Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanintha Mana Deepangalai! Part - 2
Kanintha Mana Deepangalai! Part - 2
Kanintha Mana Deepangalai! Part - 2
Ebook289 pages3 hours

Kanintha Mana Deepangalai! Part - 2

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580106004474
Kanintha Mana Deepangalai! Part - 2

Read more from Jaisakthi

Related to Kanintha Mana Deepangalai! Part - 2

Related ebooks

Reviews for Kanintha Mana Deepangalai! Part - 2

Rating: 5 out of 5 stars
5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanintha Mana Deepangalai! Part - 2 - Jaisakthi

    http://www.pustaka.co.in

    கனிந்த மனத் தீபங்களாய்! பாகம் - 2

    Kanintha Mana Deepangalai! Part - 2

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    1

    வழக்கம் போல் அதிகாலை ஐந்து மணிக்கே விழித்த குந்தவி தன் புகுந்த வீட்டில் இருக்கிறோம் என்று உணர்ந்தாள். அருகில் சீராக மூச்சுவிட்டபடி உறங்கிக் கொண்டிருந்த சிவநாதனைப் பார்த்துப் புற உலகுக்கு வந்தாள்.

    தன் வாழ்க்கையே திசை மாறி விட்டதை உணர்ந்தாள். சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தாள். பிறகு குளித்து முடித்துக் கீழே அடுக்களைக்குள் வந்தாள். தன்னைப் போலவே வத்சலாவும் நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கம் உள்ளவள் என்று தெரியும் அவளைத் தேடினாள். அவள் காலை உணவுத் தயாரிப்பை மேற்பார்வை செய்து கொண்டிருந்தாள். குந்தவியைப் பார்த்துச் சிரித்துக் கொண்டு வந்தாள். தன்னை விடக் குந்தவி சின்னவள் என்ற முறையில் வா போ என்று பேசினாலும் அண்ணி என்றுதான் அழைத்தாள். என்ன அண்ணி அதுக்குள்ள குளிச்சாச்சா? என்றாள். அவள் தன் முகத்தை, முகத்தைப் பார்ப்பதை கவனித்துத் தனியே போனார்கள். என்னண்ணி? என்றாள்.

    அவளைத் தன் தோழியாய் ஏற்றுக் கொண்டதாலோ என்னவோ அவளிடம் தன் மனம் திறந்தாள்.

    வத்சலாண்ணி... என் சிவாதான்... ஆனால் ஜீரணிக்க முடியவில்லை... என்றாள்.

    வத்சலா புரிந்து கொண்டாள். நான் கூட அப்ப அப்படித்தான் நினைத்தேன் அண்ணி என்றாள். ஒரு நிமிடம் மௌனமாக நின்றாள். பிறகு அண்ணி, அண்ணா உன் மேல் உயிராய் இருக்கிறார். எதுவும் சொல்லிவிடாதே அண்ணி. உனக்குத் தெரியாது அண்ணி. எத்தனை பேர் அவருக்குப் பெண் கொடுக்கணும்னு ட்ரை பண்ணினாங்கன்னு. எத்தனை பெண்கள் முயற்சி செஞ்சாங்க தெரியுமா? கன்னியாகுமரியிலருந்து வந்ததிலிருந்து தனியாச் சிரிச்சுக்கறாரு. அம்மா இந்தக் குந்தவியை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குன்னு கிங்ஸ்லி சொல்லலியாம்மான்னு ஒரே வெட்கம். உன்னையும் அவரு நல்லாப் புரிஞ்சிருக்காரு. உன் மனசு புரிந்து எவ்வளவு நாசுக்காய் நடத்திகிட்டார் பார்த்தியா? போனவாரம் சொல்றார். ஹாஸ்பிட்டல்ல அவ வெடிச்சு அழுதது இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்குது. குந்தவி என் மேல அன்பு வச்சிருக்கா. நான் அவள் மேல் காதல் வைத்திருக்கிறேன். அவள் கம்பீரமே தனிதான் வத்சலா. எப்படிப் புரிய வைப்பேன்னு தெரியலங்கறார். விட்டுக் கொடு குந்தவி என்றாள்.

    ஐயோ. சிவா மாதிரிக் கிடைக்கணுமே. அவரை எனக்கு ரொம்பப் பிடிக்குது. இப்படி எத்தனை பேரையோ வேண்டாம்னு சொல்லிட்டு... என்னைப் போய்...வத்சலா... அண்ணி உங்கண்ணன் மனசில எனக்கு இடம் கிடைச்சது எவ்வளவு பெரிய விஷயம்னு எனக்குத் தெரியுது. ஆனா... என்று அவளுடைய முகம் சிவக்கத் தலைகுனிந்து கொண்டாள்.

    எதுவும் சொல்ல மாட்டேன் அண்ணி. அவருக்கு இல்லையென்று மறுக்க எதுவும் என்னிடம் இல்லை... என்றாள். பிறகு சற்று நேரம் அவன் தனக்குப் புடவைகள் வாங்கி வைத்திருப்பதைப் பற்றிப் பேசினார்கள்.

    வத்சலா கொஞ்சம் கலாட்டா செய்தாள். எப்படிப்பட்ட அண்ணன் அவரைப் போய் இப்படி மாத்திட்டியே என்று சிரித்தாள்.

    குந்தவி பூஜை அறைக்குப் போனாள். அந்த நேரம் அண்ணனை ஃபோனில் அழைத்த வத்சலா சற்று நேரம் பேசினாள். அவன் கேட்டுக் கொண்டான். பிறகு அது எனக்கே தெரியும்மா. நா பாத்துக்கறம்மா என்று பதில் சொன்னான். தாங்ஸ்மா என்று ஆஃப் செய்தான்.

    குந்தவி மேலே தேநீரோடு வந்த போது அவன் பல் துலக்கிக் கொண்டிருந்தான். ஹாய் கண்ணம்மா, குட்மார்னிங் என்று சிரித்தான். பால்கனியில் நின்று தேநீர் அருந்தியபடி பொதுப்படையாய்ப் பேசினான். சிரிக்கச் செய்தான். இயல்பாய்த் தன் முகம் பார்த்துப் பேசும் நிலைக்குக் கொண்டு வந்தான்.

    சிவா நாளையிலிருந்து யோகா செய்ய வேண்டும் என்றாள்.

    எத்தனை மணிக்கு எழுந்திருப்பாய்? என்று கேட்டான்.

    சில நேரம் நாலுமணி. சிலநேரம் ஐந்து மணி என்றாள். சிவா அந்த நேரத்திற்கு எழுந்து யோகா செய்தாள் அருமையாக இருக்கும் என்றாள். நீங்க? என்றாள்.

    ம்... நானும் ஐந்து மணிக்கு முழிச்சர்றதுதான். அப்புறம் என்ன செய்வீங்கன்னு கேப்பே. நான் உன்னை நினைச்சுகிட்டுப் படுத்திருப்பேன்னு சொல்லணும் எதுக்கு கண்ணம்மா? என்று சிரித்தான்.

    அவள் தரையைப் பார்த்துக் கொண்டு நின்றாள். அட நிஜமாத்தான் என்று சிரித்தான். ஹேய் என்ன பதிலைக் காணோம்? என்றான்.

    அதான் நீங்களே கேட்டு பதிலையும் சொல்லிக்கறீங்களே? என்றாள். சிவா உங்களை எப்படிச் சமாளிக்கப் போறேனோ தெரியலை?

    ம்...? என்று அவன் பார்த்தான்.

    சீரியஸாய் முகத்தை வச்சுகிட்டு ஜோக்கடிக்கிறீங்க? என்றாள்.

    அவன் புன்னகைத்தான். அது உன்கிட்டே கத்துகிட்டதுதான் கண்ணம்மா? அதென்ன குறும்பாய் ஏதோ சொல்லிட்டுத் தலையைக் குனிந்து சிரிக்கறது? என்னமோ நான் லஞ்சம் குடுக்கறேன்னே? என்றான்.

    பின்னே, புடவை வாங்கி அடுக்கி வச்சிருக்கீங்களே? என்றாள்.

    அவன் தலையிலடித்துக் கொண்டான். ஐயோ குந்தவி. வேறொரு பொண்ணாயிருந்தா இந்நேரம் எல்லாப் புடவையையும் பிரித்துப் பாத்து விலை பார்த்து... என்று சிரித்தான். பிறகு முகத்தை தீவிரமாக்கி குந்தவி... இந்த சின்னவ பாமளா இருக்காளே எல்லாம் விசாரிப்பா... என்றான்.

    நோ பிராப்ளம் கண்ணம்மா... என்று அவனைப் போலவே செய்து காட்டி அவள் சிரிக்கவும் ஹேய். இரு நா குளிச்சிட்டு வந்து பேசிக்கறேன் என்று போனான். குந்தவி டவல் என்று எதையாவது கேட்டுத் தன் அருகாமையை இயல்பாக்கினான். பிறகு தலையைத் துவட்டிக் கொண்டே குந்தவி உன்னோடு ரெண்டு மூணு நாள் எங்கயாவது போய்த் தனியா இருக்கணும்னு இருக்கு. ஒரு இடம் ஃபிக்ஸ் செய்திருக்கேன். நீ சரின்னா போலாம் என்றான்.

    சிவா. நீங்க ஆர்டர் போட்டா நாங்க வரணும்தானே. எங்களுக்கு மறுக்கிற உரிமை இருக்கா என்ன? என்றாள் அவள் விளையாட்டுப் போல்.

    அவன் சட்டென்று தலையைத் துவட்டுவதை நிறுத்தி விட்டு கண்ணம்மா மனைவியே ஆனாலும் அவள் மனம் தெரிந்துதான் எதுவும் இருக்கணும்னு நினைக்கறவன் நான்... எதுவும்... புரியுதா? என்றான்.

    அவள் சட்டென்று முகம் சிவக்க உங்களுக்கு மறுப்பதற்கு என்னிடம் எதுவும் இல்லை சிவா. சர்வம் சிவார்ப்பணம் என்று தலையைக் குனிந்து கொண்டாள். அவன் அவளை நெருங்கி அணைத்தான். ஹேய்... மறுக்க மாட்டே ஆனாத் தானாக் கொடுக்கவும் மாட்டே. என்னைக் காலையில வம்புக்கிழுக்கறே என்று அடிக்குரலில் சிரித்தான்.

    அவள் காலையில சொல்றதுதான் பாதுகாப்பு என்று அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

    அவன் வெடிச்சிரிப்பு சிரித்தான். அவள் பின்னும் சிவா என்றாள். ம்...போடு கண்ணம்மா அடுத்த வெடியை போடு என்றான்.

    இல்லே... என்னமோ சொல்லிக் கொடுக்கணும். என்னமோ கெல்லி எடுக்க வேணும்னு களப்பணிக்காகக் காத்திருக்கிற வந்தியத்தேவன் வேற ஏமாந்து போயிருவாரு என்றாள்.

    அவன் மீண்டும் சிரித்தான். என்ன கண்ணம்மா இண்ணைக்கு கோட் செய்றதுக்கு யாரும் கிடைக்கலயா? என்றான்.

    பாவம் சிவா. இளவரசியே வந்தியத் தேவனைக் கோட் பண்லேன்னா அவரு ஏமாந்திடுவாரு. எத்தனையோ பெண்களை வேண்டாம்னு சொன்னவராச்சே. அப்புறம் சிவநாதன்கிட்டே கேட்டா திஸ் இஸ் நாட் கோட்டிங பீரியட். பட் கோர்டடிங் பீரியட்ன்னு சொல்வாரு என்றாள். அவன் ஹேய் என்று குலுங்கிச் சிரித்தான். லேசாக நெற்றியில் முத்தமிட்டான் இதுதான் குந்தவி உன்கிட்டே எனக்குப் பிடிச்சதே. யுவர் பிரில்லியன்ஸ் என்னமோ உனக்கு மாப்பிளை வராத மாதிரிப் பேசறே? உனக்குத் தெரியாது குந்தவி. மாமா என்கிட்டே சொன்னார். கதிரவன் கூட அந்த மாதிரிக் கேட்டானாம். அப்பா ஒரு மாப்பிள்ளை சொன்னேன். கோடிஸ்வரன்ப்பா அவன். அதுக்கு என் மக சொல்றா. அப்பா அந்தாளுக்கு வேண்டியது பொண்ணில்லை. ஸ்டேட்டஸ் சிம்பல். அவன் கூப்பிடற கிளப்புக்கும் சங்கத்துக்கும் போய் மாடல் மாதிரி நிக்கணும். அப்புறம் சுயநினைவே இல்லாம வீட்டுக்கு வருவான். சுயமரியாதையே இல்லாம வாழணுமாக்கும்?னு கேட்டியாம் சொன்னார். அப்புறம் இன்னொன்ணும் சொன்னார். நல்லா இங்கிலீஷில் பன் செய்வியாமே? என்றான்.

    குந்தவி. நான் அடிக்கற ஜோக்கைப் புரிஞ்சுக்கறவளாவாவது, வரணும்னு நெனச்சேன். ஆனா நெனச்சு நெனச்சுச் சிரிக்கற மாதிரி பேசறவளா எழுதறவளா வந்தியே என்றவன் பெருமூச்சு விடுவது போல் நடித்தான். ஆனா வெறும் பேச்சுத்தான் என்றான்.

    களப்பணி டாக்டர் சார் என்றாள். விலகிக் கொண்டாள். யாரோ வராங்க சிவா என்றாள். அண்ணி வரலாமா? என்று குரல் கொடுத்துக் கொண்டே பாமளா வந்தாள். வா பாமளா என்றாள் குந்தவி.

    அண்ணி. அப்புறம் எல்லாரும் வந்துருவாங்க. உங்க நகையெல்லாம் பாக்கலாம்னு வந்தேன். பட்டுப்புடவை நிறைய இருக்கா என்ன? என்றாள்.

    சிவநாதன் வெறுமையாகத் தன் தங்கையைப் பார்த்தான். சங்கடத்துடன் குந்தவியைப் பார்த்தான். குந்தவி அவனைப் பார்த்த போது நோ பிராப்ளம் என்று கண்ணாலேயே பதில் சொன்னாள். பிறகு கொஞ்சம்தான் கொண்டு வந்தேன் என்று ஒரு பெரிய நகைப் பெடடியை எடுத்தாள்.

    பட்டுப் புடவைகளை முதல்ல பாக்கறேன் என்றாள்.

    சிவநாதன் எதிரில் ஒரு சேரில் உட்கார்ந்து வெறுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு புடவையைப் பார்த்து ரொம்ப அருமையாய் இருக்கண்ணி என்று திருப்பித் திருப்பிப் பார்த்தாள். ரொம்பப் பிடிச்சுதா என்ன. நீயே வச்சுக்க என்றாள்.

    நிஜமா அண்ணி என்றாள்.

    ஆமா என் பரிசு என்றாள்.

    பிறகு நகைகளைப் பார்த்தபோது அதில் ஒரு பச்சைக்கல் நெக்லஸ் பார்த்து அதிசயித்தாள். அண்ணி இதுவும் நல்லாருக்குன்னு சொன்னாக் கிடைக்குமா? என்றாள்.

    சிவநாதன் கண்ணால் எச்சரிப்பதைக் குந்தவி பொருட்படுத்தவில்லை. பெரிய நகைப் பெட்டியையே கையில் கொடுத்தாள். இந்த எல்லாம் உனக்கே. வச்சுக்க என்றாள்.

    பாமளா சிரித்துச் சொன்னதே போதும் அண்ணி என்றாள். திருப்பிக் கொடுத்தாள். குந்தவி அந்தப் பச்சைக்கல் நெக்லஸைக் கொடுத்து நீயே வைத்துக் கொள் என்றாள் அண்ணி... அண்ணனைக் கேக்காம... என்றாள்.

    சிவநாதன் வாய் திறக்கவில்லை. அதெல்லாம் ஒரு ரகசியம். உனக்கு இந்த ஒண்ணைக் கொடுத்துட்டு உங்க அண்ணன்கிட்டே நா ரெண்டாய் வாங்கிப்பேன் என்றாள் குந்தவி.

    சட்டென்று பேப்பரை எடுத்துப் பிரித்தான் சிவநாதன். ஏண்ணா. அண்ணிக்கு ரெண்டாக் கிடைக்குமா?... என்றாள் பாமளா.

    ஆமாம்மா. அண்ணி இனி எப்ப எதைக் கேட்டாலும் வாங்கிக் கொடுக்கறதுதானே வேலை? என்றான்.

    குந்தவியின் முகம் சிவந்தது. பாமளா சிரித்தாள்.

    பேப்பரை பார்த்துக் கொண்டே வாங்கிக் கொடுக்கறேன்ம்மா என்றான் அவன். நீ என்ன கேட்டாலும் உங்கண்ணி குடுப்பா போல. கிடைக்கறப்பவே வாங்கிக்க என்றான்.

    குந்தவி சமாளித்துக் கொண்டு அவர் கிடக்கிறார் பாமளா. நீதான் எனக்கு செல்லப் பெண் என்றாள்.

    அண்ணி அவள் ஆச்சரியமாய்ப் பார்த்தாள். ஆமா. நீதான் வீட்டின் கடைக்குட்டி. உனக்கு இல்லாததுன்னு இங்க எதுவுமே இல்ல. யு ஆர் மை பெட் என்று பாமளாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

    சிவநாதன் ஆச்சரியமாய்ப் பார்த்தான்.

    மகிழ்ச்சியில் திணறிப் போன பாமளா திரும்ப முத்தம் கொடுத்துக் கிடைத்த எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டுக் கலகலவெனச் சிரித்தபடி ஓடினாள்.

    சிவநாதன் அதை மகிழ்ச்சியாகப் பார்த்தாலும் திரும்பி அவளைப் பார்த்து ஹேய். நீ இப்படிக் கொடுத்துப் பழக்கினா... என்று ஆரம்பிக்கவும் அவள் கையமர்த்தி எல்லாம் காரணமாய்த்தான்... என்றாள்.

    சிவநாதன் பேசுவதை நிறுத்தி அவளைப் பார்த்தான். சிவா அவள் நேற்று சொல்கிறாள். அண்ணன் வத்சலா ரெண்டு பேருமே அறிவு ஜீவிகள். நீங்களும் இப்ப அதே மாதிரி. நான் இனிமே தனிதாங்கறா. அண்ணி அண்ணனுக்கு எப்பவும் வத்சலா மேலதான் மதிப்புங்கறா.

    என்றவன் பிறகு நீ என்ன சொன்ன? என்றான்.

    நா என்ன சொன்னேன். வத்சலா மேல மதிப்பு. உன் மேலதான அன்பு. உன் மனசு நோகாமப் பாத்துக்கணும்னு எனக்குக் கட்டளைன்னேன் என்றாள்.

    தாங்ஸ் குந்தவி என்று அவன் நெகிழ்ந்தான்.

    அவள் புடவைகளை எடுத்து மடித்து வைத்துக் கொண்டு கல்யாணம் ஃபிக்ஸ் ஆனதிலிருந்து ஆளாளுக்குப் பட்டுப்புடவை எடுத்துக் கொடுத்தாங்க. மறுக்கவும் முடியல. அவளாவது கட்டட்டும் சிவா நீங்க சொன்னீங்களே, அவங்கவங்களுக்கு அவங்கவங்க பாணின்னு, அதுமாதிரித்தான் என்றாள். பிறகு சிவா என்று ஆழ்ந்த குரலில் அழைத்து நீங்களும் அப்பா மாதிரி ஒரு தப்புப் பண்றீங்க. நந்தினி அப்பாவிடம் அப்பா உனக்கு குந்தவிதான் உசத்தி என்றே சண்டை போடுவாள். அதுதான் வேறுவிதமா வெளிப்பட்டுச்சு போல... சிவா, பாமளாவுக்கு உங்கள் அன்பில் குறையிருக்கு. மெதுமெதுவா மாத்திக்குங்க. அப்புறம் அவள் வீட்டுக்காரரிடம் நீங்க பழகறதில்லையாம்" என்றாள்.

    குந்தவி. என்னை என்ன செய்யச் சொல்ற? ராஜ்குமாரைப் பார்த்தாலே எனக்குக் கோபம் வருது. அவங்க கல்யாணத்தின் போது எவ்வளவு என்னைப் படுத்தினான் தெரியுமா? பாமளாவுக்கு அவனைப் பிடித்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக எவ்வளவு கீழே இறங்கினேன் தெரியுமா? அவன் போட்ட கண்டிஷன்களைக் கேட்டால் உனக்கே கோபம் வரும். முகம் கொடுத்துப் பேசறதே பெரிசு என்றான்.

    ஒரு ஆண்மகனுக்கு ஆண்மகனாய் அவனை எனக்குப் பிடிக்கவில்லை குந்தவி என்றான்.

    சிவா ஒரு விஷயம் புரிந்து கொள்ளுங்கள். உங்க அப்பா இல்லை. இப்பவே வாங்கினாத்தான் உண்டு என்ற எண்ணம் இருந்திருக்கலாம். நா எங்க அப்பாகிட்ட சொல்லி பாமளா மாப்பிள்ளையை நல்லாக் கவனிக்கணும்ன்னு கண்டிஷன் போட்டீங்கன்னு சொல்லச் சொன்னேன். குளிர்ந்து போனார். நேற்று எங்கிட்ட வந்து சிஸ்டர், சிவநாதன் மச்சான் கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும். நாந்தான் அவரைப் புரிஞ்சுக்கலை. என் மேல வருத்தம். எங்க கல்யாணத்தப்ப ஏகப்பட்ட கண்டிஷன் போட்டேன். ஒத்துக்கிட்டாரு. பாமளாவுக்காக என்னவும் செய்வார். இண்ணைக்கு கல்யாணத்துல பாத்தால்ல தெரியுது. எவ்வளவு பெரிய மனுஷங்க அவருக்காக வந்தாங்க. டிபார்ட்மென்ட்டே அலையுது. செகரட்டரி, பிரின்சிபல் எல்லாரும் மத்தியானம் வரை இருந்துட்டுப் போறாங்க. இந்தக் கிங்ஸ்லி அவருக்கு மேலே. பாமளா சிஸ்டர்ன்னு உருகறார். நா திருந்திட்டேன்னு சொல்லுங்க சிஸ்டர். உங்களுக்குப் போக மனசில எனக்கும் கொஞ்சம் இடம் இருந்தா குடுக்கச் சொல்லுங்க. அப்படீங்கறார்" என்றாள்.

    அவன் லயித்துக் கேட்டுக் கொண்டிருந்தவன் எழுந்து குந்தவி... என்று மகிழ்ச்சியுடன் அணைத்துக் கொண்டான். நிஜமாவா, கண்ணம்மா. அதான் வலிய வலிய வந்து பேசறானா? கார்த்திகேயனுடன் சேர்ந்து கொண்டு எல்லாத்துலயும் இன்வால்வ்டா செய்தானா? நல்லா ஆள் பார்த்து உன் மூலம் தூது விடுகிறான் என்று அவள் கழுத்தில் முகம் பதித்துச் சிரித்தான்.

    ‘சிவா...’ என விலகவும் இரு கண்ணம்மா, ஃபுல் லைசென்ஸ் இருக்கு என்றான். ஹேய். அண்ணன் தங்கை ரெண்டு பேருகிட்டயும் ஒரே வாக்கியத்தைச் சொல்லி மடக்கிப் போடற என்றான்.

    நீங்க கூடதான் அண்ணி எப்ப எதைக் கேட்டாலும் வாங்கித் தரேன்னு சொன்னீங்க. தாஜ்மகால் கேட்டா வாங்கித் தருவீங்களாக்கும்? என்றாள்.

    ஏய் உனக்கு சரியாகக் காதில விழுகலை. வாங்கிக் குடுப்பேன்னேன். உங்க அண்ணி எப்ப எதைக் கேட்டாலும் வாங்கிட்டு அப்புறம்தான் குடுப்பேன்னு சொன்னேன் என்று அசராமல் அடித்தான்.

    அவள் மலைத்துப் போய் முகம் பார்த்தாள். ஐயோ சிவா... அண்டப் புளுகுன்னா இதுதான் சிவா என்று அவனிடமிருந்து விலகி கீழே போய்விட்டாள்.

    அவன் சிரித்துக் கொண்டே சற்றுக் கழித்துக் கீழிறங்கி போனான். பாமளா நெக்லஸையும், புடவையையும் ஹால் சோபாவில் அமர்ந்து கணவனுக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். இதெல்லாம் எதுக்கு வாங்கினே என்று அவன் கேட்டுக் கொண்டிருந்தான். சிஸ்டர் எதுவும் நினைச்சுக்கப் போறாங்க என்றான்.

    அந்த நேரம் அங்கு வந்த சிவநாதன் அவன் அருகில் அமர்ந்தான். பரவாயில்ல மாப்பிள, எல்லாம் நம்ம குந்தவி தேவியார் பரிசு என்றான்.

    பாமளா என்ன கேட்டாலும் கிடைக்குது. கேட்காமலும் கிடைக்குதுப்பா என்று அவன் குறும்பாய் மனைவியைப் பார்க்கவும் அவள் நகர்ந்து விட்டாள். பாமளா கிசுகிசுக் குரலில் கணவனிடம் அண்ணி தனக்குக் கொடுத்ததையெல்லாம் சொல்லிக் கொண்டாள். நீ ஒண்ணும் கொடுக்கலையாக்கும்?

    Enjoying the preview?
    Page 1 of 1