Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naaliley Nalla Naal
Naaliley Nalla Naal
Naaliley Nalla Naal
Ebook123 pages1 hour

Naaliley Nalla Naal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

மித்ரா, சத்யன் ஒரு விபத்தில் சந்திக்கின்றனர். அந்த சந்திப்பு காதலாக மாறுகிறது. வீட்டிலும் எதிர்ப்பு வரவே இருவரும் எவ்வாறு இந்த சூழ்நிலையை சமாளிக்கிறார்கள்? பெற்றோர்களின் சம்மதத்தை பெற்றார்களா? இவர்களின் காதல், திருமணத்தில் முடிந்ததா என்று ஜெய்சக்தியின் நாளிலே நல்ல நாளில் பார்ப்போம்...

Languageதமிழ்
Release dateDec 7, 2021
ISBN6580106007243
Naaliley Nalla Naal

Read more from Jaisakthi

Related to Naaliley Nalla Naal

Related ebooks

Reviews for Naaliley Nalla Naal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naaliley Nalla Naal - Jaisakthi

    https://www.pustaka.co.in

    நாளிலே நல்ல நாள்

    Naaliley Nalla Naal

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் - 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம் - 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் - 1

    மித்ரா பரவாயில்லை நல்ல தரிசனம் என்று கன்னத்தில் போட்டுக் கொண்டாள். அம்மன் கோவிலில் தீபாரதனை சிறப்பாக இருந்தது. பெரிதாக கூட்டமும் இல்லை. அன்று வெள்ளிக்கிழமை தான் அவள் நான்கு மணிக்கெல்லாம் கோவிலுக்குள் நுழைந்து விட்டாள். இனிமேல்தான் கூட்டம் வரும்.

    வழக்கமாக வருகிற கோவில் என்பதால் அர்ச்சகர் உடனேயே அவளுடைய பெயரையும் நட்சத்திரத்தையும் சொல்லி அர்ச்சனை செய்ய ஆரம்பித்து விட்டார். மித்ரா புன்னகைத்துக் கொண்டாள்.

    அர்ச்சனை முடிந்து தீபாரதனை காட்டி பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளியே வந்தாள். கையில் இருந்த வாட்சைப் பார்த்தாள்.

    ஏன் இன்னும் இவரு வரலை என்று எண்ணிக் கொண்டு நவ கிரகத்தைச் சுற்ற ஆரம்பித்தாள். ஒன்பது முறை சுற்றி முடித்து விட்டாள். சரி பிரகாரத்தை ஒரு முறை சுற்றி வரலாம் என்று சுற்றி வந்து. அங்கே அமருவதற்கு தோதாக ஒரு இடம் பார்த்து அமர்ந்து கொண்டாள்.

    ஐந்து நிமிடம் ஓடியிருக்கும். கிளம்பலாமா? என்று எண்ணும் போது. அரக்கப் பறக்க சத்தியன் வந்து சேர்ந்தான். முழுப்பெயர் சத்தியசீலர்.

    சத்தியசீலனுடைய தாத்தா அவனுக்கு வைத்த பெயர் அவர் அந்தக் காலத்திலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டவராம் அதனால் சத்தியம் என்ற சொல் வர வேண்டும் என்பதற்காகவே சத்தியசீலன் என்று பெயர் வைத்திருந்தார்.

    ரொம்ப நேரமா வெயிட் பண்றியா மித்ரா என்று அருகில் வந்தான்.

    ஆமாம் ரெண்டு மூணு வருஷமா வெயிட் பண்றேன் என்று சிரித்தாள் மித்ரா.

    ஆனா இந்தக் காத்திருத்தல் சுகமாதானே இருக்கு என்றான் சத்தியசீலன்.

    நல்லா காதைப் பிடிச்சு திருகலாம் போல இருக்குது எனக்கு. லேட்டா வந்துட்டு விளக்கம் வேறையா கோயிலாச்சேன்னு பார்க்கறேன் என்றாள்.

    என்ன செய்யச் சொல்ற கிளம்பும் போது ஒருத்தர் பெட்டிஷன் எடுத்துட்டு வந்துட்டாரு பார்த்துத்தானே ஆகணும். ஒரு பெரிய அரசாங்க அதிகாரியின் நேரடிச் செயலாளராக இருந்தான் சத்தியன்.

    சரி, ஆக்சுவலா இல்லாட்டி நான் பீச்சுக்கு வந்துடலாம்னு யோசிச்சேன் என்றாள்.

    வேண்டாம் வேண்டாம் பீச்சை விட இந்த அம்மன் கோவிலே நல்லாயிருக்கு. பீச்சை விட இந்த கோயில்ல உட்கார்ந்து பேசும் பொழுது ஒரு அமைதியாவும் இருக்கு என்றான் சத்தியசீலன். அவனும், அவளுமாக அமர்ந்தார்கள்.

    ஒரு நிமிஷம் இரு பிரசாதம் வாங்கிட்டு வரேன் என்று அங்கே பிரசாதக் கடையிலே போய் முறுக்கு, அதிரசம் என்றெல்லாம் வாங்கிக் கொண்டு வந்தான். இதெல்லாம் இங்கதான் கிடைக்கும் என்று அவள் கையிலே ஒரு அதிரசத்தை கொடுத்து விட்டு தானும் ஒரு அதிரசத்தை எடுத்துக் கொண்டான்.

    இப்பவெல்லாம் யாரு அதிரசம் வீட்டில செய்யிறாங்க என்றான் சத்தியசீலன்.

    அதெல்லாம் பெரிசா ஒண்ணும் கவலைப்படாதீங்க ரெடி மிக்ஸே வந்துடுச்சு வாங்கி அப்படியே தட்டி எண்ணெயில போட்டு எடுக்க வேண்டியதுதான் என்றாள் மித்ரா.

    ம்... எல்லாமே ரெடிமேடா கிடைக்குது. விட்டா குழந்தை கூட ரெடிமேடா கொடுத்துடுவாங்க என்றான் சத்தியசீலன்.

    டெஸ்டியூட் பேபி என்னவாம். சரகேட் மதர் குழந்தை பெத்துக் கொடுக்கறாங்களே அதெல்லாம் என்னவாம் என்றாள் மித்ரா.

    அம்மாடி உங்கிட்ட பேசவே முடியாது என்றவன் சரி நம்ம விசயத்துக்கு வரலாம் என்றான்.

    நம்ம விசயத்துக்கு என்ன வர்றது இன்னைக்கு மீட் பண்ணலாம்னு சொன்னீங்க நானும் வந்துட்டேன். நல்ல வேலை எங்க அப்பாவுக்கு சொந்த பிஸினஸா இருக்கறதுனால கோயிலுக்குப் போறேன்னு சொல்லிட்டு கிளம்பி வந்துட முடியுது என்றாள் மித்ரா.

    எங்க அப்பாவும் சொந்த பிஸினஸ் தான். ஆனா சும்மா இருக்காம கால் காசானாலும் அரசாங்க சம்பளம் வேணும் அப்படின்னு என்னைப் படிக்க வச்சு கவர்மெண்ட் வேலையில தள்ளி விட்டுட்டாரு. நல்ல வேலையா ஒரு நல்ல டிரான்ஸ்பரபிள் போஸ்ட்டா வாங்கிட்டு உட்கார்ந்துட்டேன். சென்னையை விட்டு கிளம்ப வேண்டியது இருக்காதுன்னு வை சுத்தி சுத்தி சென்னைக்குள்ளே இருந்துக்கலாம் என்றான் சத்தியசீலன்.

    எல்லாம் சரிதான் மேடை போட்டாச்சு அடிப்படை பேஸ் எல்லாம் கிரியேட் பண்ணியாச்சு இன்னும் முக்கியமான விசயம் நடக்கலையே என்றாள்.

    என்ன முக்கியமான விசயம் என்றான் சத்தியசீலன்.

    உங்க அம்மா அப்பா கிட்டயும் பேசலை. எங்க அம்மா, அப்பாகிட்டயும் பேசலை இதோ அதோன்னு மூணு வருஷம் ஓடிடுச்சு என்றாள்.

    என்ன மித்ரா பண்ணச் சொல்ற எனக்கு உன்னை பார்க்கணும் பிக்ஸ் பண்ணிட்டன்னா வந்து பார்க்கணும். வந்து பார்த்தனா உன்னைய பார்த்துட்டே உட்கார்ந்துக்கலாம் போல இருக்கு வேற ஒண்ணுமே தோணலை என்றான்.

    அடி வாங்கப் போறீங்க என்றாள் மித்ரா.

    காத்திருக்கிறேன் தாயே என்று அவன் ஆடல் பாணியில் குனிந்து வணக்கம் சொன்னான்.

    நீங்க தான் சொன்னீங்க ஒரு ரெண்டு மூணு வருஷம் இப்படியே இருக்கலாம். அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம். கல்யாணம் பண்ணா ரெஸ்பான்ஸிபிலிட்டி வந்துடும் என்ஜாய் பண்ண முடியாதுன்னு சொன்னீங்க. சரி, இருபத்தொன்னுல ஆரம்பிச்சது இப்போ எனக்கு இருபத்து நாலு ஆச்சு இருபத்தேழு ஆச்சு இனிமேல் தள்ளிப் போட வேண்டாம் சாமி என்றாள்.

    சரிங்கம்மா என்றான் சத்தியசீலன்.

    சரி, எப்ப சந்திக்கலாம் பெற்றோரை என்றான்.

    நீங்க எப்ப சொன்னாலும் சரி என்றாள் மித்ரா.

    சரி, நாம இப்போதைக்கு நம்மளைப் பத்தி பேசுவோம். தேவையில்லாத விசயத்தை எதையும் பேச வேண்டாம் கிளம்புவோம். நான் காரை எடுத்துட்டு வந்திருக்கிறேன். அப்படியே பீச்சுப் பக்கமா போய் கொஞ்சமா நடமாடிட்டு என்றான்.

    பீச்சுப் பக்கம் போய் நடமாடறதா? அங்க எக்கச்சக்க கூட்டம் இருக்கு என்றாள் அவள்.

    விடு பாலவாக்கம் கொட்டி வாக்கம் எங்காவது போயிடலாம் என்றான்.

    அதே போல பாலவாக்கம் பக்கமாக போனார்கள். அங்கே கொஞ்சம் கூட்டம் குறைவாக இருந்தது. அங்கேயும் கடைகள் எல்லாம் வந்து விட்டது. இருந்தாலும் இவர்களுக்கு தேவையான ஒரு தனிமை அங்கே கிடைத்தது.

    சற்று நேரம் கலகலவென்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவன் மெதுவாக நெருங்கி அவள் அருகிலே அமர்ந்தான். அவளுடைய இரண்டு கைகளையும் பற்றிக் கொண்டான். தன்னுடைய கைகளிலே

    Enjoying the preview?
    Page 1 of 1