Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aindhavathu Vedham!
Aindhavathu Vedham!
Aindhavathu Vedham!
Ebook98 pages43 minutes

Aindhavathu Vedham!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூல் தாய் - மகன் உறவின் அன்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறது. "தன் மகனின் வாழ்வை தன் உலகம்" என்று வாழும் அந்த விதவைத்தாய் தங்கள் அன்பு பாதிக்கப்படாமல் தன் மகனை அன்புடன் ஏற்றுக்கொள்ளும் ஒரு புத்திசாலிப் பெண்ணை கண்டுபிடிக்கிறாள். வாருங்கள்! நாமும் இதனை வாசித்துக் குடும்பங்களை கட்டமைப்போம்!

Languageதமிழ்
Release dateJun 28, 2023
ISBN6580100609613
Aindhavathu Vedham!

Read more from Devibala

Related to Aindhavathu Vedham!

Related ebooks

Reviews for Aindhavathu Vedham!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aindhavathu Vedham! - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஐந்தாவது வேதம்!

    Aindhavathu Vedham!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    சமர்ப்பணம்

    நான் அறிந்தது நாலு வேதங்கள்!

    எனது ‘ஐந்தாவது வேதம்’

    என் அம்மா

    ரங்க நாயகி!

    அவருக்கு

    இந்த நாவல் அர்ப்பணம்.

    1

    முகத்தில் ஜிலீர் என தண்ணீர்விழ, முரளி படக்கென கண் விழித்தான்.

    எதிரே அம்மா!

    கூந்தலில் ஈர டவல், நெற்றியில் குங்குமம், எடுப்பான மூக்குத்தி பளிச்சென்ற சிரிப்புடன் எதிரே அம்மா!

    மணி ஏழுடா கண்ணா! ஆபீசுக்கு போகவேண்டாம்? எழுந்திருப்பா

    பத்து நிமிஷம் தூங்கிக்கறேன்மா!

    நத்திங் டூயிங்! அப்புறம் லேட்டாயிடும் முரளி. எழுந்திரு ராஜா!

    முரளி எழுந்து பாத்ரூமுக்குள் நுழைந்து பல் தேய்க்க, கெய்ஸர் போடப்பட்டது. ஸ்டாண்டில் டவல், ஜட்டி, பனியன் எடுத்து வைக்கப்பட்டன.

    முரளி வெளியே வர, கையில் எண்ணெயுடன் அம்மா நின்றாள்.

    என்னம்மா?

    கண்ணு பொங்கியிருக்கு. தலைக்கு எண்ணெய் வச்சுக்கோ

    வேண்டாம்மா

    பேசக்கூடாது! தலையைக்குனி!

    முரளி மண்டியிட்டு உட்கார, அம்மா சிரித்தபடி உச்சந்தலைக்கு எண்ணெய் வைத்து பரபரவென தேய்க்க ஆரம்பித்தாள்!

    பாத்ரூமில் ஸ்டூல் கொண்டு வந்து போட்டாள்.

    காபி குடு!

    முதல்ல குளிச்சிடுப்பா! அப்புறம் காபி, டிபன் எல்லாம்! உக்காரு!

    உனக்கு கல்யாணம் நடந்து, ஒரு பொண்டாட்டி வந்து, நான் இப்படி தலைக்கு எண்ணெய் வைத்து விடறத பார்த்தா..... என்னை அடிச்சுத் துரத்துவா"

    அம்மா! உன்னை அடிச்சுத் துரத்தரவ ஒரு நாளும் எனக்குப் பொண்டாட்டியா வர முடியாது! அப்படி ஒருத்திகூட நான் வாழ மாட்டேன்!

    இல்லைடா கண்ணா

    அம்மா! ஒண்ணை மட்டும் நீ புரிஞ்சுகோ! நீ என்னை பத்து மாசம் சுமந்து பெத்தவ! என்னோட நாலு வயசுல அப்பாவை நான் இழந்தேன். அப்புறம் என்னை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவ நீ தான்! சரியா?

    யாருடா இல்லைனு சொன்னது? அவனது உடம்புக்கு சோப்பு தேய்த்தபடி அம்மா சிரித்தாள்.

    விகாரமாப் பார்த்தா, எதுவுமே விகாரம்தான். அப்படிப்பட்ட உறவுகள் நமக்கு வேண்டாம். புரியுதா?

    சரிசரி! கண்ணை மூடிக்கோ! தலைக்கு மீரா தேச்சு விடறேன்!

    மளமளவென மீரா சீயக்காய் தேய்த்து, அவன் தலைக்கு ஊற்றினாள்.

    போதும்மா

    தலைல ஈரம் தங்கினா, உனக்கு ஜலதோஷம் பிடிக்கும்! தலைக்கு டவலைக் கொடுத்து, வேகமாக துவட்ட ஆரம்பித்தாள்.

    வா கண்ணா! ட்ரஸ்ஸை எடுத்து டேபிள் மேல வச்சிருக்கேன்! உனக்கு டிபன் ரெடி பண்றேன்!

    பதினைந்தே நிமிடங்களில் அவனுக்குப் பிடித்த ஆப்பம், தேங்காய்ப் பால், குருமா ஆவி பறக்க டைனிங் டேபிளில் காத்திருந்தது!

    முரளி உடைகளை மாற்றிக்கொண்டு தலைவாரி பவுடர் போட்டு, தயாராக வந்து விட்டான்.

    முதல் வாயை வழக்கம்போல அம்மா ஊட்டிவிட்டாள்!

    நீ சாப்பிடு கண்ணா நான் ரெடியாகணும்!

    அம்மா உள்ளே ஓடினாள்.

    அப்பா இறந்தபொழுது அவரது கம்பெனியில் அம்மாவுக்கு வேலை தரப்பட்டது!

    அப்போது அம்மாவுக்கு படிப்பு வெறும் எஸ். எஸ். எல். சி. தான். அதன் பிறகு கரஸ்பான்டன்ஸில் பட்டதாரியாகி, தொடர்ந்து எம்.பி.ஏ. படித்து டிபார்ட்மென்டல் பரீட்சைகள் எழுதி, அம்மா இன்று அந்த நிறுவனத்தில் சீனியர் அட்மின் ஆபீசர். கம்பெனியே வீடு கொடுத்திருக்கிறது. கார் கொடுத்திருக்கிறது. மாதச்சம்பளம் பிடித்தம் போக இருபதாயிரம் ரூபாய்க்குமேல்!

    முரளி ஒரே பிள்ளை!

    அப்பா இறந்த காலகட்டத்தில் அம்மாவுக்கு வயது வெறும் இருபத்தி ஐந்து தான்! அம்மா இப்போதே அழகு! அப்போது ரொம்பவும் அழகாக இருப்பாள். லேசான சதைப்பிடிப்புடன் கூடிய வசீகரம். நல்ல நிறம். எல்லா அம்சங்களும் நிறைந்த இளம் விதவை.

    வேலை பார்க்க வேண்டிய கட்டாயம்.

    அம்மாவை வட்டம் போடாத கண்கள் பாக்கியில்லை. வேலியில்லாத

    Enjoying the preview?
    Page 1 of 1