Thottu Sendra Thendral!
By Jaisakthi
5/5
()
About this ebook
Read more from Jaisakthi
Analukkul Nilavu! Rating: 4 out of 5 stars4/5Enakkanave Nee! Rating: 5 out of 5 stars5/5Aruvi Saaraliley! Rating: 3 out of 5 stars3/5Mugam Paartha Pinne...! Rating: 5 out of 5 stars5/5Nenjukkulle! Rating: 5 out of 5 stars5/5Oviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Uyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Poothathu Ponnoli! Rating: 0 out of 5 stars0 ratingsPaattaga Nee Irukka…! Rating: 0 out of 5 stars0 ratingsNee Paartha Paarvai...! Rating: 3 out of 5 stars3/5Kaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsKanintha Mana Deepangalai! Part - 1 Rating: 5 out of 5 stars5/5Ithayathil Oru Oviyam! Rating: 5 out of 5 stars5/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratingsMegam Vilaguthadi...! Rating: 4 out of 5 stars4/5Naaliley Nalla Naal Rating: 0 out of 5 stars0 ratingsSollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Enna Solla Pogirean Rating: 0 out of 5 stars0 ratingsIlaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Sudaroli Oviyamey Rating: 5 out of 5 stars5/5Thedi Vantha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsEnnul Kalantha Kavithai Rating: 5 out of 5 stars5/5Ilankaatru Veesattum! Rating: 5 out of 5 stars5/5Ullathiley Neeyirukka...! Rating: 4 out of 5 stars4/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Paattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsNila Mugam Paarthu! Rating: 0 out of 5 stars0 ratings
Related to Thottu Sendra Thendral!
Related ebooks
Ilaiyuthir Kaalathu Vasantham! Rating: 3 out of 5 stars3/5Nee Vantha Pothu…! Rating: 3 out of 5 stars3/5Paattu Kalanthidavey Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Naan Santhithen Rating: 2 out of 5 stars2/5Paattu Kalanthidavey Part 2 Rating: 5 out of 5 stars5/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Ennai Virumbum Ooruyire! Rating: 0 out of 5 stars0 ratingsKaathirunthen Kai Pidikka! Rating: 0 out of 5 stars0 ratingsPaartha Muthal Naalil…! Rating: 2 out of 5 stars2/5Nee Andha Nilavu! Rating: 0 out of 5 stars0 ratingsUnnai Thotta Kaatru Rating: 4 out of 5 stars4/5Ithu Varai Sollatha Kavithai Rating: 3 out of 5 stars3/5Kavithai Sirippinile... Rating: 0 out of 5 stars0 ratingsVaruvaal, Kaadhal Devathai… Rating: 3 out of 5 stars3/5Vaasamalar Theane......! Rating: 0 out of 5 stars0 ratingsInfaa Alociousyin Sirukathaigal Rating: 5 out of 5 stars5/5Sarayu Kaathirukkiraal Rating: 5 out of 5 stars5/5Natchathirangalin Naduvey...! Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Ennai Kaadhal Seiya... Rating: 0 out of 5 stars0 ratingsBathil Solli Sel Penne! Rating: 4 out of 5 stars4/5Pesi Vidu Maname Pesividu…! Rating: 0 out of 5 stars0 ratingsEnnamo Yetho… Rating: 0 out of 5 stars0 ratingsNesathin Thottililey! Rating: 0 out of 5 stars0 ratingsOviya Punnagai...! Rating: 3 out of 5 stars3/5Ilankaalai Olikeetru! Rating: 5 out of 5 stars5/5Sollamal Sollividu Rating: 5 out of 5 stars5/5Mouname Kavithaiyai! Rating: 0 out of 5 stars0 ratingsUyirai Mathithu Vidu! Rating: 5 out of 5 stars5/5Uyir Chedi Rating: 5 out of 5 stars5/5Ennul Karainthavaley... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thottu Sendra Thendral!
1 rating0 reviews
Book preview
Thottu Sendra Thendral! - Jaisakthi
https://www.pustaka.co.in
தொட்டுச் சென்ற தென்றல்!
Thottu Sendra Thendral!
Author:
ஜெய்சக்தி
Jaisakthi
For more books
https://www.pustaka.co.in/home/author/jaisakthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
அருமையான அந்தக் குளிர்ச்சி முகத்தில் அறைந்தது. ஏ.சி கம்பார்ட்மெண்டில் ஏறி இருந்தாள் வேதிகா.
வேதிகா செகரட்டரியாக இருந்தாள். அதனால் அவளுக்கு அவளுடைய முதலாளி நாகநாதன் ஏ.சி. கம்பார்ட்மெண்டில் பிரயாணம் செய்ய வசதி செய்து கொடுத்திருந்தார்.
அவளுடைய இருக்கையைத் தேடி அமர்ந்தாள்.
அப்பா இருந்த காலத்தில் ஏ.சியில் பயணம் செய்தது. அப்பாவின் மறைவிற்குப்பின் எல்லாமே தலைகீழாகப் போனது.
இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு ரூபாயையும் எண்ணிப் பார்த்துத்தான் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. தனக்குப் பின்னாலே தங்கை ஒருத்தி இருக்கிறாளே? அவளைக் கரையேற்ற வேண்டுமே என்று பெரிய மனுஷியைப்போல யோசிக்க வேண்டிய கட்டாயம் வேதிகாவுக்கு இருந்தது.
தன்னுடைய இருக்கையில் அமர்ந்தபடி சுற்றும் முற்றும் நோட்டம்விட்டாள். கூட்டமே இல்லை. ஏதோ ஒன்றிரண்டுபேர் அங்குமிங்குமாக அமர்ந்திருந்தார்கள். இவளுடையது ஜன்னல் ஓர இருக்கை.
அந்த ஏ.சி. கம்பார்ட்மெண்ட் அமைப்பு இப்படி இருந்தது.
ஒரு பாதி கம்பார்ட்மென்டில் ஒரு பக்கம் பார்த்திருந்தால் மறு பாதி அந்தப் பகுதியினர் இவர்களை நேர் எதிராகப் பார்த்து அமர்வதுபோல இருக்கைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
நல்ல வேளையாக இவளுக்கு ரொம்பவும் ஓரமாக இல்லாமல் நடு வரிசையிலேயே சீட்டு இருந்தது. அதுவும் ஜன்னல் ஓர இருக்கையில் மகிழ்ச்சியாக அமர்ந்து கொண்டாள் தேவிகா.
வண்டி கிளம்புவதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. தான் கொண்டு வந்திருந்த பத்திரிகையை கையிலே எடுத்து விரித்தாள். அதே நேரத்தில் இரண்டு பேர்கள் பெட்டியிலே ஏறினார்கள். அதில் நான்கைந்து வரிசைகளுக்கு அப்பால் இவள் அமர்ந்திருந்த இடத்திலே இருந்து பார்த்தால் தெரிகிற மாதிரி இருக்கையில் ஒரு இளைஞன் வந்து அமர்ந்தான்.
துடிப்பாக இருந்தான். கம்பீரமான தோற்றம். நேர்த்தியான புருவம். ஆழமான பார்வையுடைய கண்கள். அரும்பு மீசை! இதழிலே லேசான ஒரு புன்னகை ஒட்டிக் கொண்டிருந்தது. மாநிறமாக இருந்தான். ஆனால், கவர்ச்சியாக இருந்தான்.
வரி வரியாகப் போட்ட சட்டை அணிந்திருந்தான். அதற்கு ஏற்ற ஆழ்ந்த நிறத்திலே கீழே பேண்ட் அணிந்திருந்தான். இவள் சற்று நேரம் அவனை கவனித்துப் பார்த்தாள். அவனிடம் இருந்து ஏதோ ஒன்று அவளை ஈர்க்கிற மாதிரித் தெரிந்தது. சட்டென்று தலையைத் திருப்பிக் கொண்டாள்.
சே…! என்னதிது? நம்ம ஆஃபீஸ்லே தினமும் எத்தனை பேரைப் பார்க்கிறோம்? அப்பாவோடு ஆஃபீஸுக்கு எத்தனை தடவை போயிருக்கிறோம்? எத்தனை பேரைப் பார்த்திருக்கிறோம்?அப்படி இருக்கும்போது இவன் என்னமோ உலக மகா அழகன்போல இவனை இப்படிப் பார்க்கிறோமே என்று தோன்றியது. இப்படி மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிற போதும் அவள் பார்வையைத் திருப்பவில்லை. அவள் பார்வை அவன் மேல்தான் இருந்தது.
யாரோ உற்றுப் பார்க்கிற உணர்வு அவனுக்கும் தோன்றியது போலும். அவனும் பார்வையை இவள் முகத்திலே கொண்டு வந்து நிறுத்தினான்.
இவள் பார்வையை அவனிடத்திலே இருந்து பிடுங்கி எடுத்தாற்போல் இழுத்து வேறு பக்கம் திருப்பினாள். ஒரு நிமிடம் கழித்து அவன் கவனித்திருப்பானோ என்ற எண்ணத்துடன் மீண்டும் அவன் மேல் தன் ஓரக்கண் பார்வையைச் செலுத்தினாள்.
அப்பொழுது அவன் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் கண்களில் ஒரு குறுகுறுப்பு தெரிந்தது. வேதிகா சட்டென்று மறுபடியும் பார்வையைத் திருப்பினாள்.
அவள் முகத்தைத் திருப்புகின்ற வேகத்திலேயே அவன் இதழ்களில் ஒரு குறும்புப் புன்னகை மலர்வதைப் பார்த்துவிட்டாள்.
முகம் சிவந்து போனது! வெளியே வேடிக்கை பார்த்து அங்கே இங்கே பார்த்து என்று சற்று நேரம் திணறிப் போனாள். ஒரு வழியாக மனதைத் திருப்பித் தன் கையிலிருந்த பத்திரிகையில் செலுத்தினாள்.
பத்திரிகையில் அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் அடிபட்டுக் கொண்டிருந்த அரசியல் நிகழ்வை வெகுவாக விவரித்திருந்தார்கள். ஒரு அரசியல் பார்வையாளராக அவள் தன்னை எப்பொழுதுமே உணர்ந்ததுண்டு.
இப்போது ஏனோ இந்தக் கால கட்டத்தில் வெறும் பார்வையாளராக இருப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. ஒவ்வொருவரும் கருத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அவளுக்குத் தோன்றியது.
எல்லாரும் எனக்கென்ன என்று அமர்ந்து கொள்வதால்தான் ஊழல் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்கிறது என்று வருத்தத்துடன் எண்ணிக் கொண்டாள். அவளுடைய எல்லா சிந்தனைகளும் அவளுடைய முகத்தில் வேறு வேறு பாவங்களாக மின்னி மறைவதை அவள் உணரவே இல்லை. ஆனால், சற்று தூரத்தில் அமர்ந்திருந்த அந்த இளைஞன் உணர்ந்து கொண்டான் போலும். அவனுடைய பார்வையும் அவ்வப்பொழுது அவள்மேல் படிந்து மீண்டது.
இவளுடைய பார்வையும் அவ்வப்பொழுது அவன்மேல் படிந்து மீண்டது.
இடை இடையே அந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு நடந்து கொண்டேதான் இருந்தது. அப்பா இருந்திருந்தால் இப்படி ஒரு மாப்பிள்ளையைத் தனக்காகப் பார்த்திருப்பாரோ? அப்பாதான் சொல்லிக் கொண்டிருப்பார். ‘நல்ல உயரமா, பார்க்கறதுக்கு லட்சணமா, கெட்டிக்காரனா, தொழில்லே ஆர்வம் இருக்கறவனாப் பார்த்து உனக்கு ஒரு மாப்பிள்ளை பிடிக்கணும்மா!’ என்று அவள் கல்லூரியிலே படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே சொன்னார்.
அப்பா ப்ளீஸ்! நான் இப்ப படிப்பிலே மட்டும்தான் கவனம் செலுத்த நினைக்கிறேன். தயவு செய்து இந்த ஐடியாவெல்லாம் கொடுக்காதீங்க. சும்மா கல்யாணம் கல்யாணம்னுகிட்டு. எல்லாரும் கல்யாணம்பண்ணி என்னத்தை கண்டாங்க? நீங்க என்னத்தைக் கண்டீங்க?
என்று கேட்டாள்.
ஏம்மா இப்படிச் சொல்றே? பூமிகா, தேவிகா அப்படின்னு ரெண்டு ரத்தினங்களை கண்டிருக்கேன் இல்லே? பத்தாது? ஆக்சுவலா இன்னொரு ஆண் சிங்கத்தைப் பெத்தெடுக்கலாம்னு நினைச்சேன். உங்க அம்மாதான் போதும் போதும் இந்த ரெண்டு பெண் பிள்ளைகளையும் கண்ணா வளர்த்து நல்லபடியாக் கொண்டு வந்தா போதும்னு ஒரே பிடிவாதமா சொல்லிட்டா. இத்தனைக்கும் அந்தக் காலத்திலே ஆண் பிள்ளை இருந்தாத்தான் குடும்பத்துக்கு வாரிசு பிறந்ததுன்னு சொல்ற காலம். அப்பவே உங்க அம்மா அவ்வளவு முற்போக்கு வாதிம்மா. ஏன் ஜெயா?
என்று மனைவியைப் பார்த்து சிரித்தார் தந்தை.
அவளுக்கு இதெல்லாம் நினைவுக்கு வர முகம் வாட்டமுற்றது. ‘எப்படிப்பட்ட அப்பா! அவரை இந்த வயதுக்குள் இழந்துவிட்டோமே. அவர் இருந்திருந்தால் தங்களுடைய நிலைமையே வேறாக இருந்திருக்கும். இதுநாள்வரை தான் சுமந்த அந்தப் பாரங்களை எல்லாம் அவர் சுமக்கவிட்டிருப்பாரா என்ன? குழந்தைகளின் பாதங்கள்கூட பூமியில் படாத வண்ணம் பார்த்துக் கொண்ட தந்தையாயிற்றே அவர்!’ என்று எண்ணிக் கொண்டாள். அப்படியே உறங்கிவிட்டாள்.
இரண்டு மணி நேரம் ஓடிவிட்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவள் இறங்க வேண்டிய ஸ்டேஷன் வந்துவிடும். பெட்டி கிட்டத் தட்ட காலியாக இருந்தது. ஆனால் என்ன நினைத்தாளோ என்னவோ? அவள் எழுந்து வந்து மூன்று பேர்கள் அமர்கிற இந்த வரிசையில் கடைசியாக இந்தப் பக்கம் அமர்ந்து கொண்டாள்.
நடுவிலே சாப்பிடுவதற்கு டிஃபன் வாங்கி வந்திருந்தாள். ஆறுமணிக்கே