Oviya Punnagai...!
By Jaisakthi
3.5/5
()
About this ebook
Read more from Jaisakthi
Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsNee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Kaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsPaattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsMegam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsIlaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Anbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oviya Punnagai...!
Related ebooks
Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5En Uyirin Urave Rating: 3 out of 5 stars3/5Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Vanna Sudar Oliye...! Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsPoomalaigal Konjum... Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Idhaya Karuvaraiyil Rating: 4 out of 5 stars4/5Uyiriley Ninaivugal Thalumbuthey! Rating: 4 out of 5 stars4/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsManasellam Mathappu...! Rating: 5 out of 5 stars5/5Mayam Seithayo... Rating: 4 out of 5 stars4/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsTheeyiniley Valar Jyothiye Rating: 5 out of 5 stars5/5Kavithai Sirippinile... Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogiraai Rating: 1 out of 5 stars1/5Anbu Malar Saram Thoduthu...! Rating: 5 out of 5 stars5/5Nee Andha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhale...! Kaadhale...!! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Kaadhal Ennai Kaadhal Seiya... Rating: 0 out of 5 stars0 ratingsMouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsThottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Naan Nila! Nee Kathir! Rating: 0 out of 5 stars0 ratingsSollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Nesathin Thottililey! Rating: 0 out of 5 stars0 ratingsNee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Ullathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Oviya Punnagai...!
5 ratings0 reviews
Book preview
Oviya Punnagai...! - Jaisakthi
http://www.pustaka.co.in
ஓவியப் புன்னகை...!
Oviya Punnagai...!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 1
மனமார்ந்த வாழ்த்துக்கள் மதன்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என்று வரவேற்றார் அந்த கிளப்பின் செயலர் கலிவரதன்.
ஆமா! சார்! என்னோட வாழ்த்துக்களையும் தெரிவிச்சுக்கறேன்!
என்றார் உறுப்பினர் ராபர்ட்.
கிட்டத்தட்ட பத்து பேருக்கு மேல் நின்று அவனுக்கு வாழ்த்துக் கூறி வரவேற்றார்கள். மதன் இரு கைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்து புத்தாண்டு வாழ்த்துக்கள்!
என்றான்.
இந்த வருஷத்திலே 2015ல முதல் ஸ்பீச் உங்களதுதான். உங்க டேட் கிடைச்சதும் எங்க எல்லாருக்கும் ஒரே சந்தோஷம்!
என்றார் ராபர்ட்.
அவன் மென்மையாகப் புன்னகைத்தான். "ஆக்சுவலா அந்த டேட் வேற ஒருத்தர் கேட்டிருந்தாங்க. நான் வேற ஒரு காரணத்தால டேட்டை மாத்தி கொடுத்தேன். அதனாலதான் உங்களுக்குக் கொடுக்க முடிஞ்சுது.
ரொம்ப சந்தோஷம் எல்லாரும் உங்க ஸ்பீச்சை கேட்கணும்னு காத்துகிட்டு இருக்காங்க
என்று உள்ளே அழைத்துப் போனான்.
மதன் தன்னுடைய கம்பீர நடையை நடந்த படி மேடையை நோக்கி போனான். தேர்ந்தெடுத்தவர்களாக ஒரு நூற்றைம்பது பேர் மட்டும் அங்கே இருந்தார்கள்.
எல்லோருமே பெரிய புள்ளிகள்!. மதுரை நகரின் முக்கியமான புள்ளிகள்! அவன் உண்மையில் சென்னையில் வசித்தாலும் கூட மதுரையிலும் அவனுக்குத் தொழில் நிறுவனம் இருந்தது. ஏன் கோவையிலும் திருச்சியிலும் கூட அவனுடைய நிறுவனத்தின் பெரிய கிளைகள் இருந்தன.
மாற்றி மாற்றி அந்த நிறுவனங்களுக்கு பறந்து கொண்டிருப்பான். இதைத் தவிர இடையில் நேரம் கிடைக்கும் போது இந்த மாதிரி கிளப்களில் பேசுவதற்கு ஒப்புக் கொள்வான். அவனுடைய டேட் கிடைப்பதே பெரிய விஷயம் என்பது போலத் தொழில் உலகில் ஒரு பெரிய மதிப்பைப் பெற்றிருந்தான் மதன்.
ஒரு தொழிலை எப்படி ஆரம்பிப்பது, விஸ்தரிப்பது, அதில் உள்ள சாதக பாதகங்கள் இவற்றையெல்லாம் எல்லோரும் எதிர்பார்க்காத ஒரு கோணத்திலே அலசுவான். ஒரு மீட்டிங்கில் அவனுடைய அணுகுமுறை ஒரு மாதிரி இருக்கிறதென்றால். இன்னொரு மீட்டில் முற்றிலும் வேறு விதமாக இருக்கும்.
எங்கே இருந்து இத்தனை கருத்துக்களைத் திரட்டுகிறான். அவனுக்கு அப்படி கருத்துக்களை திரட்டுவதற்கு எப்போது நேரம் கிடைக்கிறது என்பதெல்லாம் அவன் பேச்சை கேட்க வருகிற தொழில் அதிபர்களுக்கு ஒரு ஆச்சரியமான விஷயம். பிளானிங் தான் என்பான் அவன் சிரித்தபடி.
ஒரு பெரிய அரசியல் தலைவர் ஒரு முறை குறிப்பிட்டதை அவ்வப்போது எடுத்துக் காட்டுவான். அதிகாலையில் வழக்கமாக எழுந்திருப்பதை விட ஒரு மணி நேரம் முன்பாக எழுந்தால் வாரத்தில் ஒரு வேலை நாள் கூடக் கிடைக்கிறது என்று சொல்லிய அந்தத் தலைவர் தொண்ணூறு வயது வரைக்கும் கூட உழைத்துக் கொண்டிருக்கிற அந்த செய்தி அவனுக்கு பிடித்தமானது. அதை அவன் அடிக்கடி சொல்லுவதுண்டு. அதுபோல ஒரு கார் பிரயாணத்தில் ஒரு விமானப் பயணத்தில் ஓய்வெடுக்கும் நேரத்தைக் கூட சிந்தனைக்கு அவன் செலவிடுவதுண்டு. எவ்வளவு நேரமானாலும் ஒரு அரை மணி நேரமாவது எதையாவது படித்து விட்டு உறங்கச் செல்வது என்பதும் அவனது வழக்கமாக இருந்தது.
இத்தனை திட்டங்கள் இருந்தால் ஒருவன் வாழ்க்கையிலே முன்னேற முடியாதா என்ன? இத்தனைக்கும் அவன் பேசி முடித்ததற்குப் பின்பு அவனுக்குப் பெரிய சன்மானத் தொகையாகக் கொடுப்பார்கள். ஏனென்றால் அவனது ஒவ்வொரு மணி நேரமும் ஆயிரம் பத்தாயிரம், லட்சம் என்று மதிப்பிடப் பட வேண்டியது என்பது அங்கே இருக்கிறவர்களுக்கெல்லாம் தெரியும். அந்த அளவிற்கு அவன் விஷயங்களும் கொடுப்பான்.
மேடையிலே அவனை அமரச் செய்தார்கள். மரியாதை செய்தார்கள். வரவேற்புரை கொடுத்தார்கள். அவனைப் பற்றிய ஒரு பெரிய பயோடேட்டா படித்தார்கள். இத்தனை வேலைகளுக்கும் நடுவிலே இத்தனை சமூக நலத்திட்டங்களிலே இவன் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறானா என்று எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது.
அதைக்கூட ஒருவர் அவனது உரைக்குப் பின்பு கேள்வியாகக் கேட்டார். நாற்பது நிமிடங்கள் பேசினான். நாற்பது நிமிடங்கள் அவன் அந்த அவையைக் கட்டிப்போட்டு விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.
பெரியபெரிய தொழில் அதிபர்களும் கூட ஒரு சின்னக் குறிப்பேட்டை வைத்துக்கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டார்கள். அந்த குறிப்பேடும் அந்த மீட்டிங்கிலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. சிலவற்றை அவர்கள் குறித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஒரு முறைக்கு இருமுறை சொன்னான். நகைச்சுவைக்கும் குறைவே இருக்கவில்லை.
நாற்பது நிமிடப் பேச்சிலே இரண்டு மூன்று அனக்டோட் என்று சொல்வார்களே அது போலப் பெரிய மனிதர்களுடைய வாழ்க்கையிலே நடந்த நிகழ்வுகளையும் கொஞ்சம் ஆங்காங்கே தூவிக் கொண்டான். ஒரு முழுமையான விருந்தாக அந்த உரை அமைந்திருந்தது.
தன்னுடைய பேச்சுக்கு நடுவே இந்தப்புறமும் அந்தப்புறமும் பார்த்தபடி பேசுவான். அப்படித்தான் அவன் பார்வை கிரீன் ரூம் என்று சொல்வார்கள் அல்லவா, அந்த அறையை நோக்கி எதேச்சையாகத்தான் திரும்பியது. ஆனால் ஒரு நிமிடம் அங்கே மின்னல் போல ஒரு முகம் தென்பட்டு மறைந்ததைக் கண்டவுடன் அவனே ஒரு விநாடி தடுமாறி விட்டான்.
மீண்டும் தன்னுடைய கான்சன்ட்ரேஷனை தன்னுடைய உரைக்குக் கொண்டு வந்து தொடர்வது சற்று கடினமாகப் போனது.
அந்த முகம்!
அவன் கடந்த ஆறேழு வருடங்களாக தேடிக் கொண்டிருக்கிற முகம். மின்னலைப் போல மின்னி மறைந்து விட்டதே?
பேசி முடித்ததற்குப் பின்பு எல்லோரும் கேள்விகள் கேட்டார்கள். கேள்விகளுக்கு அவன் சுவாரசியமாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் உள்ளுக்குள்ளே அந்த எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.
இங்கேதான் இருக்கிறாளா? பெயருக்கு ஏற்றாற் போலவே தன்னுடைய வாழ்க்கையிலே நன்மையையும் செல்வத்தையும் கொண்டு வந்தவள் சுபஸ்ரீ. இங்கேதான் இருக்கிறாளா என்று அவனுக்கு ஒரே ஆனந்தமாக இருந்தது.
'எப்போதடா இந்த மீட்டிங் முடியும்? அவளைக் கண்டு பேசலாம்!' என்று ஆவலாக இருந்தான். அந்த ஒரு விநாடிப் பார்வையிலும் கூட அவள் தோற்றத்தை அவன் கண்கள் பருகிக்கொண்டு விட்டன. எப்போதும் போல இப்போதும் அளவான மேக்கப். சிக்கென்று உடை. இத்தனைக்கும் கவர்ச்சியான உடை இல்லை. புடவையைத்தான் அவள் அவ்வளவு அழகாகக் கட்டுவாள் இப்பொழுதும் அப்படித்தான்.
அவனும் எப்படி எப்படியோ இந்த ஐந்தாறு ஆண்டுகளாக முயற்சி செய்து பார்க்கிறான். அவள் கண்ணுக்கு தட்டுப்படவே மாட்டேன் என்கிறாள். அப்படியே தட்டுப்பட்டாலும் மயிரிழையில் மின்னல் வெட்டும் நேரத்திற்குள்ளே எப்படியோ தப்பித்து விடுகிறாள்.
எதற்காகத் தன்னிடம் இருந்து இப்படித் தப்பிக்கிறாள் என்று அவனுக்குப் புரியவே இல்லை. ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விட்டான்.
சார்! நான் சொன்னேன்லே? கவனிக்கலையோ?
என்றார் அந்தக் கலிவரதன்.
ஓ! சாரி! என்ன சொன்னீங்க?
என்றான் இவன்.
"இல்லே, இன்னைக்கு ஸ்பீச் ரொம்ப அருமையா இருந்தது சார். நீங்க ஏன் உங்க ஸ்பீச்செல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா போடக்