Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tharasu Mul
Tharasu Mul
Tharasu Mul
Ebook96 pages37 minutes

Tharasu Mul

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, an exceptional Tamil novelist, written over 700 novels, 500 short stories, and script for many television serials. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… he has his tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465797
Tharasu Mul

Read more from Devibala

Related to Tharasu Mul

Related ebooks

Reviews for Tharasu Mul

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tharasu Mul - Devibala

    18

    1

    பொறிஇயல் கல்லூரியில் கடைசி வருஷ மாணவி சுவாதி! ஏழாவது செமஸ்டர் தேர்வு முடிந்ததும் கல்லூரி வளாகத்தில் நேர்முகம் முடிந்து, வேலை கூட கிடைத்தாகி விட்டது. படிப்பு முடிந்ததும், உடனே வேலையில சேர வேண்டியதுதான் பாக்கி! பெரிய சம்பளம். உசத்தியான கம்பெனி!

    ப்ராஜக்ட் வேலைகளை முடித்து விட்டு சுவாதி வீடு திரும்ப இரவு ஏழு மணியாகி விட்டது!

    வைர வியாபாரி கார்த்திக் கூடத்தில் உட்கார்ந்திருக்க, அப்பா, அம்மா இருவரும் அருகில். உள்ளூர் அக்கா வேணி வந்திருந்தாள்.

    முகத்தைக் கழுவி விட்டு வாம்மா! இதைப் போட்டுப்பாரு!

    சுவாதி முகம் கழுவிக் கொண்டு வந்தாள்.

    வைர நெக்லஸ் - தகதகத்தது.

    போட்டு கண்ணாடில பாரும்மா!

    சரிப்பா! சுவாதி போட்டுக் கொண்டாள். வெளிச்சம் வீசியது.

    புடிச்சிருக்கா?

    ரொம்ப நல்லாருக்குப்பா!

    சரிங்க கார்த்திக்! கடைசி விலை என்ன?

    உங்களுக்காக ஆறு லட்சம். ஷோ ரூமுக்குப் போயிட்டா, டாக்ஸ் அது இதுன்னு ஏழரை சொல்லுவான்!

    சரி! நாளைக்கு மூணு ரூபாய் தர்றேன். மீதி மூணு ரூபாயை ஆறு தவணைல தருவேன்!

    குடுங்க சார்! உங்ககிட்ட எப்ப நான் வியாபாரம் பேசியிருக்கேன்?

    நாளைக்கு எடுத்துட்டு வாங்க!

    எதுக்கு சார்? இன்னிக்கு முகூர்த்த நாள்! ரம்பா திரிதியை நாள். ஐஸ்வர்யம் கொழிக்கட்டும். ரெண்டு பேருமா எடுத்துட்டுப் போய் சாமிகிட்ட வைங்க!

    சுவாதி! உன் கையால வைம்மா!

    நீங்க வைங்கப்பா!

    இல்லைடா! இந்த வீட்டு மகாலஷ்மி நீதான். ராசிக்காரி! இந்தா பிடி!

    மூத்தவள் வேணியின் முகம் இருண்டது.

    கார்த்திக்! சுவாதி பிறந்த பிறகுதான் வாழ்க்கைல உசந்த இடத்துக்கு நான் வந்தேன்! அப்படி ஒரு ராசியான ஜாதகம். சாதாரண கட்பீஸ் கடை வச்சிருந்தேன். பத்தே வருஷத்துல தமிழ்நாட்ல நாலு ஜவுளிக்கடை! அவ பொறந்த ராசிதான் எல்லாமே!

    வேணி அங்கு உட்காரப் பிடிக்காமல் எழுந்து உள்ளே போவதை அம்மா, சுவாதி இருவருமே கவனித்தார்கள்!

    சரி சார். நாளைக்கு நான் வர்றேன்!

    அவன் போனதும், சுவாதி உள்ளே போக, அம்மா நாகலஷ்மி, அப்பா கிருஷ்ணமூர்த்தியிடம் வந்தாள்.

    என்ன பேசறீங்க? சுவாதியை நீங்க தூக்கி வச்சு பேசப்பேச, வேணி முகம் கறுத்துப் போகுது!

    அதுக்கென்னடி செய்ய? உண்மையை நான் சொல்லாம இருக்க முடியுமா?

    சரிங்க! அவளும் நம்ம பொண்ணுதான்! மூத்த பொண்ணு! அதை நீங்க மறக்கக் கூடாது!

    புண்ணாக்கு! அவ ஜாதகம் தோஷ ஜாதகம்! அவ பொறந்த நேரம் நீயும், நானும் பட்ட அவஸ்தைகள் உனக்கு மறந்து போச்சா? பிச்சை எடுக்காத குறைதான்! நாலு வருஷங்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கலை? சுவாதியை நீ உண்டான பிறகுதானே வெளிச்சமே வந்தது?

    உள்ளே நின்றபடி வேணி சகலமும் கேட்டுக் கொண்டிருந்தாள். ரத்தம் உச்சந்தலைக்கு ஏறி விட்டது!

    வேகமாக வந்தாள்.

    பின்ன எதுக்காக பிறந்த வீட்டுக்கு நீங்களே என்னைக் கூப்பிட்டு அவமானப்படுத்தறீங்க?

    நான் எப்பக் கூப்பிட்டேன்?

    நான்தாங்க கூப்பிட்டேன்! சுவாதிக்குனு ஒண்ணு வாங்கும் போது, மூத்தவ வேணியும் இருக்கட்டும்னு கூப்பிட்டேன்.

    நானும் உங்க மகள்தானே? எனக்கு ஏதாவது செய்யணும்னு தோணுதா? ஓரவஞ்சனை, வீட்டுக்கு அழைச்சு அவமானப்படுத்தறது - இதுதானே உங்க பழக்கம்?

    நிறுத்துடி! உன்னையும் நிறைய செலவழிச்சுத்தான் கல்யாணம் செஞ்சு குடுத்தோம். நீ ஸ்கூலுக்கு மேல தாண்டலை. உனக்கு படிப்பு ஏறலை. ஜாதகமும் தோஷ ஜாதகம். ஒரு பேக்டரில வேலை பாக்கற சூபர்வைஸர் புருஷனா கிடைச்சதே உசத்தி! நீ வேலையும் பாக்கலை! ரெண்டு புள்ளையும் பொறந்தாச்சு. இப்பவும் உனக்கு செஞ்சுகிட்டுத்தான் இருக்கோம்.

    அவளுக்கு செய்யற மாதிரி எனக்கு செய்யறீங்களா?

    அவ மகாலக்ஷ்மிடி! படிப்பு முடியறதுக்கு முன்னால நாப்பதாயிரம் சம்பளத்துல வேலை! அந்தத் தகுதிக்குத் தக்க வரன் பாக்க வேண்டாமா? தங்கம், வைரம்னு செய்ய வேண்டாமா? அவ ராசிதானே எனக்கு இந்த வாழ்வு? அப்புறம் குடுத்தா என்ன?

    என்னங்க?

    நீ பேசாதே நாகலஷ்மி!

    சுவாதியை தூக்கி வச்சிட்டு ஆடுங்க. ஒருநாள் உங்க ரெண்டு பேரையும் தூக்கிப் போட்டு மிதிக்கப் போறா! அப்பத் தெரியும் என்னோட அருமை!

    வாயை மூடுடி! என் மகாலக்ஷ்மியை ஏதாவது பேசினே, நான் சும்மாருக்க மாட்டேன்.

    அம்மா! நான் இனி இங்கே வரமாட்டேன்!

    அழுதுகொண்டே வேணி வாசலுக்கு ஓட, அம்மாவும் தங்கையும் பின் தொடர்ந்தார்கள்!

    அக்கா! நில்லுக்கா!

    சுவாதி, வேணியின் கைகளைப் பிடிக்க, வெடுக்கென உதறினாள்.

    உன் முகத்தைப் பாக்கவே எனக்குப் பிடிக்கலை!

    அப்பா அப்படி பேசினா, நான் என்னக்கா செய்வேன்? நான் உன்மேல பாசம் வச்சிருக்கேன்க்கா!

    தேவையில்லை உன் பாசம்! நீ பெரிய மனுஷி. நான் பிச்சைக்காரி. விட்ரு!

    "நில்லு வேணி! உன் தங்கச்சியை நீ

    Enjoying the preview?
    Page 1 of 1