Udaney Vaazha Vaa!
By Devibala
()
About this ebook
அழகான, அறிவான, துடிக்கான பெண்மணிதான் நந்தினி. சிறுவயதிலிருந்தே கட்டுக்கோப்பாகவும், தைரியமாகவும் வளர்த்திருந்தால் அவள் தாய் மந்தாகினி. ஆம்பளைகள் என்றால் தவறானவர்கள் என்ற எண்ணத்துடன் இருப்பவள்தான் இந்த நந்தினி. இவளுக்கும் ஒரு துணை கிடைத்ததா? நந்தினி தன்னுடைய ஆணவம், கௌரவத்தை விட்டுக்கொடுத்தாளா? நல்ல குடும்பம் உருவானதா? வாருங்கள் கதைப்போம்...
Read more from Devibala
Bathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsMundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Enakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Theeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Unakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Kana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsIruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Udaney Vaazha Vaa!
Related ebooks
Thullatha Manam Rating: 0 out of 5 stars0 ratingsKaathalikka Theriyavillai Rating: 0 out of 5 stars0 ratingsAvasara Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsAvathum Pennaley...! Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsJeevanaadi Rating: 0 out of 5 stars0 ratingsRaajinama! Rating: 0 out of 5 stars0 ratingsThalli Nil Kanmani! Rating: 0 out of 5 stars0 ratingsVanavaasam Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Vithiyasamanaval Rating: 0 out of 5 stars0 ratingsLinga Bairavi Rating: 0 out of 5 stars0 ratingsRudhra Thaandavam Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Manam Rating: 0 out of 5 stars0 ratingsKathavu Thiranthirukku! Rating: 0 out of 5 stars0 ratingsKanave Kalaiyadhe! Rating: 5 out of 5 stars5/5Nerungi Vaa Nilave Rating: 5 out of 5 stars5/5Ava(l) Thaaram Rating: 0 out of 5 stars0 ratingsSonthakkaranga Rating: 4 out of 5 stars4/5அதிகாலைச் சூரியன் Rating: 0 out of 5 stars0 ratingsValarppu Rating: 0 out of 5 stars0 ratingsAthirchi Vaithiyam Rating: 0 out of 5 stars0 ratingsEn Uyire Vaa Rating: 5 out of 5 stars5/5Oru Thai Oru Magan Rating: 5 out of 5 stars5/5Idhayathai Thodalama? Rating: 0 out of 5 stars0 ratingsAasai Oonjalil Rating: 0 out of 5 stars0 ratingsIru Dhuruvam Rating: 0 out of 5 stars0 ratingsIlamaikku Perumai 2 Rating: 0 out of 5 stars0 ratingsIval Oru Mathiri! Rating: 0 out of 5 stars0 ratingsPorkkalap Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsதான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Udaney Vaazha Vaa!
0 ratings0 reviews
Book preview
Udaney Vaazha Vaa! - Devibala
https://www.pustaka.co.in
உடனே வாழ வா!
Udaney Vaazha Vaa!
Author:
தேவிபாலா
Devibala
For more books
https://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 01
அத்தியாயம் 02
அத்தியாயம் 03
அத்தியாயம் 04
அத்தியாயம் 05
அத்தியாயம் 06
அத்தியாயம் 07
அத்தியாயம் 08
அத்தியாயம் 09
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 01
ரெண்டு பேருக்கும் பாஸ்போர்ட் இருக்கு. ஹனிமூனுக்கு வெளி நாட்டுக்கு போகலாமா நந்தினி?
வேண்டாம்.
சின்ன பாக்கேஜா போட்டுக்கலாம். மால்தீவ்ஸ் போகலாம். இல்லைன்னா சிங்கப்பூர், மலேஷியான்னு ட்ரை பண்ணலாம். என்ன சொல்ற?
அவினாஷ் கேட்ட கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.
சரி, உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு. அங்கே புக் பண்ணலாம். ஃப்ளைட் டிக்கெட் போடணுமில்லை? ரெசார்ட் புக் பண்ணணும். சம்மர் சீசன் வேற. கிடைக்கறது கஷ்டம் நந்தினி.
உனக்கு புது வேலை கிடைச்சு, நீ எப்ப ஜாயின் பண்ணினே அவி?
இந்த கேள்வி இப்ப எதுக்கு? சம்பந்தமில்லாம இருக்கே?
நான் என்ன கேட்டாலும், அதுக்கொரு காரணம் இருக்கும் அவி. கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு.
நான் புது வேலைல ஜாயின் பண்ணி, நாலு மாசமாச்சு. மூணு சம்பளம் வாங்கிட்டேன்.
சரி, உன் சேமிப்புல என்ன வச்சிருக்கே?
நம்ம கல்யாண செலவுக்காக, அப்பாவுக்கு மூணு லட்சம் குடுத்தேன். ரெண்டு லட்சம் என் கையில இருக்கு.
அதுல பெரிய பாக்கேஜ் தேனிலவுக்கு போனா, ஒண்ணரை போயிடும். மீதி அம்பதாயிரம் தான் இருக்கும். இல்லையா?
போதுமே. புது சம்பளம் பிடித்தம் போக, கையில எண்பதாயிரம் வருமே.
அது போதுமா?
அதுல குடும்ப செலவுக்காக அப்பா கையில இருபத்தஞ்சாயிரம் தருவேன். மீதி நமக்குத்தானே? நீயும் மாசம் எழுபதாயிரம் வாங்கறியே நந்தினி?
அதுல உங்கப்பாவுக்கு ஏதாவது தரணுமா?
சேச்சே, நீ தந்தாலும் அவங்க வாங்கமாட்டாங்க. நீ உன் அம்மாவுக்கு தரலாம்.
நான் என்னிக்குமே அவங்களுக்கு தந்ததில்லை. ஒரு மகளை ஆளாக்கி கட்டிக்குடுக்கறது பெத்தவ கடமை. காலம் முழுக்க பெத்தவங்களுக்கு கப்பம் கட்டிக்கிட்டிருந்தா, நாம வாழறது எப்ப?
அவினாஷ் எதுவும் பேசவில்லை.
நான் சம்பாதிக்க தொடங்கி, மூணு வருஷமாச்சு அவி. என் செலவு போக, இந்த மூணு வருஷத்துல நான் சேமிச்ச பணம் வட்டியோட பதினஞ்சு லட்சம். எனக்கு நிறைய எதிர்கால திட்டங்கள் இருக்கு. அதையெல்லாம் நம்ம கல்யாணம் முடிஞ்ச பிறகு பேசலாம். தேனிலவுக்காக லட்சங்கள்ள, தண்டம் அழ வேண்டாம். உள்ளூர் ஏற்காடு மாதிரி போயிட்டு முப்பதாயிரத்துல முடிச்சுக்கலாம். சரியா? வாழ்க்கையை உணர்ச்சிபூர்வமா பாக்கறதை விட, அறிவுபூர்வமா பாக்கறது நல்லதில்லையா? போகலாமா அவி?
சரி, ஓட்டல்ல டின்னர் முடிச்சிட்டு போகலாம். ஏதாவது தீம் ரெஸ்ட்டாரென்ட்ல சாப்பிடலாம்.
ரெண்டாயிரம் செலவு. அவரவர் வீட்ல போய் சாப்பிடலாம்.
அவனை, அவன் வீட்டு தெரு முனையில் இறக்கி விட்ட நந்தினி, தன் டூ வீலரை எடுத்தாள். அப்படியே நின்றான் அவினாஷ்.
இதை படித்ததும், இவர்கள் காதலர்கள் என்று யாருக்காவது தோன்றினால், நீங்கள் அப்பாவி. முறையாக ஜாதகம் பார்த்து பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட கல்யாணம். படிப்பு, வேலை, அழகு, அறிவு எல்லாமே அவி, நந்தினி இருவருக்கும் உண்டு. அவி, இரண்டு மூத்த சகோதரிகளுக்கு பிறகு பிறந்த கடைசி மகன். அப்பா டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் மூலம் சம்பாதித்து இரண்டு பெண்களை கட்டிக்கொடுத்து, மகனையும் படிக்க வைத்து, வீடு, கார் என வசதியாக வாழ்பவர். அம்மா குடும்பத்தலைவி. அனுசரணையான பெண்மணி. அதனால் அனுராதா என்ற பெயருக்கு தக்க வாழ்பவர். தனக்கு வரும் மருமகள் சீர் கொண்டு வர வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கவில்லை. பாசமாக, குடும்பத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனும்மாவுக்கு அதிகம். தீர்மானித்து நந்தினிதான் என முடிவானது. மற்றவர்கள் பத்து வார்த்தைகள் பேசினால் நந்தினி அரை வார்த்தை பதில் சொன்னால் அதிகம். அவளுக்கு சிரிக்க தெரியுமா என அவி குடும்பமே சந்தேகப்படும் அளவுக்கு இறுக்கமான முகம். அவியின் இரண்டாவது அக்கா நீரஜா, கலகலப்பான பெண். ஜாலியாக பேசுவாள்.
நீ சிரிக்கவே மாட்டியா நந்தினி? முதல்ல எங்க அவிகிட்ட எப்படி சிரிக்கறதுன்னு கத்துக்கோ!
எனக்கு யார்கிட்டேயும் எதையும் கத்துக்க வேண்டிய அவசியமில்லை. நான் பத்து பேருக்கு கத்துக்குடுப்பேன். எதுக்கெடுத்தாலும் சிரிச்சா, பைத்தியம்னு சொல்லுவாங்க. அவி சிரிப்பை குறைக்கணும். குறைக்கறேன்.
நீரஜாவுக்கு சரியான அடி. தன் அம்மா அனுவிடம் வந்தாள்.
என்னம்மா? இப்படி முகத்துல அடிச்ச மாதிரி பேசறா? நான் என்ன தப்பா கேட்டுட்டேன். அவிக்கு நான் அக்கா. அந்த மரியாதையை இவ தர வேண்டாமா? கடுவன் பூனை மாதிரி இருந்தா நல்லாருக்காம்மா?
நீ எதுக்கு அவகிட்ட வாயை குடுக்கற? அவ ரிசர்வ்டான பொண்ணு. இதப்பாரு நீரஜா, ஒரு பெண் வாழ வரும்போது, புகுந்த வீட்ல அவளோட முதல் எதிரி, நாத்தனாராத்தான் இருப்பா. எதுக்கு? உன் தம்பி அவியை விட்டு நீ மனசளவுல விலகக்கூடாது நீரு.
மூத்தவள் சொர்ணா அம்மா சொல்வதை ஆமோதித்தாள்.
அம்மா, நம்ம குடும்பம் கலகலப்பான குடும்பம். மனுஷங்க நிறைய. நீயும், அப்பாவும் யாரையும் விட்டுத்தர மாட்டீங்க. நாங்களும் அப்படித்தான் வளர்ந்திருக்கோம். அவிக்கும் நிறைய மனுஷங்க வேணும். இவ இந்த கட்டமைப்பை காப்பாத்துவாளா?
சரிடீ, அவி காதுல இதை போடாதே.
அக்கா சொல்லா விட்டாலும் நிச்சயம் முடிந்து முதல் இரண்டு சந்திப்புகளில் அவினாஷ் புரிந்து கொண்டான். அவனிடமும் அதேதான். வார்த்தைகளை அளந்துதான் பேசினாள். ரொமான்சுக்கான எந்த ஒரு சிக்னலையும் அவள் தரவில்லை. வார்த்தைகளில் மட்டுமல்ல, பணத்திலும் படு கறாராக இருந்தாள். அவனுக்கொரு பரிசு, சின்ன சந்தோஷங்களை தர அவள் முயற்சிக்கவே இல்லை. அவனாக சில விலையுயர்ந்த பரிசுகளை வழங்க,
இத்தனை காஸ்ட்லியா ஏன் வாங்கினே அவி?
பணத்தை ஏன் பாக்கற நந்தினி? இன்னும் ரெண்டு மாசத்துல நீ எனக்கு வாழ்க்கை துணை ஆகப்போறே!