Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ithu Konjam Puthusu
Ithu Konjam Puthusu
Ithu Konjam Puthusu
Ebook84 pages34 minutes

Ithu Konjam Puthusu

Rating: 1 out of 5 stars

1/5

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateFeb 1, 2018
ISBN9781043466381
Ithu Konjam Puthusu

Read more from Devibala

Related to Ithu Konjam Puthusu

Related ebooks

Related categories

Reviews for Ithu Konjam Puthusu

Rating: 1 out of 5 stars
1/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ithu Konjam Puthusu - Devibala

    14

    1

    "நான் புறப்படறேன் பத்மா!"

    சாயங்காலம் சீக்கிரம் வருவீங்களா?

    ஏன்?

    பசங்களுக்கு அடுத்த வாரம் பள்ளிக்கூடம் திறக்குது. துணிமணி, புஸ்தகம் எல்லாம் வாங்கணும்!

    அதான் பணம் தந்துட்டனே! வாங்கிடு.

    நீங்க இல்லாம எப்படீங்க?

    "தபாரு பத்மா! எல்லாத்துக்கும் என்னை எதிர்பார்க்காதே!

    எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு வீட்லதானே இருக்கே! முடிச்சுக்கோ!"

    பத்மாவின் முகம் வாடிவிட்டது.

    என்னா?

    சரிங்க

    நான் வர ராத்திரி பத்தாகும். சில சமயம் ஸ்டாக் டேக்கிங் ஏதாவது இருந்தா, சவரவேமாட்டேன்.

    ராஜப்பா புறப்பட்டு போய் விட்டான்.

    நேரம் காலை ஐந்தரை!

    குழந்தைகள் இரண்டும் நல்ல உறக்கத்தில்.

    பத்மா கதவை தாளிட்டாள். உள்ளே வந்தாள்.

    பெருமூச்சு வந்தது.

    ‘கல்யாணமான இந்த ஒன்பது வருஷத்துல ஒரு நாளும் அவனோடு வெளியில் போனதில்லை!’

    ‘சேர்ந்து ஒரு ஷாப்பிங், சினிமா... கோயில்... ம்ஹூம்!’

    குடும்பம், குடும்பமாக எல்லாரும் போகும் போது மனசு வெதும்பும். தாளமுடியாமல் கேட்டே விட்டாள் ஒருநாள்,

    ராஜப்பா சிரித்தான்.

    சுத்தப் பைத்தியக்காரி நீ! எதுக்கு நான் ஓடி ஓடி சம்பாதிக்கறேன்? சொல்லுமா!

    எல்லாரும் நல்லா இருக்க!

    நீயும் புள்ளைங்களும் சுகமா இருக்கீங்களா? குறை இருக்கா மனசுல?

    இல்லை

    பின்ன?

    ஆனா உங்களோட சேர்ந்து...

    தபாரு பத்மா! கையில நாலு காசு இல்லாம மாசக் கடைசில தாளம் போடற நிலைமை இருந்தா, புருஷன் வீட்ல இருந்தாலே வெறுப்பு ஏற்படும்.

    .....

    நான் சம்பாதிக்க தொடங்கின இந்த ஒன்பது வருஷத்துல சொந்தமா வீடு கட்டியாச்சு... வீடு முழுக்க நவீன வசதிகள்... உனக்கு நிறைய நகைகள் பட்டுச் சேலைகள்... தெருவில் இறங்கினா ஆட்டோ... இதைவிட சந்தோஷம் வேற என்ன வேணும்?

    பத்மாவின் வாய் மூடிவிடும்!

    ஒரு சமயம் நினைத்தால், அது சரியென்று தோன்றும்.

    ஒன்றை அடைய வேண்டுமானால், வேற சிலவற்றை இழக்கத்தான் வேண்டும்!

    ‘இல்லாமல் கிடைக்காது!’

    பத்மா வந்து படுக்கையில் விழுந்தாள்.

    எந்த அவசரமும் இல்லை.

    மாமனார், மாமியார் கூட ஊரில் தான். அவர்களுக்கு அங்கிருந்து வரப்பிடிக்கவில்லை.

    அப்பா ஹைதராபாத்தில் வேலை. அதனால் வருடத்துக்கு ஒரு முறை பிறந்த வீட்டுக்குப் போய்விடுவாள்.

    நிறைய பணத்தோடு வருவதால் பத்மாவை பார்த்தாலே எல்லாருக்கும் குஷி வந்துவிடும்.

    நிறையச் செலவு செய்வாள்.

    எல்லாருக்கும் வாங்கித் தருவாள்!

    காலை ஏழுக்கு எழுந்தாள் பத்மா. இது கோடைக்காலம். இத்தனை நாள் பிள்ளைகள் லீவில் இருந்தது.

    அடுத்த வாரம் பள்ளிக்கூடம் திறக்கிறது.

    குளித்துவிட்டு, காலை உணவுக்கு ஏற்பாடு செய்யத்தொடங்கினாள் பத்மா.

    கதவு தட்டப்பட்டது.

    திறந்தாள்.

    வாசலில் மாமனார், மாமியார்.

    வாங்க மாமா! வாங்கத்தே!

    ராசப்பா போயாச்சா?

    ம்! அஞ்சரைக்கே! என்ன திடீர்னு? ஒரு லெட்டர் கூடப்போடாம?

    கிராமம் அலுத்துப் போச்சு. கொஞ்ச நாளைக்கு உங்ககூட இருந்து புள்ளைங்களையும் பார்த்துக்கலாமேனு வந்தம்!

    பத்மாவுக்கு ‘சுருக்’ என்றது.

    பெரியவர்கள் வந்துவிட்டால் அத்தனை ஃப்ரீயாக இருக்க முடியாது.

    மாமியார் கெடுபிடிப் பேர்வழி!

    மாமனார் சிக்கன ஆசாமி!

    ஒன்றும் சொல்லவும் முடியாது.

    காபி எடுத்து வந்தாள்...

    மாமாவுக்கு வெண்ணீர் போடு. குளிச்சு, சாப்டுட்டு ஒரு தூக்கம் போடணும்!

    சரி அத்தே!

    "புள்ளைங்க தூங்குதா? எட்டாகப் போகுது! இன்னமுமா தூக்கம்?

    கெட்ட பளக்கம். எழுப்பி விடு!"

    பத்மா பல்லைக் கடித்தபடியே உள்ளே போனாள்.

    ‘வந்ததும் அதிகாரமா?’

    ‘இதெல்லாம் அவர் கண்ணில் படாது!’

    ஊரிலிருந்து வந்த அப்பா, அம்மாவிடம் பேசக்கூட நேரமிருக்காது.

    ‘இவர்களும் பிள்ளையிடம் ஒருவண்டி மனுக்களை சமர்ப்பித்துவிட்டு பல்லைக் காட்டுவார்கள்!’

    என்ன டிபன் அத்தே?

    மாவு இருக்கா ப்ரிட்ஜ்ல?

    ம்!

    வெங்காய ஊத்தப்பமா போட்டுடு! உங்க மாமாவுக்குப் புடிக்கும்.

    சரி அத்தே!

    கொத்துமல்லிச் சட்னி!

    அரைச்சிர்றேன்!

    அவர்கள் வந்துவிட்டால் வேலைதான்

    அவனுக்கு போன் பண்ணி, நாங்க வந்ததைச் சொல்லு!

    Enjoying the preview?
    Page 1 of 1