Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kavithai Arangerum Neram
Kavithai Arangerum Neram
Kavithai Arangerum Neram
Ebook114 pages27 minutes

Kavithai Arangerum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இக்காலத்தில் சில பெண்கள் சினிமாவில் வரும் ஹீரோ போல ஒருவன் வந்து தன் அழகை ரசித்து தனக்கு சேவகனாக இருந்து தன்னை சந்தோஷ கடலில் நீந்த வைப்பான் என்று கனவு காண்கிறார்கள்.

ஆனால் நிஜத்தில் அப்படி அமைவதில்லை. அதை ஏற்க மறுக்கும் மனம் அவனை தள்ளி வைத்துப் பார்க்கிறது.

விளைவு உறவில் விரிசல்.

கதையின் நாயகி இப்படி குணம் உள்ளவள்... விவகாரத்துக்குப் பின் சந்திக்கும் கதாநாயகன் கதாநாயகி நிலை...

கதாநாயகனுக்கு கிடைத்த இன்னொரு வாழ்க்கை... இதையெல்லாம் எப்படி எதிர்கொண்டாள் என்பதை கவிதை நயம் கலந்து காதல் ஏக்கங்களுடன் சொல்லப்பட்ட கதைதான் கவிதை அரங்கேறும் நேரம் நிச்சயம் இந்த கவிதை உங்கள் மனதிலும் இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580137806132
Kavithai Arangerum Neram

Read more from Parimala Rajendran

Related to Kavithai Arangerum Neram

Related ebooks

Reviews for Kavithai Arangerum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kavithai Arangerum Neram - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    கவிதை அரங்கேறும் நேரம்

    Kavithai Arangerum Neram

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    எதிர்வீட்டை வேடிக்கை பார்த்தபடி நின்றாள் ராதா. மாடி போர்ஷனுக்கு புதிதாக யாரோ குடி வரப்போகிறார்கள்.

    சாமான்கள் வந்து இறங்க, இரண்டு ஆட்கள் அதை மாடிக்கு ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.

    அம்மா... வாசலில் என்ன செய்யற. காபி கலந்து தர்றியா? உள்ளிருந்து புவனாவின் அழைப்பு.

    இதோ வரேன்.

    சூடான காபியை அவள் முன் வைக்கிறாள்.

    ஷோபனா வீட்டு மாடிக்கு குடி வரப்போறாங்க, சாமான்கள் வந்து இறங்குச்சு. அதைதான் பார்த்துட்டு இருந்தேன்.

    ஆமாம், யாரோ வரப்போறதாக சொன்னாளே. அவங்களாகதான் இருக்கும். எப்படியோ உனக்கு பொழுதுபோக இன்னும் வசதி, படுக்கையிலேயே இருக்கும் ஷோபனா மாமியார் மங்களத்தம்மாகிட்டே எவ்வளவு நேரம் பேசுவே. மாடியில் உனக்கு தகுந்த ஆள் வந்தா நல்லா இருக்கும் இல்லையா.

    காபியை இஞ்ச், இஞ்சாக ரசித்து குடித்தபடி கேட்க, உனக்கு கிண்டலாக இருக்கா, என் மனசில் எவ்வளவு கவலை இருக்கு தெரியுமா. அதை மறக்கதான் நாலு பேர்கிட்டே பேசறேன்.

    சிரிப்புடன் இருந்த புவனாவின் முகம் சீரியஸாகிறது.

    அம்மா, உனக்கு எத்தனையோ முறை சொல்லிட்டேன். நடந்ததை நினைச்சு, பெரிசா அலட்டிக்காதேன்னு. உலகத்தில் நடக்காதது நடந்திடலை. புரியுதா.

    "என் கல்யாணம் நடந்துச்சு. வந்தவனுடன் என்னால் ஒத்துப்போக முடியலை. தினம் தினம் பிரச்சனையோடு வாழ பிடிக்கலை, டைவர்ஸ் வாங்கிட்டேன்.

    இப்ப என்ன நான் சந்தோஷமாக இல்லையா, இல்லை எனக்கு எதிர்காலமே இல்லாமல் போயிடுமா. கவர்மெண்ட் ஆபிஸில் வேலை. மாசம் பிறந்தா சுளையாக சம்பளம், இஷ்டப்பட்டபடி வாழறேன்.

    அதுக்காக கடைசிவரை இப்படியே இருந்துடுவேன்னு நினைக்காதே. நாளைக்கே மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தன் வந்தால் நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன்.

    அதனால் நீ பெரிசாக அலட்டிக்காமல் நிம்மதியா இரு புரியுதா."

    கையில் இருந்த டம்ளரை ஓசை வரும்படி டங்கென்று டேபிளில் வைத்தவள், வேகமாக எழுந்து அவள் ரூமிற்குள் போய் கதவை படாரென்று மூடுகிறாள்.

    அகங்காரம் பிடித்தவள். இவளை பெண்ணாக பெற்று நான்தான் கஷ்டப்படுகிறேன்.

    யாரையும் மதிக்காத குணம். யாராக இருந்தாலும் அவளுக்கு அடங்கி போக வேண்டும். நினைத்ததை எப்படியாவது சாதிக்க துடிக்கும் சுபாவம். கணவனை இழந்தபோது ஒரே துணையாக நின்ற பத்து வயது மகள் புவனாவை எல்லாமாக நினைத்து கண்மூடித்தனமாக அன்பு செலுத்தியதற்கு இப்போது தண்டனை அனுபவிக்கிறேன்.

    எதுவாக இருந்தாலும் அவளை கேட்டு, அவள் விருப்பத்துக்கு மாறாகா எதுவும் செய்யாமல் வாழ்ந்தது. அவளுக்குள் தலைமை பண்பை உண்டாக்கியிருந்தது.

    படிப்பில் கெட்டிக்காரியாக இருந்ததால், பணிவுக்கு பதில் திமிரே அவளிடம் அதிகம் வளர்ந்தது.

    அழகிலும் குறைந்தவளில்லை.

    கவர்மெண்ட் வேலையும் சுலபமாக கிடைக்க, புவனா தன்னை பெரிய அதிர்ஷ்டசாலியாகவே நினைத்திருந்தாள்.

    புவனா பெரியப்பா நல்ல வரனாக கொண்டு வந்திருக்காரு. பாங்கில் மானேஜராக இருக்கானாம். பையன் பார்க்கவும் நல்லா லட்சணமாக இருப்பானாம். பெத்தவங்க கிடையாது. மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தவன். என்ன புவனா சொல்ற. உனக்கு இந்த வரனை பார்க்கலாமா?

    ஒரு நிமிடம் யோசிக்கிறாள்.

    "என்னால் மாமனார், மாமியார், நாத்தனார் என்று பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு எல்லாரையும் அனுசரிச்சு வாழ முடியாது. இப்படியொருத்தன் கிடைத்தால், அவனை கைக்குள் போட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம்.

    சரிம்மா, எனக்கு கல்யாணம் பண்னும்னு முடிவு பண்ணிட்டே, மேற்கொண்டு ஆக வேண்டியதை பாரு. பெண் பார்க்க வரட்டும். எனக்கு பிடித்தால்தான் நான் ஓ.கே. சொல்வேன்."

    இந்த அளவு அவள் கேட்டவுடன் கல்யாணத்திற்கு சம்மதித்ததையே பெரிய விஷயமாக நினைத்தாள் ராதா.

    இவள் குணத்துக்கு இந்த வரன்தான் ஒத்து வரும். பெரிய குடும்பத்தில் கல்யாணம் பண்ணி கொடுப்பதற்கு சரிவரமாட்டாள், மகளின் குணமறிந்து நினைத்தாள்.

    ***

    அரவிந்தின் அழகும், அதிராத பேச்சும், அமைதியான குணணமும் புவனாக்கு பிடித்து போக, கல்யாணத்திற்கு சம்மதிக்க, ஒரு சுபமுஹூர்த்த நாளில் அரவிந்தனின் மனைவியானாள்.

    அதற்கு பின் வந்த நாட்களை நினைக்கும்போது, ராதாவின் வருத்தம் அதிகமானது.

    ஆறுமாத வாழ்க்கையில் அரவிந்தனுடன் வாழ முடியாது என்று தீர்மானமாக சொன்னவள், அவனிடமிருந்து விவாகரத்து வாங்கினாள்.

    வருடங்கள் இரண்டு முழுதாக முடிய, இதோ பழையபடி அவளும், மகளுமாக நாட்களை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

    புவனாவுக்கு மதுரைக்கு டிரான்ஸ்பர் கிடைக்க, இங்கு வந்து ஆறு மாதங்களாகிறது.

    எதிர் வீட்டில் இருக்கும் ஷோபனா, அவர்களிடம் நட்புடன் பழக, தன் மனக்குறைகளை பகிர்ந்து கொள்ளும் நல்ல உறவாக அவர்களை ஏற்றுக் கொண்டாள்.

    புவனாவுக்கு எதிரிடையான குணம்.

    அடுத்தவர்களின் கருத்துக்கும் பேச்சுக்கும் மதிப்பளிப்பவள்.

    அவள் கணவன் பாபு, காலேஜில் லெக்சரர், மாமியார் மங்களம், நிரந்தர நோயாளி... அவர் பொழுதுகள் எல்லாமே படுக்கையில்தான்.

    முகம் சுளிக்காமல் மாமியாரை கவனிப்பாள்.

    திருமணமாகி நாலு வருடங்கள் ஆகியிருக்க, குழந்தைக்காக காத்திருந்தார்கள். ஷோபனா, உங்க வீட்டு மாடி போர்ஷனுக்கே குடி வரலாம்னு நினைச்சால்... முழங்கால் வலி இருக்கு; என்னால் ஏறி, இறங்க முடியாது; இல்லைன்னா நானே குடி வந்துடுவேன்.

    "அதனாலென்னம்மா இப்ப எதிர்வீட்டில்தானே

    Enjoying the preview?
    Page 1 of 1