Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mugam Paartha Pinne...!
Mugam Paartha Pinne...!
Mugam Paartha Pinne...!
Ebook279 pages2 hours

Mugam Paartha Pinne...!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateApr 2, 2021
ISBN6580106005595
Mugam Paartha Pinne...!

Read more from Jaisakthi

Related to Mugam Paartha Pinne...!

Related ebooks

Reviews for Mugam Paartha Pinne...!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mugam Paartha Pinne...! - Jaisakthi

    http://www.pustaka.co.in

    முகம் பார்த்த பின்னே...!

    Mugam Paartha Pinne...!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    1

    உன் முகம் பார்த்த பின்னே

    முழு நிலவு கூட குளுமை குறைந்ததடி!

    உன் முகம் பார்த்த பின்னே

    மழை நீர் கூட வெந்நீராய்ச் சுட்டதடி!

    உன் முகம் பார்த்த பின்னே

    உலகம் வெளிச்சக் காடாய் ஆனதடி!

    உன் முகம் பார்த்த பின்னே

    என் வாழ்க்கைக்காய் கதவுகள் திறந்ததடி

    இன்னைக்கு வெற்றிகரமா நடந்துரும், இல்லைங்க அத்தான்? என்று கேட்டாள் நீரஜா. காவியன் காரை லாவகமாக ஓட்டிக்கொண்டே பக்கவாட்டிலே திரும்பி அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

    அப்படித்தான் நினைக்கிறேன். முடிஞ்சிட்டா பரவாயில்லை. எனக்கும் இதுக்காக நேரம் ஒதுக்கி ஒதுக்கி என்னோட பிஸினஸ் பிளானெல்லாம் அஃபெக்ட் ஆகுது! என்றான்.

    ஆமா, நீங்க பெரிய பிஸினஸ் புள்ளி. எனக்காக டைம் ஒதுக்கி வர்றீங்க. ரொம்பத் தாங்ஸ் அத்தான்! என்றாள் அவள்.

    என்ன பண்றது? நீ அத்தை மகளாப் போயிட்டே! இப்போதைக்கு என்னோட மனைவியா வேறயும் போயிட்டே! என்றான்.

    அதென்ன சலிச்சுகிட்டு சொல்றீங்க? என்றாள்.

    ஆமா, இந்த நாடகத்தை நடத்தறதுக்காக எவ்வளவு டைம் செலவு? எவ்வளவு பணம் செலவு? என்றான்.

    இதுக்கெல்லாம் நானா பொறுப்பு? உங்க தாத்தாதான். நல்லமுத்துத் தாத்தா. அவருதான் பொறுப்பு! என்றாள்.

    எங்க தாத்தாவா? ஏன் உன் தாத்தா இல்லையா? என்றான்.

    என் தாத்தாவும் தான்! என்றாள் அவள்.

    ஹலோ! அவரு சம்பாதிச்சு வச்ச சொத்துதான் இன்னைக்கு உனக்கும் எனக்கும் பெரிய அளவிலே சப்போர்ட் கொடுக்குது தெரியுமா? என்றான்.

    ஏங்கத்தான் இப்படியெல்லாம் பொய் சொல்றீங்க? என்னமோ அந்தச் சொத்தை நம்பித்தான் நீங்க இருக்கற மாதிரி. உங்ளுக்கு உங்க அப்பாவும் சம்பாதிச்சு வச்சிருக்காரு. நீங்களும் இப்பப் பெரிய பிஸினஸ் மேக்னட்டா இருக்கீங்க! என்றாள்.

    ஆமா, அது உண்மைதான். ஆனா தாத்தா ஒரு பேக் ரவுண்ட் கொடுக்கவும் தானே நாங்க சாப்பாட்டுக்கும் இருக்கற இடத்துக்கும் அலையாம மேற்கொண்டு வருமானத்தைப் பெருக்கிக் கொண்டு வர முடிஞ்சது? அதையே உங்க அப்பாவும் செஞ்சிருக்கலாமே? என்றான்.

    அவனுக்கு உண்மை தெரியும். நீரஜாவினுடைய தந்தை நல்லவர் என்றும் கெட்டிக்காரர் என்றும் அவனுக்குத் தெரியும். இருந்தாலும் இதற்கு என்ன சொல்கிறாள் என்று பார்ப்பதற்குத்தான் லேசாக அந்த வார்த்தையைவிட்டான்.

    அவன் எதிர்பார்த்தாற்போலவே உடனே நீரஜாவும் சலிப்போடு சொன்னாள்.ஆமா, அவருக்கு ஒண்ணும் கெட்டிக்காரத்தனமெல்லாம் கிடையாது. எப்பப் பாரு எங்களையே விரட்டிகிட்டிருப்பாரு. என்னையும் அம்மாவையும் சிக்கனமா இருங்க சிக்கனமா இருங்கன்னு எங்களையே விரட்டிகிட்டிருப்பாரு! என்னத்தை சிக்கனமா இருக்கறது? அவருதான் இல்லாமப் போயிட்டாரே?

    இவர்களுக்காகவே உழைத்து உழைத்துக் கொட்டிய அந்த மனிதர் மேல் பாசம் இல்லாமல் பேசுகிற அந்த அத்தை மகளை காவியன் உள்ளடக்கிய கோபத்தோடுதான் பார்த்தான்.

    தெரியுமே! எங்க அப்பாவைச் சொன்னா உங்களுக்குக் கோபம் வந்துரும். எங்க அம்மா மேலே இருக்கற பாசத்தை விட எங்க அப்பா மேல தான் உங்களுக்கு மரியாதை அதிகம்! என்றாள் நீரஜா.

    அவன் ஒன்றும் பேசவில்லை.

    சரி, அதை விடு. இப்ப ஆகற காரியத்தைப் பார்ப்போம்! என்றான். இன்னும் கோர்ட்டுக்குப் போய் சேருவதற்கு அரைமணி நேரப் பயணம் இருந்தது.

    சிந்தனையிலே ஆழ்ந்தான். நல்லமுத்துத் தாத்தா கோவையில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்திலே ஒரு கிராமத்திலே இருந்தார். அந்தக் காலத்து ஜமீன்தார் என்று சொல்லலாம். பரம்பரை சொத்துக்களோடு கூடத் தன்னுடைய சாமர்த்தியத்தினால் நிறைய சொத்துக்களைச் சேர்த்து வைத்திருந்தார் தாத்தா.

    பரம்பரை சொத்தை அவனுடைய தந்தைக்கும் நீராஜாவினுடைய தாய்க்கும் எப்போதோ பிரித்துக் கொடுத்துவிட்டார்.

    காவியனுடைய தந்தையும் நீரஜாவினுடைய தாயும் உடன் பிறந்தவர்கள். ஆனால், மகளின் போக்கும் பேத்தியின் போக்கையும் கவனித்துக்கொண்டே வந்த நல்ல முத்துத் தாத்தா எதிர்பாராத சில முடிவுகளையும் செய்தார்.

    அது தேவையற்ற முடிவாகவும் கூட அவனுக்குத் தோன்றியது. நீரஜாவின் தாய் மங்களம் பெருத்த செலவாளியாக இருந்தார். ஆடம்பரப் பிரியையாகவும் இருந்தாள். எங்க அப்பா பெரிய ஜமீன்தார் மாதிரி. நான் அப்படி வீட்டிலே பொறந்து வந்திருக்கேன். அப்படி இருக்கப்போ நான் எதுக்கு சிக்கனமா இருக்கணும்? நான் தாராளமாத்தான் இருப்பேன். சொத்தும் கொண்டு வந்திருக்கேன். என்னை நல்லா வச்சுக்க வேண்டியது உங்க பொறுப்பு. என்று நீரஜாவின் தந்தை மகுடபதியிடம் சரிக்குச் சரியாக நிற்பாள் மங்களம்

    மகுடபதி நடுத்தரக் குடும்பத்திலே இருந்து வந்தவர் என்றாலும் அவரும் மங்களத்தைத் திருமணம் செய்யும் பொழுது ஒரளவு சொத்துக்காரராகத்தான் இருந்தார். அரசாங்க வங்கிகளிலே இருந்து கடன் வாங்கி இரண்டு மூன்று பிஸினஸ்களை நடத்தி அதிலே பெரும்பங்குக் கடனைத் திருப்பியும் கொடுத்திருந்தார்.

    அதையெல்லாம் பார்த்து விட்டுத்தான் நல்லமுத்துத் தாத்தா மங்களத்தை அவருக்குக் கொடுத்தார். அது மட்டும் அல்ல. மங்களத்திற்கு என்று சொத்துக்களையும் அப்போதே கொடுத்துவிட்டார். கொடுத்தவர் மங்களத்தின் பேரில் மட்டும் இல்லாமல் மகுடபதியின் பேருக்கும் சேர்த்தே எழுதி வைத்திருந்தார். அதனாலே மங்களத்தினால் எந்த சொத்தையும் விற்க முடியவில்லை. அந்த எரிச்சல் வேறு மங்களத்துக்கு இருந்தது.

    மங்களம் தன்னைப் போலவே தன் மகளையும் வளர்த்தாள். நீரஜாவையும் அதே மனப்பாங்கோடு வளர்த்தாள். திருமண வயது வந்தும் அவள் தந்தைக்கு மதிப்புக் கொடுக்காமலும் தாய் சொற்படியுமே நடந்துகொண்டாள். இவர்கள் இரண்டு பேருடைய செலவுகளையும் சமாளிக்க முடியாமல் மகுடபதி மலைத்துப் போனார். இதையும் கவனித்துக்கொண்டு தான் இருந்தார் நல்லமுத்துத் தாத்தா.

    ஒரு கட்டத்தில் பல்வேறு சூழல்களின் அழுத்தத்தால் மகுடபதி ஹார்ட் அட்டாக்கினால் இறந்து போனார். அவர் இறந்த உடனே மங்களத்திற்கு புதிதாக சுதந்திரம் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது.

    சட்டென்று சில சொத்துக்களை விற்றுவிட்டாள். கொஞ்சமாகத்தான் கையிலே சொத்து இருந்தது. அந்த நிலைமையிலே நல்லமுத்துத் தாத்தா காவியனுடைய தந்தையை அழைத்துத்தலையிட்டுச் சரி செய்யச் சொன்னார். காவியனுடைய தந்தை மறுத்துவிட்டார்.

    இல்லப்பா. நான் சொன்னா மங்களம் கேட்காது. நீரஜாவும் கேட்காது. இதுக்கு நீங்கதான் வேற ஏதாவது வழி பண்ணனும்சொல்லிவிட்டார்.

    காவ்யனின் தந்தை திருவேங்கடம் இப்படித்தந்தையிடம் சொல்லிவிட்டாலும் கூட மங்களத்திற்கு அறிவுரை சொல்லிப் பார்த்தார்.நீ உன் சொத்தை வாங்கிட்டுப் போயாச்சு. அதைக் கொண்டு நீ பல மடங்கா பெருக்கியாச்சு. இப்போ எதுக்கு என் விஷயத்திலே தலையிடறே? என்று முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்லிவிட்டாள். ஆனால் அவருக்கும் நீரஜாவை நினைத்தால் கவலையாக இருந்தது. அப்போதுதான் தந்தை அந்த ஆலோசனையைக் கூறினார். திருவேங்கடத்திற்கும் வேறு வழி இருக்கவில்லை. மகனிடம் பேசினார்.

    பழைய நினைவுகள் எல்லாம் ஓடின.ஏங்கத்தான் என் மேலே உங்களுக்கு ஒண்ணும் வருத்தம் இல்லையே? என்றாள் நீரஜா.

    ' உன் மேல வருத்தமா? இந்த டைவர்ஸ்க்கு அப்புறம்தான் நான் நிம்மதியா இருக்கப் போறேனே! 'என்று மனதுக்குள் எண்ணிக்கொண்ட காவ்யன்,இல்லல்லே! ஒண்ணும் வருத்தமெல்லாம் இல்லை! என்றான்.

    உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? இன்னைக்கு சௌரபும் கோர்ட்டுக்கு வர்றாப்லே.

    அப்படியா? எதுக்கு? என்றான்.

    அதான், அவரோட டைவர்ஸ் கேஸும் இன்னைக்குத் தான் வருதாம்.

    என்னது? என்றான் அவன்.

    ஆமா, அவங்க பாட்டி! நம்ம வீட்ல எப்படித்தாத்தாவோ அது மாதிரி அவங்க பாட்டி. போறதுக்கு முன்னாலே ஒரு கிராமத்துப் பொண்ணைப் பிடிச்சுத் தலையிலே கட்டிடுச்சு. தெரியுமா அது உங்களுக்கு? என்றாள்.

    ஆமா, ஏதோ சொன்னே. என்ன பேரு அந்தப் பொண்ணுக்கு? என்றான்.

    அது என்ன இருளாயியோ பவளாயியோ தெரியலை. உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நானாவது உங்ககிட்டே இருந்து தாலி கட்டிக்கறதுக்கு சம்மதிச்சேன். ஆனா அவ தாலியெல்லாம் கட்டிக்க மாட்டேன்னு சொல்லிட்டா. ரெஜிஸ்ட்ரேஷனுக்கே வேற வழி இல்லாமதான் சம்மதிச்சாளாம்.

    நம்ம மாதிரி சொந்தமோ?

    அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே. அவங்க ஊர்லே கொஞ்சம் கஷ்டப்பட்டுட்டு இருந்த குடும்பம். அவங்க தாத்தாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லாம இருந்துச்சாம். அப்பாவும் கொஞ்சம் நோயாளியாம். அவங்களுக்கெல்லாம் வைத்தியம் பார்க்கறதுக்காகத்தான் அந்தப் பொண்ணு இந்த ஏற்பாட்டுக்கே ஒத்துக்கிடுச்சாம்! என்றாள்.

    அப்படியா? என்றான்.

    அப்புறம் எப்படி ரெஜிஸ்ட்ரேஷனுக்கு மட்டும் ஒத்துக்கிடுச்சு? என்றான்.

    தெரியலே. இன்னொரு விதமாவும் சௌரப் சொன்னாப்லே. ரெண்டு பேரும் ரெஜிஸ்ட்ரேஷன் பண்ண மாதிரி பாட்டிகிட்டே நடிச்சாங்களாம்.

    அப்புறம் எதுக்குக் கோர்ட்டுக்கு வரணும்? என்றான் அவன்.

    ஒண்ணும் புரியலை. சௌரப்கிட்டே உட்கார்ந்து பேசினாதான் புரியும்.

    ஓ! இதெல்லாம் நீ டிஸ்கஸ் பண்ணலையா? என்றான்.

    எங்களுக்கு எங்களைப் பத்திப் பேசறதுக்கே நேரம் சரியா இருந்தது. அந்தப் பொண்ணை பத்தி எதுக்குப் பேசணும்? என்றாள் இவள்.

    ஓ! அதுவும் சரிதான்! என்றான் காவ்யன்.

    இந்த மொத்தக் கதையுமே குழப்பமாவே இருக்கு! என்றாள்.

    ஆமா, உங்க தாத்தாவும் சொத்துக்காரவங்களாப் போயிட்டாங்க. அதனாலே பேரன் பேத்தியெல்லாம் இந்த மாதிரித் தில்லு முல்லெல்லாம் பண்ண வேண்டியதாப் போச்சு! என்றான் இவன்.

    கார் கோர்ட்டுக்குள்ளே நுழைந்தது. இவர்கள் போய்க் காரை நிறுத்திவிட்டு இவர்கள் செல்ல வேண்டிய பகுதிக்குப் போனார்கள். அந்தக் கட்டிடத்திற்குள் நுழையும் முன்பாக, ஹாய் நீரு! என்று குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தார்கள்.

    அந்த சௌரப் வந்து கொண்டிருந்தான்.

    ஹாய் சௌரப்! என்றாள் இவள். பிறகு, என்ன சௌரப்? ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணியிருக்கேன்னீங்க. பண்ணலைன்னீங்க. என்னதான் குழப்பம்? என்றாள் இவள்.

    அதற்கு அவன் ஒரு பதிலை சொன்னான். பதிலைச் சொல்லிவிட்டு திரும்பி தூரத்திலே கைகாட்டினான். அங்கே சௌரபினுடைய தாய் நின்று கொண்டிருந்தாள். அந்த அம்மாவைப் பார்த்தாலே படிப்பறிவில்லாதவர் என்று நன்றாகவே தெரிந்திருந்தது.

    பக்கத்திலே ஒரு இளம்பெண் நின்றுகொண்டிருந்தாள்.அது யாரு? என்றாள் நீரு.

    அதுதான் அவதான்! என்று சிரித்தான் சௌரப். பேரைக் கூட சொல்லாமல் அவள் என்று குறிப்பிடப்பட்ட அந்தப் பெண்ணை காவியன் கவனித்துப் பார்த்தான். அவன் உள்ளம் ஆச்சரியத்தில் மூழ்கியது.

    2

    இரண்டு மூன்று லாரிகளில் பொருட்கள் வந்து இறங்கின. மங்களம் ஒரு காரில் இருந்து இறங்கினாள். கூடவே நீரஜா வந்து நின்றவள், பங்களாவின் முன்னாலே நின்று பங்களாவை ஒரு பார்வை பார்த்தாள். பிறகு சகோதரனிடம் திரும்பி,இதிலே தான் நாங்க இருக்கணுமா? என்றாள்.

    தெரியலை! அப்பா இந்த பங்களாவைத்தான் உனக்குத் தங்கறதுக்குக் கொடுக்கச் சொல்லியிருக்காரு! என்றான்.

    தங்கறதுக்கா? என்றாள் அவள்.

    நீ எதுவானாலும் அப்பாகிட்டே பேசிக்கம்மா. அப்பாகிட்டே என்னால ஒண்ணும் பேச முடியலை! என்றார். பக்கத்திலே திருவேங்கடத்தின் மனைவி பெருந்தேவி நின்று கொண்டிருந்தாள்.

    காவ்யன் பொருட்களையெல்லாம் இறக்கி அங்கங்கே அவை அவைகளை ஒழுங்காக வைப்பதிலே வழிகாட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தான். அவன் காதிலும் அத்தையின் முனகல் விழுந்தது. அவன் அதைக் கண்டு கொள்ளவில்லை.

    திருவேங்கடம் தான் மறுபடியும் சொன்னார்.இத பாரும்மா! உனக்கு ஏற்கனவே சொத்தைப் பிரிச்சுக் கொடுத்தாச்சாம். நீ அதெல்லாம் பத்திரமா வச்சுக்கலையாம். இப்போதைக்கு ஒரு சப்போர்ட் கொடுக்கறதுக்காக இந்த பங்களாவில் தங்கிக்கலாம்னு அப்பா சொல்றாரு. நான் பேசற எதையும் அப்பா கேட்க மாட்டேங்கறாரும்மா. நீ வந்து அவருகிட்ட பேசிக்க! என்றார். மங்களம் கண்களில் கண்ணீர் திரள, என் நிலைமை இப்படி ஆயிப்போச்சு! என்று அழுதுகொண்டே உள்ளே போனாள்.

    திருவேங்கடம் பெருந்தேவியிடம் கோபமாக சொன்னார். இவ நொந்து போயிட்டாளாம். பாவம் மச்சானை நோகடிச்சே பரலோகம் அனுப்பினா. இவளுக்கு எத்தனை இருந்தாலும் பத்தாதுங்கறாரு அப்பா! நாம என்ன செய்ய முடியும்?

    பெருந்தேவி,சும்மா இருங்க. அவங்க காதிலே விழுந்துடப் போகுது! என்றாள்.

    விழுந்தா விழட்டுமே! அப்பாவைப் போய் பார்க்கட்டும். அப்பா நல்லா கொடுக்கப் போறாரு! என்றாள்.

    நீரஜா,அத்தான்! என்று காவ்யனிடத்தில் வந்து நின்றாள்.

    வா நீரு! கொஞ்சம் இதெல்லாம் ஆர்கனைஸ் பண்றதுக்கு ஹெல்ப் பண்ணு! என்றான்.

    போங்கத்தான். ஐ'ம் வெரி டயர்ட். நீங்களே முடிஞ்ச வரைக்கும் பண்ணுங்க. இல்லைன்னா கிடக்கட்டும். கொஞ்சம் கொஞ்சமா செய்யலாம்! என்றாள்.

    காவ்யனின் பெற்றோர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

    மங்களம் சமையல் அறையிலே எல்லாம் ஒழுங்குபடுத்தப்பட்டுத் தயாராக இருப்பதைப் பார்த்து விட்டு வெளியே வந்தாள்.

    வேலைக்கு யாராவது கிடைப்பாங்களா? இல்லை போட்டிருக்கீங்களா? என்றாள்.

    ஒரு பொண்ணுக்கு சொல்லி வச்சிருக்கு. வந்துருவாப்லே, இன்னும் கொஞ்ச நேரத்திலே வந்துருவாப்லே. சமைக்கறதுக்கு மற்ற மேல் வேலைக்கு அந்தப் பொண்ணு காலையில இருந்து நைட் வரைக்கும் இருந்துட்டுப் போயிடுவா! என்றார் திருவேங்கடம்.

    அதானே பார்த்தேன். அந்த வேலையும் என்னை செய்யச் சொல்லுவீங்களோ என்னவோ? என்றாள்.

    ஏம்மா. உங்க அண்ணி செய்யலே? சமைக்கறதெல்லாம் நம்ம வீட்ல அவ தான் செய்யறா. மேல் வேலைக்கு மட்டும்தான் ஆள் வச்சிருக்கா! என்றார் திருவேங்கடம்.

    அண்ணிக்கு சின்ன வயசிலே இருந்தே பழக்கம். எனக்குப் பழக்கம் இல்லை! என்றாள் மங்களம்.

    பழகிக்க வேண்டியதுதாம்மா. சூழ்நிலைக்கு ஏற்பப் பழகிக்க வேண்டியதுதான்! என்ற திருவேங்கடம் மேலும் அங்கே நின்றால் ஏதாவது சொல்லிவிடுவோமோ என்ற அச்சத்துடன், சரிம்மா, இப்பொரு பெட்ரூமும் கிச்சனும் ரெடி பண்ணி வச்சிருக்கு. மற்றதெல்லாம் மெதுமெதுவா பண்ணிக்கலாம் ரெஸ்ட் எடுங்கம்மா. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. அவசரமா போர்டு மீட்டிங் இருக்கு! என்று கிளம்பினார்.

    பெருந்தேவி அவரைப் பரிதாபமாக பார்த்தாள். ' இப்படி விட்டுட்டுப்போறீங்களே 'என்பது போல. அவர் அடிக் குரலில்,நீ கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பி வந்துரு. அந்த சரண்யா பொண்ணு வந்த உடனே நீ வந்துடு! என்றான்.

    காவ்யன் குறும்புச் சிரிப்புடன் தந்தையைப் பார்த்து, சரிப்பா, நீங்க கிளம்புங்க. ஒன் அவர்லே அம்மாவும் நானும் கிளம்பி வர்றோம்! என்றான்.

    சரிப்பா! என்று திருவேங்கடம் கிளம்பினார். அந்த ஒருமணி நேரத்திற்குள்ளாகவும் மங்களம் தனது வசதிக்குறைவு பற்றி பெருந்தேவியிடம் புலம்பித் தீர்த்தாள். ஆனால் பெருந்தேவி லேசான ஒரு புன்னகையுடன் அடுப்படியிலே நின்று அவர்களுக்குக் காஃபி தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்தாள்.

    என்னங்க அண்ணி பண்றது? மாமாகிட்ட ஒண்ணுமே பேச முடியலை. எங்க வீட்டுக்காரரா எதுவானாலும் அப்பாகிட்ட கேளுன்னு சொல்றாரு. உங்களுக்குத்தான் உங்க அப்பா குணம் தெரியுமில்லே. ரொம்ப ஸ்டிரிக்டா பேசறாருங்க! என்று எல்லாப் பழியும் தூக்கி மாமனார் மேல் போட்டாள் பெருந்தேவி.

    அவள் வேண்டுமென்றே அப்படிச் செய்யவில்லை அவளுடைய மாமனாரும் காவ்யனின் தாத்தாவுமான நல்லமுத்து அப்படித்தான் சொல்லி அனுப்பியிருந்தார்.அவளுக்கு என்ன செஞ்சாலும் திருப்தி ஆகாது. அவ சொல்றதை ம்... ம்...னு கேட்டுக்க. எதுவானாலும் உங்க அப்பாகிட்டே போய் கேட்டுக்கம்மான்னு சொல்லிடும்மா. இவ்வளவு பெரிய பங்களா கொடுக்கறோம். பத்தலைம்பா. கொடுத்ததெல்லாம் தொலைச்சுட்டா. வீட்டுக்காரரையும் போட்டு அரிச்செடுத்து அந்த அரிச்சல் தாங்காமே அவரு பாவம் ஹார்ட் அட்டாக்கில் போயிட்டாரு. புள்ளை யையும் அப்படியே வளர்த்து வச்சிருக்கா. நீயும் திருவேங்கடமும் கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருந்தீங்கன்னாத்தான் அவளைத் திருத்த முடியும் என்று.

    அது சரிங்க மாமா! நாங்க கொடுமைப்படுத்தறதா ஊரு பூரா போய் சொல்லிடுவாங்களே? என்றாள்.

    "சொல்லட்டும்மா. எல்லாருக்கும் உன்னையும் தெரியும். அவளையும்

    Enjoying the preview?
    Page 1 of 1