Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Maalai Idum Sontham
Maalai Idum Sontham
Maalai Idum Sontham
Ebook134 pages1 hour

Maalai Idum Sontham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

'மாலையிடும் சொந்தம்' என்ற இந்த நாவலில்... கணவன், மனைவியிடையே புரிதலும் சகிப்புத் தன்மையும் இல்லாததால் குடும்ப உறவுகள் பிரிந்து, வாழ்க்கை எப்படி சிக்கலாகி பல துன்பங்களை சந்திக்க நேரிடுகிறது என்பதை நாயகியின் மூலம் சொல்லியிருக்கிறேன்.

- பரிமளா ராஜேந்திரன்

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580137806142
Maalai Idum Sontham

Read more from Parimala Rajendran

Related to Maalai Idum Sontham

Related ebooks

Reviews for Maalai Idum Sontham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Maalai Idum Sontham - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    மாலை இடும் சொந்தம்...

    Maalai Idum Sontham…

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    http://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    முன்னுரை

    கண்மணி வாசகர்களுக்கு என் அன்பான வணக்கம்.

    'மாலையிடும் சொந்தம்' என்ற இந்த நாவலில்... கணவன், மனைவியிடையே புரிதலும் சகிப்புத் தன்மையும் இல்லாததால் குடும்ப உறவுகள் பிரிந்து, வாழ்க்கை எப்படி சிக்கலாகி பல துன்பங்களை சந்திக்க நேரிடுகிறது என்பதை நாயகியின் மூலம் சொல்லியிருக்கிறேன்.

    பரிமளா ராஜேந்திரன்

    *****

    1

    ரெயில் பயணம் கீர்த்திக்கு மிகவும் பிடித்தமானது. ஜன்னலோரம் முழங்கையில் முகம் பதித்து, கடந்து போகும் மரங்களையும், வயல் வரப்புகளையும் கட்டிடங்களையும் கண் இமைக்காமல் பார்ப்பது அலாதியானது. கீர்த்தி, ப்ரெண்டு கல்யாணத்துக்கு போனோமா, வந்தோமான்னு சீக்கிரம் வந்து சேரு. சுந்தரம் மாமா வீட்டில் கல்யாண பலகாரங்கள் செய்ய ஆர்டர் வாங்கியிருக்கேன்

    கிளம்பும்போது வாசல் வரை வழியனுப்ப வந்த அம்மா சொன்னாள். அதனாலேயே விடியற்காலை முகூர்த்தம் முடிந்ததும், 'டே எக்ஸ்பிரஸில்’ கிளம்பிவிட்டாள். பாவம் அம்மா அடுப்படியில் வெந்தே... காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறாள். பாழாய்போன படிப்பும் கீர்த்திக்கு சரியாக வராததால் பிளஸ்டுவுடன் படிப்பை நிறுத்திவிட்டாள்.

    தஞ்சாவூரில் துணிக்கடை ஒன்றில் சேல்ஸ் கேர்ள் ஆகவும் அம்மாவுக்கு துணையாக பலகாரங்கள் செய்வதிலும் அவள் பொழுது போய் கொண்டிருந்தது.

    ஜானு, அபியை என்கிட்டே கொடுத்துட்டு, நீ நல்லா உட்காரு அருகில் குரல் கேட்க, அப்போது தான் திரும்பி தன்னருகில் அமர்ந்திருக்கும் ஜானு என்ற அந்த பெண்ணையும், அவள் மடியில் உட்கார்ந்திருக்கும் மூன்று வயது சிறுமியையும் பார்க்கிறாள்.

    மேல் பர்த்தில் லக்கேஜை ஒழுங்காக வைத்தவன், மனைவியின் அருகில் உட்கார்ந்து மகளை வாங்குகிறான்.

    அபி பாப்பா... இப்ப நாம் எங்கே போறோம். தெரியுமா ‘தெரியாது' என தலையாட்ட,

    புது ஊருக்கு தஞ்சாவூருக்கு போறோம். சென்னைக்கு 'பை’ சொல்லிடு அவள் சொல்ல, வெளியே பார்த்து

    பை, பை சென்னை

    மழலையில் அழகாக சொல்லியது.

    அழகாக பட்டு போல இருக்கும் குழந்தையை புண்னகையோடு பார்த்த கீர்த்தி, உன் பேர் என்னம்மா

    கீர்த்தியை பார்த்த அபி,

    நான் அபிநயா... அம்மா பேரு ஜானு, அப்பா பேரு சிவா...

    பரவாயில்லையே கேட்டதுக்கு மேலே பதில் சொல்றியே... ஸ்கூலுக்கு போறியா...

    ‘ம்கூம்...’ தலையாட்ட

    புது ஊருக்கு போயி ஸ்கூலுக்கு போகப் போறேன்னு அக்காகிட்ட சொல்லும்மா

    மகளிடம் சிவா சொல்ல,

    ஜானுவை பார்த்து சினேக பாவத்துடன் சிரித்தவள்,

    நீங்க தஞ்சாவூர் போறீங்களா

    ஆமாம். அவருக்கு டிரான்ஸ்பர் வந்திருக்கு. தஞ்சாவூரில் செட்டில் ஆகப் போறோம்.

    அப்படியா. நானும் தஞ்சாவூர்தான் நீங்க தஞ்சாவூரில் எங்கே... - தெரியலை என்பது போல சிவாவை பார்க்கிறாள் ஜானகி.

    தஞ்சாவூரில் ஸ்டேட் பாங்கில் பீல்டு ஆபீசராக டிரான்ஸ்பரில் வரேன். வீடு மேட்டுபிள்ளையார் தெருவில் ‘அக்ஷயா அபார்ட்மெண்டில்' பார்த்திருக்காங்க.

    இதழ் விரித்து சிரிக்கிறாள் கீர்த்தி

    ரெயில் சிநேகிதம் தொடரப் போகுதுன்னு நினைக்கிறேன். நானும் மேட்டுபிள்ளையார் கோவில் தெருவில்தான் இருக்கேன். பத்தாம் நம்பர் வீடு எங்க வீட்டுக்கு ரெண்டு வீடு தள்ளிதான் அக்ஷயா அப்பார்ட்மெண்ட் இருக்கு

    கீர்த்தி சொல்ல, சிவாவும், ஜானகியும் அவளை நட்போடு பார்க்கிறார்கள்.

    பரவாயில்லை ஊர் எல்லையில் கால் வைக்கிறதுக்குள்ளே எங்கள் தெருவில் குடியிருக்கும் பெண்ணே எங்களை வரவேற்க எங்களோடு வர்றாங்க... ரொம்ப சந்தோஷம்

    சிவா சொல்ல,

    ஐயோ, எனக்கு மரியாதையெல்லாம் வேண்டாம். எனக்கு உங்களையெல்லாம் நல்லாவே பிடிச்சிருக்கு. என் பெயர் கீர்த்தி, நீங்க என்னோடு வயசில் பெரியவங்க... பெயர் சொல்லியே கூப்பிடலாம். அதுவுமில்லாமல் ஒரே இடத்தில் இருக்கப் போறோம்.

    ஜானகி, கீர்த்தியை பார்க்கிறாள். திருத்தமான முகம், மாநிறமாக இருந்தாலும் களையாக இருக்கிறாள். அவளுடைய எளிமையான அலங்காரம், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவள் என்பதை சொல்லியது.

    என்னம்மா பண்றே... படிக்கிறியா

    அதுக்கு முன்னால நான் ஒண்ணு சொல்லட்டும்களா

    என்ன சொல்லப் போறே

    நீங்க ரொம்பவே அழகா இருக்கீங்க. உங்களுடைய அழகும், சிரிச்ச முகமும், அமைதி தெரியும் கண்களும்... எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு அக்கா

    உரிமையோடு கீர்த்தி பேச, அவளை பார்த்து சிரிக்கிறான் சிவா.

    என்ன சார், நான் சொன்னதை கேட்டு சிரிக்கிறீங்க. நான் சொல்றது உண்மை தானே. அக்காவின் அழகில் மயங்கி தானே அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க

    ம் அப்படியும் வச்சுக்கலாம். ஆனா நீ அவளை அக்கான்னு உரிமையோடு, கூப்பிட்டு என்னை சார்னு அந்நியப்படுத்தறே பார்த்தியா...

    "சரி, உங்களையும் உறவு முறையோடு கூப்பிடறேன். எனக்கு அப்பா இல்லை. கூட பிறந்தவங்களும் கிடையாது. அம்மா மட்டும்தான். நீங்க என் சகோதரனாக இருங்க...

    உங்களை அண்ணான்னு நான் கூப்பிடட்டுமா"

    அவள் குரலில் ஏக்கம் தெரிய,

    அன்போடு அவளை பார்த்தவன்,

    சின்ன பெண்ணாக இருந்தாலும், உன்கிட்டே நிறைய பக்குவம் தெரியுது கீர்த்தி. என்னை உன் அண்ணனாக நினைப்பது எனக்கு சந்தோஷம் தான். ஆனா நான் எதுக்கு சிரிச்சேன் தெரியுமா... உன் அக்காவின் அழகை புகழ்ந்த நீ, இப்படி கருப்பாக உங்க அழகுக்கு கொஞ்சமும், பொருத்தமில்லாத இவரை எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு கேட்கப் போறியோன்னு சிரிச்சேன் வாய்விட்டு சிரித்தபடி சொல்ல

    அவளிடமிருந்து அபியை வாங்கி தன் மடியில் உட்கார வைத்தவள்.

    என்னமோ தெரியலைக்கா... நான் யார்கிட்டேயும், முன்பின் பழக்கமில்லாதவங்ககிட்டே, இவ்வளவு உரிமையோடு பேசமாட்டேன். ஆனா உங்க இரண்டு பேரையும் என்னால் அந்நியமாக பார்க்க முடியலை. உண்மையில் நமக்குள் பூர்வஜென்ம பந்தம் ஏதாவது இருக்கலாம்னு தோணுது

    சரி, இருந்துட்டு போகட்டும் எனக்கொரு வாயாடி தங்கை இருக்கான்னு நானும் சந்தோஷசப்படறேன். நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லலை... ஜானகி கேட்க,

    படிப்பை பத்தி தானே. அதுக்கும், எனக்கும் ரொம்ப தூரம்கா... பிளஸ்டு வரைக்கும் கஷ்டப்பட்டு படிச்சுட்டேன். இப்ப ஒரு துணிக்கடையில் சேல்ஸ்கோள் ஆக வேலை பார்க்கிறேன். அம்மா பலகாரம் செய்து கடைகளுக்கு தர்றாங்க. அதுவுமில்லாமல் கல்யாண ஆர்டர் ஏதும் வந்தால், ஆள் வைத்து செய்து கொடுப்பாங்க. இரண்டு பேர்தான் பிரச்சினை இல்லாமல் குடும்ப வண்டி ஓடுது

    தன் கதையை சொல்கிறாள்.

    உங்க சொந்த ஊர் சென்னை தானாக்கா

    ஜானு தயக்கத்துடன் சிவாவை பார்க்க,

    ஜானகிக்கு சொந்த ஊர், எல்லாமே ஐதராபாத். கல்யாணம் முடிந்த பிறகு தான் சென்னை வந்தா... எங்களுக்கு கல்யாணமாகி நாலு வருஷமாச்சு. ஜானுவுக்கு சொந்தம்னு சொல்ல யாருமில்லை. பெத்தவங்க போய் சேர்ந்தாச்ச. சொல்லப் போனா இரண்டு பேருக்கும் ஒரே நிலைமை தான். எனக்கு, ஜானு, அவளுக்கு நான், எங்களுக்கு எங்க மகள் அபி. சின்ன குடும்பம். இப்ப புதுசா ஒரு தங்கை கிடைச்சிருக்கா

    சிவா சொல்ல புன்னகை மாறாமல் அன்போடு அவர்களை பார்க்கிறாள்

    ரெயில் தஞ்சாவூர் ஸ்டேஷனை அடைய, ஒரு கையில் அபியையும், மற்றொரு கையில் பெட்டியையும் தூக்கிக் கொள்கிறான் சிவா.

    Enjoying the preview?
    Page 1 of 1