Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kannale Pesi Pesi..!
Kannale Pesi Pesi..!
Kannale Pesi Pesi..!
Ebook107 pages40 minutes

Kannale Pesi Pesi..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580100606058
Kannale Pesi Pesi..!

Read more from Devibala

Related to Kannale Pesi Pesi..!

Related ebooks

Reviews for Kannale Pesi Pesi..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kannale Pesi Pesi..! - Devibala

    http://www.pustaka.co.in

    கண்ணாலே பேசிப் பேசி..!

    Kannale Pesi Pesi..!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    *****

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    *****

    அத்தியாயம் 1

    இரவு மணி எட்டாகி விட்டது. வடிவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. வாசலுக்கும், உள்ளுக்குமாக அலைபாயத் தொடங்கி விட்டாள்.

    அர்ச்சனா இன்னும் வரவில்லை.

    'தாமதமாகும்னா போன் பண்ணுவாளே! ஏன் பண்ணலை?' கவலை நெஞ்சின் மேல் பாரமாக உட்கார்ந்து விட்டது.

    வாசலில் பைக் வந்து நின்றது. அண்ணன், அண்ணி இருவரும் உள்ளே வந்தார்கள்.

    வடிவு அவர்களை ‘வாங்க' என்றுகூட அழைக்கவில்லை.

    என்ன வடிவு? ஏன் ஒரு மாதிரி இருக்கே?

    அர்ச்சனா இன்னும் வரலை....

    எங்கே போயிருக்கா?

    ஒரு பெரிய கம்பெனில நாலு நாளாக நேர்முகம் நடக்குது! இது கடைசி கட்டம், தாமதமாகுது!

    என்ன வடிவு நீ? மணி எட்டுதானே ஆகுது? அர்ச்சனா படிச்ச பொண்ணு. பச்சக் குழந்தையா?

    சரிண்ணே! எனக்கு அவ ஒருத்திதானே ஆதாரம்? கொஞ்சம் தாமதமானா மனசு படபடக்குது.

    அண்ணி அருகில் வந்தாள்.

    கொஞ்சம் பாக்கலாம் வடிவு. இல்லைனா உங்க அண்ணனை அனுப்பலாம்.

    வடிவுக்கு அர்ச்சனா ஒரே மகள். வேறு குழந்தைகள் இல்லை.

    வடிவின் கணவன் சந்திரசேகர் போன வருஷம்தான் ஒரு விபத்தில் இறந்தார். மத்திய அரசாங்கத்தில் பெரிய உத்யோகம். ஏற்கெனவே சொந்த வீடு, வாகனம் என ஒரு குறையும் இல்லை. ஒரே மகள் அர்ச்சனாவுக்காக கணிசமான சேமிப்பு!

    அவர் இறக்கும் போது, பொறியியல் கல்லூரியில் அர்ச்சனா இறுதி ஆண்டு!

    மகளைப் பற்றி ஆயிரம் கனவுகள் வைத்திருந்த மனிதர், எதையும் பார்க்காமலே போய்ச் சேர்ந்து விட்டார். வடிவு அவரைச் சார்ந்து வாழ்ந்தவள்.

    எதுவும் தெரியாது!

    அவர் மனைவியை மூடி மூடி பராமரித்தார். படக்கென அவர் கதை முடிந்துவிட, ஒரே மகளை வைத்துக் கொண்டு, நான் என்ன செய்வேன் என்ற மிரட்சி வடிவுக்கு!

    ஒரு வருடமாகியும் கணவரை இழந்த அதிர்ச்சியிலிருந்து வடிவு இன்னும் விடுபடவில்லை.

    பிறந்த வீட்டுச் சொந்தம் என்பதற்கு, அண்ணன் மாதவனும் அண்ணி துர்காவும்தான்.

    அவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் வங்கியில் பணி. அடுத்தவன் கல்லூரி மாணவன்.

    தங்கள் பிள்ளை சூர்யாவுக்குத்தான் அர்ச்சனா என்று அவர்கள் ஒரு கணக்கே போட்டுவைத்திருக்கிறார்கள். அண்ணன் மகனிடமே மகளை ஒப்படைத்து விட்டால் நிம்மதி என்பது வடிவின் முடிவு!

    அர்ச்சனா படிப்பு முடிந்து விட்டது.

    ஒரு வேலை கிடைத்து, காலை ஊன்றிக் கொண்டு விட்டால், சூர்யா - அர்ச்சனா கல்யாணத்தை முடித்து விடலாம் என்ற எண்ணம்.

    அர்ச்சனா தைரியசாலிதான்!

    அப்பாவின் மரணத்தில்கூட நிலைகுலைந்து போகவில்லை. அடுத்தது என்ன என்ற அளவுக்குத் திடமாகி, நான்தான் கொள்ளி போடுவேன் என முடிவெடுத்து, உறவில் சிலர் அதை எதிர்க்க, அவர்களையே தூக்கி எறிந்தவள்.

    வடிவே கொஞ்சம் ஆடிப் போனாள்!

    மாமனின் ஆதரவில் நினைத்ததைச் செயல்படுத்தினாள். அம்மாவிடம் கறாராகப் பேசினாள்!

    இதப் பாரு துக்கம் நியாயம்தான். ஆனா நீ அழுதுக்கிட்டேயிருந்தா, அப்பா வந்துடப் போறதில்லை.

    அவர் பணியில் இருந்ததால், பல பத்திரங்களில் வடிவு கையெழுத்து இடும் நிலை.

    அவரது சேமிப்பு, மொத்தப் பணம் என பல லட்சங்கள் வடிவுக்கு வந்தது.

    அர்ச்சனா அம்மாவுடன் இருந்து சகலமும் செய்து கொடுத்தாள்.

    மாமாவை வரச் சொல்லலாமா அர்ச்சனா?

    எதுக்கு?

    என்னடீ இப்படி கேக்கற? அப்பா, மாமாவைக் கூப்பிடாம எதையும் செய்ய மாட்டாரே?

    அம்மா, நான் படிச்சவ. எனக்கு எல்லாம் தெரியும். இது நம்ம பணம். இந்த விவகாரத்துல மூணாவது மனுஷங்க வர வேண்டாமே!

    மூணாவது மனுஷங்களா? என்னடீ பேசற நீ? அப்பாவும் போன பிறகு, நம்ம ரெண்டு பேருக்கும் மாமாவை விட்டா யாரு துணை? மேலும் அந்த வீட்டுக்கு வாழப் போறவ நீ! ஏன் இப்படி பேசற?

    என்னைப் புரிஞ்சுக்கோம்மா! அப்பா உன்னை தன்னம்பிக்கை இல்லாம ஆக்கிட்டார். உனக்கு அதை உருவாக்க நான் பாடுபடறேன்!

    இந்த வயதுக்கு மேல அது வராது. தேவையும் இல்லை விட்ரு!

    அம்மா, சாகுற வயசுலகூட தைரியம் வேணும்!

    இப்படிப் பேசும் பெண் அர்ச்சனா! அதைச் செயலிலும் காட்டத் தொடங்கி விட்டாள்.

    'மாமன் வீட்டுக்கு வாழப் போகும் இவள், நல்லபடியாக, அவர்கள் மனம் குளிரும்படி நடப்பாளா?’

    வடிவுக்கு பயமாக இருந்தது.

    நேரம் ஒன்பது!

    வடிவு! நான் போய்ப் பாத்துட்டு வரட்டுமா?

    சரிண்ணே.

    மாதவன் வாசலில் இறங்கும் சமயம், ஆட்டோ வந்து நின்றது! அர்ச்சனா இறங்கினாள். பணத்தைக் கொடுத்து விட்டு உள்ளே வந்தாள்!

    என்னடீ அர்ச்சனா?

    ஏம்மா பதட்டப்படற?

    நேரம் ஒன்பது! மாமாவை அனுப்பறதா முடிவு செஞ்சிட்டேன்!

    போன் போட்டு மாமாவை வரவழைச்சியா?

    இல்லை அர்ச்சனா! நாங்களே வந்தோம்!

    அம்மா, வேலை கிடைச்சாச்சு. முடிக்கவே மணி ஏழரை. வேலைக்கான உத்தரவையும் வாங்கியாச்சு!

    கைப் பை திறந்து கவரை எடுத்து அம்மாவிடம் தந்தாள். வடிவு உணர்ச்சிகளின் உந்துதலில் அழுது விட்டாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1