Sollamal Sollividu
By Jaisakthi
5/5
()
About this ebook
அபூர்வா, தன் சித்தி, தங்கைக்காக வாழ்பவள். அவள் வாழ்விலும் வசந்தம் வீசியது, கிருபா சங்கர் என்பவருடன். அபூர்வா கிருபாசங்கர் இருவரும் ஒரு வருட காலமாக பழகி வந்தார்கள். திடீரென அவளது சித்தியின் சதியால் கிருபா சங்கருடனான காதலை, அபூர்வா தன்னை தாழ்த்தி கொண்டு முறித்துக்கொண்டாள். பின்பு சித்தி தன் தவறை உணர்ந்தாளா?, அபூர்வாவை நிம்மதியாக வாழவிட்டாளா? அபூர்வா, கிருபா சங்கருடன் சேர்ந்தாளா? சொல்லாமல் சொல்லிவிட்ட காதலை சுவாசிக்கலாம் ஜெய்சக்தியின் எழுத்துச்சாரலில்
Read more from Jaisakthi
Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsAruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsPaattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Kaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Ennul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsNaaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsEnna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsMegam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Nila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratingsIlaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Ullathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5
Related to Sollamal Sollividu
Related ebooks
Nesathin Thottililey! Rating: 0 out of 5 stars0 ratingsIlankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Vanna Sudar Oliye...! Rating: 0 out of 5 stars0 ratingsSudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Nee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsSarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Ennulle Nirainthai Rating: 0 out of 5 stars0 ratingsNee Matrum Naan Rating: 0 out of 5 stars0 ratingsAnbai Thedi Vaa! Rating: 2 out of 5 stars2/5Natchathirangalin Naduvey...! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Varai Sollatha Kavithai Rating: 3 out of 5 stars3/5Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Kanintha Mana Deepangalai! Part - 3 Rating: 0 out of 5 stars0 ratingsPaattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsNilavum Malarum Rating: 5 out of 5 stars5/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsKallil Vaditha Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsVaasamalar Theane......! Rating: 0 out of 5 stars0 ratingsNin Vasamaathal Vendum Rating: 0 out of 5 stars0 ratingsIruvizhi Paarvaiyile...! Rating: 0 out of 5 stars0 ratingsEngeyum Pogavillai Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsUyir Unarum Va(li)zhiyo Kaadhal Rating: 3 out of 5 stars3/5Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Ullathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Vizhigalil Ethanai Mozhigal! Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 2 Rating: 5 out of 5 stars5/5Thottu Sendra Thendral! Rating: 5 out of 5 stars5/5
Reviews for Sollamal Sollividu
2 ratings0 reviews
Book preview
Sollamal Sollividu - Jaisakthi
https://www.pustaka.co.in
சொல்லாமல் சொல்லிவிடு…
Sollamal Sollividu…
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் – 1
அத்தியாயம் – 2
அத்தியாயம் - 3
அத்தியாயம் – 4
அத்தியாயம் – 5
அத்தியாயம் - 6
அத்தியாயம் - 7
அத்தியாயம் - 8
அத்தியாயம் - 9
அத்தியாயம் – 10
அத்தியாயம் – 11
அத்தியாயம் – 12
அத்தியாயம் – 13
அத்தியாயம் - 14
அத்தியாயம் – 1
நல்ல ஐட்டங்க. இதை செலக்ட் பண்ணிக்கோம்மா!
என்றார் மளிகைக் கடைக்காரர்.
இல்லீங்க அண்ணாச்சி! நான் வழக்கமா வாங்கற பிராண்டே வாங்கிக்கறேன்!
என்றாள் அபூர்வா
இல்லம்மா. இது புது சோப் பவுடர். புதுசா வந்திருக்கு. நம்ம ஏரியாவுல இருக்கறவங்க எல்லாம் வாங்கிட்டுப் போயிட்டு நல்லாயிருக்கு, இதையே கொடுங்கங்கறாங்க
என்றார் கடைக்காரர்.
அபூர்வா சரி, அப்படின்னா இதிலே ஒரு நூறு கிராம் பாக்கெட் மட்டும் கொடுங்க. நான் யூஸ் பண்ணிப் பார்த்துட்டு அப்புறம் வேண்ணா வாங்கிக்கறேன்
என்றாள்.
கடைக்காரர் சிரித்தார். பேர் மாதிரி அபூர்வமான ஆள்தாம்மா நீ!
என்றார்.
இல்லே அண்ணாச்சி, வேஸ்ட்டாப்போயிடும். அதுக்குத்தான் நான் யோசிக்கிறேன்!
என்றாள்.
ஓ.கே! நோப்ராப்ளம்
என்று அவர் சொன்ன சோப் பவுடரிலே இருந்து நூறு கிராம் பாக்கெட்டை எடுத்து அந்தத் தள்ளு வண்டியிலே போட்டாள்.
அபூர்வா அந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரை ஒரு சுற்றுச் சுற்றி வந்தாள். அண்ணாச்சி கடை என்பது போல ஒரு சின்ன மளிகைக் கடையாக இருந்த கடை இப்பொழுது கொஞ்சம் பெரிதாக விரிவு படுத்தப்பட்டிருந்தது. கடைக்காரர் அவளுக்கு ரொம்ப நாள் பழக்கமானவர்.அவளைப் பார்த்தவுடனே சிரித்தார். ரொம்ப மாடர்னைஸ் பண்ணீட்டீங்க!
என்று அவள் வேடிக்கை போல சொல்லவும்.
என்னம்மா பண்றது? ஆடை பாதி ஆள் பாதிங்கறது மாதிரி சரக்கு நல்லா இருந்தாலும் அதை வந்து இன்னிக்கு ஷோக்கேஸ் பண்ண வேண்டியது இருக்குது!
என்றார்.
கொஞ்சம் படித்தவர் அதனால் இந்த மாதிரி வார்த்தைகளையெல்லாம் இடையில் போடுவார்.
கரெக்டா சொன்னீங்க!
என்றாள் நிறைய செலவாச்சோ?
என்றாள்.
ஆச்சும்மா. ஆக்சுவலா வீடு கட்டணும்னு கொஞ்சம் பணம் வச்சிருந்தேன். அதை எடுத்துப் போட்டுட்டேன். இப்ப வீடு கட்டறதுக்கு மறுபடியும் சேர்க்கணும்!
என்றான்.
ஏன் அண்ணாச்சி? நீங்கல்லாம் வீடு கட்ட லோன் கேட்டா கவர்ன்மென்ட் பேங்க்ஸ் விழுந்து விழுந்து கொடுக்குமே? சொந்தக் கட்டிடம்தானே இது?
என்றாள்.
இல்லம்மா. எனக்கு வீடு மட்டும் கடன் வாங்காம கட்டணும் அப்படின்னு ஒரு ஆசை. அளவா கட்டறது. அதனாலே என்ன?
என்றார்.
ஆமாங்க அண்ணாச்சி இருக்கறதுக்குள்ள தான் நாலு ரூம் கட்டிக்கறது. அப்புறம் அப்படியே கம்பி நீட்டி வச்சுக்கிட்டு அப்புறம் நீங்க எக்ஸ்டென்ட் பண்ணிக்கிட்டே போகலாம். அது 'மாதிரி நீங்க அழகா பிளான் பண்ணிக்கலாம்!
என்றாள்.
நாலு ரூமெல்லாம் எங்க குடும்பத்துக்குப்பத்தாது அம்மணி! எனக்கு மூணு பசங்க ஒரு பொண்ணு!
என்றாள்.
அபூர்வா சிரித்தாள். அப்பக் கொஞ்சம் கஷ்டம்தான்!
என்றாள்.
ஒண்ணும் பிரச்சினை இல்லை. கொஞ்சம் ஃபிக்ஸட் டெப்பாசிட் வச்சிருக்கேன். அது போக ஆர்.டி. கீர்டினெல்லாம் போட்டுக்கிட்டிருக்கேன். இதெல்லாம் இன்னும் ரெண்டு வருஷத்துல மெச்சூர்டாயிடும். அப்ப எடுத்துக்கட்டி முடிச்சுடலாம். அப்புறம் ரெண்டு மூணு வருஷத்தில பசங்க எல்லாம் காலேஜுக்கு வரிசையா வருவாங்க. அதுக்கு சரியா இருக்கும். எல்லாதுக்கும் திட்டம் போடவேண்டியதா தானே இருக்கு அபூர்வா?
என்றான்.
அபூர்வா சிரித்தாள். உனக்கு அந்தக் கவலையெல்லாம் எதுவுமே இல்லை!
என்றார்.
அபூர்வாவின் கண்களில் லேசாக வேதனை தோன்றி மறைந்தது. தப்பிச்சுட்டேன்னு வச்சுக்கோம்மா. நான் இத்தனை நாள் சொல்லக் கூடாதுன்னு நினைச்சேன். தப்பிச்சுட்டேன்னு நினைச்சுக்கோ. இன்னைக்கு ஏதோ நீ சம்பாதிக்கிறே. சாப்பிடறே நிம்மதியா இருக்கே!
என்றார்.
அது என்னமோ உண்மைதான்!
என்று லேசாகப்புன்னகைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள் தள்ளு வண்டியை தள்ளிக் கொண்டு.
பல நாட்கள் பழகியவர் என்ற உரிமையுடன் பேசுகிறார் என்றாலும் அவளுக்கு வலித்தது. உண்மை சுடத்தானே செய்யும்? அங்கிருந்து வேகமாக நகர்ந்து ஏதோ அவசரமாக எடுப்பது போல பருப்பு வகைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அலமாரியின் முன்பு நின்று கொண்டிருந்தாள்.
அண்ணாச்சி அவள் வேகமாகப் போவதை நின்று பார்த்தார். பிறகு பெருமூச்செறிந்து விட்டு கல்லாவுக்குப் போனார். 'தொடக் கூடாத ஒரு பாயிண்டைத் தொட்டுட்டோமோ?' என்று தனக்குத்தானே ஒரு நிமிஷம் பேசிக் கொண்டார்.
இல்லே! யாராவது அந்தப் பொண்ணுக்கு சொல்லணும். சொல்லியிருந்தா இப்படி நிலைமை வந்திருக்காது
என்று தான் கேட்ட கேள்விக்கு சமாதானமும் சொல்லிக் கொண்டார்.
அபூர்வா தான் வழக்கமாக வாங்குகிற பொருள்களையெல்லாம் வாங்கிக்கொண்டாள். பில்லிங் செக்ஷனுக்கு அருகிலே வந்து நின்றாள்.
என்னம்மா? எல்லாம் எடுத்தாச்சா?
என்று அவளுடைய பில்லைப் பார்த்த அண்ணாச்சி. என்னம்மா? ரெண்டு மூணு மாசத்துக்கு சேர்த்து வாங்கிட்டே போல இருக்கு!
என்றார்.
ஆமாங்க அண்ணாச்சி! இப்ப சீசனாச்சே? விலை கம்மியா இருக்கில்லே?அதனாலே சிலதெல்லாம் வருஷத்துக்குக் கூட வாங்கிக்கலாமான்னு யோசிக்கிறேன்!
என்றாள்.
இல்லம்மா! கொஞ்ச நாள் பொறு. அடுத்த மாசம் வந்ததுன்னாக் இந்த குரு மிளகு, சீரகம் அது இதெல்லாம் கொஞ்சம் கம்மியாகும். அப்போ வருஷத்துக்கு வாங்கற அயிட்டம் எல்லாம் வாங்கி வச்சுக்கம்மா!
என்றார்.
சரிங்க அண்ணாச்சி! எனக்குக் கிடைக்கறதே ஒரு ஞாயிற்றுக் கிழமைதான் கிடைக்கும். அதிலேயும் நிறைய வேலைங்க இருக்கும். சும்மா வெளியில ஷாப்பிங் எல்லாம் வர முடியாது. அதுதான் இப்படி வாங்கிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்!
என்றாள்.
சரிம்மா. ரொம்ப சந்தோஷம். இன்னும் மொத்தமா வாங்கினா சில அயிட்டங்கள் எல்லாம் கம்மியாகும்!
என்றார்.
அவள் பில்லைக் கொடுத்து விட்டு இரண்டு பைகள் நிறைய மளிகை சாமான்களை எடுக்க முற்பட்டாள். வேண்டாம் அபூர்வா! நான் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்க்கச் சொல்றேன். இப்ப டோர் டெலிவரி கொடுக்கறோமில்லே?
என்றார்.
சரிங்க அண்ணாச்சி! ஆட்டோ செலவு மிச்சம்!
என்று சிரித்தாள்.
ஏன்? நீ வண்டியிலே வரலையா?
என்றார். இல்லே, ரெண்டு மூணு மாசத்துக்கு வாங்க வேண்டியது இருந்ததினாலே வண்டி எடுத்துகிட்டு வரலை!
என்றாள்.
ஒண்ணும் பிரச்சினை இல்லம்மா! நான் இப்பவே அந்த ஆட்டோ மேன் கிட்ட சொல்றேன் அவன் ஆட்டோவுல நீயும் போயிடுவியாம்!
என்றார்.
ரொம்பத் தாங்க்ஸ் அண்ணாச்சி!
என்று சிரித்தாள். சிரித்து விட்டு வெளியே செல்ல முற்படும் போது. ஏம்மா, காஃபி வர்ற டைம் ஆயிடுச்சு. நீயும் ஒரு டம்ளர் காஃபி குடிச்சுட்டுப் போவியாம். உட்காரு!
என்று அவளை உட்காரச் சொனனார்.
கல்லாவுக்கு அந்தப் பக்கத்தில் வட்டமான ஒரு ஸ்டீல் ஸ்டூல் மாதிரி இருந்தது. அதைக் காட்டினார்.
பரவாயில்லை அண்ணாச்சி!
என்றாள்.
இருக்கட்டும்மா உட்காரு!
என்றார்.
சரி!
என்று அவளும் வந்தாள். சரியாக அந்த நேரத்திற்கு காஃபி சப்ளை எல்லோருக்கும் நடந்தது. இவளுக்கும் ஒரு காஃபி டம்ளரிலே காபி கொடுத்தார்கள்.
அந்த நேரத்துக்கு அது இதமாகத்தான் இருந்தது. சரி, அண்ணாச்சியை வருத்தப்படுத்த வேண்டாம்!
என்று எண்ணிக் கொண்டவளாக அந்த காபியை ரசித்துக் குடித்து விட்டு எழுந்தாள். சூப்பர் காஃபி அண்ணாச்சி!
என்றாள்.
ஆமாம்மா, இப்படிக் காஃபி குடிச்சாத்தான் இந்த நேரத்துக்குத் தூக்கம் போகும். இல்லாட்டி எல்லாரும் தூங்கி வழிவாங்க பாரு!
என்று சிரித்தார். அதற்குள்ளாக டோர் டெலிவரிக்காக அவர்கள் வைத்திருக்கும் ஆட்டோக்களில் ஒன்று வந்து நின்றது.
மாடசாமி அபூர்வாவைக் கொண்டு வந்து பத்திரமா விட்டுட்டுப் பொருளெல்லாம் இறக்கி வச்சுட்டு வந்துடு!
என்றார்.
அந்த மாடசாமிக்கு ஒரு ஐம்பது வயதுக்கு மேல் இருக்கும். சரிங்க, முதலாளி!
என்று சொல்லி விட்டு அபூர்வாவைப் பார்த்து வாங்க என்பது போல தலையசைத்தார். அபூர்வாவும் ஏறி அமர்ந்து கொண்டாள்.
அங்கிருந்து பத்து நிமிடப் பயணம் தான். அவள் ஒரு மாடி வீட்டுக் குடியிருப்பு மாதிரி ஒரு பகுதியிலே குடியிருந்தாள். முதல் மாடியிலே இரண்டாவதாக இருந்த போர்ஷனிலே குடியிருந்தாள். சொந்தமாக ஒரு சிறிய வீடு, அதே ஏரியாவுலே அவளுக்கு இருந்தது. ஆனால் அங்கே தனியாக இருப்பதற்கு பயந்தவளாக தனியாக இருக்க வேண்டாமே என்பதற்காக அதை வாடகைக்கு விட்டு விட்டு அந்த வாடகையை வாங்கி இந்த வீட்டுக்கு கொடுத்து விட்டு இருந்தாள்.
வீட்டுக்குச் சொந்தக்காரர் அவளுக்கு மிகவும் வேண்டியவர். அவர்தான் அந்த யோசனையை ஒரு நாள் சொன்னார். அம்மா வயசுப் பொண்ணுங்க இந்தக் காலத்திலே தனியாவெல்லாம் இருக்கக் கூடாது. நம்ம வீட்லே ஒரு போர்ஷன் காலியாகுது. நீ பேசாம வந்துடு!
என்றார்.
எனக்கு எதுக்கு அவ்வளவு பெரிய போர்ஷன் அங்கிள்?
என்றாள் அவள்.
"இல்லம்மா,