Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyir Thodum Amutham Nee!
Uyir Thodum Amutham Nee!
Uyir Thodum Amutham Nee!
Ebook126 pages47 minutes

Uyir Thodum Amutham Nee!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மாலதி_ அனாதை இல்லத்தில் வளர்ந்தவள். அன்பிற்காக ஏங்கி தவிக்கும் ஒரு அபலை. ஆனால் அவள் எதிர்பார்த்த அன்பே அவளை ஒரு குழந்தையுடன் அனாதை ஆக்கும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் குழந்தை அனாதையாக வளர்க்கக் கூடாது என்று தீர்மானித்தாள். அதற்காக தன்னை ஏமாற்றியவனை கூட தேட நினைக்கவில்லை. ஆனால் அதிசயம் நிகழ்ந்தது. அது எப்படி? வாங்க வாசிக்கலாம்

Languageதமிழ்
Release dateJan 18, 2021
ISBN6580137806710
Uyir Thodum Amutham Nee!

Read more from Parimala Rajendran

Related to Uyir Thodum Amutham Nee!

Related ebooks

Reviews for Uyir Thodum Amutham Nee!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyir Thodum Amutham Nee! - Parimala Rajendran

    https://www.pustaka.co.in

    உயிர் தொடும் அமுதம் நீ!

    Uyir Thodum Amutham Nee!

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    1

    அந்த பூஞ்சோலை கிராமம் பெயருக்கேற்றாற்போல் பசுமை போர்த்தி காணப்பட்டது. கிராமத்தை ஒட்டிச்செல்லும் ஏரி. அந்த இடத்தை குளுமைப்படுத்தி அந்த கிராமத்திற்கே ஒரு அழகை தந்தது.

    சுற்றிலும் மரம், செடி, கொடிகளுடன் உள்ளடங்கி இருந்த பண்ணை வீட்டிற்கு சொந்தக்காரனான சண்முகம் வாசல் திண்ணையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

    இன்னைக்கு தேங்காய் பறிக்க டவுனிலிருந்து ஆள் வர்றாங்க இல்லையா ஏழுமலை

    தோட்டத்தை பெருக்கி கொண்டிருந்த ஏழுமலை வேலையில் ஈடுபட்டபடியே,

    ஆமாங்க ஐயா. பதினொரு மணிக்கு வந்திடுவாங்க. இதோ பத்து நிமிஷம் முடிச்சுட்டு தோப்புக்கு கிளம்பிடறேன். நீங்க மெதுவா வாங்க.

    சாப்பிட்டியா ஏழுமலை.

    நேரத்துக்கு சாப்பிடலைன்னா... அம்மா கோபப்படுவாங்க. எதுக்காக உழைக்கிறோம். எல்லாம் இந்த வயித்துக்குத்தான்னு அம்மா சொல்வாங்க. மகாராசி அவங்க கையால இட்லி, சாம்பார் திவ்யமா சாப்பிட்டேன்.

    சிரித்தபடி அவனை பார்க்கிறார். ரொம்ப வருஷமாக அவரிடம் வேலை பார்ப்பவன் விசுவாசமானவன்.

    ஐயா, நாளைக்கு ஊரிலிருந்து தம்பிங்க குடும்பத்தோட வர்றதாக அம்மா சொன்னாங்க. இளநீர் குலை நாலைஞ்சு பறிக்க சொல்லி வீட்டுக்கு கொண்டு வரணும்.

    பேசியபடி பின்பக்கம் போக,

    வாசலுக்கு வருகிறாள் வைதேகி.

    என்ன வைதேகி முகத்தில் ஒரு ஜொலிப்பு தெரியுது. உன் மகன்கள் வரப்போகிற சந்தோஷமா...

    பின்னே இருக்காதா... இரண்டு பேரும் ஊர் பக்கம் வந்து ஆறு மாசமாச்சு. நம்ப கிரி மகனுக்கு ஒன்றரை வயசாயிருக்கும். குழந்தை பிடிச்சிட்டு நடப்பதாக சொன்னான். பேரனையும், பேத்தியையும் பார்க்கணும்னு மனசு தவிக்குது.

    ரகு பேசினானா வைதேகி

    எப்படியும் மதியம் சாப்பாட்டிற்குள் வர்றதாக சொன்னான் இரண்டு பேரும் காரில் தானே வர்றாங்க. வந்திடுவாங்க.

    அவள் குரலில் வருத்தம் தெரிகிறது.

    ஏன்ம்மா பெரிய மகன் ரகுவை நினைச்சதும் மனசு வேதனைபடுதா.

    "ஆமாங்க மனசுக்கு கஷ்டமாக இருக்கு. இரண்டு பிள்ளைகளையும் அருமை, பெருமையாக வளர்த்தோம். பெரியவன் டாக்டராகவும், சின்னவன் என்ஜினீயராகவும் நம்மை பெருமைப்பட வச்சாங்க. குறை சொல்ல முடியாத தங்கமான பிள்ளைகள்.

    நமக்கு வந்த மருமகள்களும் அப்படியே. அன்பும், பாசமுமாக பழகறாங்க. எல்லாம் இருந்தும் சின்னவனுக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்த கடவுள், பெரியவனுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷம் ஆகியும், இன்னும் குழந்தை பாக்கியத்தை தரலையே அதை நினைக்கும்போது மனசு வேதனைப்படுதுங்க."

    வருத்தப்படாதே. கால தாமதமானாலும் கடவுள் நிச்சயம் நல்லதை செய்வாரு. இப்ப டிரீட்மெண்டில் இருப்பதாக ரகு சொன்னான் இல்லையா. இப்ப நேரில் வரும்போது நிச்சயம் நல்ல செய்தி சொல்வாங்க.

    உங்க வாக்கு முகூர்த்தம் பலிக்கட்டும். நம்ப காத்தாயி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யறேன்.

    சண்முகம், வைதேகிக்கு ரகுவரன், கிரிதரன் இரண்டு பிள்ளைகள். ரகுவரன் டாக்டருக்கு படித்து திருச்சியில் நர்சிங் ஹோம்வைத்து நடத்திக் கொண்டிருக்க, கிரிதரன் கோயமுத்தூரில் ஐ.டி.கம்பெனியில் வேலை பார்த்தான்.

    ரகுவரன் திருமணமானவுடன் அப்பா, அம்மவை தன்னுடன் வந்து இருக்கும்படி அழைத்தான்.

    "இல்லப்பா. எங்களோட வாழ்க்கை இந்த கிராமத்திலேன்னு முடிவாகிடுச்சு. வயல்வரப்பு, தோட்டம்னு பராமரிக்கணும். நமக்கு சோறு போட்ட பூமி. நம்மை நம்பி நாலு குடும்பங்கள் பிழைக்குது. உடம்பில் தெம்பு இருக்கிற வரை. இப்படியே ஓட்டுறோம். உங்க காலத்தில் எப்படி பண்றதுன்னு யோசிங்க.

    உங்க வாழ்க்கையில் முன்னேற்றத்தை பாருங்க. பிள்ளைக்ளை நல்ல முறையில் ஆளாக்கியிருக்கோம்ங்கற திருப்தி உங்களுக்கு இருக்கும்ப்பா.

    ரகுவுக்கு திருமணமாகி இரண்டு வருடத்தில் நல்ல சம்பந்தம் வர, கிரிதரனின் திருமணத்தை சிறப்பாக முடித்தார்கள்.

    கிரிதரனுக்கு திருமணமாகி மூன்று வருடத்தில் இரண்டு குழந்தைகள் ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக பிறக்க, ரகுவரனுக்கு ஐந்து வருடமாகியும் குழந்தை பிராப்தம் இல்லாதது, எல்லாருக்குமே பெரிய குறையாக இருந்தது.

    ***

    கார் பூஞ்சோலை கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த ரகு யோசனையுடன் காரை ஓட்டிக் கொண்டிருந்தான்.

    அருகில் அமர்ந்திருக்கும் நந்தினி கணவனை கவனித்தாள்.

    அழகில் குறை சொல்ல முடியாதவன். நல்ல உயரம். உயரத்திற்கேற்ற உடலமைப்பு. அடர்த்தியான மீசையும், குறுந்தாடியும் அவன் அழகை மிகைப்படுத்தி காட்டியது.

    நந்தினி என்ன என்னையே பார்க்கிற மாதிரி தெரியுது.

    ஆமாம் என் புருஷன் எவ்வளவு அழகுன்னு ரசிச்சேன்.

    என்ன பண்றது, என் அழகோடு ஒப்பிடும்போது நீ சுமார்தான் இருந்தாலும் பரவாயில்லை நீயும் பார்க்கிற மாதிரி இருக்கே.

    குறும்பு சிரிப்போடு சொல்கிறான்.

    திடீரென்று சிரிப்புடன் இருந்த நந்தினியின் முகபாவம் மாறுவதை கவனித்தவன்.

    நந்தினி... என்னாச்சு ஜாலியாக பேசிட்டு போயிட்டு இருக்கோம் மூட் அவுட் ஆகிறே.

    உங்க மனசில் மட்டும் வருத்தம் இல்லையா. அதை மறைக்கதானே இப்படி பேசறீங்க.

    ப்ளீஸ்... நந்தினி உன்கிட்டே இதோடு எத்தனையோ முறை சொல்லிட்டேன். குழந்தைங்கிறது நம் வாழ்க்கையின் ஒரு அங்கமே தவிர, அதுவே வாழ்க்கை ஆகிடாது.

    நமக்கு வாழ்க்கையில் கிடைச்சுருக்கிற மற்ற நல்ல விஷயங்களை நினைச்சு சந்தோஷமாக வாழலாம் நந்தினி.

    நீங்க என்னதான் சமாதானம் சொன்னாலும் எனக்குள் ஒரு குற்ற உணர்வு தோணுதுங்க. எனக்குள் இப்படி ஒரு குறை இருக்கும்னு தெரியலை.

    எப்படியாவது குழந்தை பிறந்திடும்னு நம்பிக்கையோடு டீரிட்மெண்ட் ஆரம்பித்தோம். கடைசியில் கடவுள் கை விரிச்சுட்டாரு.

    அவள் குரல் உடைந்து ஒலித்தது.

    "உன் வயிற்றில் உருவாகும் கருமுட்டைக்கு ஒரு குழந்தையை உருவாக்கும் திறன் இல்லைன்னு தெரிஞ்சப்ப நானும் தான் உடைஞ்சு போயிட்டேன். ஒரு டாக்டராக என்னை நானே சமாதானம் பண்ணிக்கிட்டேன்.

    என் நந்தினியால் ஒருகுழந்தைக்கு தாயாக முடியலைன்னாலும் ஒரு நல்ல மனைவியாக என்னோடு கடைசி வரை வாழ்ந்தால் போதும்னு முடிவு பண்ணிட்டேன்.

    நமக்கு குழந்தை வேண்டாம் நந்தினி. உனக்கு நானும் எனக்கு நீயுமாக வாழ்ந்துட்டு போவோம்."

    "உங்ககிட்டே எந்த குறையும் இல்லையே ஒரு குழந்தைக்கு அப்பாவாகிற தகுதி உங்ககிட்டே இருக்கு. அதை நான் தட்டி பறிச்சுட்டேன். இப்பவும் சொல்றேன் நீங்க வேறு ஏதும் முடிவு

    Enjoying the preview?
    Page 1 of 1