Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ilaiyuthir Kaalathu Vasantham!
Ilaiyuthir Kaalathu Vasantham!
Ilaiyuthir Kaalathu Vasantham!
Ebook145 pages1 hour

Ilaiyuthir Kaalathu Vasantham!

Rating: 2.5 out of 5 stars

2.5/5

()

Read preview

About this ebook

Mrs. Jaisakthi's real name is M.Amsaveni, born in Coimbatore, Tamil Nadu. Her official blog is - http://porkuviyal.blogspot.in
Languageதமிழ்
Release dateMay 13, 2020
ISBN6580106005391
Ilaiyuthir Kaalathu Vasantham!

Read more from Jaisakthi

Related to Ilaiyuthir Kaalathu Vasantham!

Related ebooks

Reviews for Ilaiyuthir Kaalathu Vasantham!

Rating: 2.5 out of 5 stars
2.5/5

2 ratings1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 1 out of 5 stars
    1/5
    Asking for review hiding the content is very poor design and user experience. Sick

Book preview

Ilaiyuthir Kaalathu Vasantham! - Jaisakthi

http://www.pustaka.co.in

இலையுதிர் காலத்து வசந்தம்!

Ilaiyuthir Kaalathu Vasantham!

Author:

ஜெய்சக்தி

Jaisakthi

For more books

http://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

அத்தியாயம் 13

அத்தியாயம் 14

1

இன்றைக்கு பொழுது நல்ல பொழுதாக விடிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டே வனிதா அலுவலகத்திற்குள் நுழைந்தாள்.

அது ஒரு அரசாங்க அலுவலகம்! அதில் வனிதா அரசுப் பணியில் இருந்தாள்.அவர்களுடைய அந்தப் பிரிவுக்கு இன்றைக்குப் புதிய மேலாளர் மாற்றலாகி வருவதாகப் பேச்சு இருந்தது.

அலுவலகமே மாறி இருந்தது. சுத்தமாக இருந்தது. சரியான நேரத்திற்கு எல்லாரும் அவரவர் இருக்கையிலே அமர்ந்திருந்தார்கள். ‘நாமதான் ஒருவேளை பின்னால வந்துட்டோமோ?’ என்று வனிதா கைக்கடிகாரத்தைப் பார்த்தாள்.

‘பத்து மணிக்கு முன்னாடியே வந்தாச்சே. இன்னும் பத்து நிமிஷம் இருக்கே?!’ என்று ஆச்சரியமாக எல்லாருடைய இருக்கையையும் ஒரு பார்வை பார்த்தாள்.

எல்லாரும் நமட்டுச் சிரிப்பு சிரித்தார்கள். அவளுடைய தோழி மாலா எப்போதுமே லேட்டாக வருகிற நடராஜனுடைய இருக்கையைக் கண்ணால் சுட்டிக் காட்டினாள். நடராஜன் கூட பட்டை விபூதியை அடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.குட்மார்னிங் சொல்ல வேண்டியவர்களுக்கெல்லாம் சொல்லி விட்டு தன்னுடைய இருக்கைக்குப் போனாள் வனிதா. பக்கத்து இருக்கையில் இருந்த மாலாவிடம் முணுமுணுத்தாள். என்ன மாலா. ஆபீஸ் அட்மாஸ்ஃபியரே மாறியிருக்கு! என்று

ஆமா, வர்றவர்ரு கொஞ்சம் ஸ்டிரிக்ட்டாம் கரெக்டா இருப்பாராம். கை சுத்தம் வேற. நடராஜ் அங்கிளுக்கு அது வேற கொஞ்சம் வருத்தம் என்று சிரித்தாள் மாலா.

ஓ...!

கோயம்புத்தூர்லே தான் படிச்சாராம். யு நோ ஒன் மோர் திங். நாற்பது வயசு ஆகியும் கல்யாணம் ஆகலையாம் என்றாள் மாலா.

அது அவரோட பர்சனல் இஷ்யு. அதைக் கேட்டு நாம என்ன பண்ணப் போறோம்? என்றாள் வனிதா.

மாலா ஒன்றும் பேசவில்லை. ஆனால் மனதுக்குள் முப்பத்தைந்து வயசு ஆகியும் கல்யாணம் ஆகாமல் உட்கார்ந்துகிட்டிருக்கே? உனக்கேத்த பேச்சுலரா இருக்கக் கூடாதா அப்படின்னு நான் நினைக்கறேன். ஆனா பாவி உன் மனசிலே ஒரு துளி கூட சலனம் வராதாடி! என்று எண்ணிக் கொண்டாள்.

வனிதாவோ பேச்சலரா இருந்தா நமக்கு என்ன? நாம இனி என்ன கல்யாணமா பண்ணிக்கப் போறோம்? இருக்கற ரெண்டு சிஸ்டர்ஸுக்கும் பிரதர் வாழ்க்கைக்கும் ஒத்தாசையா வண்டியை ஓட்டினா போதும்! என்று எண்ணிக் கொண்டாள்.

சரியாக பத்து மணிக்கு அதிகாரி உள்ளே நுழைந்தார். நுழைந்தவுடனே எல்லா இருக்கைகளையும் மொத்தமா பார்த்து ஒரு வணக்கம் போட்டார். எல்லாரும் எழுந்து அவசரமாக வணக்கம் போட்டார்கள்.

பிறகு நேராகத் தன்னுடைய கேபினுக்குச் சென்றார். பியூனை அட்டென்டென்ஸ் கொண்டு வரச் சொல்லி பத்து மணி என்று கையெழுத்துப் போட்டார். நேரத்தைக் குறிக்கும் போது பிறகு எல்லாரையும் ஒரு நிமிஷம் அசெம்பிள் பண்ணச் சொல்லுங்க. நான் ஒரு ரெண்டு வார்த்தை பேசிடறேன் என்றார் பியூன் மணியிடம்.

சொல்றேங்கய்யா! என்று ஓடினார் மணி. அவருக்கும் இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் தான் இருந்தன. அந்த அலுவலகத்தின் முன் புறத்திலே கொஞ்சம் இடம் இருந்தது. எல்லாரும் வந்து அதிலே நின்று கொண்டார்கள். அவரும் அந்த ஒரு சின்ன அசெம்பிளிக்கு முன்பாக நின்று கொண்டார்.

வணக்கம்! என் பெயர் கருணாகரன். நான் இத்தனை நாள் சென்னை கலெக்டர் ஆஃபீஸ்லே இருந்தேன். இப்ப தான் கோயம்புத்தூருக்கு வந்திருக்கேன். கோயம்புத்தூர் தான் சொந்த ஊர். படிச்சதெல்லாம் இங்கதான் இவ்வளவுதான் என்னைப் பத்தி சொல்றதுக்கு. அப்புறம் அலுவலகத்தைப் பொறுத்த வரைக்கும் நான் எல்லாரும் நேரத்துக்கு வரணும்னு எதிர்பார்ப்பேன். ஃபைலெல்லாம் தேவையில்லாம நிறுத்தி வைக்கக் கூடாது. எவ்வளவு வேகமாக நீங்க நகர்த்தறீங்களோ அந்த அளவுக்கு வேகமா நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துருவேன்.

எல்லாரும் தலையாட்டினார்கள்.

அரசு உத்தியோகம்னா அது மக்களுக்கு சேவை செய்யற உத்தியோகம். பணம் புரட்டறது இல்லைங்கறது எனது நம்பிக்கை. அப்படி யாராவது செய்யறீங்கன்னு தெரிஞ்சதுன்னா நான் அதுக்கு என்ன நடவடிக்கை எடுக்கணுமோ எடுப்பேன். தயங்க மாட்டேன். சொல்லப் போனா இப்ப ஊதியமெல்லாம் நல்லாத்தான் வருது எல்லாருக்கும். அதுக்குள்ளே வாழப் பழகிக்கலாம். சரிங்களா? என்றான்.

எல்லாரும் மையமாக தலையசைத்து வைத்தார்கள்.

சரி, நீங்க போகலாம்! என்று சொல்லி விட்டு போய்த் தன்னுடைய இருக்கையிலே அமர்ந்து வேலை பார்ப்பார் என்று நினைத்தார்கள். ஆனால், ஒவ்வொருவராக அழைத்து அவர்கள் இருக்கையில் என்னென்ன பணிகள் செய்யப்படுகின்றன. அவர்களுடைய வேலை இருப்பு ஏதாவது இருக்கிறதா. தாமதம் ஏதாவது இருக்கிறதா என்றெல்லாம் விசாரித்தார்.

ஒவ்வொருவரும் தங்களுடைய இருக்கையினுடைய பணிகளைப் பற்றிச் சொன்னதோடு தங்கள் குறை நிறைகளையும் சொன்னார்கள். அவர் தடுக்க வில்லை. ஒரு டைரியை வைத்துக் கொண்டு எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார். சரி பார்க்கறேன். உங்களுக்குத் தெரியும் இது ஒரு அரசாங்க ஆஃபீஸ். என்னுடைய லிமிட்டுக்குள்ளே உங்களுக்கு என்னென்ன செஞ்சு கொடுக்க முடியுமோ? நான் செய்யறேன். சக்திக்கு மீறி எதிர்பார்க்காதீங்க! என்று சொல்லியும் அனுப்பி விட்டார்.

மாலா போய் விட்டு வந்தவுடனே வனிதா நுழைந்தாள். உட்காருங்கு மிஸ் வனிதா. அவள் அமர்ந்தாள். தன்னுடைய பெயர் எப்படித் தெரியும் என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ரொம்ப ஆச்சரியப்படாதீங்க. நான் படிச்ச காலேஜ்ல தான் நீங்க படிச்சீங்க. நான் தர்ட் இயர் படிச்சேன். நீங்க ஃபர்ஸ்ட் இயர் படிச்சீங்க. ஞாபகம் இருக்கா என்றான்.

அப்பொழுது அவன் ஒல்லியாக இருந்தாள் இப்பொழுது நல்ல உடல் கட்டோடு லேசான அரும்பு மீசையோடு பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருந்தான் கருணாகரன்.

இவ்வளவு அருமையா இருக்காரு. இவரு ஏன் கல்யாணம் பண்ணிக்கலை? என்று கூட அவளுக்குத் தோன்றியது.

உடனே மனதை உலுக்கிக் கொண்டாள். மிஸ் வனிதா நீங்க பதவி உயர்வு கூட வேண்டாம்னு சொல்லிட்டு இங்கேயே கண்டினியூ பண்றீங்க போல இருக்கு என்றான்.

ஆமாங்க சார்! இங்கேதான் என் பிரதர், சிஸ்டர்ஸ் எல்லாம் இருக்காங்க. அம்மா அப்பா இல்லை. அதனாலே நான்தான் அவங்களைப் பார்த்துக்க வேண்டி இருக்கு அதனால தான் என்றாள்.

ஓ... குடும்பப் பொறுப்போ? அதுக்காக உங்க சொந்த வாய்ப்புக்களையெல்லாம் நீங்க இழக்கலாமா? என்றார்.

இல்லை சார்... பெரிய பொறுப்புக்களை எடுத்துக்கறதுல எனக்கு ஆர்வமும் இல்லை. உங்களுக்குத் தெரியும் இன்னைக்கு இருக்கற சூழ்நிலை அரசியல்வாதிகள், மக்கள், பணியாளர்கள்னு எல்லாருக்கும் பதில் சொல்லணும். அந்த பதில் சொல்ற தரப்பு எனக்கு வேண்டாம். ஆனா யாரு பதில் சொல்ற பொறுப்புல இருக்காங்களோ அவங்களுக்கு உறுதுணையா அவங்க என்ன கேக்கறாங்களோ அதை செஞ்சு கொடுக்கறேன் அது எனக்கு போதும் என்றாள்.

குட் தெளிவா இருக்கீங்க! என்றான். சரியாக அந்த நேரத்துக்கு தேனீர் வந்தது. இங்கேயே டீ சாப்பிட்டுருங்க என்றான்.

அவளும் கூச்சத்தோடு அங்கேயே டீ அருந்தினாள்.

அதற்குப் பிறகும் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு அவளை அனுப்பி வைத்தார். தன்னுடைய இருக்கைக்கு வந்தவுடன் கொஞ்ச நேரம் வரை வனிதாவுக்கு கையும் காலும் ஓடவில்லை. மாலா அவளைப் பார்த்து குறுஞ்சிரிப்பு சிரித்தாள்.

ம்... சொன்னப்ப என்னமோ எனக்கென்னன்னு விட்டேத்தியா பேசினே. இப்பப் பார்த்தியா? ஆள் அம்சமா இருக்காரில்லே? என்றாள்.

ஏய் மாலு, உதை வாங்கப் போறே என்றாள் வனிதா.

சரிம்மா, நான் சும்மா சொன்னேன்! என்றாள்.

மாலுவும் அவளும் கிட்டத்தட்ட ஒரே வயதுக்காரர்கள். மாலு மதுரைப் பக்கமாக இருந்து இங்கே வந்திருந்தாள். இருந்தாலும் வனிதாவிடம் நெருங்கிப் பழகினாள். இப்போதெல்லாம் வா, போ, சில சமயங்களில் வாடி, போடி என்று பேசுகிற அளவுக்கு கூட நெருங்கி விட்டார்கள்.

மாலாவுக்குத் திருமணமாகி விட்டது. ஏழு வயதில்

Enjoying the preview?
Page 1 of 1