Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanave Kalaiyadhe!
Kanave Kalaiyadhe!
Kanave Kalaiyadhe!
Ebook99 pages37 minutes

Kanave Kalaiyadhe!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateMay 1, 2020
ISBN6580105705354
Kanave Kalaiyadhe!

Read more from Vidya Subramaniam

Related to Kanave Kalaiyadhe!

Related ebooks

Reviews for Kanave Kalaiyadhe!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanave Kalaiyadhe! - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    கனவே கலையாதே!

    Kanave Kalaiyadhe!

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    காலையிலிருந்து உடல் பொசுங்கி விடும் போல வெயிலடித்த நிலைமாறி பிற்பகலில் கறுத்துக் கொண்டு வந்தது. இந்திரா சந்தோஷமாக வானத்தைப் பார்த்தாள். 'நல்ல மழை கொட்டட்டும். குடிநீர் ஏரிகள் எல்லாம் நிரம்பி வழிய வேண்டும். நிலத்தடி நீர் உயர வேண்டும். போதுமடா சாமி இம்முறை சென்னை ரொம்பத்தான் பாடுபட்டு விட்டது தண்ணீருக்கு?'

    புறநகர்ப் பகுதியில் இருப்பதால் அவளுக்கு அந்த அளவுக்கு பிரச்சனை இல்லை தான். இருந்தாலும் சென்னை நகர வாசிகளுக்காக அவள் நிறையவே வருத்தப்பட்டு மழை வேண்டி பிரார்த்திப்பதுண்டு. போன வருடம் வரை அப்பா கணேசனுடன், அண்ணன் மூர்த்தியும் அவளும் தினமும் மாலை நேரம் விளக்கு வைத்ததும் ஒன்றாய் அமர்ந்து பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

    உங்காத்து கிணத்துலதான் வேண்டிய தண்ணியிருக்கே அப்பறம் எதுக்கு தினம் இப்டி மழை வேணும்னு பிரார்த்தனை?

    அடுத்த வீட்டு மாமி கிண்டலாகக் கேட்பதுண்டு.

    அப்பா பதில் சொல்ல மாட்டார். சொன்னாலும் மாமி புரிந்து கொண்டு விடப் போவதில்லை. எந்த கஷ்டமும் தனக்கு வரும்போது தான் அதன் வீரியத்தை உணர்வேன் என்று பிடிவாதம் பிடிக்கும் மனிதர்கள் தான் இங்கு ஏராளம்.

    அந்த மாமியை மாதிரி நீங்க ஒரு நாளும் இருக்கப்படாதுடா மூர்த்தி... புரிஞ்சுதா?

    திடீர்னு என்னப்பா சந்தேகம்? மூர்த்தி சிரிப்பான், நாங்க மாறிடுவோமா என்ன?

    மாற மாட்டேள் தெரியும். இருந்தாலும் சொன்னேன்.

    அப்பா அங்க பாரேன். மழை தூர்றது. நாம வேண்டிண்டதுக்கு பலன் இருக்குல்ல?

    நல்ல மனசோட சுயநலமில்லாம வேண்டிண்டா நிச்சயம் பலன் இருக்கும்.

    அப்பா எழுந்து வாசலுக்குச் சென்றார். அடுத்த வீட்டு பள்ளி மாணவி ப்ரியா டியூஷனுக்குச் செல்ல குடை விரித்ததைப் பார்த்ததும் அவசரமாய் அருகில் சென்றார்.

    சின்ன தூறலுக்கெல்லாம் குடை விரித்து விடாதே தோழி. மழை சுகமும், மண்வாசமும் வரப்பிரசாதம். சாரலில் நனைந்து செல் தெய்வம் தொட்டாற் போலிருக்கும்.

    புன்னகையோடு கூறியபடியே அவள் குடையை வாங்கி மடக்கி அவளிடம் கொடுத்தார்.

    அம்மா பார்த்தா திட்டுவா அங்கிள். தெருமுனைல போய் வரப்பிரசாதத்தை வாங்கிக்கறேன் சரியா? ப்ரியா கிசுகிசுப்பான குரலில் சொல்லி விட்டு மீண்டும் குடை விரித்தாள்.

    அப்பா இந்திராவையும் மூர்த்தியையும் அழைத்தார்.

    இப்டியே ஜாலியா ஒரு வாக் போய்ட்டு வரலாமா?

    ஓ…

    இருவரும் அவரோடு தூறலில் நனைந்தபடி சென்ற அந்த நாள் இன்று நினைவுக்கு வர இந்திரா பெருமூச்சு விட்டாள்.

    இப்போதும் மழை பெய்கிறது. ஆனால் அப்பாதான் வெறும் கல்லாய் படுக்கையில் கிடக்கிறார். மகன், மகள், மழை எதுவும் உணர முடியாத ஐடமாய் அவர் மாறி ஒரு வருஷமாகிவிட்டது.

    ரொம்ப சந்தோஷமாக மூர்த்திக்கு அவன் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார் அவர். கருணாவின் பெயரில் மட்டும் தான் கருணை இருந்தது. வந்த இரண்டாம் நாளே, தன் புருஷன், தன் உடமைகள், தன் உரிமைகள் என்று தன்னுடைய எல்லாவற்றைச் சுற்றியும் வட்டம் போட்டுக் கொள்ள ஆரம்பித்தாள். அந்த வட்டத்திற்குள் தானும் தன் புருஷனும் மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்தாள். பெற்றவனும், உடன் பிறந்தவளும் கூட அன்னியம் தான் என்று முடிவு செய்து ஒதுங்கி ஒதுங்கிப் போனாள்.

    மூர்த்தி மென்மையானவன். அந்த மென்மையால் அவளுடைய மூர்க்கத்துடன் போட்டி போட முடியவில்லை. அவளை கண்டிக்கவோ தவறு என்று சொல்லி திருத்தவோ அவனால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் அவன் சோர்ந்து போனான். அப்பாவும் இந்திராவும் அவளுக்கு எந்த விதத்திலும் இடைஞ்சலாக இருந்ததில்லை. அவள் சந்தோஷத்திற்கு தடையாகவும் இருந்ததில்லை. இவர்களை அவள் வெறுத்து ஒதுக்க ஒரு காரணமுமில்லை. ஆனால் ஏன் அவள் அப்படி நடந்து கொண்டாள் என்பது புரியாத புதிர்.

    கல்யாணமான ஆறாம் மாதமே அப்பாவிடம் வீட்டைத் தங்கள் பெயருக்கு மாற்றித் தர வேண்டுமென்று ஜாடைமாடையாய் சொல்ல ஆரம்பித்தாள்.

    அதுக்கு இப்பொ என்னம்மா அவசரம். என்னிக்கிருந்தாலும் இந்த வீடு மூர்த்திக்குதானே. உனக்கதுல என்ன சந்தேகம்?

    இவருக்குத்தான்னு சொன்னப்புறம் அதை இன்னிக்கே எழுதறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?

    மனுஷா மேல நம்பிக்கை வேணும் கருணா. பணம் வரும் போகும். எங்களை விட இந்த வீடு தான் உனக்குப் பெரிய விஷயமா தோன்றதா?

    அவள் பதில் சொல்லவில்லை. அவர் தொடர்ந்து கேட்டார்.

    ஒரு வேளை நா முடியாதுன்னு சொல்லிட்டாலோ அல்லது வீட்டை வித்து இந்திரா, மூர்த்தி ரெண்டு பேருக்கும் பணத்தைப் பிரிச்சுக் கொடுத்தாலோ என்ன செய்வம்மா?

    அப்பா அவள் மனசை அறியும் நோக்கத்தோடு தான் அப்படிக் கேட்டார் என்றாலும் கருணா அவரை ஆத்திரத்தோடு முறைத்துப் பார்த்தாள்.

    "கொஞ்சம் முன்னாடி வீடு பிள்ளைக்குன்னு சொன்ன வாய் ரெண்டே நிமிஷத்துல எப்டி புரட்டி பேசறது பார்த்தேளா? இதுக்கு மேலயும்

    Enjoying the preview?
    Page 1 of 1