Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engiruthalum Vazhga
Engiruthalum Vazhga
Engiruthalum Vazhga
Ebook112 pages42 minutes

Engiruthalum Vazhga

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

விபத்தில் நினைவுகளை தொலைத்து வாழும் மகள் காணாமல் போக,

பேரனுடன் வாழ்க்கையை நடத்துகிறார் அவள் தந்தை.

நீண்ட வருடங்களுக்கு பின் காணாமல் போன மகளை காண்கிறார் தந்தை.

அம்மாவை அடையாளம் காண்கிறான் மகன் இருந்தும் வெளியே சொல்ல முடியாத சூழல்... பாசப்போராட்டம்... இதற்கிடையில் மகனின் காதல்... அது கைகூடியதா... இப்படி காதலும் பாசமும் கலந்த கதையை... எங்கிருந்தாலும் வாழ்க... என்ற நாவலில் உயிரோட்டமாக எழுதி இருக்கிறேன்.

படித்து ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580137806161
Engiruthalum Vazhga

Read more from Parimala Rajendran

Related to Engiruthalum Vazhga

Related ebooks

Reviews for Engiruthalum Vazhga

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engiruthalum Vazhga - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    எங்கிருந்தால் வாழ்க!

    Engiruthalum Vazhga!

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    நினைவலைகள்

    நம் மூளையின் அபார ஆற்றல்களுள் முக்கியமானது ஞாபக சக்தி. இந்த ஞாபகத்தை தன்னுள் கொண்டிருக்கும் பகுதிக்கு 'ஹிப்போக்காம்பஸ்' என்று பெயர். நாம் பார்த்ததை, படித்ததை, கேட்டதை, கேள்விப்பட்டதை இங்குள்ள நியூரான்களில், இன்னும் குறிப்பாக சொன்னால் சைனாப்ஸ்களில் சில வேதிவினை மாற்றங்களாக சேமித்து கொள்கிறது. இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, ஆயிரமாயிரம் சைனாப்ஸ்களில் ஒரு பட்டாசு சரடு மாதிரி அடுக்காகவும், தொடர்ச்சியாகவும் சேமித்துக் கொள்கிறது. இதை ஞாபகச்சரடு என்கிறோம். பின்னொரு நாளில் இந்த ஞாபகச்சரடை தூண்டும் போது ஞாபகச்சரடில் பதியப்பட்ட பழையவை நமக்கு நினைவுக்கு வருகின்றன.

    பல வருடங்களுக்கு முன் விபத்தால் பழைய நினைவுகளை தொலைத்து தொலைந்து போன மகளை காணும் போது அவள் நல்வாழ்க்கையை கருத்தில் கொண்டு பழைய நினைவுகளை நினைவுபடுத்தி குழப்ப வேண்டாம் என பெற்ற தந்தை எடுக்கும் முடிவும், பெற்ற மகன் தன் தாய் என தெரிந்தும் அதை சொல்ல முடியாமல் தவிப்பதையும் மிக அற்புதமாக நாவல் வடிவத்தில் நம் மனகண்முன் கொண்டு வந்துள்ளார் நாவலாசிரியர்.

    *****

    1

    மருந்து கடையில் பைக்கை நிறுத்தி தாத்தாவுக்கு மருந்துகளை வாங்கியவன், திரும்ப வந்து பைக்கை ஸ்டார்ட் செய்ய, வழக்கம் போல தகராறு செய்தது. நாலு நாளைக்கு ஒரு முறை இப்படி தான் மக்கர் செய்யும், கால் வலிக்க உதைத்து ஸ்டார்ட் செய்ய வேண்டும்.

    நடுத்தெருவில் மானத்தை வாங்காதே ராஜா. தயவு செய்து கிளம்பிடு.

    கெஞ்சுதலாக சொன்னபடி உதைத்தான் திவாகர்.

    புல்லட்டில் புடுபுடுவென்று சப்தம் கிளப்ப அவனை கடந்தவன், திரும்பி அவனை பார்த்தபடி சென்றான்.

    திவா வண்டி பழசாயிடுச்சுப்பா அடிக்கடி தகராறு பண்ணுது. கொடுத்திட்டு வேற புதுசா வாங்கிக்கப்பா.

    இல்லை தாத்தா... படிச்சு முடிச்சு வேலை தேடிட்டு இருக்கேன். நல்ல வேலையாக கிடைக்கட்டும். அப்புறம் வாங்கலாம். தேவையில்லாத செலவு இப்ப வேண்டாம் தாத்தா.

    வண்டி நாலு தடவை உதை வாங்கி கடைசியில் ஸ்டார்ட் ஆக தாங்க்ஸ் ராஜா ஏறி உட்கார்ந்தான் திவாகர்.

    பைக்கை ஓரமாக நிறுத்தியவன், மருத்து கவரை எடுத்து கொண்டு உள்ளே நுழைந்தான்.

    சாமி கும்பிட்டாச்சா தாத்தா...

    வா... திவா... நீ வர்ற நேரம்னு தான் வாசல் கதவை திறந்து வச்சேன். பங்கஜம் இப்ப தான் வேலையை முடிச்சுட்டு போனா...

    சொன்னபடி உட்காரும் தாத்தாவின் அருகில் திவாகரும் உட்காருகிறான்.

    பேரனை அவர் கண்கள் பார்க்கிறது. அப்பாவின் கம்பீரம் அப்படியே திவாகருக்கு இருக்கிறது. கண்களில் தெரியும் கனிவு... அவன் அம்மாவிடம் இருந்து வந்தது. நிறம் கோதுமை நிறமும், அழகிய முக அமைப்பும் அப்படியே என் மகள் புவனா தான்... மகளை நினைத்ததும் அவர் கண்கள் கலங்குகிறது. தாத்தாவின் எண்ண ஓட்டத்தை புரிந்தவளாய், மென்மையாக அவள் கையை பற்றுகிறான்.

    இருபது வருஷம் முடிஞ்சு போச்சு... நீங்க இன்னும் மாறலை தாத்தா...

    எப்படிப்பா முடியும்... என் கட்டை வேகற வரைக்கும் இந்த காயம் ஆறாதுப்பா... உன் அப்பாவோடு அவளும் ஆக்ஸிடெண்டில் போயிருந்தா... என் மகள் ஒரேடியாக போயிட்டான்னு மனசு சமாதானம் ஆகியிருக்கும். அப்படியில்லையே... உசுரோடு அல்லவா பறி கொடுத்து நிற்கிறேன்...

    என் மகள் எங்கே இருக்காளோ... என்ன ஆனாலோன்னு வருஷம் இருபது ஆனாலும், என் மனசு தவிச்சுட்டுதான்பா இருக்கும்.

    நினைவுகள் பின்னோக்கி போகிறது.

    சிறு குழந்தையை போல இரண்டு பட்டு புடவைகளை எடுத்துக் கொண்டு அவரிடம் வருகிறாள் புவனா.

    அப்பா இது இரண்டில் எதை எடுத்துட்டு போகணும் சொல்லுங்க...

    முதல் நாள் ரிசப்ஷனுக்கு ரெட் கலர் பனராஸ் புடவையை உங்க மாப்பிள்ளை கட்டிக்க சொன்னாரு... கல்யாணத்தன்னைக்கு எதை சுட்டிக்கலாம்னு கன்பூயுஷனாக இருக்கு. நீங்க செலக்ட் பண்ணுங்கப்பா...

    கண் இமைகள் பட்டாம் பூச்சிகளாக படபடக்க, துடிப்புடன் சொல்லும் மகளை அன்போடு பார்க்கிறார் பத்மனாபன்.

    உனக்கு இரண்டுமே அழகாக இருக்கும். உனக்கு பிடிச்சதை கட்டிக்கம்மா...

    ம்கூம் நீங்க தான் சொல்லணும்...

    அதோ என் பேரன் வர்றான்... அவனை கேட்போம்...

    திவாகர் கண்ணா... அம்மா கையில் இருக்கிற புடவையில் எது உனக்கு பிடிச்சிருக்கு...

    நாலு வயது திவாகர், பெரிய மனித தோரணையில் பின்னால் கைகளை கட்டியபடி சிறிது நேரம் பார்த்து விட்டு, கருநீல கலரில், மெஜந்தா கலர் பார்டர் போட்ட பட்டுபுடவையை அம்மாவிடமிருந்து வாங்குகிறான்.

    இது நல்லாயிருக்கு தாத்தா...

    அவரிடம் தர.

    வெரிகுட். என் பேரனே சொல்லியாச்சு. புவனா இதையே நீ கல்யாணத்தில் கட்டிக்க... அப்படியே தேவதை மாதிரி ஜொலிப்பே... வந்ததும் உனக்கும் மாப்பிள்ளைக்கும் திருஷ்டி சுத்தி போடணும்.

    அப்பா உங்க பொண்ணும், மாப்பிள்ளையும் புதுசா கல்யாணமான ஜோடி இல்லை, வருஷம் நாலாச்சு...

    முத்துக்களை சிதறவிட்டது போல கலகலவென சிரிக்கிறாள் புவனா...

    இருக்கட்டுமே நம்ப குடும்பத்தை பார்த்து மத்தவங்களுக்கு எவ்வளவு பொறாமை தெரியுமா...

    நம்ப முத்துபாண்டி இருக்கானே போன தடவை நம்ப கிராமத்து திருவிழாவுக்கு போயிருந்தப்ப என்ன சொன்னான் தெரியுமா...

    "பத்மா நீ ரொம்ப கொடுத்து வச்சவன்ப்பா... தாயில்லாத உன் மகளை அருமையான மாப்பிள்ளைக்கு கட்டிக் கொடுத்துட்டே... அவர் உன் மகளை மட்டுமா தாங்கறாரு...

    Enjoying the preview?
    Page 1 of 1