Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Innoru Kaadhal Kathai
Innoru Kaadhal Kathai
Innoru Kaadhal Kathai
Ebook97 pages50 minutes

Innoru Kaadhal Kathai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வசந்த் மற்றும் நளினி இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினர். அவளது காதலை இரு வீட்டினரும் ஏற்றுக் கொள்கின்றனர். நகை போடுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. வசந்தின் அம்மா மனம் மாறி நளினி வீட்டிற்கு சென்று பேசுகிறார். நளினியின் அம்மா அவளுக்கு திருமணம் முடிவாகிவிட்டது என்று பொய் கூறுகிறார். வசந்த் யாரை கைப்பற்றுவார் என்று? நளினியுடனா? அல்ல வேறு பெண்ணுடனா?
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580105706061
Innoru Kaadhal Kathai

Read more from Vidya Subramaniam

Related authors

Related to Innoru Kaadhal Kathai

Related ebooks

Reviews for Innoru Kaadhal Kathai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Innoru Kaadhal Kathai - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    இன்னொரு காதல் கதை

    Innoru Kaadhal Kathai

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    காந்தி சிலைக்குப் பின்னால் புல்வெளியில் அமர்ந்து நகம் கடித்தபடி பொறுமையிழந்து கொண்டிருந்தான் வசந்த். ஆறு மணிக்கு வருகிறேன் என்று சொன்ன நளினியை இன்னும் காணவில்லை. மீண்டும் அவன் மணி பார்த்தபோது மொபைல் அழைத்தது. நளினிதான்.

    எங்க இருக்க?

    சாரி வசந்த். வண்டில சின்ன பிரச்சனை. மெக்கானிக் ஷாப்ல இருக்கேன். ஆட்டோ பிடிச்சு அஞ்சே நிமிஷத்துல வந்துடறேன் சரியா?

    சொன்னபடி சற்று நேரத்தில் அவள் வந்தாள்.

    ரொம்ப நேரமாச்சா வந்து?

    கொஞ்ச நேரம் ஆகுதுன்னாலும் தனியா உட்கார்றது போரா இருக்கே...

    சுற்றி எவ்ளோ பொண்ணுங்க இருக்காங்க... யாரையாவது கடலை போட்டுட்ருக்க வேண்டியதுதானே?

    போற போக்குல அதைத்தான் செய்யணும் போல்ருக்கு.

    ஏன், என்னாச்சு? அம்மா என்ன சொன்னாங்க?

    தான் எதுவும் தப்பா கேட்டுடலைங்கறாங்க. அண்ணிக்கு முன்னால உன் மதிப்பு குறைஞ்சுடக்கூடாதுன்றாங்க.

    மரியாதைங்கறது போட்டுட்ருக்கற நகை நட்டுல இல்ல வசந்த். உங்கண்ணி ப்ளஸ் டூ படிச்சுட்டு வீட்ல இருக்கறவங்க. நா எம். எஸ்ஸி. படிச்சுட்டு கல்லூரியில் விரிவுரையாளரா வேலை பார்க்கறவ. மாசம் பதினெட்டாயிரம் சம்பாதிக்கறவ.

    அது எனக்குத் தெரியாதா நளினி? நா வேணா பணம் தரேன். பத்து பவுன் நகை வாங்கிக்க. சத்திரத்துக்கும் நானே கொடுத்துடறேன். நா கொடுத்ததா காட்டிக்க வேண்டாம். என்ன சொல்ற..?.

    எங்க வீட்ல அம்பது பவுன்கூட போடுவாங்க வசந்த்.

    அப்பறம் என்ன...?

    எனக்கு நகை பிடிக்காது. நா அதிகம் நகை போடறவ இல்ல. நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்.

    போட்டுக்காட்டா போவுது. அது பாட்டுக்கு பீரோவுல இருந்துட்டுப் போறது!. இதுக்கோசரம் பிரச்சனை பெரிசாவானேன்?

    எனக்குப் பிடிக்கல வசந்த். உங்கம்மாவோட டிமாண்ட் அசட்டுத்தனமா தோணுது. எங்க வீட்ல போட ரெடியாத்தான் இருக்காங்க. ஆனா நா ஒத்துக்கப் போறதில்ல. நா முக்கியமா? பத்து பவுன் நகை முக்கியமான்னு நீங்க யோசிங்க. உங்கம்மாவுக்கும் புரிய வைங்க.

    ப்ளீஸ் நளினி. நாந்தான் எல்லாத்துக்கும் பணம் தரேன்னு சொல்றேனே.

    எதுக்கு பொய்யும் புரட்டும் பூசி மெழுகலும்?

    இதான் உன் முடிவா?

    கண்டிப்பா.

    என்னைவிட உன் பிடிவாதம்தான் முக்கியமா உனக்கு?.

    உங்கம்மாவோட நகை ஆசையைவிட இது மேல் இல்லையா?

    பத்து பவுன் கூட கேக்கறதால எங்கம்மா ஒண்ணும் ராட்சசியில்ல. அவங்க ரொம்ப நல்லவங்கதான். அதைப் புரிஞ்சுக்க முதல்ல.

    நீங்க என்ன சொன்னாலும் என்னால இதுக்கு ஒத்துக்க முடியாது வசந்த்.

    உனக்கு சம்பாதிக்கற திமிர்.

    உங்கம்மாக்கு ஆம்பளையப் பெத்துட்ட திமிர்.

    வசந்த் கோபமாக எழுந்தான். உனக்கும் எனக்கும் சரிப்படாது நளினி. இப்பவே இவ்ளோ அடமும் அகங்காரமும் இருந்தா பின்னாடி அது இன்னும் அதிகமாய்ட்டே இல்ல போகும்? ஒரு பொம்பளைக்கு முக்கியமா தேவை, விட்டுக் கொடுக்கற மனசு.

    உங்கம்மாவும் ஒரு பெண்தானே வசந்த்?

    வசந்த் முகம் சிவக்க நடக்க ஆரம்பித்தான்.

    குட் பை சொல்லாமலேயே போறீங்களே?

    அவன் திரும்பிப் பார்க்காமல் நடந்தான். நளினி உதட்டைக் கடித்தபடி அவனையே பார்த்தாள்.

    பத்துமாதக் காதல் பத்து பவுன் நகையில் கரைந்து காணாமல் போகும் என்று அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. பெண்ணின் அறிவுக்கும் அவள் உத்யோகத்திற்கும் ஊதியத்திற்கும் மரியாதை இல்லாத நிலை என்று மாறும்? நகை நட்டு சீர் சினத்தி என்று இன்னமும் பழைய சம்பிரதாயங்களைப் பிடித்துக் கொண்டு தொங்குகிற பழக்கத்தை எதிர்த்தால், திமிர் பிடித்தவள், என்று பழித்து விட்டுப் போகிறவனை என்ன செய்ய? அம்மாவுக்காக என்கிற ரீதியில் நாளை இதைவிடப் பெரிய அளவில் பொய்யும் புரட்டும் செய்ய இவன் தயங்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்? வேண்டாம்... இது இத்தோடு முடியட்டும்.

    நளினி எழுந்தாள். ஒட்டியிருந்த மண்ணை உதறிவிட்டு நடக்கத் துவங்கினாள்.

    பத்தே மாதத்தில் தங்கள் காதல் பட்டுப்போகும் என இருவருமே நினைக்கவில்லை. ஒரு மழை நாளில்தான் இருவரும் முதல் முறையாக சந்தித்தார்கள். தங்கள் நிறுவனத்தின் விளம்பரப் படமொன்றில் ஷூட்டிங்கிற்காக அவளது கல்லூரிக்கு வந்திருந்தான் வசந்த். இயற்கை மழையில் ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க அதை வேடிக்கை பார்த்தவர்களுள் நளினியும் ஒருத்தி.

    என்ன விளம்பரத்துக்காக எடுக்கறீங்க? அவள் வசந்த்திடம் கேட்டாள்.

    அவன் மார்க்கெட்டிற்குப் புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள ஒரு ஜலதோஷ நிவாரணியின் பெயரைச் சொன்னான்.

    "எங்கப்பா அடிக்கடி சொல்லுவார். சும்மா விட்டுட்டா தும்மலும் ஜலதோஷமும் மூணே நாள்ள தானா சரியாப் போய்டும்னு. ஆனாலும் இந்த விளம்பரப் படங்கள் எல்லாம் எல்லாத்தையும் ஏன் இப்படி அதிகமாக்கி காட்டுதுன்னு தெரியல.

    Enjoying the preview?
    Page 1 of 1