு கவலைப்படறே! சுயநலமான உன் கிட்ட எங்களுக்கு என்ன பாதுகாப்பு?

    அண்ணி குறுக்கே புகுந்தாள்.

    உனக்கு ஏற்கனவே வாய்க்கொழுப்பு அதிகம் செண்பகம். உன் காரியம் ஆயிடுச்சு. படிப்பு முடியற வரைக்கும் எங்க தயவு தேவையா இருந்தது. இப்ப வேலை கிடைச்சதும் உன் புத்தியை காட்டறியா?

    அண்ணி! அண்ணனை படிக்க வச்சதுதான் அப்பா! அப்பாவால முழுக்க பலனடைஞ்சது உங்க புருஷன்தான். அப்பா செத்தப்புறம் அவரோட பேமிலி பென்ஷன் அம்மாவுக்கு வருது. தன் நகைகளை வித்துத்தான் அம்மா என் ஃபீஸை கட்டினாங்க! அண்ணன் கட்டலை. அது மட்டுமில்லை, இப்ப வரைக்கும் ஒரு நாளைக்கு பதினாறு மணி நேரம் எங்கம்மாதான் உழைக்கறாங்க! நீங்க ஒரு துரும்பைக்கூட கிள்ளி போடலை. எத்தனை நாளைக்கு அம்மா ஒடம்புல தெம்பு இருக்கும்? இன்னும் நான் சொல்ல ஆரம்பிச்சா தாங்க மாட்டீங்க!

    போதும்டி செண்பகம். எதுக்கும்மா பிரச்னை?

    அம்மா! இப்பக்கூட நானா பேச்சை தொடங்கலை. ஆரம்பிச்சது இவங்கதான்.அப்படியும் நான் பேசலைனா எப்படி? வேலை கிடைச்சு என் கால்ல நிக்கற திமிர்ல நான் இப்ப வீடு பாக்கலைம்மா. உனக்கு விடுதலை தரத்தான் இந்த தீர்மானம்?

    உங்கம்மாவை யாரும் இங்கே ஜெயில்ல போடலை!

    அது ஒண்ணுதான் பாக்கி? இதை விட பெரிய ஜெயில் இருக்கா என்ன? எங்கண்ணன் உங்க பேச்சை கேட்டு நடக்கறது தப்புனு நான் சொல்லலை. மனைவினு ஒருத்தி வந்துட்டா, காலத்துக்கும் கூட வாழப்போறவ அவதான். அவளுக்கு ஒரு ஆம்பளை அனுசரிச்சு போறது நியாயம்தான். டார்ச்சர் பண்ற மாமியார் நாத்தனார்னா சண்டை போடலாம். எங்கம்மா மாதிரி வாயில்லா பூச்சிகளை வதைக்கக்கூடாது. அதுக்கொரு முடிவு கட்டத்தான் நான் வீடு பார்த்தேன். ஏன்? என் சம்பளத்துக்கும் சேர்த்து பட்ஜெட் போட்டிருந்தீங்களோ?

    "போதும் நிறுத்துடி! அந்த அளவுக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1