Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Poothathu Ponnoli!
Poothathu Ponnoli!
Poothathu Ponnoli!
Ebook134 pages1 hour

Poothathu Ponnoli!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கொரோனா என்ற நோய் உலகத்தை வீட்டுக்குள் முடக்கியது. அந்தக் கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வீட்டுக்குள் நடக்கும் அழகான காதல் கதை. கொரோனா காலத்தில் வரும் ஊரடங்கை இவர்கள் எப்படி பயனுள்ளதாக மாற்றுகிறார்கள் என்பதுதான் இதன் கதைக்களம். வாங்க எங்கே எப்படி பொன்னொளி பூக்கிறது என்று வாசிக்கலாம்...

Languageதமிழ்
Release dateJul 4, 2022
ISBN6580106008635
Poothathu Ponnoli!

Read more from Jaisakthi

Related to Poothathu Ponnoli!

Related ebooks

Reviews for Poothathu Ponnoli!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Poothathu Ponnoli! - Jaisakthi

    http://www.pustaka.co.in

    பூத்தது பொன்னொளி!

    Poothathu Ponnoli!

    Author:

    ஜெய்சக்தி

    Jaisakthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் – 1

    அத்தியாயம் - 2

    அத்தியாயம் - 3

    அத்தியாயம் - 4

    அத்தியாயம் - 5

    அத்தியாயம் - 6

    அத்தியாயம் - 7

    அத்தியாயம் - 8

    அத்தியாயம் - 9

    அத்தியாயம் - 10

    அத்தியாயம் - 11

    அத்தியாயம்- 12

    அத்தியாயம் - 13

    அத்தியாயம் - 14

    அத்தியாயம் – 1

    பொன்னொளி பூத்தது புது வானில்

    என்ற பாடல் அவனுடைய செல்ஃபோனில் ஒலித்துக் கொண்டிருந்து. விவேகன் அந்தப் பாடலை ரசித்துக் கேட்டபடி தன்னுடைய கேபினில் அமர்ந்து கொண்டிருந்தான்.

    விவேகம் என்று அவனுடைய ஹோட்டலுக்கு பெயர் வைத்திருந்தான்.

    கீழே ஹோட்டல் வளாகம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் இந்தக் கொரோனா வர ஆரம்பித்திருந்த காலம். இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்த காலம். இவனும் எச்சரிக்கையாக தன் ஹோட்டல் தொழிலை கையாண்டான். வருகிற கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. என்ன செய்வதென்று அலுவலகத்தில் தன்னுடைய மேலாளரை அழைத்துப் பேசிக்கொண்டிருந்தான். கீழே கார்கள் நிறுத்துமிடம். இரண்டு தளங்களில் சாப்பிடும் இடம். மூன்றாவது தளத்தில் இவனுடைய அலுவலகம் இயங்கிக் கொண்டிருந்தது. ஹோட்டல் விவேகத்தின் கிளைகள் கோயமுத்தூர் முழுக்க நான்கைந்து இடங்களில் இருந்தது. தன்னுடைய அலுவலகத்தில் அமர்ந்தபடி ஒவ்வொரு கிளையிலும் என்ன நடக்கிறது என்பதை விசாரித்துக் கொண்டிருந்தான். அதே நேரத்தில் தொலைக்காட்சியில் செய்தியும் ஓடிக் கொண்டிருந்தது.

    கொரோனா அதிகரிக்கும் வேகம் மலைப்பாக இருந்தது. ஆயிரக்கணக்கில் இறப்புகள் நேர்ந்து கொண்டிருந்தன. அரசாங்கமும் என்ன செய்வதென்று ஆலோசனை செய்து கொண்டிருப்பதை பார்த்தான். தற்போதைக்கு தன்னால் முடிந்தது நேரத்தைக் குறைப்பது. காலை பனிரெண்டு மணி வரை கூட சில நேரங்களில் டிஃபன் பரிமாறுவார்கள் அதை பதினொரு மணியாக குறைத்தான். அதே போல பகல் சாப்பாட்டு நேரத்தையும் இரண்டரை மணி நேரத்திலிருந்து ஒன்றரை மணியாக மாற்றினான். மூன்று மணி நான்கு மணிக்கெல்லாம் கூட வந்து சாப்பிடுவார்கள். இல்லை என்று சொல்லாமல் அவனுடைய ஹோட்டலில் உணவு கிடைக்கும் என்று வருவார்கள்.

    இரவு உணவையுமே ஒரு வாரமாக ஏழு மணிக்கு ஆரம்பித்து ஒன்பது மணிக்குள் முடிக்கிற மாதிரி ஏற்பாடு செய்தான்.

    என்ன சார் நிலைமை சீக்கிரம் நல்லாயிடும்னு பார்த்தேன். ஆனா இப்படிப் போயிட்டிருக்கே என்றான் தன்னுடைய மேனேஜர் ராமதுரையிடம்.

    ஆமாங்க சார், என்ன பண்றதுன்னு தெரியலை கவர்ன்மெண்டும் முழிச்சுட்டு இருக்காங்க. அது எங்கயோ கொஞ்சமா இருந்தது. ஏதோ டெல்லியிலிருந்து ஏதோ ஒரு கூட்டம் வந்தாங்க அங்க இருந்து பரவிடுச்சு இங்க இருந்து பரவிடுச்சுன்னு மாத்தி மாத்தி சொல்றாங்க சார். ஒண்ணுமே புரிய மாட்டேங்குது என்றார் மேலாளர்.

    சரி, எதுக்குமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. அரசாங்கம் வேற எல்லாத்தையும் மாஸ்க் போட சொல்றாங்க எல்லாரும் மாஸ்க் போடற மாதிரி பண்ணுங்க. வேண்ணா ஒண்ணு பண்ணுங்க யாருகிட்டேயாவது மாஸ்க் வாங்கி நம்ம ஹோட்டல் முன்னாடி ஒரு டேபிள் போட்டு ஒரு ஆளைப் போட்டு என்ன விலைக்கு வாங்கறோமோ அதே அடக்க விலையிலே மக்களுக்கு கொடுத்துட்டு உள்ளே வர மாதிரி பண்ணுங்க என்று கூட ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்தான். இன்னும் சில ஆலோசனைகளை எல்லாம் இருவரும் பறிமாறிக் கொண்டார்கள்.

    அதற்கு பிறகு ராமதுரை நான் கீழபோய் பார்க்கறேன் சார். பதினொரு மணிக்கு டிஃபன் முடிக்கிற அளவுக்கு மட்டும் செய்ய சொல்லிடலாம். நான் காந்திபுரம் பிராஞ்சுக்கும், ஆர்.எஸ்.புரம் பிராஞ்சுக்கும் கூட தகவல் கொடுத்துடறேன் சார் என்று சொல்லி விட்டு இறங்கிப் போனார்.

    விவேகன் யோசனையிலே ஆழ்ந்தான். இப்படி ஒரு பெரிய பிரச்சினை பூதாகரமாக கிளம்புமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. திடீரென்று வியாபாரம் குறையப் போகிறது. என்ன நடக்குமென்று தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தபோது அவனுடைய தோழன் ஒருவன் போன் செய்தான்.

    விவேக் உனக்கு விஷயம் தெரியுமா? என்றான்.

    சொல்லுப்பா! என்றான் விவேகன்.

    இல்லே. நிலைமை ரொம்ப சீரியசாப் போயிட்டிருக்கு. நிறைய பேர் கொரானாவால பாதிக்கப்பட்டிருக்காங்க. அதனால அநேகமா முழு ஊரடங்கு அதாவது லாக்டவுன் கொண்டு வருவாங்க போல இருக்கு என்றான் இவன் நண்பன் ராஜேஷ்.

    ஏதாவது பண்ணுவாங்கன்னு எனக்கும் தோணுச்சு. ஆனா லாக்டவுன் மாதிரி யோசிக்கலை! என்றான் இவன்.

    மேலும் தொடர்ந்து அப்படியே லாக்டவுன் பண்ணினாக் கூட ஹோட்டல் தொழில் எல்லாம் பாதிக்காதுன்னு நினைக்கறேன். ஏன்னா நிறைய பேர் வேலைக்குப் போறவங்களுக்கு ஹோட்டல்ல தான் சாப்பாடு. ஹோட்டல் சாப்பாடு இல்லைன்னா என்ன பண்ணுவாங்க என்றான் தனக்குத் தானே சொல்லிக் கொள்ளுவது போல.

    தெரியலைப்பா! எதை நிறுத்துவாங்க எதை நடத்துவாங்க? ஒண்ணுமே புரியலை. ஏன்னா ரூமர்ஸ் நிறையப் போயிட்டிருக்கு என்றான் ராஜேஷ்.

    சரி பார்க்கலாம். எதுவா இருந்தாலும் நாம சமாளிக்கலாம் வேற வழியில்லை என்றான். விவேக் மறுபடியும் ராமதுரையை அழைத்தான்.

    ராமதுரை இப்போ நம்ம ஒர்க்கர்ஸ் எத்தனை பேர். அந்த லிஸ்ட் எனக்கு தெரியும். இருந்தாலும் ஒரு கன்சாலிடேட்டட் ஸ்டேட்மெண்ட் கொடுங்க. எல்லாருக்கும் எவ்வளவு சம்பளம் கொடுக்கறோம். டோட்டலா எவ்வளவு வரும். ஏன்னா திடீர்னு ஏதாவது பிரச்சினை வந்தா எவ்வளவு நாளைக்கு நாம தாக்கு பிடிக்க முடியும்னு பார்க்கணுமில்லே என்றான்.

    ராமதுரை லேசாக கலக்கத்துடன் அவரைப் பார்த்தார். இல்லைங்க ராமதுரை. என்னென்னமோ பேசறாங்க. சூழ்நிலை எப்படி வேண்ணாலும் மாறும் போல இருக்கு. எனக்கும் என்னென்னே புரியலை. நாமளும் தயாரா இருக்கணுமில்லே என்றான் விவேக்.

    சரிங்க சார்! நான் உங்களுக்கு ஆஃப் அன் அவர்லே கொடுக்கறேன் சார்.

    சரி கொடுங்க.

    நான் இன்னைக்கு ஹோட்டல்ஸ்க்கு எல்லாம் ரவுண்ட்ஸ் போகலை. எனக்கு பதிலா இன்னைக்கு நீங்க போயிட்டு வந்துடுங்க. ஏன்னா நான் போய் வீட்லயும் சில ஏற்பாடுகள் பண்ண வேண்டியிருக்கு. நீங்களும் எனக்குத் தெரிந்த வரை உங்க வீட்லே கொஞ்ச நாளைக்கு வெளியே போகாம இருக்கற மாதிரி என்னென்ன செய்யணுமோ அதெல்லாம் ஏற்பாடு பண்ணிக்கோங்க. நம்ம ஸ்டாஃபுக்கும் சொல்லிடுங்க என்றான்.

    சர்குலரா விட்டுடட்டுமா சார்

    சர்குலரா விடறது இப்ப வேண்டாம். அன்அஃபிஷியலா தகவல் சொல்லிடுங்க. ஓரலா அந்தந்த மேனேஜர் கிட்ட சொல்லி தயாரா இருக்க சொல்லுங்க என்றான்.

    அப்ப இங்கேயே தங்கி இருக்கறவங்களை என்ன சார் பண்றது? என்றார் ராமஜெயம்.

    அவங்க இங்கேயே தங்கிக்கட்டும் அதுக்கு நாம என்ன பண்ணணும்னு பார்க்கலாம். இன்னும் எதுவும் முடிவு ஆகலை என்று சொல்லி விட்டு அவன் வீட்டுக்கு கிளம்பினான்.

    தாய் சந்திரா இவனை எதிர்பார்க்கவில்லை. உள்ளே நுழைந்தவுடன் தம்பி, என்னப்பா இந்த நேரத்திலே என்றாள்.

    அம்மா நீங்க டி.வி. பார்த்துட்டு தானே இருக்கீங்க.

    "ஆமாம்பா இந்த கொரோனா கொரோனான்னு சொல்லிட்டு இருக்காங்க. ஏதோ புதுசா வந்திருக்குதாம் சீக்கிரமா பரவுதாம். அதான் நானும் அப்பாவுமே

    Enjoying the preview?
    Page 1 of 1