Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Jaathimullai
Jaathimullai
Jaathimullai
Ebook94 pages41 minutes

Jaathimullai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100604271
Jaathimullai

Read more from Devibala

Related to Jaathimullai

Related ebooks

Reviews for Jaathimullai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Jaathimullai - Devibala

    http://www.pustaka.co.in

    ஜாதிமுல்லை

    Jaathimullai

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    நாளைக்கு நீ லீவு போட்டுடு நிஷா!

    எதுக்கம்மா?

    அவர் வர்றார் இல்லையா?

    யாரும்மா அவர்?

    அதாண்டீ விக்னேஷ்! போனவாரம் மெஸேஜ் வரலையா? பதினெட்டு வருஷம் கழிச்சு லண்டன்லேர்ந்து இந்தியா வர்றார். அவருக்கு இங்கே நம்மைத் தவிர யாருமில்லை நிஷா. நீயும், நானும்தான் ஏர்போர்ட் போய் அவரை ரீசிவ் பண்ணணும்!

    நீ போனாப் போதாதாம்மா?

    நிஷா! உனக்கு என் கூட வர இஷ்டமா? இல்லையா?

    அம்மாவின் குரல் ஓங்கி ஒலித்தது.

    நிஷா சட்டெனக் கட்டுப்பட்டாள்.

    சரி! நானும் வர்றன்

    இப்ப நீ கிளம்பு!

    நிஷா போய் விட்டாள். பூர்ணிமா ஒருமாதிரி டென்ஷனில் இருந்தாள்.

    விக்னேஷ் நிச்சயம் இந்த வீட்டில்தான் தங்குவார். அவருக்கென்று ஒரு அறையைத் தயார் செய்ய வேண்டும்!

    மாடியில் தன் அறைக்குப் பக்கத்து அறையை ஏற்கனவே ஏஸி செய்து வைத்திருந்தாள். அதில் போனவாரம்தான் இன்டீரியர் டெகரேஷன் எல்லாம் செய்து வைத்திருந்தாள்.

    கட்டில் போட்டு, சுவர் பெயின்டிங் எழுதி அந்த அறையை ஒருமாதிரி நட்சத்திர ஓட்டலின் தரத்துக்குக் கொண்டு வந்திருந்தாள்.

    'பதினெட்டு வருடங்களாக அயல்நாட்டில் இருப்பவர். இங்கே வசதி குறையக்கூடாது அவருக்கு!'

    நிஷா சகலமும் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். ஒன்றும் கேட்கவில்லை

    அம்மாவிடம் கேட்கவும் மாட்டாள் நிஷா.

    ஒருமாதம் முன்பு லண்டலிருந்து ஒரு நீண்ட கடிதம் வந்தபோது பூர்ணிமா பிரமித்துத்தான் போனாள்.

    விக்னேஷிடமிருந்து அப்படி ஒரு கடிதம் வருமென்று அவள் எதிர்பார்க்கவில்லை.

    அதன் சுருக்...

    'நான் லண்டன் போய் பதினெட்டு வருடங்கள் முடிகிறது. இனிமேலும் இந்திய மண்ணை விட்டுப் பிரியப் பிடிக்கவில்லை. பிரிய வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் இன்னும் மூன்று வாரங்களில் தாயகம் திரும்பலாம் என்றிருக்கிறேன். நான் பிறந்த தஞ்சை மண்ணில், காவிரிக் கரையில் என் கடைசி நாட்களைக் கழிக்க ஆசை. பழைய இனிய நினைவுகளுடன், உன்னைத் தவிர தமிழகத்தில் தற்போது யாருமில்லை எனக்கு. உன் பதில் கண்ட பின்புதான் நான் புறப்படவேண்டும். வரட்டுமா? - விக்னேஷ்.

    பூர்ணிமா அன்று முழுவதும் உறங்கவில்லை. பழைய நினைவுகளின் தாக்கத்தில் பலமாக அடிபட்டுப் போயிருந்தாள்.

    சரியாகச் சாப்பிடவில்லை.

    உறக்கம் வரவில்லை.

    வெகுநேரம் அழுதாள்.

    இறுதியில் கடிதம் எழுதிப்போட்டாள்.

    'நீ தாயகம் திரும்புவதாக அறிந்து மகிழ்ச்சி. உன்னைக் காண நானும் துடித்துக் கொண்டிருக்கிறேன். நீ எப்போது வேண்டுமானாலும் வரலாம். என்னுடனேயே மீதி நாட்களை நீ கழிக்கலாம். உன் வரவுக்காகக் காத்திருக்கிறேன்' - பூர்ணிமா.

    போனவாரம் விக்னேஷ் வருவதாக உறுதிப்படுத்திக் கடிதமும், கேபிலும் வந்துவிட்டது. நிஷாவிடம் இப்போதுதான் சொன்னாள்.

    விக்னேஷ் வர்றார் நிஷா!

    யாரம்மா விக்னேஷ்?

    என் நண்பர். நம்ம குடும்பத்துல ஒருத்தரா இருந்தார். லண்டன் போய் பதினெட்டு வருஷம் ஆச்சு. அப்ப அவருக்கு எல்லாம் இருந்தது தமிழ் மண்ணுல சகலத்தையும் உதறிட்டுப் போனார் அயல்நாட்டுக்கு. இப்பத் திரும்பறார். இனி மேல அவர் இங்கேதான் இருப்பார். நம்ம கூடத்தான் இருப்பார்.

    நிஷா பேசவில்லை.

    நம்ம நாட்டைவிட்டு விக்னேஷ் போகும்போது உனக்கு மூணு வயசு. விவரம் தெரியாத குழந்தை நீ. இப்ப, இங்கே வந்து உன்னை அவர் பார்க்கும் போது பிரமிச்சுப் போவார். பாரேன்

    ம்!

    அவருக்காக இந்த ஒரு வாரத்துல எல்லா ஏற்பாடுகளையும் நான் செஞ்சாகணும்!

    இதோ அந்த விக்னேஷ்தான் நாளை விமானத்தில் வந்து இறங்கி மாலைக்குள் வந்து விடுவார் காரில். பரபரப்பாக இருந்தாள் பூர்ணிமா.

    மாலை அலுவலகம் முடிந்து திரும்பினாள் நிஷா. ஆட்களை வைத்து வீட்டை அலங்கரித்திருந்தார் அம்மா. வேகமாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

    Enjoying the preview?
    Page 1 of 1