Vidiyum Varai
By Devibala
5/5
()
About this ebook
Read more from Devibala
Assai Oonjalil Aadum Velaiyil Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsAmma Ammamma Rating: 0 out of 5 stars0 ratingsVeliye Sonnaal Vetkam Rating: 4 out of 5 stars4/5Pennaal Mudiyum Rating: 0 out of 5 stars0 ratingsJodi Thevai Rating: 5 out of 5 stars5/5Charumma Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Kalyana Thevathai Rating: 4 out of 5 stars4/5Sokkuthe Manam Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Seetha Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsKathal Varam Rating: 0 out of 5 stars0 ratingsAzhaiththaal Varuven Rating: 0 out of 5 stars0 ratingsUn Solle Vedham Rating: 0 out of 5 stars0 ratingsPoorva Jenma Bandham Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsSeerum Sirappum Rating: 5 out of 5 stars5/5Avalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsOru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Poomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsOru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Paar Rating: 5 out of 5 stars5/5Tharasu Mul Rating: 0 out of 5 stars0 ratings
Related to Vidiyum Varai
Related ebooks
Irandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsVarunkaalam Vasantha Kaalam Rating: 0 out of 5 stars0 ratingsAndha Naalum Vandhitatho? Rating: 5 out of 5 stars5/5Maaya Kangal Rating: 5 out of 5 stars5/5Mannikka Maattaayaa Rating: 5 out of 5 stars5/5Vara Pirasaatham Rating: 5 out of 5 stars5/5Vizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 1 Rating: 0 out of 5 stars0 ratingsThirumbi Paar Rating: 5 out of 5 stars5/5Urugi Odum Mezhugugal Rating: 5 out of 5 stars5/5Marupadiyumaa? Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsIrai Thedum Paravaikal Rating: 5 out of 5 stars5/5Ponmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalai Poda Vaa 2 Rating: 0 out of 5 stars0 ratingsAzhage Unnai Aaraathikkiren Rating: 4 out of 5 stars4/5Mannil Iranguthu Aakaayam Rating: 5 out of 5 stars5/5Parijadha Poove! Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsEn Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsKaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Anantham Vilaiyadum Veedu Rating: 4 out of 5 stars4/5Vendum Unthan Uravu Rating: 0 out of 5 stars0 ratingsManam Varuda Vanthaayaa Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Vidiyum Varai
1 rating0 reviews
Book preview
Vidiyum Varai - Devibala
22
1
நீலகிரி எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது.
முதல் விசில் கொடுக்கப்பட்டு, சிக்னல் விழுந்ததும், வழியனுப்ப வந்தவர்கள் இறங்கி, கம்பார்ட்மெண்ட்டின் வெளியே மொய்த்துக் கொள்ள,
சிலர் சிரிக்க,
சிலர் அழுது கொண்டிருக்க,
வேறு சிலர் அவசரமாக வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்க,
அடுத்த விசில் அடித்தபோது,
பழ வண்டிகளும், நடமாடும் புத்தக சாலையும், மசால் தோசை வடைகளும் விலக,
ரயில் மெல்ல நகரத் தொடங்கிய சமயம் -
ஓட்டமும் நடையுமாக கக்கத்தில் இடுக்கிய ஒரு துணிப்பையோடு கிடைத்த பெட்டியில் தொற்றிக் கொண்டாள் அந்தப் பெண்.
ரயில் வேகம் பிடித்தது.
‘மேட்டுப்பாளையம்’ என்ற பெயர் பலகையைக் கடக்க, நிறுத்தி மூச்சுவிட்ட அந்தப் பெண், உள்நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
அதிகபட்சம் இருபதுகூட இருக்காது. இலைப்பச்சையில் பாவாடையும், ஆரஞ்சு நிற தாவணியும் அணிந்து, மருண்டு நிற்கும் ஒரு மான்குட்டி போலிருந்தாள். கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு பார்வையை மெல்ல சுழற்றினாள்.
அது ஒரு ரிசர்வேஷன் கம்பார்ட்மெண்ட்.
ஆட்கள் அதிகமில்லை (ஒருவேளை கோவையில் வருவார்களோ, என்னவோ?)
ஜன்னலோரம் எதிரும் புதிருமாக ஒரு ஜோடி (ஜோடிதானா?) உட்கார்ந்து தாழ்ந்த குரலில், தலைபோகும் அவசரத்தில் ஏதோ பேசிக் கொண்டிருக்க,
சற்றுத் தள்ளி, ஒரு பெரியவர் கண்களை மூடி உட்கார்ந்திருக்க... இவளுக்கு எதிரே,
நடுத்தர வயதுப் பெண்மணியொருத்தி, பட்டுச் சேலையில், கொண்டையும், அதைச் சுற்றி கனகாம்பரமுமாக உட்கார்ந்திருந்தாள்.
ரயில், துடியலூரை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில், டிக்கெட் செக்கர் வந்தார்.
மற்றவர்கள் டிக்கெட்டுகளை எடுத்து நீட்ட,
பரிசோதித்து, சரிபார்த்து அவர்களிடமே தந்து விட்டு, இவளிடம் வந்தார்.
நா அவசரத்தில, வந்ததால வேற பெட்டியிலே ஏறிட்டேன்!
நிறுத்தி நிறுத்தி சொன்னாள்.
அதனால பாதகமில்லை. குடுங்க, செக் பண்ணி, நோட் பண்ணிக்கறேன்.
அவள் பதில் பேசாமல் விழித்தாள்.
டிக்கெட்டை குடும்மா!
டி... டிக்கெட் வாங்கலை!
பின்ன ஏம்மா பொய் சொல்ற? கோயம்புத்தூர்ல இறங்கறியா? இல்லை அபராதத்தைக் கட்டிட்டு, நீ எங்கே போகணுமோ, போறியா? பெண்ணா இருக்கறதால கேக்கறேன்!
எ... எங்கிட்ட பணம் இ.... இல்லை!
என்னம்மா விளையாடறியா? அப்புறம் ஏன் ரயில்ல ஏறின?
அழத் தொடங்கினாள் அந்தப் பெண். முகத்தைக் கைகளால் மூடியபடி தேம்பித் தேம்பி அழத் தொடங்க,
அந்தப் பகுதியில் உள்ள அத்தனை பேரும் வேடிக்கை பார்க்க,
டிக்கெட் செக்கரின் உரத்த குரலில், மற்றவர்களும் வேறு பகுதிகளில் இருந்து எட்டிப் பார்க்க,
டிக்கெட் செக்கரின் நிலைமை சங்கடமானது.
சரி அழுகையை நிறுத்திட்டு, கோயம்புத்தூர்ல எறங்கு. தர்மத்துக்கா ரயில் விடறாங்க நாட்டுல?
ஒரு நிமிஷம் சார்!
குரலில், டிக்கெட் செக்கர் திரும்ப,
அந்த எதிர் சீட் கொண்டைக்காரி, தன் கைப்பையை எடுத்தாள்.
அந்தப் பெண்ணுக்கான தொகைய நான் கட்டிர்றேன். அவளை விட்டுடுங்க!
ஏம்மா நீ எங்கே போகணும்?
மெட்ராஸ்!
சின்னக் குரலில் சொன்னாள்.
டிக்கெட் செக்கரிடம் அதற்கான தொகைய செலுத்தி, அனுமதிச் சீட்டை பெற்றுக் கொண்டதும், அவர் நகர,
ரெயில் கோவை நிலையத்தில் ஆரவாரமான ஓசைகளுக்கிடையே நுழைந்தது.
ரொம்ப நன்றி!
தலையை நிமிர்த்தாமலே சொன்னாள்.
கோயம்புத்தூரில், சம்பந்தப்பட்டவர்களை அள்ளிக்கொண்டு ரயில் புறப்பட்டு விட்டது. சோடிய மிச்சங்களை தவிர்த்து விட்டு, இருட்டுக்குள் நுழைந்த சமயம்,
அவரவர், தன் இரவு உணவுகளில் இறங்கியிருக்க, அந்தக் கொண்டைக்காரியும், ஏர் பேக்கில் இருந்து டப்பாவை எடுத்துத் திறந்தாள்.
உள்ளே சப்பாத்தியும் ஜாமும்.
மூடியில் வைத்து அவளிடம் நீட்டினாள்.
பரவால்ல... வேண்டாம்
டிக்கெட்டை வாங்கிக்கும் போது, சப்பாத்தியையும் வாங்கிக்கலாம்! உன் பேரென்னம்மா?
அந்தக் கனிவான குரல் வசீகரிக்க, அதை சற்றுக் கூச்சத்தோடு பெற்றுக் கொண்டு, சாதனா
என்றாள்.
சாப்பிட்டு முடிக்கும்வரை, இருவரும் எதுவுமே பேசவில்லை.
‘திருப்பூர்’ வந்துவிட்டது.
மெட்ராஸ்லே நீ எங்கே?
யோசித்தால், இவள் சந்தேகப்படுவாள் என்று தோன்ற, சட்டென ‘திருவொற்றியூர்’ என்றாள். யாரோ ‘வடிவுடையம்மன்’ கோவில் பற்றி முன்பு சொன்ன ஞாபகம்.
அடடா, நம்ம ஊருதான். திருவொற்றியூர்ல எங்கே?
மாட்டிக் கொண்டு விட்டாள் வசமாக -
அ... அதெல்லாம் எனக்குத் தெரியாது. சென்ட்ரல்ல... என்னைக் கூட்டிட்டுப் போக சொந்தக்காரங்க வருவாங்க!
அந்தப் பெண் இவளைக் கூர்ந்து கவனித்தாள்.
‘இந்தப் பெண் பொய் சொல்கிறாள்!’
அதற்கு மேல் அவளும் ஒன்றும் கேட்வில்லை!
தன் பெர்த்தில் படுத்துக்கொள்ள, அவரவர் நித்திரையைத் தேடத் தொடங்க,
துணிப்பையை தலைக்கடியில் வைத்து சுருண்டு படுத்தாள் சாதனா.
எதிர் பெர்த்தில் இருந்தபடி, அரைக் கண்ணால் சாதனாவைப் பார்த்தாள்.
சற்றே கால்களை மடக்கி, ஒருக்களித்து சாதனா படுத்திருந்த விதம், ஒரு சிற்பம் போலிருந்தது.
வெள்ளை கோதுமைக்குச் சவால் விடும் நிறம்.
கண்களில், ஒரு காவிரியின் அகலம் இருந்தது. மொசைக் கன்னம். அதிகபட்ச புஷ்டியில், லாமினேஷன் போட்டது போல பளபளத்தது. விட்டலாச்சார்யா பட வீர வாள் போல் அதி கூர்மையான நாசி.
சாதனாவும் கண்களை மூடிப் படுத்திருந்தாளே யொழிய தூக்கம் வரவில்லை.
மனது பரபரவென அலைந்தது.
நினைத்துப் பார்க்கப் பார்க்க நெஞ்சு முழுக்க பீதி பரவியது.
கண்ணோரம் வழிந்தது.
"சாதனாக் கண்ணு... சாதனாக் கண்ணு!"
அதிர்ந்தாள். ‘சித்தியா இத்தனை செல்லமாக அழைக்கிறாள்? ‘ணங்’கென்று முகவாயில் இடிப்பதைத் தவிர, வேறெதையும் அறியாத சித்தியா?’
என்ன சின்னம்மா?
ஒண்ணுமில்லைடா... வாசல்ல பிச்சிப்பூ வந்துச்சு. ஒனக்குப் பிடிக்கும்னு வாங்கி வச்சேன்!
மறுபடியும் அதிர்ச்சி.
‘பல நாட்கள் பசிக்கு சாப்பாடு கூட சரியாகப் போடுவதில்லை. இன்றைக்கென்ன பிச்சிப்பூ அமர்க்களம்?’
வா... வந்து ரெட்டை ஜடை போட்டுக்கோ! அப்படியே அந்தப் பட்டுப் பாவாடையைக் கட்டிக்க! இன்னிக்கு ஆடி வெள்ளிக்கிழமை!
‘நிஜமாகவே