Nenjukkulle!
By Jaisakthi
5/5
()
About this ebook
Read more from Jaisakthi
Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsMugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Kaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsPaattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsThottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsMegam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Kanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsIlaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Anbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Nenjukkulle!
Related ebooks
Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsPaattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Anbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Seettu Kattu Maaligai Rating: 5 out of 5 stars5/5Idhayathul Irunthu Kol Rating: 3 out of 5 stars3/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Bathil Solli Sel Penne! Rating: 4 out of 5 stars4/5Paattu Kalanthidavey Part 3 Rating: 5 out of 5 stars5/5Nee Matrum Naan Rating: 0 out of 5 stars0 ratingsIthu Enna Maayam..? Rating: 4 out of 5 stars4/5Natchathirangalin Naduvey...! Rating: 0 out of 5 stars0 ratingsUyiraaga Vaa Nila Rating: 4 out of 5 stars4/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Nesathin Thottililey! Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsUyir Chedi Rating: 5 out of 5 stars5/5En Uyirin Urave Rating: 3 out of 5 stars3/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Ullathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Unnai Thotta Kaatru Rating: 4 out of 5 stars4/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5
Reviews for Nenjukkulle!
1 rating0 reviews
Book preview
Nenjukkulle! - Jaisakthi
https://www.pustaka.co.in
நெஞ்சுக்குள்ளே!
Nenjukkulle!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 1
நல்லா இருக்கில்லடி! பாரேன்! உனக்கு அகலக் கரைபோட்ட பட்டுப்புடவை இரண்டு வாங்கியிருக்காண்டி உங்க அண்ணன். எனக்கு சன்னக் கரைபோட்ட பட்டுப்புடவை ரெண்டு வாங்கியிருக்கான்!
என்று மகிழ்ச்சியாக மகள் மாதங்கியைப் பார்த்தாள் தாய் ஹேமாவதி.
மாதங்கி சற்று மலைத்துத்தான் போனாள். எதுக்கு? இப்பப் பண்டிகைகூட இல்லையே? திடீர்னு வாங்கியிருக்கான்!
என்றாள் மாதங்கி. பிறகு யாரு வாங்கிக் கொடுத்தா? பிரசாத்தா? தயாள் அண்ணாவா?
என்றாள்.
பிரசாத்தாண்டி. இதைவிட அதிசயம் தெரியுமா? ரேணுகாவும் கூடப்போய் செலக்ட் பண்ணியிருக்கா?
என்றாள் அம்மா வெள்ளந்தியாக.
மாதங்கிக்குள் எச்சரிக்கை மணி அடித்தது.
இது சரியாத் தெரியலையே? எங்கேயோ இடிக்கிறதே?
என்று யோசித்தாள்.
என்னம்மா நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலையே? எதுக்கு? இப்பத்தான் பண்டிகை ஒண்ணும் இல்லையே?
என்றாள்.
ஆமா, ஆடி மாசம் இல்லே. ஒரு வேளை தள்ளுபடியில எடுத்திருப்பானோ?
என்றாள் அம்மா.
இருக்கும்மா! இப்பத்தான் ஒரு புடவை எடுத்தா ரெண்டு புடவை இலவசம்னெல்லாம் விக்கிற கடை இருக்கே? அதிலே ஏதாவது எடுத்திருப்பாங்க. ‘சும்மா ஆடுமா சோழியன் குடுமி.’ அது சரி, பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்துட்டு அண்ணா சும்மா போயிட்டானா வேற எதுவும் கேட்கலையா?
என்றாள்.
ஹேமாவதி திரும்பிப் பார்த்தாள். இல்லடி, இந்த ஈ.பிக்கு ஏதோ நேம் டிரான்ஸ்ஃபர் பண்ணனும், பிராப்பர்ட்டிக்கு நேம் மாத்தணும் அது இதுன்னு என்னமோ சொல்லி கையெழுத்தெல்லாம் கொஞ்சம் வாங்கினாண்டி!
என்றாள்.
மாதங்கி அம்மாவை முறைத்தாள். ஏம்மா? என்னைக் கேட்காம எந்தக் கையெழுத்தும் போடாதே அப்படின்னு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?
என்றாள்.
யாரையாவது நம்பித்தானேடி ஆகணும்? நம்ம குரு பிரசாத்தும் நம்ம குரு தயாளும் நம்மளை ஏமாத்திடுவாங்களா என்ன? அதான் அப்பா நாலு பேர்த்துப் பேர்லயும்தானே இந்த வீட்டை எழுதி வச்சிருக்காரு!
என்றாள்.
மாதங்கிக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை. அப்பா ஓஹோ என்று கொழித்த காலத்திலே இந்த வீட்டைக் கட்டினார். அவருக்கு அப்போதே தெரிந்திருந்தது போலும். நாலு பேருக்கு இடம் தேவை இருக்கும் என்று. அதனால் நாலு கிரவுண்ட் இடத்தை வாங்கி அந்த நாலு கிரவுண்டு மொத்தத்துக்குமாக இந்த வீட்டைக் கட்டியிருந்தார். அதிலும்கூட பல கட்டிட வரைபடத்தை போடுகிறவர்களிடம் ஆலோசனை செய்துதான் திட்டம் தீட்டினார்.
அவளுக்கு பத்து வயது இருக்கும்பொழுது அப்பா இந்தக் கட்டடத்தை கட்ட ஆரம்பித்தார். அவளுக்கு நினைவு இருந்தது.
நாலு கிரவுண்டுக்கு மையத்தில் அந்த வீடு வருகிறமாதிரியும் அதை நாலாகப் பங்கு பிரித்தால் தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் குடியிருக்கும் அளவுக்கு அறைகளும் இடமும் இருக்குமாறு திட்டம்போட்டு மிகத் தெளிவாக அந்த வீட்டை கட்டியிருந்தார்.
அவருடைய தொழில் நசிந்துபோன போதுகூட இந்த வீட்டை விற்க வேண்டும் என்று அவர் நினைக்கவே இல்லை. தொழிலில் தோல்வி ஏற்படுகிறது என்று தெரிந்தவுடனேயே கிராமத்தில் இருந்த சொத்துக்கள், நகரத்தில் இருந்த வேறு சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்று முறையாக டெபாசிட் செய்து தனக்கு மாத வருமானத்திற்கு வழி வகுத்துக் கொண்டார். அதனால் ஒரு நாளும் அவர் பிள்ளைகளை வாடவிடவில்லை. மனைவியையும் நல்லபடியாகத்தான் வைத்துக் கொண்டார். ஹேமாவதியும் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு கட்டுசெட்டாக இருந்து குடும்பத்தை நடத்தினார். நண்பர்கள் நிறையபேர் கேட்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய வீட்டை எதுக்காக வச்சிருக்கீங்க? நீங்களே அழகா பிரிச்சு வாடகைக்கு விட்றமாதிரிதானே கட்டிவிட்டிருக்கீங்க. ரெண்டு போர்ஷனை நீங்க வச்சுக்கிட்டு ரெண்டு போர்ஷனை வாடகைக்கு விட்டாகூட உங்களுக்கு வசதியா இருக்குமே
என்று நண்பர்கள் கேட்பதுண்டு.
இல்லல்லே! அதெல்லாம் பிள்ளைங்களுக்காகன்னு கட்டி வச்சிருக்கேன். ஒண்ணு நாங்க உபயோகப்படுத்தணும் இல்லை அவங்க உபயோகப்படுத்தணும்!
என்றார்.
அவளுக்கு பதினேழு, பதினெட்டு வயது இருக்கும்போது குரு பிரசாத்துக்கும் ரேணுகாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணமானவுடனே அழகாக தனிக்குடித்தனம்போல அவர்களை ஒரு பகுதிக்கு ஒதுக்கிவிட்டார்.
குரு தயாளுக்கு இரண்டு அறைகள், மாதங்கிக்கு இரண்டு அறைகள் என்று இருக்கிற மாதிரி இன்னொரு பகுதியை ஒதுக்கிவிட்டார். மற்ற இரண்டு பகுதிகளிலும்தான் அவர்கள் பொதுவாக புழங்கிக் கொண்டிருந்தார்கள்.
அவனுக்கும் காலேஜ் படிக்கணும். உனக்கும் படிக்கணும். பிரைவசி வேணும் அதுக்காகத்தான்!
என்றார்.
அவர் எதிர்பார்த்தது போலவே குழந்தைகள் எல்லாம் நன்றாகப் படித்தார்கள். குரு பிரசாத்தும் நன்றாகப் படித்து ஒரு நல்ல கம்பெனியிலே வேலைக்குப் போனான். குரு தயாளும் அதேபோல நன்றாகப் படித்து வேலைக்குப் போனான்.
மாதங்கியை அவள் விருப்பப்பட்ட கம்ப்யூட்டர் கோர்ஸில் சேர்த்துவிட்டார். அவளுக்கும் படித்து முடிக்கையிலேயே வேலை கிடைத்தது. அவளும் இப்பொழுது லட்சங்களில் சம்பாதித்தாள். குரு பிரசாத், குரு தயாள் இருவருடைய கல்யாணத்தையும் பார்த்தார். ஆனால், மாதங்கினுடைய திருமணத்தைத்தான் பார்ப்பதற்கு அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஓராண்டுக்கு முன்பு அப்பா மறைந்து போனார்.
அதற்குப்பிறகு வழக்கம்போல செலவு பொதுவாக செய்து வந்தார்கள். தங்களுடைய சம்பளத்தில் ஒரு சிறுபகுதியை வீட்டு செலவுக்கு வச்சுக்கோ
என்று தாராளமாகக் கொடுப்பதுபோல் ஒட்ட வைத்துவிட்டு சகோதரர்களின் இரண்டு குடும்பங்களும் தங்களுடைய சேவிங்ஸை பார்த்துக் கொண்டார்கள்.
அப்பா தன்னுடைய பெயரில் இந்த டெபாசிட்டை தன் காலத்திற்குப் பிறகு நான்காக பிரித்து மனைவி மகள், இரண்டு சகோதரர்களும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று திட்டம் செய்திருந்தார். அதனால், ஹேமாவதிக்கும் மாதங்கிக்குமாக ஆளுக்கு நான்கு லட்சங்கள் என்று இரண்டு பேருக்குமாக ஒரு எட்டு லட்சம் பணம் இருந்தது. எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், சமீப காலமாக அண்ணிமார்களுடைய நடத்தையிலே ஒரு வித்தியாசம் தெரிந்தது.
அண்ணன்கள் இருவரும் அண்ணிகள் இருவரும் கூடிகூடிப் பேசினார்கள். இதையெல்லாம் கவனித்தபோதும் மாதங்கி காட்டிக் கொள்ளாதவளாக இருந்து வந்தாள். வீட்டு செலவுக்கு அவர்கள் கொடுக்கிற தொகை போக எவ்வளவு செலவாகிறதோ அதை மாதங்கிதான் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அவர்கள் ஆளுக்குப் பதினைந்தாயிரம் கொடுத்தார்கள் என்றால் இவளுக்கு இருபதாயிரம் இருபத்தைந்தாயிரம் என்று ஆகும்.
அம்மாவினுடைய வட்டிப்பணத்தை எடுக்க வேண்டாம். அது அப்படியே அவளுக்கு ஒரு சேமிப்பாக இருக்கட்டும் என்று சொல்லிவிட்டாள்.
ஓரளவு விழிப்போடுதான் இருந்தாள். அப்பா இருக்கும் காலத்திலேயே மாதங்கியின் பெயரில் தனியாக ஒரு லாக்கரை வங்கியில் எடுத்து ஹேமாவதியினுடைய நகையெல்லாம் அங்கேதான் இருக்க வேண்டும் என்று திட்டம் செய்துவிட்டார். அதனால் மருமகள்களுக்குக் கொஞ்சம் கோபம். ஏன் அந்த நகைகளிலெல்லாம் எங்களுக்கு பங்கு இல்லையா என்று கணவன்மார்களிடம் முணுமுணுத்தார்கள்.
ஏண்டி? சிட்டியோட சென்டர் பகுதியில அழகா நம்மளுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கிரவுண்ட் நிலம் வீட்டோடு கொடுத்திருக்காரு இது பத்தாதா?
என்பார்கள் சகோதரர்கள்.
அதற்குப்பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை. ஆனால், அவர்கள் ஏதோ கூடி திட்டம் போடுகிறார்கள் என்பது மட்டும் இவளுக்கு புரிந்தது.
இன்றைக்கு ஏதோ அண்ணன் கையெழுத்து வாங்கியிருக்கிறான் என்று அம்மா சொல்லுகிறார். என்னபண்ணி வச்சிருக்கானோ தெரியலையே என்று கவலையாகவே இருந்தாள்.
சகோதரர்கள் வரட்டும் என்று காத்துக் கொண்டிருந்தாள். குரு பிரசாத், குரு தயாள் ரேணுகா, பிரதிபா எல்லோரும் சாப்பிடும் நேரத்திலே அவளும் வந்து உட்கார்ந்தாள். சாதாரணமாக அவள் அப்படி வந்து அமரமாட்டாள். ஏதோ கம்ப்யூட்டர் வேலை செய்துகொண்டு ‘அவங்களெல்லாம் சாப்பிடட்டும்மா. நான் அப்புறமா சாப்பிட்டுக்கறேன்!’ என்பாள்.
பெரும்பாலும் டைனிங் டேபிளில் அமரவேமாட்டாள். தனக்கு எது வேணுமோ அதைத் தட்டிலே போட்டுக்கொண்டு தன்னுடைய அறையிலேபோய் சாப்பிட்டுக் கொள்வாள். இன்றைக்குத் தங்கை வந்து உட்கார்ந்தவுடனே குரு பிரசாத்தும், குரு தயாளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்