Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendralaga Nee Varuvaya
Thendralaga Nee Varuvaya
Thendralaga Nee Varuvaya
Ebook132 pages29 minutes

Thendralaga Nee Varuvaya

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உறவுகள் என்றுமே இனிமையானவை. பிள்ளைகளுக்கு பெற்றவர்கள் மீது உள்ள பாசம் என்றுமே மாறாது இருக்க வேண்டும்.

தென்றலாக அவர்கள் வாழ்க்கையில் நுழைகிறான் கதாநாயகன். தன்னை வளர்த்த அவர்களுக்காக அவன் செய்யும் தியாகங்கள்... அவன் கொண்டிருந்த அன்பு படிப்பவர் மனதை நெகிழ வைக்கும். அன்பான இந்த குடும்ப நாவலை அனைவரும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580137806321
Thendralaga Nee Varuvaya

Read more from Parimala Rajendran

Related to Thendralaga Nee Varuvaya

Related ebooks

Reviews for Thendralaga Nee Varuvaya

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendralaga Nee Varuvaya - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    தென்றலாக நீ வருவாயா...

    Thendralaga Nee Varuvaya…

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author//parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    1

    நான்கு வயது, ஐந்து வயதில் சிறுவர்கள், விளையாடுவதை கவனித்தபடி கடற்கரை மணலில் உட்கார்ந்திருந்தான் சேகர்.

    தம்பி, என் கையை கெட்டியாக பிடிச்சுக்க. அதோ அந்த 'போட்' வரை ஓடி போய்ட்டு வரலாமா?

    சிறுவன் பலமாக தலையசைக்க,

    தம்பியின் கைபிடித்து மணலில் கால் புதைந்து ஓடிவர, அவன் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் சிறுவன் மணலில் குப்புற விழுந்தான். விழுந்த வேகத்தில் அழ ஆரம்பிக்க, பதறிய அண்ணன்

    கண்ணா அடிபட்டுச்சா

    கைபிடித்து தூக்கி அவன் மேல் ஒட்டியிருந்த மணல் துகள்களை தட்டி விட்டவனாய், சமர்த்து அழக்கூடாது, நான்தான் வேகமாக ஓடி உன்னை கீழே விழ வச்சுட்டேன். இந்தா அண்ணனை இரண்டு அடி அடிச்சுடு

    சிறுவனின் கையை பிடித்து, தன் கன்னத்தில் அடித்துக் கொள்ள,

    ம்கூம் கையை உதறி,

    அண்ணனை அடிக்க மாட்டேன். இப்ப எனக்கு வலிக்கலை அழுகையை நிறுத்தி சிறுவன் சொல்ல,

    ஏன் அண்ணனை அடிக்க மாட்டே. நான் தானே உன்னை கீழே தள்ளி விட்டேன்

    ம்கூம்... எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்... மலர்ந்து சிரிக்கும் தம்பியை, தழுவியவன்,

    வா... அம்மாகிட்டே போகலாம்

    தூரத்தில் உட்கார்ந்திருக்கும் அம்மாவிடம் அழைத்து போகிறான்.

    சேகரின் கண்களில் கண்ணீர் தளும்புகிறது.

    இதோ இந்த சிறுவனை போல் அன்பும், பாசமும் வைத்திருந்த என் தம்பி தினகர்... இப்போது எப்படி மாறிவிட்டான் என்னை விஷமாக அல்லவா வெறுக்கிறான்.

    தினகர் எனக்கு உன் மீது எந்த வருத்தமும் இல்லை என் தம்பி மனசு மாற மாட்டானான்னு ஒவ்வொரு நிமிஷமும் காத்திருக்கிறேன் தினகர்.

    மனம் புலம்புகிறது.

    இருட்டிக் கொண்டு வர, கடல் அலைகளின் இரைச்சல் அதிகமாக, மணலை தட்டிவிட்டு எழுகிறான்.

    வீட்டிற்கு போக வேண்டும். கடவுளே எந்த பிரச்சனையும் வரக்கூடாது. அம்மா மனசு சங்கடப்படக்கூடாது.

    மெல்ல நடக்க ஆரம்பிக்கிறான்.

    சேகர்... சேகர்

    யாரோ அழைக்கும் சப்தம் கேட்க,

    தூரத்தில் சந்திரன் வருவதை பார்த்து முகம் மலருகிறான். கல்லூரி நாட்களில் அவனுடன் ஒன்றாக படித்தவன்.

    கல்யாணமாகி, இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறான்.

    சேகர்... எப்படியிருக்கே... அங்கேயிருந்து உன்னை பார்த்தேன், சேகர் போல இருக்கே... கிட்டக்க போய் பார்ப்போம்னு வந்தேன்.

    சிரிப்புடன் அவன் கைபிடித்து குலுக்க,

    ம்... நல்லா இருக்கேன். நீ தான் குடும்பஸ்தன் ஆனதும் என்னை மறந்துட்டே...

    ஏய்... அப்படியெல்லாம் இல்லப்பா... வேலை பிஸி... அப்புறம் நாட்கள் ஓடுது. நீ எப்படியிருக்கே, அம்மா, அப்பா, உன் தம்பி எல்லோரும் நல்லா இருக்காங்களா... இப்ப எங்க வேலை பார்க்கிறே.

    எஸ்.எல்.என். சாப்ட்வேர் கம்பெனியில் புரோக்ராமராக இருக்கேன். சரி... நீ மட்டும் தனியாகவா வந்தே...

    என் மாமா பேமிலியோடு வந்தேன். அதோ அங்கே உட்கார்ந்திருக்காங்க. வாயேன் என் ஒய்ஃப் மாலினியும் இருக்கா...

    இல்லை சந்திரன். லேட்டாச்சு... என் ப்ஃரண்ட் ஒருத்தரை 'மீட்' பண்ண வந்தேன். அவரால் வரமுடியலைன்னு போன் பண்ணிட்டாரு. அதான் கொஞ்ச நேரம் தனிமையில் கடலலைகளை ரசிச்சிட்டு கிளம்பறேன். அம்மா என்னை எதிர்பார்த்து காத்திருப்பாங்க... கிளம்பட்டுமா...

    நீ மாறவே இல்லை சேகர். படிக்கிற காலத்தில் எப்படி அம்மா, அம்மான்னு மூச்சுக்கு நூறுதரம் அழைப்பியோ... அதே மாதிரி தான் இப்பவும் இருக்க,

    சரி... உன் கல்யாணம் எப்ப... உன் தம்பி படிப்பை முடிச்சுட்டானா...

    கல்யாணத்துக்கு என்ன அவசரம்... அது மெதுவாக நடக்கட்டும். தம்பி, இந்த வருஷம் தான் படிப்பை முடிச்சான். வேலைக்கு 'ட்ரை' பண்ணிட்டு இருக்கான்.

    சரி, முடிஞ்சா கோயம்புத்தூருக்கு வா, இந்தா இதுதான் கார்டு... போன் நம்பர் அதில் இருக்கு.

    உன்னை பார்த்து பேசினது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு. பழைய நட்பை தொடருவோம்... அடிக்கடி போன் பண்ணு சேகர், உன் செல்போன் நம்பரை கொடு.

    ‘கார்ட்'டை அவனிடம் கொடுத்து, சேகரின் செல்போன் நம்பரை போனில் பதிவு செய்தான்.

    புன்னகையுடன் விடைபெற்று செல்ல,

    'பைக்' நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வேகமாக நடக்கத் தொடங்குகிறான் சேகர்.

    ***

    கதவை திறக்கிறாள் லட்சுமி

    வா. சேகர் இன்னைக்கு ஏன்ப்பா லேட்டு, சரி போய் முகம் அலம்பிட்டு வா... அப்பா சாப்பிடாமல் இருக்காரு. நான் போய் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன்.

    அம்மா

    என்னப்பா

    திரும்புகிறாள்.

    தம்பி... சாப்பிட்டானாம்மா

    ம்... அவன் ஏழு மணிக்கே சாப்பிட்டு அவன் ரூமுக்கு போயிட்டான்.

    சேகர்... நீ வருத்தப்படாதேப்பா... கொஞ்சநாள் போனா... சரியாயிடுவான். போப்பா...

    அப்பாவின் ரூம் கதவை திறந்து உள்ளே வருகிறான். கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.

    சேகர்... நீ வந்தாச்சா... இன்னைக்கு என்ன கம்பெனியில் அதிக வேலையா... லேட்டாக வந்திருக்கே

    புத்தகத்தை மூடுகிறார்.

    இல்லப்பா... மனசு சரியில்லை. கொஞ்ச நேரம் 'பீச்'சுக்கு போய் உட்கார்ந்துட்டு வந்தேன்.

    "இங்கே வா சேகர்... நீ எதனால இந்த அளவு 'அப்செட்' ஆகிறேன்னு எனக்கு புரியலை. உன் தம்பியை பற்றி உனக்கு தெரியாதா... தேவையில்லாமல் கோபப்படுவான்... அப்புறம் அவனே சமாதானம் ஆகிடுவான்.

    படிச்சு முடிச்சு இன்னும் சரியான வேலை கிடைக்கலைங்கிற வருத்தம் வேற... எல்லாமுமாக சேர்ந்து இப்படி இருக்கான். நீ பெரிசுபடுத்தாதே சேகர். சரி, சாப்பிடலாமா... அம்மா உனக்கு பிடிச்ச இடியாப்பம், குருமா செய்திருக்கா..."

    சேகரை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சிக்கிறார் நாராயணன்.

    இல்லப்பா. தம்பி, மனசளவில் என்னை வெறுக்கிறான். எவ்வளவு நேரமானாலும் என்னோடு சாப்பிடுபவன், இப்பவெல்லாம் என் முகத்தை கூட பார்க்கிறதில்லை. காலையில் கிளம்பும் வரை ரூமை விட்டு வெளியே வர்றதில்லை. ராத்திரி நான் வர்றதுக்குள் ரூமில் போய் கதவை மூடிக்கிறான். மனசுக்கு கஷ்டமாக இருக்குதுப்பா.

    ப்ளீஸ் சேகர். நீ வருத்தப்படறதை பார்த்தா எனக்கு கஷ்டமாக இருக்கு. கொஞ்சநாள் பொறுத்துக்க... நிச்சயம் தினகர் உன்னை புரிஞ்சுப்பான்... இந்த அப்பாவுக்காக... ப்ளீஸ் சேகர்...

    அப்பாவின் கையை பிடித்தவன்,

    என்னப்பா இது... நீங்க போய் என்கிட்டே கெஞ்சிக்கிட்டு... என் மன வருத்தத்தை சொன்னேன். அவ்வளவுதான். வாங்கப்பா சாப்பிடலாம்

    மென்மையாக சொல்கிறான்.

    ***

    இரவு வேலைகளை முடித்து படுக்கைக்கு வருகிறாள் லட்சுமி.

    இரவு விளக்கொளியில் கணவன்

    Enjoying the preview?
    Page 1 of 1