Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irumbu Changili
Irumbu Changili
Irumbu Changili
Ebook61 pages23 minutes

Irumbu Changili

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பவானி குடும்ப சூழ்நிலை காரணமாக 30 வயதில் இரண்டாம் தரமாக சம்பத் என்பவருடம் திருமணம் நடக்கிறது. சம்பத் முதல் மனைவி இறக்கவில்லை. இவர்களுக்குள் விவாகரத்தும் ஆகவில்லை. அப்படியானால் அவள் என்ன ஆனாள்? ஏன் சம்பத் இவளை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டான்? பவானியின் வாழ்க்கை என்ன ஆனது? வாருங்கள் பூட்டிய இரும்பு சங்கிலியை திறந்து பார்க்கலாம்...

Languageதமிழ்
Release dateOct 22, 2022
ISBN6580100608137
Irumbu Changili

Read more from Devibala

Related to Irumbu Changili

Related ebooks

Reviews for Irumbu Changili

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irumbu Changili - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    இரும்புச் சங்கிலி

    Irumbu Changili

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    முகத்தை கழுவி, சேலையை மாத்திட்டு வா பவானி! முக்கியமான விஷயம் பேசணும்!

    உள்ளே அழைத்ததும் அண்ணன் இதைத்தான் சொன்னான்.

    தன் கைப்பையை உள்ளே வைத்துவிட்டு பின்கட்டுக்குப் போனாள் பவானி! தன்னைக் கொஞ்சம் தெளிய வைத்துக்கொண்டு, தலைவாரி, லேசாகப் பவுடர் போட்டு, பொட்டு வைத்துக்கொண்டாள்.

    அம்மா காபியுடன் வந்தாள்.

    அம்மாவின் பார்வையிலும் ஒரு கேள்விக்குறி!

    குடித்துவிட்டுக் கூடத்துக்கு வந்தாள் பவானி. அண்ணன் கூடத்து ஊஞ்சலில் காலை மடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

    சுசிலா எங்கே?

    இங்கதான் இருக்கேன்!

    அண்ணி கையில் கொஞ்சம் எண்ணை, தீப்பெட்டி சகிதம் வெளிப்பட்டாள்.

    விளக்கேத்துப் போறியா?

    இங்கே இல்லை கோயில்ல!

    இரு! நான் பேசறதையும் கேட்டுட்டு போ!

    அண்ணி அங்கேயே நின்றாள்.

    பரமு அம்மாவைப் பார்த்தான்.

    உம்பொண்ணுக்கு வரன் ஒண்ணு கொண்டு வந்திருக்கேன்!

    உனக்கும் அவ தங்கச்சிதான்டா!

    தெரியும். அவளுக்குக் கிட்டத்தட்ட முப்பது வயசாகப்போகுது. கழுத்துல ஒரு நூல் ஆடலைனு நேத்திக்கு புலம்பினியே ஜாதகம் கொண்டு வந்தாச்சு!

    அம்மா பேசவில்லை.

    அண்ணி அருகில் வந்தாள்.

    விவரமாகச் சொல்லுங்க!

    தனியார்ல நல்ல உத்யோகம். எட்டாயிரம் ரூபாய்க்கு மேல சம்பளம். கம்பெனி வீடு... கார்னு எல்லா வசதிகளும் இருக்கு!

    அம்மா புருவம் உயர்த்தினாள்.

    நல்லா படிச்சவர்... குடும்பமும் வசதியானது!

    ஜாதகம் பொருந்துதா?

    அவங்களுக்கும் ஜாதகத்துல நம்பிக்கை இல்லை ஆனாலும் நம்ம திருப்திக்காக பார்க்கனும்னுதான் வாங்கிட்டு வந்தேன்!

    ரொம்ப எதிர்பார்க்கறாங்களா?

    இல்லை! விரும்பினதைச் செய்யலாம். எந்தக் கட்டாயமும் இல்லை! கோயில்ல வச்சுக் கல்யாணத்தை நடத்தறதைத்தான் விரும்பறாங்க!

    அதுபோதும்! நம்ம கையில் பணம் இல்லை! தேடி வர்ற சம்பந்தம். விடக்கூடாது!

    சரி என்ன வயசு? அண்ணி கேட்டாள்.

    பரமு சற்றே தயங்கினான்.

    நாற்பத்தி அஞ்சு

    அம்மாவின் பார்வையில் சட்டெனச் சுருக்கம்!

    நா...ப்...ப...த்...தி அஞ்சா...? இவளுக்கு முப்பதுதானே ஆச்சு! பதினைஞ்சு வயசா வித்தியாசம்?

    அண்ணி குறுக்கிட்டாள்.

    முப்பதுதானே ஆச்சுனு சொன்னா குறைச்சலாத்தெரியும்! அய்யோ! முப்பது ஆயிடுச்சானு கேட்டுப் பாருங்க!

    "சரி! முப்பது வயசு வரைக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1