Kana Kanum Kangal
By Devibala
3/5
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Kanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Vizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsPanam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Naan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Chakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Kana Kanum Kangal
Related ebooks
Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Kodu Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsUndhan Manam Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Oru Santhippil... Rating: 0 out of 5 stars0 ratingsVedikkai Manithargal…! Rating: 5 out of 5 stars5/5Pennodu Oru Kanavu Rating: 0 out of 5 stars0 ratingsUn Kaiyil Ennai Koduthean Rating: 4 out of 5 stars4/5Neruppu Nila Rating: 0 out of 5 stars0 ratingsJaathimullai Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsOru Sol Pothum Rating: 0 out of 5 stars0 ratingsKoottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratingsAvalukku Peyar Agni Rating: 0 out of 5 stars0 ratingsKanna Unnai Thedugirean Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsAmma! Rating: 0 out of 5 stars0 ratingsVaasamilaa Malaridhu Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Pottuvetcha Vatta Nilaa Rating: 5 out of 5 stars5/5Thendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsManthira Punnagai Rating: 4 out of 5 stars4/5Kathiruppai Kaadhalane Rating: 0 out of 5 stars0 ratingsMegala Rating: 0 out of 5 stars0 ratingsNadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Santhaikku Vantha Kili Rating: 0 out of 5 stars0 ratingsIrandavathu Thenilavu Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Kana Kanum Kangal
2 ratings0 reviews
Book preview
Kana Kanum Kangal - Devibala
http://www.pustaka.co.in
கனாக் காணும் கண்கள்
Kana Kanum Kangal
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
அத்தியாயம் 20
அத்தியாயம் 21
அத்தியாயம் 22
அத்தியாயம் 23
கனாக் காணும் கண்கள்
1
‘நான் உன்னைக் காதலிக்கிறேன் மீரா. உன் பதில் எதுவானாலும் அதை நாசூக்கான முறையில் தெரிவிப்பாய் என நம்புகிறேன்’- கிருஷ்ணா.
அந்த கோழிக் கிறுக்கல் கடிதத்தை நாலாவது முறையாகப் படித்தாள் மீரா.
மெல்ல சிரித்துக் கொண்டாள்.
அதைக் கசக்கி குப்பைத் தொட்டியில் வீசினாள். பார்க்கும் தூரத்தில் கேஷ் கவுண்டரில் இருந்தான் கிருஷ்ணா.
இதை அவள் கசக்குவதைப் பார்த்தான். இதயத்தை கசக்குவது பொல இருந்தது.
கிருஷ்ணா அந்த நிறுவனத்தில் வேலை பார்ப்பவன் அல்ல. விற்பனை நிமித்தம் அடிக்கடி வரும் அதிகாரி. மீரா அவனிடம் பேசிய வார்த்தைகளை எண்ணிவிடலாம்.
இதோ காதல் கடிதமமே தந்துவிட்டான்.
அலுவலகம் முடிந்து விட்டது. தன் கைப்பையை எடுத்துக் கொண்டு மீரா வெளியில் வந்தாள். மழை நன்றாக பெய்து கொண்டிருந்தது. குடை இல்லாமல் வந்துவிட்டாள்.
வெளியெ இறங்காமல் மழை நிற்குமா என்று ஆகாயத்தைப் பார்த்தாள். நிற்பது போலலே தெரியவில்லை.
இங்கிருந்து பஸ் ஸ்டாப் பத்து நிமிட நடை சொட்ட சொட்ட நனைய வேண்டும். முடியுமா?"
மீராஇ இந்தாங்கா குடை.
திரும்பினாள் கிருஷ்ணா குடை வள்ளலாக
நின்றான்.
சட்டென அதை வாங்கிக் கொண்டாள். தேங்ஸ். நாளைக்கு கொண்டு வந்துர்றேன் மறக்காம.
இறங்கி நடக்க தொடங்கினாள்.
அவ்வளவுதானா?
குடையை வாங்கியதும் ஒரு இளகிய பார்வை, இதமான ஒரு வீச்சு எதுவுமே இல்லையா?
எதிரே இருந்த பேன்ஸி ஸ்டோரில் உனக்காக எண்பது ரூபாய் கொடுத்து சற்றுமுன் வாங்கிய குடை என்று உனக்கு தெரியுமா?
திருப்பித் தருகிறாயா நாளைக்கு? உன்னிடம் இருக்கும் என் இதயத்தை எப்போது திருப்புவாய்?
கிருஷ்ணா மழை விடும் வரை அங்கேயே இருந்தான். பிறகு தன் ஸ்கூட்டரை இயக்கி புறப்பட்டுப் போனான்.
வீட்டுக்குள் மீரா நுழையும் போது இருட்டிவிட்டது. ஏறத்தாழ ஏழுமணியை நெருங்கிக்கொண்டிருந்தது.
அம்மா கவலையுடன் வாசலில் நின்றிருந்தாள்.
‘வந்துட்டியா மீரா?’
‘பயந்துட்டியாம்மா? மழைநாள்னா தாமதமாகத் தான் செய்யும்’
‘சரி! முதல்ல சேலையை மாற்று. நனைஞ்சிருக்கே. ஜூரம் வந்துரப்போகுது.’
மீரா உடைமாற்றி ஈரத்தைப் பிழிந்து கொடியில் போட்டாள். கூந்தலை அவிழ்த்து உதறி துவட்ட தொடங்கிளாள்.
‘யாருமில்லையாம்மா?’
‘அவ எப்ப இருந்தா? சாயங்காலமே கிளம்பி பொறந்த வீட்டுக்குப் போயாச்சு. உங்கண்ணன் ஆபிஸ் விட்டு நேராப் போவான். சாப்பாட்ட முடிச்சுட்டு ரெண்டுபேருமா இங்க வருவாங்க. குடும்பமா இது?’
‘விடும்மா! ராத்திரி நமக்கென்ன?’
‘நான் அடுக்களைப்பக்கமே போறதில்ல. என்னைத்தான் அவ வர விடறதில்லையே. காலைச் சமையல் நீ. ராத்திரி அவ இருந்தா பண்ணுவா. நான் யார் இந்த வீட்ல."
‘ஏன் கோவப்படறே?’
‘நீ விடிங்செழுந்தா வெளியே போயிர்ற மீரா. நாள் முழுக்க இங்கே குத்தல் பேச்சைக் கேட்டுட்டு நான் படற அவஸ்தை எனக்கில்ல தெரியும்?"
விடும்மா. குடும்பம்னா எல்லாம்தான் இருக்கும். பெரிசுப்படுத்திக்காதே. ஒரு சாதத்தை வடிச்சு மிளகு ரசம் பண்ணட்டா?
‘சரி. உனக்கு வயசு இருபத்தி ஏழு. உன்னை ஒரு நல்ல இடத்துல ஒப்படைக்கனும்னு உங்கண்ணனுக்கு இருக்கா?’
மீரா பேசவில்லை.
‘நானும் ஒருநாள் பொட்டுனு போயிட்டா நீ நாதியில்லாம நிக்கணும். நல்ல காலம் உத்தியோகம் இருக்கு. உன் கால்ல நீ நிக்கலாம்.’
மீரா அரிசியைக் கழுவிக் குக்கரில் வைத்தாள்.
‘இவனாப் பார்த்து இந்த ஜென்மத்துல உனக்குக் கல்யாணம் பண்ணமாட்டான். அவ விடமாட்டா. பேசாம யாரையாவது நீயே தேர்ந்தெடு. ஒரு தாய் சொல்லக்கூடாதுதான். ஜாதி மதம்கூடப் பார்க்காதே! முடிவு செய். போயிடு இந்த வீட்டை விட்டு.’
அம்மா அந்த அளவுக்கு கசந்து பொயிருந்தாள்.
மீரா மெல்லச் சிரித்தாள்.
‘அம்மா உணர்ச்சிவசப்படறதால எந்த லாபமும் இல்ல. உடம்புதான் கெடும். அதது நடக்குற காலத்துல நடக்கட்டும். அண்ணி சரியா இல்ல. அண்ணனும் ஜால்ரா. ஆத்திரப்பட்டு என்ன லாபம்? அவங்க கூடத் தானே நீயும் நானும் இருக்கனும். என் கவலை என்னான்ன நானும் போயிட்டா நீ ஏங்கியே செத்துருவே.’
‘நான் உன் கூடவே வந்துருவேன் மீரா.’
அது முடியுமாம்மா? இன்னொருத்தர் சம்மதம் வேண்டாமா?
‘ஆமாம்மா. அதை நான் மறந்துட்டேன். சரி விடு. எனக்கு அதிகமா பேசுனதால தலை சுத்துது. நான் போய் படுக்குறேன்.’
அம்மா படுத்துவிட்டாள்.
அப்பா இறந்து எட்டு வருடங்கள் ஆகிறது. அடுத்த வருடமே தெவசம் நடத்தவேண்டி அண்ணனுக்கு கல்யாணம். வந்தாள் புஷ்பா. உயிருடன் அம்மாவுக்கு தினம் தினம் தெவசம் நடத்திக் கொண்டிருந்தாள்.
ராஜூ அவளுக்கு சரணாகதி. சம்பளம் உட்பட சகலமும் அவள் கைக்குள் அடக்கம். மற்றவர்களின் கவலையை ராஜூ பொருட்படுத்துவதே இல்லை.
மீராவும் கொஞ்சம் கையில் வைத்துக் கொண்டு சம்பளத்தை அண்ணி கையில்தான் தருவாள்.
வாங்கிக்கொண்டு அதிகாரம் தூள் பறக்கிறது. அம்மாவை அழைத்துக் கொண்டு இறங்கிவிடலாம். இருவர் மரியாதையாக வாழும் அளவுக்கு சம்பளம் உண்டு. ஆனால் வரும் நாட்களை சிந்திக்க வேண்டும். முன்யோசனை காரணமாக மீரா அந்த எண்ணத்தை ரத்து செய்தாள்.
சமையல் முடிந்துவிட்டது.
‘சாப்பிட வர்றியாம்மா?’
‘கொஞ்சம் கரைச்சு கொடுத்துடு மீரா.’
ஆவள் தந்ததைக் குடித்துவிட்டு அம்மா படுத்துக் கொண்டாள். மீராவுக்கு ஏனோ பசிக்கவில்லை.
பேருக்கு சாப்பிட்டு அடுக்களை கழுவி எல்லாம் முடித்து கூடத்துக்கு வர மணி ஒன்பது.
ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டாள். ‘கிருஷ்ணார்ப்பணம்’ கதையின் பெயர். சிரிப்பு வந்தது.
‘நான் உன்னைக் காதலிக்கிறேன் மீரா.’
கண்ணுக்குள் அவன் வந்தான்.
‘ஜாதி மதம்கூடப் பார்க்காதே. நீயே தேர்ந்தெடு ஓடிவிடு இங்கிருந்து.’ கிருஷ்ணா நம் ஜாதிதான். அழகன் நல்ல சம்பளம், கண்ணியமான இளைஞன். காதலிக்கிறான் வலுவே. காதலை ஏற்றுக்கொள்வதால் என்ன தவறு?’
இந்த ரீதியில் சிந்தனை போக மீரா சன்னமாக அதிர்ந்து போனாள்.
‘இதுசரியா? இப்படி நான் யோசிக்கலாமா? காதலை மட்டுமே அறிவித்த கிருஷ்ணாவுக்கு என் பின்னணி தெரியுமா? என் சங்கடங்கள் புரியுமா? தெரிந்தால் ஒப்புக்கொள்வானா